2023 நவம்பர்

தலையங்கம் : நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம்! “அல்லாஹ்  தான்  நாடியோருக்கு “…நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் நம்பிக்கை யாளர்களாக  இருந்தால்,  நீங்கள்தாம்  மிக்க  மேலானவர்கள்.”    (3:139) தற்போதைய இந்தியாவில் நியாயமான தைக்கூட எதிர்த்து முஸ்லிம்கள் குரல் கொடுக்க தயங்குபவர்கள் என்ற நிலையாகி வருகின்றது. நாட்டின் அனைத்து துறைகளிலும் முஸ்லிம்களின்  பிரதிநிதித்துவம் கொஞ்ச கொஞ்சமாக  குறைந்து கொண்டு  வருகிறது. மதச்சார்பற்ற கட்சிகள் என பெருமை பேசுகின்ற கட்சிகள் முஸ்லிம்களின் வாக்குகள் வேண்டும் என்று நினைக்கிறதே […]

புரோகிதத்திற்குக் கூலி நரகமே! அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு :  அக்டோபர்  தொடர்ச்சி…. அதிலும் “முஅத்தின்‘களாகப் பணி புரிகிறவர்கள், அத்துடன் பள்ளியைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வது மற்றும் சில வேலைகள் என்று கூலி வாங்குவதற்கு அனுமதிக்கப் பட்ட பணிகளைச் செய்து வருவதால், அவர்கள் தப்புவதற்கு வழி இருக்கிறது என்று நம்பலாம். மேலும் கிராமப் புறத்துப் பள்ளிகளில் இமாமத் செய்பவர்களான லெப்பைமார்கள் (பெரும்பாலும் மவ்லவி அல்லாதவர்கள்) பாங்கு சொல்வதிலிருந்து, பள்ளியைச் சுத்தம் செய்வதிலிருந்து, ஏன்? கக்கூஸ், பீஷாப் […]

காலம் பொன் போன்றதா? A.N. Trichy காலத்தின் சிறப்புப் பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதனால்தான் “காலத்தை பொன் போன்றது‘ என்று சொல்லுவார்கள். ஆனால் காலத்தை பொன் போன்று கருதுகின்றோமா? என்றால் இல்லை? பள்ளி பருவத்திலிருந்து பாயோடு பாயாக படுத்து காலத்தை வீணாக்குவது போல் வேறு எதையும் நாம் அதிகமாக வீணாக்குவது கிடையாது. காலம் அவ்வளவு முக்கியமானதா? நிச்சயமாக! உலக வாழ்க்கையிலும் சரி, மறுமை வாழ்க்கைக்கும் சரி, காலமே (நேரமே) எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது, மனிதர்களின் பிறப்பும், […]

விரலால் சுட்டிக் காட்டுவதுதான் நபிவழி!  K.M. முஹம்மது இஸ்மாயில் நூரீ  தொழுகை இருப்பில் தவ்ஹீது சகோதரர்கள் பிடிவாதமாக விரலை அசைத்து தொழுகின்றனர். சிலர் வேகமாகவும், சிலர் மெதுவாகவும், சிலர் வட்டமாகவும் அசைக்கின்றனர். 1995லிருந்து விரலை அசைப்பது நபிவழி அல்ல. நீட்டுவதுதான் நபிவழி என்று ஆதாரப்பூர்வமான ஹதீத்களை எடுத்துக்காட்டிய பிறகும் கூட தவ்ஹீது சகோதரர்கள் பிடிவாதமாக  விரலை  அசைத்து  தொழுகின்றனர்.  மே 2014 அந்நஜாத் மாத இதழில் அந்நஜாத் ஆசிரியர் மர்ஹும் அபூ அப்தில்லாஹ் அவர்கள் விரலை அசைப்பது […]

குர்ஆனும் – மொழி பெயர்ப்பும்! அபூ அஹமத், ஒரத்தநாடு இவ்வுலகில் பல ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. அவற்றின் ஒவ்வொன்றிலும் சில சிறப்புகள் இருக்கின்றன. பல மொழிகளின் ஆயிரக்கணக்கான சில நூல்கள் வெவ்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இன்று வரை  வந்துகொண்டே  இருக்கின்றன.  பொதுவாக வேறு ஒரு மொழியில் உள்ள நூலை பிற மொழிகளில் மொழிப் பெயர்க்கப்படு வது எதனால் என்றால் அந்த நூலானது பெரும்பாலோருக்கு பயனுள்ளதாகவும் அல்லது படிக்க சுவாரசியமாகவும் இருப்பதே காரணம். ஆயினும் உலகில் அதிகமாக […]

முஸ்லிம் – முஸ்லிமீன் – முஸ்லிமன் – முஸ்லிமத்தின் – முஸ்லிமத்தன்–முஸ்லிமைனி  என்பது  குறித்து… எஸ்.எம். அமீர், நிந்தாவூர், இலங்கை. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ஒரு விலங்கு முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுப்பதைப் போன்றே, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையி(ன் மார்க்கத்தி)ல் தான் பிறக்கின்றன. விலங்குகள் நாக்கு, மூக்கு வெட்டப்பட்ட நிலையில் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்து வதைப் போன்று) பெற்றோர்கள்தான் குழந்தைகளை (ஓரிறை மார்க்கத்திலிருந்து திருப்பி) யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, அக்னி […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் துல்கர்னைன் சூரியன் மறையும் இடத்தை அடைந்தபோது எதைக் கண்டார் என அல்லாஹ் கூறுகிறான்?   கருப்பு  நிற  சேற்று  நீரில்  சூரியன்  மறைவதைக்  கண்டார்.    (அல்குர்ன் 18:86) எவர் தனது இரட்சகனின் சந்திப்பை ஆதரவு வைக்கிறாரோ அவர் என்ன செய்ய வேண்டும்? அவர்  நல்லறங்கள்  செய்யவேண்டும்.    (அல்குர்ஆன்  18:110) ஸகரிய்யா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்திய அடையாளம் என்ன’? எவ்வித குறையும் இல்லாது நீர் இருந்தும் மூன்று இரவுகள் மனிதர்களுடன் […]

குர்ஆன் வேதமா?  நஜ்முதீன் குர்ஆன் இறைவேதம்தான் என்று உலகமே நம்புகின்றபோது இது என்ன கேள்வி? இறை மறுப்பாளர்கள் (நாத்திகவாதிகள்) சொல்வது போல் அல்லவா இருக்கின்றது. குர்ஆன் இறை வேதம்  என்பதில்  என்ன  சந்தேகம்  இருக்கமுடியும்? பொதுவாக மனிதனின் உள்ளத்தில், அல்லது பழக்க வழக்கத்தில் ஒரு விசயம் அல்லது ஒரு பெயர் ஆரம்பத்தில் எப்படி பதிந்துள்ளதோ, அதை மாற்றுவது என்பது சாதாரண காரியமில்லை. இது படித்தவர்கள் முதல், படிக்காதவர்கள் வரை அனைவரிடமும் காணப்படும் இயல்பு. அதிலும் குறிப்பாக படிக்காதவர்களை […]

உலகில் மிக சிரமமானது எது? அய்யம்பேட்டை, நஜ்முதீன் உலகில்  சிரமமானது…. கோடிகோடியாகபணம்சம்பாதிப்பதா? பெரும்  பதவியில்  இருப்பதா? படித்து  பட்டம்  வாங்குவதா? நாட்டின்  மன்னராக  ஆகுவதா? உலக  அதிசயங்களை  உருவாக்கியதா? விவசாயத்திற்குயாருமேசெய்யமுடியாதஅளவிற்குஉற்பத்தியை   பெருக்கியதா? பெரும்பெரும்தொழிற்சாலைகளைநிர்வாகம்செய்வதா? ஐவேளை  தவறாமல்  தொழுவதா? நோன்பு  வைப்பதா? ஹஜ்  செய்வதா? உண்மையில் மேற்கண்ட எதுவும் இவ்வுலகில் சிரமமானதா என்றால் இல்லை! ஆனால் இவைகள்தான் சிரமமானது என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை  அல்ல. எவ்வாறு எனில், 1. அறிவும், ஆற்றலும் இல்லாத பலரும் […]

திடுகூறாக வரவிருக்கும் மறுமை நாளின் அடையாளங்கள்…  அபூ இஸ்ஸத், இலங்கை அக்டோபர் மாத தொடர்ச்சி…. கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஐந்து விசயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார் என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். “மறுமை நாளைப்  பற்றிய  ஞானம்  அல்லாஹ்விடமே  உள்ளது.    (திருக்குர்ஆன் 31:34)  பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்றார்.  அவரை அழைத்து வாருங்கள் என்றார்கள். சென்று பார்த்தபோது அவரைக் […]

ஆய்வு செய்வோமா? எம். சையத் முபாரக், நாகை இஸ்லாத்தில்  ஆய்வு  உண்டா? மத வேதநூல்கள் எல்லாம் மக்களை சிந்திக்கவோ, ஆராயவோ தூண்டியதில்லை. அல்குர்ஆன் மட்டுமே சிந்தனைச் செய்! ஆராய்ந்து பார்!! என்று  மக்களைத் தூண்டு கிறது. அறிவுக்கு வேலை கொடு என்று சொன்னது இஸ்லாம் மட்டுமே. “அவர்கள் இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் உள்ளங்களில் பூட்டுகளா (பூட்டி) இருக்கின்றன?  (அல்குர் ஆன் 47:24)  மேலும் பார்க்க : 3:191, 4:82, 7:185, 12:105, […]

சூனியம் (செய்வது பற்றி அல்குர்ஆன் ஒளியில்) ஓர் அலசல்! அல்குர்ஆன் 2:102 வசனத்தின் அடிப்படையில் ஷைத்தான்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தை கற்றுக் கொடுத்தனர் என்பதை யுஅல்லி மூனன்னாஸ ஸிஹ்ர என்ற அரபிப் பதத்திலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். அதேபோன்று தான் ஹாரூத், மாரூத் என்ற இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதைக் கொண்டு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்துள்ள சோதனையின் பிரகாரம் அவ்விரு வானவர்களும் மக்களுக்கு சூனியத்தை கற்றுக்கொடுத்தனர். இங்கேயும் யுஅல்லிமானி என்ற அரபிப் பதம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒரே ஒரு […]

குழந்தைகளிடம் எப்படி…?  சேரியான் மறு பதிப்பு : மாற்றுமத பெற்றோர்கள், தங்களின் குழந்தைகள் தங்களை சரிவர கவனிப்பதில்லை, மரியாதையுடன் நடத்துவதில்லை. திருமணமாகி விட்டால் மனைவி பேச்சை கேட்டுக் கொண்டு பெற்றோர்களை, கூட பிறந்தவர்களை விட்டுவிட்டு தனிக்குடித் தனம் போய் விடுகிறார்கள். அல்லது பெற்றோர்களை கவனிக்க முடியாத காரணத்தால் முதியோர் இல்லத்தில் பணம் கொடுத்து சேர்த்து விட்டு பிள்ளைகள் மனைவியுடன் சந்தோசமாக வாழ்கிறார்கள். இதில் ஒருசில முஸ்லிம்களும் அந்த முதியோர் இல்லத்தில் காண முடிந்தது. இதற்கு காரணம் என்ன? […]

முஸ்லிம்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்வார்களா? அபூ அப்தில்லாஹ் இன்று உலகம் முழுவதும் முஸ்லிம்கள் வீழ்ச்சிக்கு மேல் வீழ்ச்சியை சந்திக்கிறார்கள். மற்ற சமுதாயங்கள் அனைத்திற்கும் இளிச்சவாயர்களாக முஸ்லிம்களே தெரிகின்றனர். மற்ற எந்த சமுதாயத்தினரும் அல்லது மதத்தினரும் அவர்கள் சார்ந்துள்ள சமுதாயத்தின் பெயராலோ மதத்தின் பெயராலோ தீவிரவாதி என்று பட்டமளிக்கப்பட்டு மீடியாக்களில் அறிவிக்கப்படுவதில்லை. ஆனால் முஸ்லிம் சமுதாய மக்களோ முஸ்லிம் தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதி என்ற பட்டம் சூட்டி அழைக்கப்படு கிறார்கள். அந்த அளவுக்கு முஸ்லிம் சமுதாயம் மற்றவர்களுக்கு […]