கடமையான மார்க்கப் பணியை அல்லாஹ்விற்காகவே செய்ய முன்வாருங்கள்!

in 2011 டிசம்பர்,ததஜ,புரோகிதம்

அபூ அப்தில்லாஹ்

அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் காலத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக மனிதன்
நட்டத்தில் இருக்கிறான்; ஆயினும் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற் செயல்கள் செய்து,
சத்தியத்தைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொரு வர் அறிவுரைக்
கூறுகிறார்களோ அவர்களைத் தவிர. (103:1-3)

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்க ளும் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்களாக
இருக்கின்றனர். அவர்கள் நல்லவற்றை ஏவுகிறார்கள், தீயவற்றை விலக்குகிறார்கள்,
தொழுகையைக் கடைபிடிக்கிறார்கள். ஜகாத்தை கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும்,
அவனது தூதருக்கும் அடிபணிகிறார்கள். அவர் களுக்கே அல்லாஹ் கருணை புரிகிறான்…”
(9:71)

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமு தாயங்களில்) நீங்கள் சிறந்த சமுதாயமாக இருக்
கிறீர்கள். நீங்கள் நல்லவற்றை ஏவுகிறீர்கள்; தீயவற்றை விலக்குகிறீர்கள்; அல்லாஹ்வின்
மீது நம்பிக்கை கொள்கிறீர்கள்…” (3:110)

நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களில்
ஒரு கூட்டம் இருக்கட்டும். அவர்களே வெற்றி பெற்றோர் ஆவர். (3:104)

இந்த இறைவாக்குகள் அனைத்தும் இறுதி நபிக்கு முன்னர் நபிமார்கள் செய்து வந்த மார்க்
கப்பணி இறுதித் தூதரின் உம்மத்தாகிய நம்மீது சுமத்தப்பட்டிருக்கிறது;
கடமையாக்கப்பட்டிருக்கிறது என்பதை உள்ளங்கை நெல்லிக் கனியாக, குன்றிலிட்டத் தீபமாக
உணர்த்துகின்றன.

பிரச்சாரப் பணிக்காக உங்களில் ஒரு கூட்டம் இருக்கட்டும். அவர்களே வெற்றியாளர்கள்
என்று கூறும் அல்லாஹ் அவர்களே ஆலிம்கள் என்றோ, அவர்கள் அதற்காகக் கூலி பெறலாம் என்றோ
கூறவில்லை என்பது இங்கு கூர்ந்து கவனிக்கத் தக்கது. இங்கு கூலி வாங்கி விட்டால்
மறுமையில் வெற்றி கிடைக்காதே!

மேலும் இம்மார்க்கப்பணி ஒட்டுமொத்த முஸ்லிம் ஆண், பெண் அனைவர்மீதும் கடமை
யாக்கப்பட்டிருக்கிறது, மார்க்கப் பணி செய்ய முஸ்லிம்களில் மவ்லவி-ஆலிம்-மதகுருமார்
என ஒரு தனிப்பிரிவு இல்லவே இல்லை என்பதையும் உள்ளங்கை நெல்லிக்கனியாக
உணர்த்துகின்றன.

மேலும், நபிமார்கள் அனைவரும் இம்மார்க்கப் பணியை முழுக்க முழுக்க அல்லாஹ்வின்
பொருத்தம் நாடி, நாளை மறுமையில் அந்த இறைவனிடம் மட்டுமே கூலி-சம்பளத்தை
எதிர்பார்த்துச் செய்ய வேண்டும்; ஒருபோதும் மக்களிடம் கூலி-சம்பளத்தைக் கேட்கவும்
கூடாது; எதிர்பார்க்கவும் கூடாது என்பதை அனைத்து நபிமார்களும் பகிரங்கமாகப் பிர
கடனப்படுத்தியதை 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109,127,145,164,180, 34:47,
38:86, 42:23 ஆகிய 13 குர்ஆன் வசனங்கள் நெற்றிப் பொட்டில் ஓங்கி அடிப்பது போல்
கூறுகின்றன.

36:21 குர்ஆன் வசனம் கூலி வாங்காமல் மார்க்கப் பணி செய்கிறவர்களை மட்டுமே மக்கள்
பின்பற்ற வேண்டும்; அவர்கள் மட்டுமே நேர்வழி நடப்பவர்கள் என உறுதிப்படுத்துகிறது.
கடமையான மார்க்கப் பணிக்குச் சம்ப ளம் வாங்கினால் அதனால் மக்கள் சுமையேற்றப்பட்டு
வழிதவற அது காரணமாகிவிடும் என்பதை 52:40, 68:46 குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன.

ஆம்! மார்க்கப் பணிக்குக் கூலி-சம்பளம் இம்மவ்லவிகளான புரோகிதர்கள் வாங்குவதால்
எப்படிப்பட்டத் தில்லுமுல்லுகள், திருகு தாளங்கள், உருட்டல், புரட்டல்கள், நேர்வழியை
கோணல் வழிகளாக்கும் கொடும் பாவங்கள் நிகழ்கின்றன என்பதை 2:41,74,75, 76,77,78,
79,109,146,159,161,162,174, 3:78,187,188, 4:44, 46, 5:13,41,63, 6:21,25,26,
9:9,10,34, 11:18,19, 31:6 போன்ற எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நீங்களே நேரடியாகப்
படித்து விளங்கினால், கடமையான மார்க்கப் பணிக்கு மக்களிடம் கூலி-சம்பளம் வாங்கித்
தின்பதை விட மெகா கொடிய ஹராம்-பாவம் எதுவுமே இல்லை. இப் புரோகிதர்களான
மவ்லவி-ஆலிம்களின் தலை உச்சியிலிருந்து உள்ளங்கால்கள் வரை ஹராமில் வளர்ந்த உடம்பு
என்பதையும், அவர்களது உடம்பு மட்டுமல்ல, உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் கொடிய
ஹராமில் வந்தவை என்பதையும் திட்டமாக, தெளிவாக அறிய முடியும்.

அதனால்தான் மவ்லவிகளான இம்மதகுருமார்கள் சிறிதும் இறையச்சம் இல்லாமல், துணிந்து
குர்ஆன் வசனங்களை 2:159,161,162 கூறுவது போல் திரித்து, வளைத்து தவறான விளக்கங்கள்
கொடுப்பது, பொய்ச் சத்தியம் செய்வது, அல்லாஹ்மீதே ஆணையிட்டுப் பொய் உரைப்பது,
துணிந்து மற்றவர்கள் மீது அவதூறு பரப்புவது, நேரடி குர்ஆன், ஹதீஸ் கருத்மதுக்களைக்
கேட்கவிடாமல் மக்களைத் தடுப்பது இப்படிப்பட்ட நரகத்திற்கு இட்டுச் செல்லும் துர்ச்
செயல்களைத் துணிந்து செய்ய முடிகிறது.

இந்த உண்மைகளை மேலே எழுதப்பட்டுள்ள குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் சுய சிந்தனையுடன்,
தன்னம்பிக்கையுடன் படித்து விளங்குகிறவர்கள் ஒப்புக் கொள்வார்கள். இந்த வசனங்கள்
எல்லாம் முன்சென்ற காஃபிர்கள், யூதர்கள், கிறித்தவர்கள் பற்றி இறங்கியவை;
முஸ்லிம்களான நம்மை இவை கட்டுப்படுத்தா எனக் கூறி இந்தப் புரோகிதர்கள் மக்களை
ஏமாற்றி வஞ்சிப்பார்கள்; நரகில் தள்ளுவார்கள்.

அல்லாஹ் கண்டித்துக் கூறும் ஒரு தவறை ஆதத்தின் மக்களில் யார் செய்தாலும் தவறு தான்;
தண்டனைக்குரிய குற்றம்தான். உதாரண மாக லூத்(அலை) அவர்களின் சமூகம் ஓரினப் புணர்வில்
ஈடுபட்டதாக குர்ஆன் 7:80,81 வச னங்களில் அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான். இந்தக்
கடும் கண்டனம் அந்தச் சமூகத்திற்குரி யது. எங்களுக்கில்லை என்று கூறுகிறார்களா?
அந்தத் தவறான நம்பிக்கையில்தான் தங்கள் மதரஸாக்களில் அத்துர்ச் செயலை
அனுமதிக்கிறார்களா? பெரிய வலியுல்லாஹ், தென்னாட்டு ஹஜ்ரத்ஜீ என்று
புகழ்ந்துரைக்கப்பட்டவரின் இத் துர்ச் செயல் கையும் மெய்யுமாகப் பிடி பட்டு, ஒரு
மவ்லவியே உரிய சாட்சிகளுடன் எம்மிடம் 1971ல் முறையிட்ட பின்னரே, இந்த மவ்லவிகளிடம்
நாம் வைத்திருந்த அபார நம்பிக்கை தவிடு பொடியாகி குர்ஆனை நேரடியாகப் படித்துச்
சிந்திக்க ஆரம்பித்தோம். இவ்வாறு 12 ஆண்டுகள் பெரும் முயற்சிக்குப் பின்னரே
அல்குர்ஆன் மூலம் நேர்வழியை அல் லாஹ் புலப்படுத்தினான். அல்ஹம்துலில்லாஹ். அதன்
பின்னரே மக்கள் மன்றத்தில் நாம் தெரிந்து கொண்ட கருத்துக்களை எடுத்து வைக்கத்
துணிந்தோம்.

ஓர் அரசு அதிகாரி அரசிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு பணிபுரிகிறார், இந்த நிலையில்
தனது பணிக்காக மக்களிடம் கூலி வாங்குவது பகிரங்கமான லஞ்சம்-கையூட்டு என்பதில்
மாற்றுக் கருத்து இந்த மவ்லவிகளுக்கு உண்டா? இல்லையே! அதேபோல் மார்க்கப் பணிக்கு
இவர்களுக்கு அல்லாஹ்விடமே கூலி இருக்கிறது என்று அல்குர்ஆனும், ஹதீஸ்களும் தெளிவாகக்
கூறிக் கொண்டிருக்க இந்த மவ்லவிகள் மார்க்கப் பணிக்காக மக்களிடம் கூலி-சம்ப ளம்
வாங்குவது கையூட்டு -லஞ்சமே என்பதில் சந்தேகம் இருக்க முடியுமா? இதை குர்ஆன் 2:188
வசனம் எச்சரிக்கிறது. மவ்லவிகள் படிப்பினைப் பெறத் தயாராக இல்லை!

“”மார்க்கப் பணிக்குக் கூலி வாங்கக் கூடாது” என்ற தடை ஜகாத் தடையாக இருந்தது போல்
நபிமார்களுக்கு மட்டும்தான். மவ்லவிகளாகிய எங்களுக்கு அந்தத் தடை பொருந்தாது என்றும்
மவ்லவிகள் வாதிடுகின்றனர். அப்படிப் பட்டவர்கள் நபி(ஸல்) அவர்களின் இந்தக் கடுமையான
எச்சரிக்கையை உள்ளச்சத்துடன் படித்துப் பார்ப்பார்களாக!

“”மக்களே! நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். அவன் தூய்மையை அன்றி வேறு எதனையும்
ஏற்றுக் கொள்ள மாட்டான். அன் றியும் நிச்சயமாக, அல்லாஹ் எதனைத் தூதர்க ளுக்குப்
பணித்தானோ அதனையே நம்பிக்கை யாளர்களுக்கும் பணித்துள்ளான்”. “”தூதர்களே! நீங்கள்
தூயவற்றையே உண்ணுங்கள், நற்செயல் களையே செய்யுங்கள்….” (23:51) என்று இறை வன்
கட்டளையிடுகிறான். (அதேபோல்)

“”நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்…”
(2:172) என்றும் அவன் கட்டளை யிட்டுள்ளான் என்று நபி(ஸல்) கூறியபின் ஒரு வனைப்
பற்றிக் குறிப்பிட்டார்கள்.

அவன் மண் புழுதிகளில் சிக்கி, நெடும் தொலைப் பயணத்துக்கு ஆளாகி, (ஹஜ்ஜுக் குச்
சென்று) தலைவிரி கோலமான நிலையில் தன் இரு கைகளையும் விண்ணை நோக்கி உயர்த்தியவனாக,
“”இறைவனே! இறைவனே!! என் துஆவை ஏற்றுக் கொள்வாயாக!” என்று கூறுவானானால் -அவன்
உண்பதும், குடிப்ப தும், உடுத்தியிருப்பதும் ஹராமாகவும் ஆக, அவன் ஹராமான பொருள்களைக்
கொண்டு வளர்ந்து வரும் நிலையில் இறைஞ்சுவனானால், அவனுடைய இறைஞ்சலுக்கு எவ்வாறு விடை
அளிக்கப்படும்?” (அதாவது அவனு டைய துஆ எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?) என்று
கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) முஸ்லிம்

திர்மிதீ, அல்ஹதீஸ் 4321)

பிரயாண சிரமங்களுக்கிடையே இருக்கும் பிரயாணியின் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்
என்றிருக்க, ஹராமில் உண்பது, குடிப்பது, உடை இருக்கும் நிலையில் அவனது துஆ
நிராகரிக்கப்படுகிறது என்றால், உண்பது, குடிப்பது, அணிவது, வீடுகளில் தரிப்பது
அனைத்தும் ஹராமிலேயே இருக்கும் நிலையில், உச்சியிலிருந்து உள்ளங் கால் வரை ஹராமிலேயே
வளரும் இந்த மவ்லவி புரோகிதர்கள், தங்களுக்காகவும், மக்களுக்கா கவும் சப்தமிட்டு,
சப்தமிட்டுக் கேட்கும் துஆக்கள் அல்லாஹ்விடம் ஏற்கப்படுமா? என்பதை மவ்லவிகள்
சிந்திக்க முன்வராவிட்டாலும், அவர்களை நம்பி அவர்கள் பின்னால் செல்லும் முஸ்லிம்கள்
ஒரு சிலராவது சிந்திக்க வேண்டுகிறோம்.

கடமையான மார்க்கப் பணிக்குக் கூலி-சம்பளம் அறவே கூடாது என்று இத்தனை குர் ஆன்
வசனங்கள் கூறிக் கொண்டிருக்க ஹதீஸ்கள் இதுபற்றி என்ன கூறுகின்றன என்று பாருங்கள்.

“”குர்ஆனை ஓதுங்கள்! அதன் மூலம் சாப்பி டவோ, பொருள் திரட்டவோ முற்படா தீர்கள்”
என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள்.

(அஹ்மத், தஹாவி, தப்ரானி, இப்னு அஸாகிர்)

“”எவர் குர்ஆனை ஓதுகிறாரோ அவர் அல்லாஹ்விடமே கேட்கட்டும், வருங்காலத்தில் குர்ஆனை
ஓதிவிட்டு மக்களிடமே (கூலி-சம்பளம்) கேட்பவர்கள் தோன்றுவார்கள்” என்று நபி(ஸல்)
எச்சரித்துள்ளார்கள். (திர்மிதி, அஹ்மத்)

மேலே நாம் எடுத்தெழுதியுள்ள குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களும் எழுதப் படிக்கத்
தெரியாத ஒரு பாமரனுக்கு அவனது தாய் மொழியில் எடுத்துச் சொன்னால் அவற்றைக் காது
கொடுத்துக் கேட்டு மனதில் இருத்திக் கொண்டால், கடமையான மார்க்கப் பணிக்கு
கூலி-சம்பளம் அறவே கூடாது; கொடிய ஹராம்; உள்ளத்தை இறுகச் செய்து கல்லாக ஆக்கிவிடும்
என்பதைத் தெளிவாக விளங்குவான்; இந்த நிலையில் குர்ஆன், ஹதீஸைக் கரைத்துக் குடித்த
மேதைகள் என தம்பட்டம் அடிக்கும், தற்பெருமை கொள்ளும் மவ்லவிகள் விளங்க முடியாதது
ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தானே!

(பார்க்க 2:74, 5:13, 6:125)

ததஜ இமாமின் சுய விளக்கம்!

குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் தெளிவாக நேரடியாக இப்படிக் கூறிக் கொண்டிருக்க இந்த
மவ்லவி வர்க்கம், குறிப்பாக தவ்ஹீத் மவ்லவிகள் என 4:49, 53:32 எச்சரிக்கையை
நிராகரித்து-குஃப்ரிலாகி தம்பட்டம் அடிப்பவர்கள், 2:159 குர்ஆன் வசனம் கூறுவது போல்
2:273 குர் ஆன் வசனத்தைத் திரித்து வளைத்து அதன் நேரடிக் கருத்தை எப்படி
மறைக்கிறார்கள் தெரியுமா?

கடமையான மார்க்கப் பணிபுரிகிறவர்கள், சொந்தமாக உழைத்துப் பொருளீட்ட வாய்ப்பு
இல்லாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு ஜகாத், சதக்கா நிதியிலிருந்து கூலி-சம்பளமாகக்
கொடுக்கலாம் எனச் சுய விளக்கம் கொடுக்கிறார்கள். இந்தச் சுயநல மவ்லவிகள் ஒரு
விஷயத்தை ஒருபோதும் விளங்கவே மாட்டார்கள்.

அல்குர்ஆனை வஹி மூலம் பெற்ற நபி(ஸல்) அவர்கள் மட்டுமே முஹ்க்கமாத் குர்ஆன்
வசனங்களுக்கு 2:213, 16:44,64 வசனங்களின் படி விளக்கம் கொடுக்கக் கடமையும் உரிமையும்
பெற்றவர்கள் என்பதையும், நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு யாருக்கும் சுய விளக்கம்
கொடுக்கும் உரிமை இல்லை என்பதை 7:3, 33:36,66-68, 18:102-106, 59:7, 9:31 குர்ஆன்
வசனங்கள் மிகக் கடுமையாக எச்சரிப்பதை ஒருபோதும் விளங்க மாட்டார்கள். அந்தளவு இந்த
மவ்லவிகளின் உள்ளங்கள் இருளடைந்து கற்பாறைகள் போல் இறுகிவிட்டன. (பார்க்க: 2:74,
5:13, 6:125)

2:273 வசனத்திற்கு இவர்கள் கூறுவதுதான் உண்மையான பொருள் என்றால், அதைக் கண்டிப்பாக
நபி(ஸல்) நடைமுறைப்படுத்திக் காட்டி இருப்பார்கள். மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளும்
ஒரே நோக்கத்துடன், வேறு நோக்கமே இல்லாமல் மஸ்ஜிதுன் நபவிக்குப் பக்கத்திலிருந்த
திண்ணையில் அடுகிடை படுகிடை என்று கிடந்த அஸ்ஹாபுஸ்ஸுஃப்பாக்களுக்கு அரசு
கஜானாவிலிருந்து மாதாமாதம் கூலி-சம்பளம் கொடுக்கக் கட்டளையிட்டிருப்பார் கள்.
குறைந்தபட்சம் முஹாஜிர்களை அன்சார்களிடம் சாட்டி விட்டது போல், இந்த அஸ்
ஹாஃபுஸ்ஸுஃப்பாக்களையும், இதர வசதியுள்ள நபி தோழர்களிடம் சாட்டிவிட்டு, அவர்களின்
உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொடுக்கக் கட்டளையிட்டிருப்பார்கள். ஏன் செய்யவில்லை?
என்று இந்த மவ்லவிகள் என்றாவது சிந்தித்திருப்பார்களா?

அதுபோல் அன்று முழுநேர மார்க்கப் பணி புரிந்த நபிதோழர்களுக்கும் அப்படி ஏற்பாடு
செய்து சமுதாயத்திற்கு வழிகாட்டி இருப்பார்கள். அப்படி 33:21 வசனம் கூறுவது போல் வழி
காட்டிய ஆதாரம் ஏதாவது இந்த ததஜ மவ்லவிகளிடம் இருக்கிறதா?

பல நாட்கள் பட்டினி கிடந்து மயங்கி விழும் நிலையிலும் அவர்களில் சிலர் இருந்துள்ளனர்.
ஆயினும் அவர்கள் யாரிடமும் 2:273 கூறுவது போல் தங்கள் நிலையை வெளிப் படுத்தியதில்லை.
அவர்களது பரிதாப நிலை யைப் பார்த்து நபிதோழர்கள் அவர்களாக முன்வந்து உபகாரம்
செய்ததாகவே ஹதீஸ்கள் கூறுகின்றன. இதையே 2:273 இறைக் கட்டளை வலியுறுத்துகிறது.

மற்றபடி இந்த ததஜவினர் இந்த 2:273 குர்ஆன் வசனத்திற்குச் சுய விளக்கமாகச் சொல்வது
போல் அவர்கள் முழு நேரப் பணியாளர்களாக இருப்பதால், தொழில் செய்து பொருளீட்ட
நேரமில்லை என்ற நொண்டிக் காரணத்தைச் சொல்லி, பொது நிதியிலிருந்தோ, பொது
மக்களிடமிருந்தோ, மாதா மாதம் கராராக, பகிரங்கமாக கூலி-சம்பளம் பேசி மார்க்கப் பணி
புரிய அனுமதி இல்லை; அது கொடிய ஹராமாகும் என்பதே 2:273 முதல் எண்ணற்ற குர்ஆன்
வசனங்கள் நேரடியாகக் கூறும் உண்மையாகும்.

கடமையான மார்க்கப் பணிக்கு கூலி-சம்பளம் வாங்க குர்ஆனில் வேறு ஆதாரமே இல்லை. 2:273
இறைவாக்கும் சம்பளம் பேசி மாதா மாதம் குறிப்பிட்டத் தொகை வாங்க அனுமதிக்கவில்லை
என்பது தெளிவான பின்னர் இந்த மவ்லவிகள் எடுத்து வைக்கும் அடுத்த சுய விளக்கம் என்ன
தெரியுமா?

சில நபி தோழர்கள் ஒரு ஊர் வழியாக வரும் போது அவ்வூர் மக்களின் தலைவரைப் பாம்பு
கடித்து வேதனையால் அவர் துடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபிதோழர்களில் ஒருவர்
சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி விஷத்தை இறக்கினார். அதற்காக அத்தலைவர் 30 ஆடுகளைக்
கொடுத்தார். ஆயினும் குர்ஆன் ஓதி காசு வாங்கக் கூடாது என்ற தடை இருப்பதின் காரணமாக
ஐயப்பட்டு ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்து நபி(ஸல்) அவர்களிடம் நடந்ததைக் கூறி,
வாங்கிக் கொண்டு வந்த ஆடுகள் ஹலாலா? ஹராமா எனக் கேட்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள்
பங்கு வைத்துக் கொள்ளும்படியும், தனக்கொரு பங்கு தரும்படியும் கூறியதாக அபூ ஸஈது(ரழி)
அறிவித்து புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதீ ஆகிய நூல் களில் இருப்பதாக
அல்ஹதீஸ் 4694ம் ஹதீஸில் பதிவாகி இருக்கிறது.

இச்சம்பவத்தைப் பெரிய ஆதாரமாகக் காட்டி மார்க்கப் பணிக்குக் கூலி வாங்குவதை
நியாயப்படுத்துகிறார்கள். கடமையான மார்க்கப் பணிக்கு கூலி கூடாது என்று அல்குர்ஆனில்
நேரடித் தடை இல்லாதிருந்தால் அவர்களின் இவ் வாதம் சரிதான். ஆனால் தெளிவான தடை
இருக்கிறதே! அதனால் தானே நபி தோழர்கள் நபியிடம் வந்து ஆடுகள் ஹலாலா, ஹராமா எனக்
கேட்கிறார்கள்! அந்த நபிதோழர் ஃபாத்திஹா சூராவை ஓதினார். ஆனால் விஷம் இறங்கவில்லை
என்று வைத்துக் கொள்வோம். குர்ஆன் ஓதியதற்காக ஆடுகள் கிடைத்திருக்குமா?
கிடைத்திருக்காதே!

அப்படியானால் வைத்திய அடிப்படையில் அவ்வாடுகள் கூலியாகக் கொடுக்கப்பட்டனவே அல்லாமல்,
குர்ஆன் ஓதியதற்காகக் கொடுக்கப்படவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாக
விளங்குகிறதே! இந்த ஹதீஸை கொண்டு குர்ஆன் ஓதி நோயைச் சுகப்படுத்தினால் அதற்காகக்
கூலி வாங்க அனுமதி உண்டு என்பதற்கே ஆதாரம் கிடைக்கிறது. பள்ளிகளில் தொழுதுவிட்டு
வெளியே வரும்போது அங்கு காத்து நிற்கும் நோயாளிகளுக்கு குர்ஆனிலிருந்து சில
வசனங்களைக் கொண்டு ஓதிப் பார்க்கலாம். இங்கும் நோய் சுகமான பின்னர் அதற் குரிய
கூலியை பெறலாமே அல்லாமல் குர்ஆன் ஓதியதற்காக கூலி வாங்குவது அனுமதிக்கப்பட்டதல்ல
என்பதே குர்ஆன், ஹதீஸ் நேரடியாகக் கூறும் உண்மையாகும். கடமையான மார்க்கப் பணிக்கு
கூலி-சம்பளம் வாங்குவதற்கு ஒரயொரு ஆதாரமும் இல்லை; மாறாகக் கடுமையான தடையே
இருக்கிறது என்று நிரூபணமானவுடன் அடுத்து இந்த மவ்லவிகள் தங்க ளின் சுய புராணங்களைக்
கூறி சம்பளம் வாங்குவதை நியாயப்படுத்த முற்படுகிறார்கள்.

தொழ வைப்பதற்காக நாங்கள் நேரம் ஒதுக்கி வரவேண்டிய நிலையில் இருக்கிறோம். அதற்காகச்
சம்பளம் வாங்குகிறோம் என்ற வாதத்தை வைக்கின்றனர். இதுவும் மிகத் தவ றான வாதமே!
எப்படி என்று பாருங்கள். பெரும்பாலான இமாம்கள் தொழுகை ஆரம் பிக்கும் இறுதிக்
கட்டத்தில்தான் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு முன்னதாகவே பல தொழுகையாளிகள்
பள்ளிக்கு வந்து காத்துக் கிடக்கிறார்கள். அது மட்டுமா? தொழு கைக்காக அழைப்பு
விடுக்கும் (பாங்கு) முஅத்தின் தொழுகைக்கு அரை மணி நேரமோ, 20 நிமிடங்களோ முன்
கூட்டியே வந்து பாங்கு சொல்லும் கட்டாயத்தில் இருக்கிறார். நேரம் ஒதுக்கி முன்னரே
வந்து பாங்கு சொல்லும் முஅத்தினுக்கே அதற்காகச் சம்பளம் கொடுக்க மார்க்கத்தில்
அனுமதி இல்லை என்றே ஹதீஸ் கூறுகிறது.

அது வருமாறு:

“”முஅத்தினை நியமனம் செய்தால் எந்த விதமான பிரதிபலனும் (கூலியோ, சம்பளமோ) பெற்றுக்
கொள்ளாத ஒருவரை நியமிக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் இறுதியான உறுதி
மொழி வாங்கினார் கள்” என்று உஸ்மான் இப்னு அபில் ஆஸ்(ரழி) கூறினர். (அபூதாவூது,
திர்மிதீ)

கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுத்துப் பாருங்கள்! தொழுகைக்கு 30 நிமிடமோ, 20 நிமிடமோ
முன்கூட்டியே நேரம் ஒதுக்கி வந்து பாங்கு சொல்லும் முஅத்தினுக்கே சம்பளம் கொடுக்க
மார்க்கத்தில் அனுமதி இல்லை என்று ஹதீஸ் தெளிவாக நேரடியாகக் கூறும் நிலையில்,
தொழுகைக்குக் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக வந்து, தொழுகை விரிப்பைக் கூட முஅத்தினே
ஒழுங்குபடுத்தி வைத்த நிலையில், நடிப்பது போல் தலைப்பாகை அணிந்து வேடமிட்டு,
வரிசைகளை நேர்படுத்தி ஒழுங்குபடுத்தாமலும், முன் வரிசைப் பூர்த்தியாகி இரண்டாம்
வரிசையில் நிற்கிறார்களா? என்று பார்க்காமலும் ருகூவுக்குப் பின்னுள்ள சிறு
நிலையிலும், இரண்டு சுஜூதுக்கு இடைப்பட்ட நிலையிலும் போதிய அவகாசம் கொடுக்காமலும்
அவசர அவசரமாகத் தொழுது, தொழுகை முடிந்ததோ இல்லையோ தலைப் பாகையை அவிழ்த்து
எறிந்துவிட்டு வெளியே பறந்து செல்லும் இமாமுக்கு, தொழுகைக்காக நேரம் ஒதுக்கி
வருகிறார் என்பதற்காகச் சம்பளம் கொடுப்பதை மார்க்கம் அனுமதிக்குமா? இப்படி எல்லாம்
சுய புராணங்களை அவிழ்த்து விட்டு அறிவு குறைந்த சுய சிந்தனையற்ற ஆட்டு மந்தைபோல்
மவ்லவிகள் பின்னால் கண்மூடிச் செல்லும் பெருங்கொண்ட மக் களை ஏமாற்ற முடியுமே
அல்லாமல் அல்லாஹ் வையோ, சுய சிந்தனையுள்ள மக்களையோ ஏமாற்ற முடியுமா? ஒருபோதும்
முடியாது.

கடமையான மார்க்கப் பணிக்குக் கூலி-சம்பளம் வாங்குவது குற்றமல்ல என்ற இந்த
மவ்லவிகளின் வாதங்கள் அனைத்தும் தவிடு பொடியானபின் இறுதியாக இந்த மவ்லவிகள் எடுத்து
வைக்கும் வாதம் என்ன தெரியுமா? மார்க்கப் பணிக்குக் கூலி வாங்குவது கூடாது-ஹராம்
என்றால் அவர்களும், அவர்களின் குடும்பங்களும் மண்ணையா உண்டு வாழ்வார்கள்? என்ற
6:112 குர்ஆன் வசனம் கூறும் வார்த்தை ஜாலமே! (ஜுஃக்ருஃபல்கவ்ல்) இதைக் கேட்டவுடன்
அவர்களின் கண்மூடி பக்தர்களும் இதை அப்படியே அடிபிசகாது கோரஸ் பாட ஆரம்பித்து
விடுவார்கள்.

அவர்கள் தங்களின் சிந்தனைக்கு வேலை கொடுத்துச் சுய சிந்தனையாளர்களாகத் தயார் இல்லை.
ஆம்! அழிந்து படும் இந்த அற்பமான உலக வாழ்க்கைக்காகச் சுயமாகச் சிந்தித்து விளங்கிச்
செயல்படும் அளவிற்குத்தானும் அழிந்துபடாத நிரந்தர மறுஉலக வாழ்க்கைக்காகச் சுயமாகச்
சிந்திக்கத் தயாரில்லை என்றால் இவர்களைவிட மெகா நட்டவாளர்கள் வேறு யாரும் இருக்க
முடியுமா? சொல்லுங்கள்!

இப்போது சிந்தியுங்கள். ஐங்காலத் தொழுகைக்காக பல மக்கள் இமாமுக்கு முன்னாலேயே வந்து
சுன்னத்து தொழுது, காத்துக் கிடந்து கடமையான தொழுகையைத் தொழுத பின் னர் உபரியான
தொழுகைகளையும் ஆர அமர தொழுது விட்டு, அதாவது இமாமுக்கு முன்னர் வந்து, இமாமுக்குப்
பின்னர் செல்லும் அந்த மக்கள் மண்ணையா சாப்பிடுகிறார்கள்? அவர் கள் உழைத்துப்
பொருளீட்டி அவர்களும், அவர்கள் குடும்பத்தார், உறவினர் முதல் சாப்பிட்டு, இந்த
உழைப்பதில் சோம்பேறித்தனம் காட்டும் இமாம்களுக்கும் கொடுக்கவில்லையா?

இந்த நிலையில் இகாமத் சொல்லும் நேரம் நெருங்கும்போது அவசர அவசரமாக வந்து தலைப்பாகைக்
கட்டிக்கொண்டு தொழவைத்து விட்டு அவசர அவசரமாக வெளியேறும் இந்த இமாம்களுக்குத் தங்கள்
கைகளால் ஹலாலான முறையில் உழைத்துச் சாப்பிடுவதற்கு என்ன கேடு?

பெரும்பாலான இமாம்கள் ஒரு தொழுகைக்கு என்று 15 நிமிடங்களை ஒதுக்குவதே பெரிய காரியம்.
சரி! ஒரு தொழுகைக்கு 30 நிமிடம் ஒதுக்கினாலும் 5 நேரத் தொழுகைக்கும் வெறும் 2 1/2
மணி நேரம் மட்டுமே ஆகும். பிள்ளைகளுக்குக் கிளிப்பிள்ளைப் பாடமாகப் பொருள் தெரியாத
நிலையில் குர்ஆன் ஓதிக் கொடுக்க காலை, மாலை இன்னொரு 2 1/2 மணி நேரத்தை ஒதுக்கினாலும்
வெறும் 5 மணி நேரத்தை மட்டுமே செலவிடுகிறார்கள்.

24 மணிநேரம் கொண்ட ஒரு நாளில் 5 மணி நேரம் மார்க்கப் பணி, 8 மணி நேரம் தூக்கம் ஆக
13 மணி நேரம் போனாலும், எஞ்சிய 11 மணி நேரத்தை இந்த மவ்லவிகள் எப்படிச்
செலவிடுகிறார்கள். சுஜ மவ்லவிகள் தட்டு, தாயத்து, கத்தம், ஃபாத்தியா, ஊர் புறணி
என்பவற்றில் செலவிடுகிறார்கள். தஜ மவ்லவிகள் ஊர் புறணி, அவதூறு பரப்புவதில்
செலவிடுகிறார்கள். ஹலா லான உழைப்பில் செலவிடப்படாத நேரம் ஹராமான வழிகளில் செலவாகி
மேலும் பாவச் சுமையை கூட்டவே வழி வகுக்கும் என்பது இயற்கை நியதி. இந்த உண்மையை உணர
முடி யாத அளவிற்கு இந்த மவ்லவிகளின் உள்ளங்கள் இருளடைந்து, இறுகிக் கல்லாகி விட்டன
என் பதை 2:74, 5:13, 6:125 குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இன்று இமாம்களுக்குச் சராசரியாக ரூ.6,000/- சம்பளமாகக் கொடுக்கப்படுகிறதென்றால் ஒரு
நாளைக்கு ரூ.200/-; ஒரு வேளை தொழுகைக்கு ரூ.40/- ஆகிறது. அல்லாஹ்வுக்காகத் தொழ
வேண்டிய இமாம் ரூ.40/- கூலி வாங்குவதுபோல், அவர் பின்னால் தொழுபவர்களுக்கு அதில்
கால் பங்கு ரூ.10/- கூலி கொடுக்க ஏற்பாடு செய்தால் பள்ளிகள் தாங்குமா? நோன்புக்
கஞ்சிக்காக மக்கள் கூட்டம் அலை மோதுவது தெரிந்ததுதானே? சிந்தியுங்கள். பெரும்பாலான
முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து எப்படித் தொழத் தயாரில்லையோ அதுபோல்
இந்த இமாம்களும் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்துத் தொழத் தயாரில்லை. இதுதான்
இந்த மவ்லவிகளின் ஈமானின் நிலை! இந்த இமாம்கள் விடுமுறையில் ஊர் செல்லும் போது
ஐங்காலத் தொழுகைகளைப் பேணித் தொழுவதில்லை என்பது பலர் அறிந்த உண்மை.

சகோ.செளக்கத் கஃபாவில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தைக் கூறினார். இமாம்களுக்குச்
சம்பளம் கொடுப் பதை நியாயப்படுத்திக் கொண்டிருந்த நண்பர் ஒருவர் அவரது வயதான தந்தையை
தவாஃப் செய்ய வைத்த ஒருவருக்கு அதற்குரிய கூலி யைக் கொடுத்துவிட்டு, அல்லாஹ்விடம்
கூலி உண்டு என்று சொல்லியிருக்கிறார். அவர் அருகில் நின்ற அவரது சிறு வயது மகன்
ஏம்பா நீதான் அவருக்குரியக் கூலியைக் கொடுத்து விட்டாயே? பின் எப்படி அல்லாஹ்விடம்
அவருக்குக் கூலி கிடைக்கும் என்று மடக்கிக் கேட்டுள்ளான். அப்போதுதான் அல்லாஹ்
வுக்காகச் செய்யவேண்டிய கடமையான மார்க் கப்பணியைக் கூலிக்காகச் செய்தால் நாளை
மறுமையில் கூலி கிடைக்காது என்பதை மகன் மூலம் தந்தை அறிந்துள்ளார்.

அல்குர்ஆனில் எண்ணற்ற வசனங்கள் மிக மிகக் கடுமையாக,கேவலமாக, இழிவாகச் சுட்டிக்
காட்டுவது மார்க்கத்தைத் தொழிலாக-வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட மத குருமார்களான
இப்புரோகிதர்களைத்தான் என்பதை விளங்க முடியாத நிலையில் இந்த மவ்லவிகள்
இருக்கிறார்கள் என்றால், குர்ஆன் இறங்கிய அரபி மொழியை ஓரளவாவது கற்றிருந்தும்
அவர்களின் உள்ளங்கள் இருள டைந்துள்ளன என்பதுதானே அதன் எதார்த்த நிலையாக இருக்க
முடியும்.

மேலும் இமாமத்திற்குத் தகுதியுடையவர்கள் பற்றிய அனைத்து ஹதீஸ்களையும் உற்று
நோக்குங்கள். அனைத்திலும் “”உங்களில்”, “”உங்களில்” , “”உங்களில்” எனக்
குறிப்பிட்டுக் கூறுவ தைப் பார்க்கலாம். இந்த “”உங்களில்” என்று அழுத்தம் கொடுத்து
நபி(ஸல்) அவர்கள் கூறக் காரணம் என்ன?

ததஜ இமாமின் சுய விளக்கம்:

“”உங்களில்” என அழுத்தமாகக் கூறக் காரணம் “”´ஷிர்க்” செய்யாதவர்களை மட்டுமே
குறிக்கும். எனவே தர்கா சடங்குகள் செய்து ´ஷிர்க்கில் மூழ்கி இருக்கும் இமாம்களைப்
பின்பற்றக் கூடாது என்று தன்னிச்சையாக சுய விளக்கம் கொடுத்து தனிப்பள்ளி கட்டி
சமுதாயத்தை 21:92, 23:52 இறைக் கட்ட ளைகளை 2:39 சொல்வது போல் நிராகரித்து
குஃப்ரிலாகி பிளவுபடுத்தினார் ததஜ நவீன இமாம்(?).

ஆனால் நபி(ஸல்) அவர்கள் “”உங்களில்” என்று அழுத்தம் கொடுத்து சொன்னதின் பொருள் ஒரு
ஊரில் ஒரு மஹல்லாவில் இருப்பவர்களில் தகுதி உடையவர் இமாமத் செய்யட்டும் என்பதேயாகும்.
இன்னும் தெளிவாகச் சொன்னால் கூலிக்கு மாரடிக்கும் இமாம்களை ஒருபோதும்
ஏற்படுத்தாதீர்கள். மஹல்லாவில் உள்ள உங்களில் ஒருவரே இமாமத் செய்யுங்கள். அதுவே
இஃக்லாசான செயல் என்ற நேரடிக் கட்டளையே இமாமத் சம்பந்தப்பட்ட ஹதீஸ்களில்
பொதிந்திருக்கிறது.

ஆனால் கேவலம் இந்த மவ்லவிகள் தங்க ளின் அற்பமான இவ்வுலக வாழ்க்கையைக் குறிக்கோளாகக்
கொண்டு முஸ்லிம்களை குர்ஆனை விட்டுத் தூரப்படுத்தி வைத்திருக்கிறார்களே!
பெரும்பாலான முஸ்லிம்கள் இமாமத் செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும், பாங்கு, இகாமத்
சொல்லக்கூட தெரியாதவர்களாக இருக்கிறார்களே! ஏன்? அடிப்படை கலிமாவே தெரியாதவர்கள்
பெரும்பான்மை முஸ்லிம்கள். அதனால்தான் இப்புரோகிதர்கள் திருமண சமயத்தில் கலிமா
சொல்லிக் கொடுத்து முஸ்லிமாக ஆக்குகிறார்கள். என்னே கை சேதம்?

இமாம்களின் நிலை இதுவென்றால், அடுத்து கடமையான பிரசார பணி செய்கிறவர்களும் கூலிக்கே
மாரடிக்கிறார்கள். இமாம்களைப் போல் ஒரு நாளில் அதிகபட்சம் சுமார் 5 மணிநேரம்
செலவிடும் அவர்கள் முழு நேரப் பணியாளர்களாம். அதனால் அவர்களுக்கு ஹலாலான முறையில்
பொருளீட்ட நேரம் இல்லையாம்! அதனால் ஹராமான வழியில் பிரசார பணிக்குச் சம்பளம்
வாங்குகிறார்களாம்.

ஆனால், அன்றாடம் ஐங்கால தொழுகைகளையும் தவறாமல் ஜமாஅத்தோடு தொழுது கொண்டு, வியாபாரம்,
தொழில், விவசாயம் செய்து ஹலாலான முறையில் பொருளீட்டுகிறவர்கள், இமாம்கள் ஹராமான
வழியில் சம்பளம் பெறுவதைத் தவறு என உணர்த்துவது போல், வியாபாரம், தொழில், விவசாயம்
என ஹலாலான வழியில் பொருளீட்டிக் கொண்டு தங்கள் சொந்தச் செலவில் சில, பல நாட்களை
ஒதுக்கிச் சென்று தப்லீஃக் பணி புரிகிறவர்கள், பிரசார பணிக்குச் சம்பளம் வாங்குவது
தவறு-ஹராம் என உணர்த்துகிறார்கள். அவர்களுக்கு எப்படிப் பிரசார பணியைச் சம்பளம்
இல்லாமல் செய்ய முடிகிறது? சிந்தியுங்கள்.

ஆனால் இந்த மவ்லவிகள் அவர்களைப் பார்த்துப் படிப்பினைப் பெறுவதற்கு மாறாக ஆரம்ப
காலத்தில் தப்லீஃக் பணியைக் கடுமையாக எதிர்த்தார்கள். இன்று எமது இந்தப் பிரசார
பணியை எதிர்ப்பது போல் பள்ளியினுள் நுழைவதைத் தடுப்பது போல் மிகக் கடுமையாக தப்லீஃக்
பணியை எதிர்த்தார்கள். பள்ளியினுள் நுழைய விடாமல் தடுத்தார்கள். தப்லீஃக் பணி
மவ்லவிகளுக்கே சொந்தம் என்றார்கள். தப்லீஃக் பணி புரிகிறவர்களை “காஃபிர்கள்” என ஃபத்வா
கொடுத்தார்கள்.

நாம் ஆரம்பக் கட்டத்தில் இந்த தப்லீஃக் பணியில் ஈடுபட்டிருக்கும்போது எமது சொந்த
அனுபவத்தில் கண்ட உண்மை இது. ஆயினும் அதில் தீவிரமாக ஈடுபட்டதற்குக் காரணம் அன்று
தப் லீஃக் பணியில் தூய எண்ணம்-இஃக்லாஸ் காணப்பட்டதாலேயே!

ஆயினும் இன்று அங்கும் நிலைமை தலை கீழாக ஆகிவிட்டது. மவ்லவி புரோகிதர்களின் ஆதிக்கமே
அங்கும் நிறைந்து காணப்படுகிறது. அங்கும் கூலிக்கு ஆள் பிடித்து அனுப்பும் அவல நிலை
ஏற்பட்டுவிட்டது. இந்த உண்மையை அவர்கள் தஃலீம் என்ற பெயரால் வாசிக்கும் அமல்களின்
சிறப்பு நூலும், பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்கள் நிறைந்த “முன்தகப்ல்
அஹாதீஃத்’ நூலும் நிரூபிக்கின்றன.

நாம் 1978ல் நேரடியாக டெல்லி தப்லீஃக் மர்கசுக்குச் சென்று முறையிட்டும் பலன் ஏற்பட
வில்லை. அமல்களின் சிறப்பு நூலில் தான் பரக்கத் இருக்கிறது என்று கூறிவிட்டார்கள்.
அந்நஜாத் ஆரம்பித்த பின்னர் 1988ல் மீண்டும் சென்று முறையிட்டோம். அவர்கள்
ஏற்கவில்லை.

இப்போதும் சொல்கிறோம். அவர்கள் கட்டுக் கதைகள், கப்ஸாக்கள் நிறைந்த அமல களின்
சிறப்பு நூல்களையும், இட்டுக்கட்டப் பட்ட, பலவீனமான ஹதீஸ்கள் நிறைந்த புதிதாக
அறிமுகப்படுத்தப்பட்ட “”முன்தகப்ல் அஹாதீஃத்” நூலையும் அப்புறப்படுத்திவிட்டு,
குர்ஆன் மொழி பெயர்ப்பையும், ஆதாரபூர்வ மான ஹதீஸ்களின் மொழி பெயர்ப்பையும் தஃலீமில்
வைத்து மக்களுக்கு உண்மையான மார்க்கத்தைப் போதிக்க முன்வந்தால், நாமும் அப்பணியில்
மும்முரமாக ஈடுபடத் தயாராகவே இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ். ஃதும்ம இன்ஷா அல்லாஹ்.

மார்க்கப் பணிக்குக் கூலி வாங்கி நாங்கள் குபேரர்கள் ஆகிவிட்டோமா? அன்றாடம் நாட்களை
ஓட்டுவதே பெரும் சிரமமாக இருக்கிறது. வறுமையில் வாடுகிறோம் என்று மவ்லவிகள்
கூறுகிறார்கள். “”மக்களிடம் கையேந்துபவர்களுக்கு கொடுக்கும் வாசலை அல்லாஹ்
மூடிவிடுகிறான். அல்லாஹ்வை மட்டும் முழுமையாக நம்பி அவனிடம் மட் டுமே
கையேந்துகிறவர்களுக்கு கொடுக்கும் வாசலை முழுமையாகத் திறந்து விடுகிறான் அல்லாஹ்
என்ற” என்ற ஹதீஃத் இம்மவ்லவி களுக்குத் தெரியாதா?

ஆம்! இமாமத், பிரசார பணிகளை ஈமானின் உறுதியோடு அல்லாஹ்வையும், மறுமையையும் மிகமிக
உறுதியாக நம்பி, அல்லாஹ் விடமே அவற்றிற்குரிய கூலியை எதிர்பார்த்து தூய எண்ணத்தோடு
செய்ய முன் வந்தால் நிச் சயமாக அல்லாஹ் அதற்குரிய வழியை எளி தாக்கித் தருவான். இது
29:69ல் அல்லாஹ் உறுதியாக அளிக்கும் உத்திரவாதமாகும்.

இங்கு இன்னொரு விஷயத்தையும் முக்கிய மாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். நம் மீது
3:110, 9:71, 103:1-3 மூலம் விதிக்கப்பட்ட கடமையான மார்க்கப் பணிகளுக்கு, அவற்றைச்
செய்யாவிட்டால் நாளை மறுமையில் கேள்வி கேட்கப்பட்டு தண்டிக்கப்படுவோம் என்ற
வகையிலுள்ள மார்க்கப் பணிகளுக்கு கூலி-சம்பளம் வாங்குவது மட்டுமே தடுக்கப்
பட்டுள்ளது. நம்மீது விதிக்கப்படாததை அதாவது செய்யா விட்டால் ஏன் செய்யவில்லை என்று
கேட்டுத் தண்டிக்கப்படாத பணிகளான குர் ஆனை, ஹதீஸ்களை எழுதிக் கொடுப்பது, மொழி
பெயர்ப்பது, அச்சடித்து விற்பது, தினசரி, வார, மாத இதழ்கள் நடத்துவது, நூல்கள் வெளி
யிடுவது, வெளியூர்களுக்கு அழைப்பின் பேரில் சென்று பிரசாரம் செய்யும்போது பயணப்படி
இவை அனைத்திற்கும் பணம் பெறுவது மார்க்கத்தில் தடை செய்யப்படவில்லை என்பதை நாம்
புரிந்து கொள்ள வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் நபிமார்கள் செய்த மார்க்கப் பணிகள் மட்டுமே முஸ்லிம்கள்
மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. அவை அல்லாத வைக்கு கூலி-சம்பளம் பெறுவதை மார்க்கம்
தடை செய்யவில்லை என்பதே சரியாகும்.

இதை ஆதாரமாக வைத்து இமாமத் செய்வது எங்கள் மீது கடமை இல்லையே என்று மவ்லவிகள்
எதிர்க் கேள்வி கேட்கலாம். நபி(ஸல்) இமாமத் செய்தார்கள். ஆனால் அதற்காக ஊதியம்
பெறவில்லை. மேலும் யாராக இருந்தாலும் ஐங்கால தொழுகை கடமை. உள்ளூரில் இருக்கும் போது
ஜமாஅத்தும் வலியுறுத்தப்பட்ட சுன்னத். அந்த அடிப்படையில் ஒரு மவ்லவி பள்ளிக்குச்
செல்லும்போது, அந்த மஹல்லாவாசிகளில், நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளபடி இமாமத்
செய்யும் தகுதி அவருக்கே இருக்கிறது. எனவே நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி
அம்மக்களுக்கு இமாமத் செய்யும் பொறுப்பு அவருக்கு ஏற்படுகிறது. எனவே இதைக் காரணம்
காட்டி தொழ வைக்க கூலி-சம்பளம் பெற முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக
விளங்குகிறது.

மவ்லவிகள் கடமையான மார்க்கப் பணிக்கு கூலி-சம்பளம் வாங்குவதால், அதுவே உலகில்
அனைத்து வழிகேடுகளுக்கும், ஏன்? படைத்த இறைவனுக்கே இணை வைக்கும் மிகமிகக் கொடிய
செயலை மனித இனம் செய்யக் காரணமாகிப் பெருங்கொண்ட மக்களை நரகில் தள்ளி ஷைத்தானின்
சபதத்தை நிறைவேற்ற இவர்கள் துணை போவதாலேயே அவர்களைக் கடுமையாக விமர்சித்து அவர்களின்
முகத்திரையைக் கிழித்து மக்களுக்கு அடையாளம் காட்ட முற் படுகிறோம். இறைவன் மீது
ஆணையாக மறுமையை நட்டப்படுத்திக் கொள்ளும் அவர்கள் மீது அனுதாபமே அல்லாமல் சொந்தக்
குரோதம் அணுவளவும் நிச்சயமாக இல்லை.

Previous post:

Next post: