ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

in 2012 ஆகஸ்ட்

MTM. முஜீபுதீன், இலங்கை

ஜூலை 2012 தொடர்ச்சி …
மதத்தின் பெயரால் பேய், பிசாசு, இறந்த ஆவிகள் மீதான மூட நம்பிக்கைகள்:
சிலைகளை தெய்வமாக வணங்கும் சமுதா யங்களிடையில் ஒரு மூட நம்பிக்கை உண்டு. அதன்படி ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவனது உயிர் அல்லது ஆத்மா அல்லது ரூஹு அவன் செய்த நன்மை தீமைக்கு அமைய இந்த பூமியில் பல சேட்டைகளைச் செய்தபடி சுற்றித் திரிவதாக ஒரு நம்பிக்கை. இதன்படி சில இறந்த மனிதர்களின் ஆத்மா ஆவியாக 40 நாட்களுக்கு வீட்டினுள் அலைவதாகவும் சில மதகுருமார் களை அழைத்து சில பூஜைகள் செய்து அவர் களுக்கு அன்னதானங்கள் வழங்குவதன் மூலம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைந்து இறைவனி டம் செல்வதாக ஒரு நம்பிக்கை. அத்துடன் இறந்தவரின் ஆத்மா சாந்தி அடைய சிலை வணக்கத்தினை மூலதனமாக கொண்டவர்கள், ஒருவர் இறந்து மூன்றாவது நாள் அல்லது ஏழாவது நாள் அல்லது 10,15,30,40,60,90,100 வருடம் என பல வகையில் தமது வருமானங் களுக்கமைய ஆடம்பரமான முறையில் பூஜை களை நடத்துகிறார்கள். இவ்வாறு நடத்தாது விடின் இறந்தவரின் ஆத்மா சாந்தியடையாது. ஊர் மக்களுக்கும், உறவினர்களுக்கும் பல தொல்லைகளைக் கொடுப்பதாகவும் பல கட்டுக் கதைகளை மக்களிடம் உலவ விட்டுள்ளார்கள்.

இவ்வகையான நம்பிக்கையினால் மக்கள் தமது செல்வங்களை இழந்து இதிலிருந்து மீள் வதற்கு வழி தெரியாது தடுமாறுகிறார்கள். சில மதத்தினர் தமது பெற்றோர் இறந்து விட்டால், அச்சடலங்களின் குடல் பகுதிகளை எடுத்து வெளியே வீசிவிட்டு உடலை ஆடம்பரமான முறையில் அழகுபடுத்த கூடிய முறையில் செலவு செய்து ஒரு சில நாட்களுக்கு மக்களுக்கு பார்ப்பதற்கு வைக்கின்றனர். சிலர் மதுபானங் களையும் வந்தவர்களுக்கு வினியோகிக்கின் றனர். சிலர் துக்கத்தை வெளிப்படுத்தும் நோக் கில் ஒப்பாரி வைத்து அழுவதற்காக கூலிக்கு ஆட்களை நியமிப்பவர்களும் உண்டு. அவர்கள் பெற்றோரின் நோய்க்குச் செலவு செய்வதை விட மரணச் செலவுகளுக்காக கூடிய வீண் செலவுகளை மற்றவர்களுக்கு காட்டுவதற்காக செலவு செய்கின்றனர். இஸ்லாம் இவ்வகை யான செலவுகளையும், அறியாமை நிறைந்த மூட நம்பிக்கைகளையும் முற்றாகத் தடை செய் துள்ளது. இஸ்லாம் மரணம் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதேயாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 29:57)
உலகில் பிறந்த ஒவ்வோர் உயிரினமும் மர ணத்தைச் சுகித்தே ஆகவேண்டும். இதிலிருந்து எந்த மனிதனும் தப்பமுடியாது. அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்தை நிர்ணயித்து வைத்துள்ளான். அக் கால முடிவில் அவனுக்குரியவானவர் உயிரைக் கைப்பற்றிச் செல்வார்.

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும் போது, அவன்: “”என் இறைவனே! என்னைத் திரும்ப(உலகுக்குத்) திரும்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான்.

“”நான் விட்டுவந்ததில் நல்ல காரியஙகளைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்), அவ்வா றில்லை! அவன் கூறுவது வெறும் வார்த் தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப் படும் நாள் வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன்: 23:99,100)
ஒருவன் மரணம் அடைந்து விட்டால் அவனுக்கு முன் ஓர் திரை விழுந்து விடுகின்றது. ஆகவே அவன் பேய், பிசாசு ஆக ஆவியாக அலைவதில்லை. ஒவ்வோர் மனிதனுக்கும் அவன் பிறந்தது முதல் இறக்கும் வரையே அவனுடைய நன்மை, தீமைகள் அவதானிக்கப் படுகின்றன. இம்மை வாழ்க்கையின்படியே அவனின் மரணத்தின் பின்னுள்ள மறுமை வாழ்க்கை அமைகின்றது. அது வரை அவனு டைய கபுறுடைய வாழ்க்கையாக அமைகின் றது. பின்வரும் நபிமொழியை அவதானியுங்கள்.

உலகில் எவரேனும் மரணித்து விட்டால் காலையிலும் மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக்காட்டப்படும். சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கத்திலுள்ள அவரது இடம் அவருக்கு எடுத்துக் காட்டப்படும். கியாமத் (மறுமை) நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தூங்குமிடமாகும் என் றும் அவரிடம் கூறப்படும் என நபி(ஸல்) அவர் கள் கூறினார்கள். நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

ஆகவே மனிதன் மரணித்த பின் அவனது ஆவி உலகில் மனிதனுக்கு தொல்லைகள் பல கொடுத்தபடி பேய் பிசாசு ஆக அலைந்து திரியும் என்ற நம்பிக்கை பிழையானதாகும். இந்தச் சேட்டைகள் யாவும் ஜின் இனத்தைச் சேர்ந்த ஷைத்தான், மனித இனத்தைச் சேர்ந்த ஷைத்தான்களுடையதுமான சதிவேலைகள் ஆகும். மனிதன் தனது அறிவைப் பயன்படுத்தி இறைநெறி நூலான அல்குர்ஆனின் ஒளியில் சென்றால் இந்த மடமைகளில் இருந்து நீங்கி நவீன உலகுக்குப் பொருத்தமான மனிதனாக வாழ முடியும். அல்லாஹ் ஒவ்வொரு காலத்தி லும் மனிதர்களை நேர்வழிப் படுத்துவதற்கு இறைத் தூதர்களை அனுப்பிவைத்தான்.

அவ்வாறு அனுப்பப்பட்ட இறைத் தூதர் களே ஆதம்(அலை), நூஹ்(அலை), இப்ராகிம் (அலை) மூசா(அலை), ஈசா(அலை), முஹம்மது நபி(ஸல்) போன்ற இறைத்தூதர்கள் ஆவார்கள். அவர்கள் மக்களுக்கு அழிவை ஏற்படுத்தும் மடமையான செயற்பாடுகளை மார்க்கமாக்க வில்லை; சிலைகளை தெய்வமாக வணங்கும் படி கூறவில்லை. தம்மை தெய்வமாக வணங் கும்படியும் கூறவில்லை. வானம், பூமி, அண் டத்திலுள்ள எல்லாவற்றையும் படைத்த ஏக இறைவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே, அவனையே வணங்கி வழிபடவேண்டும் என்றே கூறினார்கள். ஆகவே சத்திய இறை நெறிநூல் அல்குர்ஆன் ஆகும். அந்த நேர்வழி யையே பின் தொடருங்கள்! அதை விடுத்து, இந்த மடமைகளைச் செய்யக் கூடாது எனத் தடுத்துள்ள காரணத்திற்காகவா சிலை வணக் கம் செய்பவர்கள் அல்குர்ஆனையும், இறுதி இறைத் தூதரையும் அவமதிக்கிறீர்கள். அறிவுடைய மக்களே சிந்தியுங்கள்.
அல்குர்ஆனின் பார்வையில் சில இறை தூதர் களின் அற்புதங்கள்!

அல்லாஹ், ஆதம் முதல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரை பல இறைத் தூதர் களைத் தேர்ந்தெடுத்து மனித சமுதாயம் நேர் வழிபெற இப்பூமிக்கு அனுப்பினான். நூஹ் (அலை) அவர்களின் சமூகத்திலிருந்து சமாதி வழிபாடுகளும், சிலை வணக்கமும், பல தெய்வ அனுஷ்டானங்களும் மக்களிடையே ஷைத்தானின் தூண்டுதலால் உள்நுழைந்தன. இச்சந்தர்ப்பங்களில் அல்லாஹ் மக்களை நேர் வழிப்படுத்தும் நோக்கில் இறைத் தூதர்களை தொடர்ந்து இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வரை அனுப்பிக் கொண்டே இருந்தான். ஒவ்வொரு இறைத் தூதரும் வந்தபோது அனேகமான மக்கள் அவ் இறைத் தூதர்களை நிராகரித்தே வந்தனர்; பொய்ப்பித்தனர். நீர் இறைவனின் தூதராயின் இறைவனிடமிருந்து அற்புதங்களைக் கொண்டு வாரும் என வலியுறுத்தினர். அவர்கள் மனிதர் களாக இருந்தமையால் அவர்கள் சொல்கின்ற நேரத்தில் எல்லாம் அவர்களினால் அற்புதங் களை நிகழ்த்திக்காட்ட முடியவில்லை. அவ் இறைத்தூதர்கள் நிந்திக்கப்பட்டனர். அவ்வூர் தலைவர்களினால் (மதகுருமார்கள்) பல தொல்லைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். அவ் இறைத்தூதர்கள் பிரார்த்தனை செய்தனர். அல்லாஹ்வின் உதவியினால் பல அற்புதங்கள் நிகழ்த்திக்காட்டப்பட்டன. அதன் பின்னும் மக்கள் அவ் இறைத் தூதர்களை நிராகரித்த போது அல்லாஹ்வின் சோதனைகளும் தண்ட னைகளும் அம்மக்கள் மீது இறங்கியது. இது பற்றிய செய்திகள் பல மாற்றங்களுக்கு உட் பட்ட முன்னைய நெறிநூல்களிலும் திரிக்கப் பட்ட நிலையில் இன்றும் காணப்படுகின்றன.

எழுத வாசிக்கத் தெரியாத, ஏற்கனவே இறை நெறி நூல்கள் வழங்கப்படாத குறை´ குலத் தில் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிறந்தார் கள். அவர்களுக்கு முன்னைய இறைநெறி நூல் கள் பற்றிய ஞானம் இல்லாது இருந்தது. ஆனால் நபித்துவத்தின் பின் அரபிய சமுதாயத்திற்கும், அல்குர்ஆனை நிராகரித்த நெறிநூல்காரர்களுக் கும் முன்னைய இறைத் தூதர்கள் நிகழ்த்திய அற்புதங்களையும், வேதனைகளையும், வர லாறுகளையும் அல்லாஹ்வின் இறைச் செய்தி களின் உதவியுடன் அல்குர்ஆன் மூலமாக வெளிப்படுத்திக் காட்டினார்கள். நெறிநூல் காரர்கள் ஆச்சரியம் அடைந்தனர். சிலர் இந்த உண்மைகளை முஹம்மது நபி அவர்கள் ஒரு கிறித்தவரிடம் கேட்டுச் சொல்வதாக சத்தி யத்தை பொய்ப்படுத்த முடியாதபோது கூறினர். ஆனால் அந்த கிறித்தவர் ஓர் அரபி யல்லாத வேற்று மொழி பேசுகிறவர் ஆவார். ஆனால் நபி(ஸல்) அவர்கள் அரபி மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் ஆவார்கள்.

குறை´ நிராகரிப்பாளர்களுக்கு இக்குற்றச் சாட்டு பொய்யானது தவறானது என நிதர்சன மாகத் தெரிந்தது. இதனை அல்குர்ஆன் பின்வரு மாறு குறிப்பிடுகின்றது.

“”நிச்சயமாக அவருக்குக் கற்றுக் கொடுப்ப வன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)” என்று அவர்கள் கூறுவதைத் திட்டமாக நாம் அறி வோம். எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார் களோ, அவனுடைய மொழி(அரபியல்லாது) அன்னிய மொழியாகும். ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும். (16:103)

இறுதி நெறி நூல் அல்குர்ஆனை நம்பாதவர் களுக்கு, குறை கூறியவர்களுக்கு அல்லாஹ் இவ் வாறு பதில் அளிக்கின்றான். அறியாதவர்கள் இறைநெறி நூலைப் பொய் என மறுத்தனர். அவர்களுக்கு அல்லாஹ் தொடர்ந்து எச்சரிப் பதைப் பாருங்கள்:
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங் களை நம்பவில்லையோ, அல்லாஹ் அவர் களுக்கு நேர்வழி காட்டமாட்டான். இன்னும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை யும் உண்டு. நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம் இன்னும் அவர்கள் தான் பொய்யர்கள். (16:104,105)

நூஹ்(அலை) பற்றி முன்னைய வேதங்க ளும் அல்குர்ஆனும்:
நூஹ்(அலை) அவர்கள் பற்றி முன்னைய நெறிநூல்களின் தொய்வு அடைந்த செய்திக ளாக நூல்களை வைத்துள்ள இந்திய மதத்தி னர், யூதர்கள், கிறித்தவர்கள் பல செய்திக ளைப் பதிந்து வைத்துள்ளனர். அதுபோல் அல்குர்ஆனிலும் பல சரியான உண்மை நிகழ்வு களை நூஹ்(அலை) அவர்கள் பற்றி அறிந்து கொள்ள முடியும். முஹம்மது(ஸல்) அவர்கள் நெறிநூல் வரலாறுகளைப் படித்தவர் அல்லர். ஆகவே, இறைத் தூதர்கள் பற்றிய செய்திகள் ஒரு உம்மி நபிக்கு அல்லாஹ்விடம் இருந்து அல்லாமல் எவ்வாறு பெற முடியும். ஆகவே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறைத் தூதர் என்பதனாலேயே இவ்வரலாற்று உண்மைகளை ஆதாரமாகக் கூற முடிந்தது. ஒவ்வொரு நெறிநூல்களும் நூஹ்(அலை) பற்றிக் கூறுவதை அவதானியுங்கள்.

இந்திய மக்கள் வைத்துள்ள நெறிநூல்களி லிருந்து:
ஏ அக்னீ நியூஹ் அவர் தூதர் என்று ஒப்புக் கொள்கிறேன். (ரிக்: 1:134) இந்தியாவில் ஆதி நெறிநூல்களை வைத்திருப்பதாக கூறினாலும் அவர்கள் இறைத் தூதர்களை தவறவிட்டுள் ளனர்; அல்லது தெய்வங்களாக மாற்றியுள்ள னர். ஆனால் அவர்களின் நெறிநூல்களிலும் புராணங்களிலும் இறைத் தூதர் நூஹ்(அலை) அவர்கள் பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது. அவ தானியுங்கள்:

“”ஆதம் அவர்களின் மக்களில் நியூஹ் (நோவா) அவர்களும் ஒருவராவார். நியூஹ் 500 ஆண்டு கள் ஆட்சி புரிந்தார். இவருக்கு ஸிம், ஸாம், பாவ் என்ற மூன்று மக்கள் இருந்தனர். நியூஹ் விஷ்ணு பக்தராக இருந்தார். விஷ்ணு பக்த ரான நியூஹ் ஆழ்ந்த தியானமிருப்பவர். ஒரு தினம் விஷ்ணு அவர் கனவில் தோன்றி “”நியூஹ்வே! கேளும்; இன்னும் ஏழு தினங்களில் ஜலப் பிரளயத்தின் மூலம் ஒரு பேராபத்து வர இருக்கின்றது. நீரும் உம் மக்களும் உடனே மரக்கலாம் மூலம் தப்பிக்கத் தயாராகுங்கள். இந்திரனின் பக்தரே! உம் உயிரைக் காப்பாற் றிக் கொள்ளும். நீர் மேன்மையுடைந்தவரா வீர். விஷ்ணுவின் அறிவுரையை செவியுற்ற நியூஹ் 300 அடி நீளத்திலும், 50 அடி அகலத்தி லும் 300 அடி ஆழத்திலும் மரக்கலம் ஒன்று உரு வாக்கினார். அதில் தமது குடும்பத்தினரையும் ஜோடி ஜோடியாக மற்ற உயிரினங்களையும் ஏற்றிக் கொண்டு பயணமானார். விஷ்ணு அவரைப் புகழ்ந்தார்” 40 நாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் நிலமனைத்தும் நீர் பெருகியது. 4 கடலும் ஒன்றாகியது. பிரளயத் துக்குப் பின் நியூஹ் தன் குடும்பத்தாருடன் வாழ்ந்தார். நியூஹ்வின் மக்களில் ஷாம், ஹாம், யாகுத் என்னும் பெயர்களில் அறியப்படுகின்ற வராகிறார்கள்.
(பவிஷ்ய புராணம்: பிரதிசர்ஹபர்வ 1:4)

இது போல் யூத, கிறித்தவ வேத நூல்களும் நூஹ்(நோவா) (அலை) அவர்களின் காலத்தில் அல்லாஹ் ஏற்படுத்திய பிரளயம் பற்றி விபரிக் கின்றன. நீ கொப்பேர் மரத்தால் உனக்கு பேழையை உண்டாக்கு. அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறமுமாகக் கீல்பூசு, நீ அதைப் பண்ண வேண் டிய விதம் என்னவென்றால், பேழையின் நீளம் 300 முழமும், அதன் அகலம் 50 முழமும் அதன் உயரம் 30 முழமும் இருக்க வேண்டும்.

நீயும், உன்னோட கூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் ஆணும், பெண்ணு மாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடி உன்னுடன் உயிரோடே சேர்த்துக் கொள்.
(ஆதிகாமம்: 6:18-19)

இவ்வாறு தொடர்ந்து வெள்ளப் பிரளயம் பற்றி பைபிள்களிலும் விபரிக்கப்படுகின்றது. ஆனால் இந்தியாவில் இந்துக்கள் வைத்துள்ள நெறிநூல்களில் மூசா(அலை) அவர்கள் பற் றியோ, ஈசா (அலை) அவர்கள் பற்றியோ தக வல் இல்லை. காரணம் அந்நெறிநூல்கள் மனித குலம் யாவருக்கும் அனுப்பப்பட்டவை அல்ல. இந்திய நெறிநூல்கள் மூசா(அலை), ஈசா(அலை) அவர்கள் காலத்திற்கு முன் அனுப்பப்பட்டதா கும். மூசா(அலை), ஈசா(அலை) இஸ்ரவேலர் களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களாவர். ஆனால் இந்திய ஆதி நெறிநூல்களிலும், ஏனைய நெறிநூல்கள் என மக்கள் கருதும் நெறி நூல்களிலும் ஆதம்(அலை), நூஹ்(அலை) அவர் கள் பற்றியும் விபரங்கள் காணப்படுவதுடன், இறுதி இறைத் தூதர் வருகை பற்றி எல்லா நெறி நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை நெறிநூல்களை வைத்திருக்கும் யாரும் மறுக்க முடியாது. அதிலும், தமது மூல மொழியிலேயே நெறிநூலை வைத்துள்ள இந்து நெறி நூல்களில் இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர் கள் பற்றி முன்னறிவிப்பு கூறப்பட்டிருப்பதை மறுக்க முடியுமா? அறிவு மிக்க மனித சமுதா யமே சிந்திக்க வேண்டாமா?

இந்தியாவில் பூர்வீக நெறிநூல்களை கைவசம் வைத்துள்ள மக்களே! ஏன் நீங்கள் உங்கள் நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களை 5000 ஆண்டுகளுக்கும் மேலாக மதத்தின் பெயரால் குறைந்த சாதியாக இனங் காட்டியுள்ளீர்கள். இந்தியாவிலுள்ள திரா விடர்கள் குறை சாதியினரா? உங்கள் நெறி நூலின் பிழையான பக்கத்திலிருந்து ஆதாரம் காட்டுகின்றீர்கள். மறு பக்கத்தை ஏன் மறைக் கின்றீர்கள். உதாரணமாக அவதானியுங்கள் பின் வரும் வசனத்தை:

பிரம்மாவின் முகத்திலிருந்து பிராமணரும், கையிலிருந்து வைஷ்ணவரும், தொடையிலி ருந்து சத்திரியரும், காலடியிலிருந்து சூத்திரரும் தோன்றினர். (மனுதர்மம் அத்தியாயம்: 1 சுலோகம் : 87)

இப்படி ஒரு சுலோகத்தைக் காட்டி ஆதிபிதா ஆதம்(அலை), நூஹ்(நியூஹ்)(அலை) அவர் களின் வழித் தோன்றலில் பிறந்த இறைத் தூதர் களின் வம்சாவழியில் வந்த மக்களின் ஒரு பகுதி யினரை 5000 வருடங்களுக்கு மேலாக கீழ் சாதியினராக மாற்றியுள்ளார்களே! இது சரியா?
(இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

Previous post:

Next post: