2013 ஆகஸ்ட்

ஐயம் : 10.7.2013 அன்று ஸஹர் நேரத்தில் ஜெயா டி.வி.யில் ஆலிம் பைஜி ஒருவர் உரையாற்றினார். அதில் குர்ஆன் தர்ஜுமாவைப் பார்க்காதீர்கள். உங்களால் விளங்கிக் கொள்ள முடியாது. உதாரணத்திற்கு நபி மூஸா(அலை) அவர்களிடம் மரம் பேசியது. நானே அல்லாஹ் என்னையே வணங்குங்கள் என்றது. நபியவர்கள் அதனை ஏற்கவில்லை. அறிந்தவர்களிடமே கேட்டு விளக்கம் பெறவேண்டும் என்றார். இவ்வாறு மரம் பேசியதாக நிகழ்ச்சி குர்ஆனில் உள்ளதா?  R. முஹம்மது பாரூக்,நெல்லை.

S.முஹம்மத் ஸலீம், தொடர்பு எண் : 9842696165: மனிதர்களுக்கிடையே ஏற்படும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான தீர்வை வழங்கக் கூடிய வகையில் அல்லாஹ் குர்ஆனை அருளியுள்ளான். குர்ஆனில் இருந்து அனைத்து விஷங்களுக்கும் விளக்கம் பெறவேண்டிய முஸ்லிம்கள் குர்ஆனை உரிய முறையில் படிக்காமல் இருப்பதன் காரணமாக பல விஷயங்களில் முரண்பட்டுச் செயல்பட்டு வருவதைப் பார்க்கிறோம். குறிப்பாகப் பிறை விஷயத்தில் கருத்து வேறுபாடுக் கொண்டு தாங்கள் சொல்லும் கருத்து மட்டும் தான் சரியானது என்று அனைத்துத் தரப்பினரும் கூறி வருகிறார்கள். இந்தக் […]

பஷீர் அகமது, புதுக்கோட்டை. திரைகடல் ஓடி திரவியம் தேடு, கப்பலுக்கு போன மச்சான், மாப்பிள்ளை வெளிநாட்டு சபுராளி… இந்தத் தலைப்புகள் தமிழ் முஸ்லிம்களின் சிறு கதை தலைப்புகள் மட்டுமல்ல! நாவல்களும் அல்ல! இவை போன்ற சொற்றொடர்கள் பெரும்பான்மையான தமிழ் முஸ்லிம் குடும்பங்களில் அடிக்கடி புழங்குபவை. மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினரை ஊரில் விட்டுவிட்டு வெளிநாட்டில் போய் வேலை பார்ப்பது, தமிழ்நாட்டு முஸ்லிம்களின் விசயம் மட்டுமல்ல; எல்லா சமூகத்திலும் உள்ள தேசியப் பிரச்சினை என்ற கோணத்தில் இக்கட்டுரையைப் படிக்கத் துவங்குங்கள்! […]

(நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரே) ஜமாஅத்தாக அல்லாஹ்வின் கயிற்றை (குர்ஆனை) பற்றிப் பிடியுங்கள்; (ஒருபோதும்) பிரிந்து விடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள்; உங்கள் இதயங்களுக்கிடையே அன்பை ஏற்படுத்தினான்; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்பிக் குழியின் விளிம்பின்மீது இருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களைக் காப்பாற்றினான்; நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு, அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்குத் தெளிவாக்குகின்றான். (3:103) (பார்க்க: 3:101, […]