செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்!

in 2013 ஜனவரி

எஸ்.ஹலரத் அலி, ஜித்தா

டிசம்பர் 2012 தொடர்ச்சி….
நபி(ஸல்) அவர்களின் துஆவிலும் செவிச் சிறப்பைக் காணலாம். அல்லாஹ்வே என்னைக் கடன் தொல்லை மற்றும் வறுமையிலிருந்தும் நீக்குவாயாக! எனது கேட்கும் திறனையும், பார்க்கும் திறனையும் உன் வழியில் அதிகப் படுத்துவாயாக. யஹ்யாபின் ஸாத்(ரழி)முஅத்தா.

செவிப்புலன் ஏன் சிறப்புப் பெறுகிறது என்று ஆய்வு செய்தால் ஓர் உண்மை விளங்கும். பொதுவாகக் கண்களால் பார்க்கும் சக்தியை அல்லாஹ் எல்லா ஜீவராசிகளுக்கும் கொடுத்துள்ளான். ஆனால் செவி ஒன்றுதான் ஐந்தறிவு என்ற மிருக நிலையில் உள்ளவனை செவியால் மொழிகளைக் கேட்டு உள்ளத்துள் அனுப்பி நன்மை தீமைகளைப் பிரித்தறிந்து சுவனம் செல்லும் நேர்வழிக்குத் துணையாக உள்ளது.

அறிவியல் ரீதியாகவே செவிப்புலனிற்கு பார்வையை விட அதி முக்கியத்துவம் உள்ளதை அறியலாம்.
அல்லாஹ் மனிதனை(காய்ந்தால் “”கன்” “”கன்”) என்று சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப் பான களிமண்ணால் படைத்திருக்கிறான். செவித்திறனுக்கு ஆதாரமான ஒலி அலைகளை எழுப்பும் (சப்தமிடும்) களிமண் நிலையிலேயே மனிதனை அல்லாஹ் படைத்திருக்கிறான்.

கரு வளர்ச்சி நிலையில் கர்ப்பத்தில் 13வது வாரத்தில் செவி உருவாக ஆரம்பித்து 20வது வாரத்தில் முழு வளர்ச்சி பெற்றுவிடுகிறது. கர்ப்பத்திலேயே கேட்கும் திறனை அடைந்து விடுகிறது. தாயின் இதயத்துடிப்பு, இரத்த ஓட்டத்தின் ஒலிகளை சிசு கேட்கிறது. வெளி உலகில் தாய் பேசும் குரலையும் இசையையும் கர்ப்பத்திலுள்ள சிசு கேட்பதாக நவீன ஆய்வு கள் கூறுகின்றன. அதேசமயம் பார்வைப் புலனான கண்கள் சிசு வளர்ச்சியின் 26வது வாரத்திலேயே உரு வாக ஆரம்பிக்கிறது. இன்றைய நவீன அறிவியல் உண்மைகளை ஆயிரத்து நானூறு ஆண்டுக ளுக்கு முன்பே அல்லாஹ் கூறி விட்டான். நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

“”கர்ப்பத்தில் இந்திரியம் சேர்ந்த நாற்ப தாம் நாளுக்குப் பிறகு, அல்லாஹ் மலக்கை அனுப்பி உருவத்தைக் கொடுக்கின்றான். பிறகு செவிப் புலனையும், பார்க்கும் புலனையும், தோல், எலும்பையும் வளரச் செய்கிறான்”
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) நூல்: முஸ்லிம்.

ஆகக் கண்ணுக்கு முன் உருவாகும் உறுப்பு செவிப்புலனே!
ஒளியின் வேகம், ஒலியின் வேகத்தை விட பல மடங்கு அதிகம். ஆனாலும் நமது செவி யானது பார்வை ஒளி அலைகளை விட அதிகள வில் சுமார் மூன்று லட்சம் ஒலி அலைகளை மூளைக்கு அனுப்புகிறது. மூளையானது பார்வை ஒளி அலைகளை விட ஓசை ஒலி அலைகளை ஆயிரக்கணக்கான மடங்கு அதி வேகத்தில் இனம் பிரித்து அடையாளம் காட்டுகிறது.

