2021 ஜனவரி

தலையங்கம்! விவசாயம்! அவனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்திலிருந்து மழை பொழியச் செய்து. அதிலிருந்து உங்கள் உணவுக்காக கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான். (இதை) நீங்கள் தெரிந்துகொண்டே இருக்கும் நிலையில், அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (அல்குர்ஆன் : 2:22) மேலும் பார்க்க : (அல்குர்ஆன்: 80:24 To 32) தான் படைத்த உயிரினங்கள் அனைத்தும், உயிர்வாழத் தேவையான உணவைப் பெறுவதற்கான அடிப்படையை, அகிலங்களைப் படைத்த ஒரே இறைவன் கொடுத்துவிட்டான். அவற்றிலிருந்து தேவையானதைப் பெற்றிட […]

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? தொடர் -5 அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : மக்களை ஏமாற்றி, வஞ்சித்து வழிகெடுத்து வயிறு வளர்க்கும் புரோகிதர்களின் திறமை பற்றி ஓர் அறிஞரின் அமுத மொழியை மே 2004 இதழில் பார்த்தோம். அதையே மீண்டும் இங்கு இடம் பெறச் செய்துள்ளோம். திறமை என்பது எள்ளளவும் தேவைப்படாத தொழில் புரோகிதத் தொழில் ஒன்றுதான். புரோகிதன் மூடனாக இருக்கலாம். ஒழுக்கத்தில் சீரழிந்தவனாக இருக்கலாம். பால்வினை நோய் உள்ளவனாக இருக்கலாம்” ஆயினும் புரோகிதத் தொழில் […]

புரோகித அரபி மதரஸாக்களுக்கு மாற்றாக…. உடனடித் தேவை ஒரு இஸ்லாமிய பல்கலைக் கழகம் முஹிப்புல்  இஸ்லாம் மதரஸா கல்வியின் அவலட்சணம்! இஸ்லாம் முறையாக போதிக்கப்படவில்லை. அரபு மொழியும் சரியாகப் போதிக்கப்படவில்லை. அதுதான் போகட்டும். இந்த அரபு மதரஸாக்களில் ஓதியவர்கள் புரோகித தொழில் நீங்கலாய் எந்த வேலையும், தொழிலும் செய்ய தகுதியற்றவர்களாய் மதரஸாக்களிலிருந்து வெளி வருகிறிார்கள். இப்படி எந்த கோணத்தில் அலசினாலும் சரி, ஆராய்ந்தாலும் சரி, மதரஸா கல்வியின் அவலட்சணம் அம்பலமாகிக் கொண்டேயிருக்கும். மாபாதகத்திற்கு மேல் மாபாதகம் : முஸ்லிம் […]

தப்லீக்  ஜமாஅத்தினரின்  தஃலீம்  தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! அப்துல் ஹமீத் தொடர் : 65 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்  (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் :  பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட்,  திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு […]

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார்….. அபூ ஹனிபா, புளியங்குடி யஃஜூஜ்  மஃஜூஜ்  கூட்டத்தார்  வந்த   பிறகும்  ஹஜ்ஜும்,  உம்ராவும்  நடைபெறுமா? நவழீன கால மார்க்க அறிஞர்கள் என்று சொல்லப்படுகின்ற அல்லாமா இக்பால், மவ்லானா மவ்தூதி இம்ரான் ஹூசைன் போன்றோர்கள் யஃஜூஜ், மஃஜூஜ் சம்பந்தமாக வரக்கூடிய ஹதீஃத்களுக்கு இதுவரை யாரும் கொடுத்திராத நவீன விளக்கங்களை கொடுத்து வருகிறார்கள். அவர்களுடைய விளக்கங்கள் சரியானதா? தவறானதா? அவர்களின் விளக்கங்களை ஏற்க மறுக்கும் நம்மைப் போன்றவர்களிடம், அவர்கள் வைக்கும் கேள்விகளையும், அதற்கான வைக்கும் கேள்விகளையும், […]

இறைவாக்கு உண்மையாகும்…. ஷரஹ் அலி, உடன்குடி மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? இவர்கள் எந்த விஷயத்தையும் புரிந்து கொள்ள முயலவில்லையே! (இறைநூல் : 4:78) நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது ஆகும். உலக அழிவு நாள் விஷயத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று உங்களிடம் சொல்லப்பட்டபோது உலக அழிவு நாள் என்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியாதே நாங்கள் அதை ஒரு வெற்று ஊகமாகவே கருதுகிறோம். நாங்கள் அதை ஏற்பவர்கள் அல்லர் என்று கூறுபவர்கள் உள்ளனர். (இறைநூல் : 45:32) […]

அறிந்து கொள்வோம்!   மர்யம்பீ, குண்டூர். நரகத்தின் வேதனை எப்படி இருக்கும் என அல்னனளலாஹ் கூறுகிறான்? நிச்சயமாக அது வாழ்வதற்கும், வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்,  (25:66) இறை நம்பிக்கையாளர்களுக்கு இவ்வுலகம் எப்படிப்பட்டது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? சிறைச்சாலை. (முஸ்லிம் : 5663) அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பியவர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? அண்டை வீட்டாருக்கு தொல்லை தரக்கூடாது, விருந்தாளியை கண்ணியப்படுத்த வேண்டும், நல்லதை பேசவும் அல்லது வாய்மூடி இருக்கவேண்டும். […]

நரகம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் ஒன்றாகும்…. எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. (1) ‘ஜஹன்னம்’  (2) ‘லனா’ (3) ‘அல்ஹுத்தமா’ (4) ‘அஸ்ஸஈர்’ (5) ‘ஸகர்’ (6) ஜுரைஜ்(ரஹ்) தஃப்சீர் தபரீ, தப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர் : 4:1032,1033) என்றெல்லாம் பல பெயர்களைக் கொண்டு அழைக்கக்கூடியதும், ஒதுங்கும் இடங்களிலேயே மிக மிகக் கெட்ட இருப்பிடமானது (2:126,206, 3:12,151, 162,197, 4:97,115, 8:16, 9:73, 11:98, 13:18, 14:29, 16:29, 18:29, 19:75, 22:72,  […]

ஐயமும்!  தெளிவும்!! ஐயம் : 1. ஒவ்வொரு மனிதனும் தான் செய்த செயலுக்கு (தானே) பொறுப்பாளியாக இருக்கிறான்.  (அல்குர்ஆன் : 52:21) அணுவளவு நன்மை செய்தோர் அதன் பலனைக் கண்டுகொள்வார். அணுவளவு தீமை செய்தோர் அதன் கேட்டையும் கண்டுகொள்வார் (99:7,8) உங்களுக்கு அவனை (அல்லாஹ்வை) அன்றி உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ வேறு யாருமில்லை நீங்கள் (இதனை) சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன் : 32:4) எச்சுமையானாலும் (தனது சுமையை அன்றி) மற்றெவரின் சுமையையும் சுமந்து கொள்ளமாட்டான். (53:33) இக்கருத்து குர்ஆனின் […]