அல்லாஹ்வின் தூதர் அன்று கூறிய உண்மைகளை இன்றைய அறிவியல் உலகம் மெய்ப்பித்து வருகிறது. ஆக செவிப்புலனே பார்வையை விட எதிலும் முன் நிற்கிறது. மேலும் குழந்தை மண்ணில் பிறந்தவுடன் செயல்படும் முதல் உறுப்பு செவிதான். ஆம்! வெளி உலகச் சூழலைக் கேட்டு அதன் தாக்கத் தினால் குழந்தைக் கத்துகிறது. ஷைத்தான் கிள்ளி விடுவதாக நபி(ஸல்) கூறியிருக்கிறார் கள். குழந்தை கண்கள் திறந்து வெளி உலகைப் பார்ப்பது பின்புதான். கர்ப்பத்திலே செயல் பட்ட செவியானது குழந்தை பிறந்த பின்னர் இருபத்தி நான்கு மணி நேரமும் தொடர்ந்து செயல்படுகிறது. தூங்கினாலும் காது விழிப்பா கவே இருக்கிறது. இரைச்சல் இருக்கும் இடத் தில் தூக்கம் வருவதில்லை. அலாரம் அடித்த தும் காது நம்மை விழிக்க வைக்கிறது. தூக்கத் திற்கும் செவிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

ஆனால் கண்கள் தொடர்ந்து செயல்படுவதில்லை. நாம் கண்ணை மூடித் தூங்கிவிட்டால் அது செயல்படாது. சிலர் தூங்கும்போது கண் திறந்த நிலையில் இருந்தாலும் காட்சிகள் காண மாட்டா. மேலும் பார்ப்பதற்கு ஒளி வேண்டும்; விழித்திருந்தாலும் இருட்டில் கண்ணால் காண முடியாது. குகைவாசிகளைப் பற்றி அல்லாஹ் கூறும்போது அவர்கள் முன்னூறு வருடங்க ளுக்கு மேல் உறங்கியதாகவும், அப்படி உறங்கு வதற்குக் காது மடலைத் தட்டிக் கொடுத்ததாக வும் கூறுகின்றான். அதே சமயம் அவர்கள் கண் திறந்த நிலையில் உள்ளது. ஆனால் பார்வை செயல்படவில்லை. விழித்திருக்கும் செவியை மட்டும் தட்டிக்கொடுத்து அல்லாஹ் அமைதிப் படுத்துகின்றான். தூக்கத்தில் விழித்து அழும் குழந்தைகளை தாய்மார்கள் தட்டிக் கொடுத்து உறங்கவைப்பதை அனைவரும் அறிவோம்.

“”அக்குகையில் பல வருடங்கள் (நித்திரை) செய்யும்படி அவர்களுடைய காதுகளைத் தட் டிக் கொடுத்தோம்” அல்குர்ஆன் : 18:11
(அக்குகையிலுள்ள) அவர்கள் நித்திரை செய்து கொண்டிருந்தபோதிலும் அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாகவே நீங்கள் எண் ணுவீர்கள்” அல்குர்ஆன் : 18:18

பிறந்த குழந்தைக் கண் விழித்து உலகத்தைப் பார்ப்பது அதிசயமோ அற்புதமோ அல்ல. ஆனால் பிறந்த குழந்தை, பேசுகிறவர்கள் பேச்சை செவியில் கேட்டு அதற்குப் பதில் சொல்வதுதான் அற்புதம்.

மரியம்(அலை) அவர்கள் குழந்தையைப் பெற்று சுமந்து வந்தபோது மக்கள் அவரை நிந்தித்தனர். அவர் குழந்தையிடம் பேசும்படி ஜாடை செய்தார். அதற்கவர்கள்.

“”மடியிலிருக்கக் கூடிய குழந்தையிடம் நாங் கள் எவ்வாறு பேசுவோம்” என்று கூறினார்கள். (இதனைச் செவியுற்ற அக்குழந்தை அவர்களை நோக்கிக்) கூறியதாவது “”நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடிமை; அவன் எனக்கு நெறிநூலைக் கொடுத்து நபியாகவும் என்னை ஆக்குவான்…” அல்குர்ஆன் : 19:30

ஈசா(அலை) அவர்கள் குழந்தையாக இருக் கும்போதே அவர்கள் செவியையும் பேச்சையும் அல்லாஹ் அற்புதமாக்கிவிட்டான்.

மண்ணறையிலும் செயல்படும் செவிப் புலன்கள்:
மனிதன் இறந்து அவன் உயிர் உடலை விட்டுப் பிரிந்து மேலே செல்லும் காட்சியை கடைசியாகப் பார்க்கும் உறுப்பு கண்கள்தான். ஆகவேதான் கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன என்று இறைத் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினர்.
அறிவிப்பவர்: உம்மு சலமா(ரழி) நூல்: முஸ்லிம்.

ஆனாலும், ஜனாஸாவைத் தோளில் வைத் துத் தூக்கிச் செல்லும்போது, “”அந்த ஜனாஸா நல் லறங்கள் புரிந்ததாக இருக்குமானால், என்னை விரைந்து கொண்டுச் செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டுச் செல்கிறீர்கள் என்று கூறும், இவ் வாறு கூறப்படும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர்.
அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ(ரழி) புகாரீ.

நபி(ஸல்) அவர்கள் கூறினர். “”ஓர் அடியா னது உடலை கப்ரில் அடக்கம் செய்துவிட்டு அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர் களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியுறும். அவன் நிராகரிப்பவனாகவோ, நயவஞ்சகனா கவோ இருந்தால், இரும்பாலான சுத்தியால் இரண்டு காதுகளுக்குமிடையே ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின் கள் தவிர மற்ற அனைத்தும் செவியேற்கும் அளவிற்கு அவன் கத்துவான்”.
அறிவிப்பாளர்:அனஸ்(ரழி), புகாரீ.

இறந்த உடல் தூக்கி செல்லும்போதும் அவன் பேசுகிறான். உடலை குழியில் வைத்து மண்ணைப் போட்டு மூடிய பிறகும் நடந்து செல்லும் காலடி ஓசையை அவன் செவி கேட்கிறது. அந்த கப்ரில் நடக்கும் வேதனை ஓலங்களை வெளியில் உள்ள மிருகங்கள் செவியுறுகின்றன.

“”பர்ஸக்” என்னும் மறைவான நிலையிலும் செவிப்புலனானது மண்ணுக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்பு சாதனமாக உள்ளது. இறந்த உடல் பேசுவதை கேட்கும் சக்தியை மனிதனைத் தவிர்த்த ஜீவராசிகளுக்கு அல்லாஹ் கொடுத்துள்ளான். மண்ணில் நடமாடும் மலக்குகளையும், ஜின் ஷைத்தான்களையும் பார்க்கக்கூடிய ஆற்றல் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் அல்லாஹ் கொடுத்துள்ளான்.

“”சேவல் கூவுவதைக் கேட்டால் அது மலக் கைப் பார்த்துவிட்டது. கழுதைக் கத்துவதைக் கேட்டால் அது ஜின்னைப் பார்த்துவிட்டது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூ ஹுரைரா(ரழி), நூல் : புகாரீ.

இருப்பினும் மண்ணுக்கு மேல் நடப்பவை களையே ஜீவராசிகளின் கண்கள் பார்க்கின்றன. ஆனால் மண்ணுக்கு கீழே நடக்கும் சப்தங்களை அறியும் ஆற்றலை செவிப்புலனிற்கே அல்லாஹ் கொடுத்துள்ளான்.

20HZ ஹர்ட்ஸ்க்கு குறைந்த ஒலியலை களை இன்ஃப்ரா சோனிக் என்று அழைக்கிறார்கள். மனிதர்களுக்குக் கேட்கக்கூடிய ஒலி அளவு 20HZ-20,000 HZ Frequency, இதற்கு மேலோ அல்லது கீழோ நம்மால் செவியேற்க முடியாது. சில மிருகங்கள் குறைந்த அதிர்வெண் ஒலிகளையும் செவியுற முடியும்.

உதாரணமாக யானைகள் மிகக் குறைந்த அதிர்வெண் ஒலியலைகளை 5HZ – 12,000 HZ கேட்கமுடியும். புறாவால் மிக மிகக் குறைந்த 1HZ ஒலியலைகளையும் கேட்க முடியும். நாய் 50-45,000 HZ, அதிர்வெண் ஒலியலைகளைக் கேட்க முடியும். நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு பூமிக்குக் கீழ் உள்ள தட்டு நகரும் (Tectonic Plate Movement) மெல்லிய அதிர்வு (5HZ-20HZ) அலைகளை மனிதர்களால் உணர்ந்து கொள்ள முடியாது. நவீன கருவிகளாலும் முன் அறிவிக்க முடியாது. பூகம்பம் நடந்த பின்னர் தான் அதன் தாக்கத்தை ரிக்டர் கருவி மூலம் அறிய முடியும்.

ஆனால் மற்ற ஜீவராசிகளுக்கு, பூமிக்குக் கீழ் ஏற்படும் மாற்றங்களை முன்னரே உணரக் கூடிய செவியுணர்வை அல்லாஹ் கொடுத் துள்ளான். கடந்த சுனாமியின் போது ஏராள மான மக்கள் ஆபத்து வருவதை அறியாது இறந்தனர். இலங்கை, அந்தமான், இந்தோ னேசியா கடலோரக் காடுகளில் வசிக்கும் மிரு கங்கள், பறவைகள் ஒன்று கூட இறக்கவில்லை. காரணம் சுனாமி வருவதை அறிந்து அவை அனைத்தும் மேட்டுப்பாங்கான இடங்களுக்கு ஓடி விட்டன.

“”நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிருகங்க ளிலெல்லாம் மிகக் கெட்ட மிருகங்கள் நிரா கரிப்பவர்கள்தாம்”
“”நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் கால்நடை களில் மிகக் கேவலமானவை (எவை என்றால் சத்தியத்தை) அறிந்து கொள்ள முடியாத செவி டர்களும் ஊமையர்களும்தான்.
அல்குர்ஆன் : 8:22, 55

மனிதனாகப் பிறந்தவன் நேர்வழியைப் புறக்கணித்து நிராகரிப்பவனாகி மிருக வாழ்க்கை வாழ்கிறான். அந்நிலையிலேயே மரணிக்கிறான். கப்ரில் மலக்குகள் வேதனை செய்யும்பொழுது அவன் எழுப்பும் மிருக ஓலங்களின் அதிர்வெண் ஒலியலைகள் (Frequency), சக மிருகங்கள் கேட்டு உணரும் வகையில் இருப்பதால் அவை செவி யுறுகின்றன. மனிதர்களால் செவியேற்க இய லாத பூமித்தட்டு நகர்வுகளின் மெல்லிய பூகம்ப சப்தத்தை மிருகங்கள் கேட்பது போல் மண்ண றையில் நடக்கும் மனித மிருகங்களின் வேத னைக் குரல்களையும் மண்ணுக்கு மேல் உள்ள விலங்குகள் செவியுறுகின்றன. நல்லடியார்க ளுக்கு வேதனை இல்லை. அவர்கள் ஆழ்ந்து உறங்குகிறார்கள். அல்லாஹ் அறிந்தவன்!

இரண்டு கண்கள் ஒரே செவி!
அனைவருக்கும் இரண்டு கண்கள், இரண்டு காதுகள் உள்ளன. அல்லாஹ் குர்ஆனில் கண் ணைப் பற்றி குறிப்பிடும்போது பன்மையில் கண்கள் என்கிறான். ஆனால் காதைப் பற்றி கூறும்போது காதுகள் என்று பன்மையில் கூறாமல் காது, செவி என்று ஒருமையிலேயே அழைக்கிறான்.

“”அல்லாஹ் உங்களுடைய செவிப்புலனை யும், பார்வைகளையும் பறித்துவிட்டு…”
அல்குர்ஆன் : 6:26
“”அவர்களுக்குச் செவிப்புலனையும், பார் வைகளையும், உள்ளத்தையும் கொடுத்தோம்”
அல்குர்ஆன்: 46:26

இரண்டு காதுகள் இருப்பது இரு வெவ் வேறு ஒலிகளைக் கேட்பதற்காக அல்ல. ஒலி எங்கிருந்து வருகிறது என்று மூளை கணித்து அதன் பக்கம் கவனம் செலுத்தவே இரு காதுகள்.

இரு காதுகளிலும் ஒலி அலைகள் நுழைந்தா லும், எந்தப் பக்கம் உள்ள காது ஒலிக்கு அருகில் உள்ளதோ, அது முதலில் ஒலி அலைகளை மூளைக்கு அனுப்பும்; மறுபக்கம் உள்ள காது அடுத்ததாக அனுப்பும். இரு காதுகளில் இருந்து வந்த ஒலியின் முன் பின் நேரத்தை மூளை கணக் கிட்டு, ஒலி வந்த திசையை நோக்கி திரும்பக் கட்டளையிடும். ஆக ஒலி வரும் இடத்தை மூளை அறிந்து கட்டளை இடவே இரு காதுகள்.

ஆனால் நமது இரு கண்களும் ஒரே நேரத்தில் பல காட்சிகளைத் தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியும். உதாரண மாக ஒரு பொதுக்கூட்டத்தில் ஒருவர் பேசுவதை இரண்டு காதுகளும் கூர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும். அதே நேரத்தில் அவரது அலை பாயும் கண்கள் அக்கூட்டத்திற்கு வந்தி ருந்தவர்களை நோட்டமிடும். அலைபாயும் கண்கள் (றீழிஉஉழிdeவி) வினாடிக்கு 30-70 தடவை பல காட்சிகளைப் படம் பிடித்துக் கொண்டி ருக்கும். கண்களைப் பன்மையாகவும், செவியை ஒருமையாகவும் குர்ஆன் குறிப்பிடுவதற்கு இதை விட வேறு பல காரணங்களும் இருக்க லாம். அல்லாஹ் அறிந்தவன்!

களிமண்-கர்ப்பம்-உலகம்-மண்ணறை-மஹ்ஷர்-சுவனம்-நரகம் :
காய்ந்தால் சப்தமிடும் களிமண்ணில் உரு வான மனிதன், பெண்ணின் கர்ப்ப அறையில் சிசுவிலே செவியேற்று, மண்ணுலகில் பிறந்த பின்பு இறக்கும் வரை செயல் புரிந்து, இறந்த பின்பும் மண்ணறையில் செவியேற்று, இறுதி நாள் மஹ்ஷர் வரைக் காத்திருந்து சூர் ஊதப் பட்டதும் கபுராளிகளை எழுப்பி விடுவதும், இறுதியில் நிரந்தரத் தங்குமிடம் வரை சென்று செயல்படுவதும் செவிப்புலனே!

“”சூர்” ஊதப்பட்டால் உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவாக வருவார்கள். அன்றி “”எங்களுடைய துக்கமே! எங்களை நித்திரையில் இருந்து எழுப்பியவர் யார்? என்றுக் கேட் பார்கள்” அல்குர்ஆன் : 36:51,52)

“”நீங்கள் செவிமடுத்துக் கேளுங்கள் (சமாதி களின்) சமீபத்திலிருந்து (கொண்டு) மரணித்த வர்களே! எழும்புங்கள் என்று அழைப்பவர் அழைக்கும் நாளில் பெரும் சப்தத்தை அவர்கள் மெய்யாகவே கேட்பார்கள். அதுதான் சமாதி யிலிருந்து வெளிப்படும் நாள்”
அல்குர்ஆன் : 50:42

உயிர்ப்பித்தல் நிகழ்ச்சியை அல்லாஹ் ஓர் உதாரணம் மூலம் இப்ராஹீம்(அலை) அவர் களுக்குக் காட்டுகிறான். “”நான்கு பறவைகளைப் பிடித்துப் பழக்கி, பின்னர் அவற்றைத் துண்டு துண்டாக்கி அவற்றில் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்து விட்டு பின்பு அவற்றை நீர் கூப்பிடும்; அவை உம் மிடம் பறந்து வந்து சேரும்” அல்குர்ஆன்: 2:260

நன்கு பழக்கிய பறவைகளை மாமிசத் துண் டாக்கி நான்கு மலைகளில் வைத்து அழைத்த போது அவை செவி ஏற்று பறந்து வந்தது போல், மண்ணறை மனிதர்களும் சூர் ஒலி செவியேற்று எழும்புகின்றனர். மஹ்­ரை நோக்கி நடக்கும் போது அனைத்து சப்தங்களும் அடங்கி விடுகின் றன. ஆனால் அவர்கள் காலடி ஓசை மட்டும் கேட்கின்றது.

“”அந்நாளில் அழைப்பவனின் சப்தத்தையே பின்பற்றிச் செல்வார்கள். அதில் தவறு ஏற்படாது. ரஹ்மானுக்குப் பயந்து எல்லா சப்தங் களும் தணிந்து விடும். (மெதுவான அவர்களின்) காலடிச் சப்தத்தை தவிர (வேறு எதனையும்) நீங்கள் கேட்க மாட்டீர்கள்”
அல்குர்ஆன் : 20:108

மஹ்­ர் மைதானத்திற்கு அவர்கள், செவிப் புலன் சப்தத்தைப் பின்பற்றியே செல்வார்கள். “”அதில் தவறு ஒன்றும் ஏற்படாது” என்றும் அல் லாஹ் கூறுகிறான். மறுமை நாளில் அநேகரைக் குருடனாக எழுப்புவதாக அல்லாஹ் கூறுகி றான். உலகில் பார்வை உள்ளவனாக இருந் தேனே என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ்,

“”இவ்வாறே நம் வசனங்கள் உன்னிடம் வந்தன. (குருடனைப் போல் உன் காரியங்கள் இருந்தன) நீ அவற்றை மறந்து விட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப் பட்டு விட்டாய்!” என்று கூறுவான்.
அல்குர்ஆன் : 20:106

அல்லாஹ் இவர்களின் பார்வைப் புலனைப் பறித்தாலும் செவிப்புலனை எடுப்பதில்லை. காரணம், நரகத்தின் சப்தத்தைப் பாவிகளான நரகவாசிகள் கேட்பதற்கே! “”எவர்கள் விசாரணைக் காலத்தைப் பொய்யாக்குகிறார்களோ, அவர் களுக்குக் கடுமையான பற்றி எரியும் நரகைத் தான் நாம் தயார் படுத்தி வைத்திருக்கின்றோம். அது இவர்களைக் கண்ட மாத்திரத்தில் சப்த மிட்டு ஆர்ப்பரிப்பதை இவர்கள் வெகு தூரத்தி லிருந்தே செவிமடுத்துக் கொள்வார்கள்.”
அல்குர்ஆன் : 25:12

சுவனவாசிகளான நல்லடியார்களும் சுப சோபன நற்செய்தியைச் சுவனத்தில் கேட்பார் கள். (அந்நாளில்) இறை அச்சமுடையவர்களுக்கு சுவனபதி மிக்க சமீபமாகக் கொண்டு வரப் படும்” அல்குர்ஆன்: 50:31

“”பூமியில் நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே இந்தச் சுவனபதிக்கு நீங்கள் வாரிசாக ஆக்கப் பட்டுள்ளீர்கள்” என்ற சப்தத்தை அவர்கள் கேட்பார்கள்” அல்குர்ஆன் : 7:43

செல்போன் ஷைத்தான் :
அன்புச் சகோதர, சகோதரிகளே! அல்லாஹ் அளித்த மிகச் சிறப்பு வாய்ந்த செவிச் செல் வத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம்? சற்றுச் சிந்திப்போமா? பகல் பொழுது முழுவதும் வீணாய்ப்போன ஒலி, ஒளி சினிமாப் பாடல்களே நம் காதை அடைக்கின்றன. எஃப். எம். ரேடியோக்கள் காதைத் தின்றுத் தீர்க்கின் றன. மிகச் சொச்ச நேரத்தில் பாழாய்ப்போன செல்போன் வெட்டி அரட்டையில் காதை மந்தமாக்கி வருகின்றோம்.

“”ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் போது மூன்றவதாக அங்கு ஷைத்தான் இருக் கின்றான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள். ஆம்! இன்று ஆணும், பெண்ணும், இளைஞ னும், இளைஞயும், மாணவனும் மாணவியும் ஓரிடத்தில் ஒன்றாக இல்லாமல் தனித்தனி யாகவே இருக்கின்றனர். மூன்றாவதான செல் போன் ஷைத்தான் இவர்களை ஒன்றிணைத் துப் பின்னிப் பிணைத்து விடுகிறான்.

விடிய விடியப் பேசுகிறார்கள், பேசுகிறார் கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆம்! பேசக் கூடாததைப் பேசியே நாசமாய்ப் போகி றார்கள். இவர்கள் காதும் வாயும் காசும் விபச் சாரம் செய்ய விட்டு ஷைத்தான் வேடிக்கைப் பார்த்து வாடிக்கைப் பிடிக்கின்றான். இவர்கள் ஒரு கட்டத்தில் தனிமையில் சந்திக்க வாய்ப்புக் கிட்டும்போது இன உறுப்பு விபச்சாரத்தை உண்மையாக்கி விடும். செல் ஷைத்தான் நரகிற் குச் செல்ல வைத்து விடுவான். நபி(ஸல்) அவர் கள் கூறுகிறார்கள்.

“”விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குரிய பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கிறது, பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது அல்லது பொய்ப்பிக்கிறது” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரழி)
நூல்: புகாரி, 6243

இன்னும் சில சகோதரர்களுக்கு, இரவில் படுக்கும்போது யஹட்போன் காதில் வைத்துப் பாட்டுக் கேட்டால்தான் உறக்கம் வரும். பெரும்பாலோர், நடு இரவு வரை தொல்லை காட்சிப் பார்த்துவிட்டுத்தான் படுப்பார்கள். பஜ்ரு தொழுகைக்கு எழவிடாமல் ஷைத்தான் காதைகளைத் தட்டிக் கொடுத்துத் தூங்கச் செய்வான்.

நபி(ஸல்) அவர்களிடம், ஒருவர் விடியும் வரை தூங்கிக்கொண்டே இருக்கிறார். தொழு கைக்கு எழுவதில்லை என்று கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், “”ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்து விட்டான்” என்று விடை யளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ்(ரழி), நூல் :புகாரி

அருட்பெரும் செல்வமான செவிச் செல் வத்தை ஷைத்தான் சிறுநீர் கழிக்கும் கழிப்பறை யாக்கிய பிறகு அதில் ஏதேனும் நற்செய்திகள் நுழைய முடியுமா? இறுதியில் அந்தக் காது நரகின் ஆர்ப்பரிக்கும் இரைச்சலையே கேட்கும்; அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!

நாம் கருவறையில் சிசுவாக இருந்தபோது செவியுற்ற நமது காதுகள், ஒலிமயமான இவ் வுலகில் உரையாட துணை நிற்கிறது. மண்ண றையிலிருந்து மஹ்­ர் வரை உதவப் போகிறது. இன்ஷா அல்லாஹ்! சுவனத்தின் சுபசோபன நற்செய்தியைக் கேட்பதற்கு நாம் நல் அமல் செய்வோம்! நற்செய்தியைக் கேட்போம்!

“”அவனுடைய வசனங்களுக்குச் செவி சாய்க் கும் மக்களுக்கு நிச்சயமாய் இதில் பல அத் தாட்சிகள் இருக்கின்றன”. அல்குர்ஆன் : 11:67

Previous post:

Next post: