கருத்து வேறு! தகவல் வேறு!

in 2017 ஜனவரி

மஹ்மூத் அல்ஹஸன்

கோட்டார்

நாங்கள், எங்கள் முன்னோர்களைப் பின்பற்றுகிறோம்; அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன், ஹதீஃத்களையும் ஒப்புக் கொள்கிறோம். நீங்கள் முன்னோர்களைப் பின்பற்றக் கூடாது என்று சொல்கிறீர்கள். ஆனால் அவர்களால் அடையாளம் காட்டப் பட்ட குர்ஆன், ஹதீஃத்களை மட் டும் ஏற்றுக் கொள்கிறீர்களே! இது முரண் இல்லையா?

நம்மைப் பார்த்து அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. அறிவுடை யோரைக் கூட தடுமாற வைக்கும் சாமர்த்தியம் நிறைந்த போலித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட கேள்வி இது? சற்று விரிவாகவே இதை அணுக வேண்டும். மனிதனுக்கு ஐந்து புலன்கள் இருக்கின்றன. இப்புலன்களின் வழி யாகவே பொருட்களை செய்திகளை உணர அறிய முடிகின்றது. கண்ணால் ஒரு பொரு ளைக் காண்கிறோம். அதன் பெயரைச் செவி வழியாக அறிகிறோம். அதன் மனம் என்ன என் பதை உணர மூக்குத்தான் உதவுகிறது. அதன் சுவையை நாவால் உணக்கிறோம். அதன் மென்மையையும், வன்மையையும் கையால் தொட்டு உணர்கிறோம். இது புலன்களின் தனித்தனிப் பணி.
பிறவியிலேயே கண் பார்வையற்ற ஒருவன், ஒரு பொருளின் நிறத்தையோ, உருவத்தையோ அறிய முடியாது. உதாரணமாக கொக்கு வெண் மையான பறவை என்று சொன்னால், அவனால் கொக்கையும், வெண்மையையும் உணர முடி யாது. அது போல, காது கேட்கும் சக்தியற்ற ஒரு வனிடம் ஒரு பொருளைக் காட்டி, அதை ஓசைப்படுத்தினால், அவன் அப்பொருளிலி ருந்து வரும் ஓசை இன்ன வென்று உணர மாட்டான். மூக்கு பழுதுபட்டு முகர்ந்தறியும் சக்தியற்ற ஒருவன், பொருளின் மனத்தை முகர முடியாது. அதுபோல நாவின் நரம்புகள் பழுது பட்டு, நாவு மரத்துப் போன ஒருவன், இனிப்பு, கசப்பு போன்ற சுவைகளை உணர முடியாது.
ஆனால், ஒரு கருத்து சரியா? தவறா? என்ப தைப் புலன்களால் மட்டும் முடிவெடுக்க இய லாது. ஐந்து புலன்களுக்கும் அப்பாற்பட்ட சிந்தனா சக்தியினால் மட்டுமே அதை முடிவு செய்ய முடியும். உலகம் தட்டையானது என்று ஒருவன் சொன்னதாக நம்பகமான ஒரு நபர் மூலம் செய்தி வரும்போது அந்த ஒருவன் இப்படிச் சொல்லி இருப்பான் என்ற செய்தியை தகவலை நம்புகிறோம். அந்த ஒருவன் சொன்ன கருத்து சரியா என்பதை ஆராய்கிறோம். பின் னர் அந்தக் கருத்துத் தவறு என்ற முடிவுக்கு வரு கிறோம். (இங்கே தகவல் நம்பப்படுகிறது. அது நமக்குச் சொல்கின்ற கருத்து மறுக்கப்படுகிறது)

சிலவற்றை அறிவதற்குரிய ஒரே வழி அந்தந் தப் புலன்கள் மடடுமே; வேறு வழியே இல்லை. நாவால் ஓசையைக் கேட்கவோ, கையால் மணம் முகரவோ, கண்ணால் சுவை அறியவோ இயலாது; அல்லது சிந்தனை செய்தும் முடி வெடுக்க முடியாது. நமது காலத்திற்கு முன் நடந்தவற்றை அறிவதற்குரிய ஒரே வழி செவிப் புலன்தான். உதாரணத்திற்கு மன்னர் ஒளரங்கசீப் என்பவர் ஷாஜஹானை சிறையில் அடைத்தார். இது ஒரு செய்தி; இதை நம்பு வதா? மறுப்பதா? என்ற பிரச்சினை வரும் போது என்ன செய்வது?

ஷாஜஹான் சிறையில் அடைக்கப்பட்ட தைத் தற்போது நாம் கண்ணால் காண இய லுமா? அல்லது மூக்கால் முகர்ந்து ஆமாம் ஷாஜஹான் சிறையில் இருந்தார் என்று அறிய முடியுமா? கையில் தடவிப்பார்த்தோ, நாவால் சுவைத்தோ இந்தச் செய்தியை அறிய முடி யாது. அல்லது சிந்தனையை எல்லாம் செலுத்தி, உள்ளுணர்வால் இதை ஊகித்தும் உணர முடியாது. செவி வழியாகக் கேட்டுக் கேட்டுத் தான் நாம் இந்தத் தகவலை அறிந்து வைத்திருக் கிறோம். நாம் நேரடியாகப் பார்க்க இயலாத முகர இயலாத சுவைக்கவும் முடியாத ஒன்றை, சிந்தனைக்கும் எட்டாத ஒன்றை நாம் அறிவது எப்படி? தகவல்களாகச் செவி வழியாகத் தான் அறிய முடியும்.

ஆகச் சிந்தனையைச் செலுத்தி முடிவெடுக்க இயன்ற இடங்களில் அதைப் பயன்படுத்து கிறோம். சிந்தனைச் சக்தி இருப்பதால் கேட்டு நம்ப வேண்டிய கடந்த கால நிகழ்ச்சிகளை அந்த அடிப்படையில் நம்புகிறோம். அதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை என்பதால் அந்த செவிவழிச் செய்தி பலரால் ஒரே விதமாகச் சொல்லப்படுகிறபோது அது உண்மைதான் என்ற நமது நம்பிக்கை மேலும் அதிகமாகின்றது. ஆனால் கருத்துக்களைப் பொறுத்த வரை உலக மெல்லாம் சேர்ந்து கொண்டு வேறு விதமாகச் சொன்னாலும் நாம் ஏற்கமாட்டோம்.

கொக்கு கறுப்பு என்று உலகமே சேர்ந்து சொன்னாலும் அவர்கள் அப்படிச் சொல்கிறார் கள் என்ற தகவலை மட்டுமே நாம் நம்புவோம். அந்தத் தகவல் நமக்குக் கூறுகின்ற கருத்து சரியா னதல்ல என்ற முடிவுக்கு நாம் வருவோம். இவ் வாறே குர்ஆன் என்பது 15 நூற்றாண்டுகளுக்கு முன் இறங்கிய ஒன்று; அதை நாம் செவிப்புலன் மூலமாகத் தவிர வேறு எந்த விதத்திலும் அறிய முடியாது. இதுதான் குர்ஆன் என்ற தகவலை முழு உலகமும் சேர்ந்து சொல்லும்போது அதில் நம்பிக்கை மேலும் அதிகமாகின்றது.

ஆனால் அவர்களது சொந்த அபிப்பிராயங் கள் கருத்துக்கள், அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன், ஹதீஃதுக்கு முரண் பட்டால் நாம் ஆராய்கிறோம் மறுக்கிறோம். முரண்படாதிருந்தால் ஏற்கிறோம்.

உதாரணமாக ஒன்று முதல் ஆயிரம் வரை எண்களைக் கூட்டும் முறை இது என்று ஆசிரியர் சொன்னார் என ஒருவர் நம்மிடம் சொல்கிறார். அவர் நேர்மையானவர் என்பதும் நமக்குத் தெரிகின்றது. அவரது நேர்மையில் நம்பிக்கை வைத்து அவர் ஆசிரியர் அவருக்குக் கணித முறையைச் சொல்லிக் கொடுத்திருப் பார் என்று நம்புகிறோம். நம்மிடம் இவ்வாறு சொன்ன அதே நபர் ஏழும் மூன்றும் பதி னொன்று என்று சொன்னால், (அவர் எவ்வளவு நாணயமானவராக இருந்தாலும்) நாம் ஏற்க மாட்டோம்; உங்கள் ஆசிரியரால் சொல்லித் தரப்பட்ட கணித முறைக்கே உங்கள் கணக்கு முரண்படுகிறதே என்று அவரிடம் நாம் சொல் வோம். இங்கே அவரது நாணயத்தில் நம்பிக்கை வைத்து அவர் சொன்ன தகவலை நம்பிய நாம். அவர் கூறிய கருத்தை ஏற்க மறுக்கிறோம். தக வல்களை நம்புவதற்கு நேர்மை. போதுமான தாக உளளது; கருத்துக்களை நம்புவதற்கு நேர்மை உதவுவதில்லை.

நமக்குச் சிந்தனை சக்தி இருப்பதால், சிந்தித்து விளங்கக் கூடியவைகளை சிந்தனையின் மூல மாக மட்டும் நம்புகிறோம். சிந்தனையால் விளங்க முடியாதவைகளை அவற்றிற்குரிய புலன்களின் துணையால் அறிந்து நம்புகிறோம்.

தகவல்களை முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக நாங்கள் நம்புவதால், கருத்துக்க ளிலும் அவ்வாறே நம்புவோம். இரண்டுக்கும், செவிப் புலன் மட்டுமே எங்களுக்குப் போதும் என்று சிலர் கூறுகின்றனர். கருத்துககளில் சிந்தனையைச் செலுத்த மாட்டோம் என்று கூறுவோர். ஏழும், மூன்றும் ஒன்பது என்று எவராவது சொன்னால் அதையும் நம்பட்டும். பூமி தட்டையானது என்று கடந்த காலத்தில் சொல்லப்பட்டதையும் நம்பட்டும் பூமி மாட் டுக் கொம்பின் மீது நிறுத்தி வைக்கப்பட்டுள் ளது என்ற பாட்டிகளின் கதையையும் நம்பட் டும். சந்திரனைப் பாம்பு விழுங்குவதால் கிரஹ ணம் ஏற்படுகின்றது என்பதையும் நம்பட்டும். ஏனெனில், அவர்களுக்குத்தான் செவியில் விழுந்து விட்டாலே போதுமே உடனே நம்பி விடவேண்டுமே.

நம்மைப் பொருத்தவரை சிந்தனையைச் செலுத்தி விளங்க முடிகின்றவைகளை சிந் தனையால் விளங்குவோம். முடிவெடுக்க இய லாத கடந்த கால நிகழ்ச்சிகளை, செவிப்புல னின் துணை கொண்டு நம்புவோம். அதைத் தவிர வேறு வழியில்லை என்பதால், எதை, எப்போது பயன்படுத்த வேண்டுமோ அதை அப்போது பயன்படுத்துகிறோம். எல்லா வற்றுக்கும் செவி மட்டுமே போதும் என் போர் இப்படிப்பட்ட அர்த்தமற்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டு, சிந்தனையை மழுங்கச் செய்து கொள்ளட்டும். இதுதான் குர்ஆன் இவை தான் ஹதீஃத்கள் என்ற தகவல்கள் வெறும் செவிப்புலனால் மட்டுமே அறிந்து கொள்ள முடிகின்ற ஒன்று. மற்ற புலன்களால் இதை உணர முடியாது. சிந்தனையாலும் ஊகித்து உணர முடியாது.

எனவே முன்னோர்கள் சொன்ன தகவல் களை அடிப்படையாக வைத்து அவர்கள் எதை குர்ஆன் என்று நம்மிடம் ஒருமித்து அறிமுகப் படுத்தினார்களோ, அதை நாமும் நம்புகிறோம். வெறும் நம்பிக்கையோடு நின்றுவிடாமல் நம் மால் இயன்ற அளவுக்கு முயற்சியும் செய்கிறோம். முன்னோர்கள் எதை குர்ஆன் என்று நம்மி டம் காலம் காலமாகச் சொன்னார்களோ, அதில் முரண்பாடுகள் எதுவுமில்லாதிருப்பதை நாம் காணுகிறோம். விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட்டு பல உண்மைகள் கண்டுபிடிக்கப் பட்டு விட்ட இன்றைய காலத்திற்குக் கூட அதில் எந்த ஒரு தவறையும் காண முடிய வில்லை என்பதையும் நிதர்சனமாகக் காண்கிறோம்.

முன்னோர்கள் எதைக் குர்ஆன் என்று சொன்னார்களோ அதில் இது அல்லாஹ்விட மிருந்து வந்தது என்பதில் உங்களுக்குச் சந்தேக மிருந்தால் இதுபோன்ற ஒன்றை, இதிலுள்ள ஒரு அத்தியாயம் போன்றதையாவது இயற்றிக் காட்டுங்கள் என்று சவால் விடப்பட்டிருப் பதையும் காண்கிறோம். இன்றுவரை எவரா லும் அவ்வாறு செய்து காட்டி குர்ஆனின் சவாலை ஏற்கமுடியவில்லை என்பதையும் பார்க்கின்றோம். இவற்றை எல்லாம் காரணமாக வைத்து இதுதான் குர்ஆன்; நிச்சயமாக இது மனிதர்களால் இயற்றப்பட்டது அல்ல என்ற திடமான முடிவு நமக்கு ஏற்பட்டுவிடுகின்றது.

குர்ஆன் என்று சொல்லி வேறு எதையாவது நம்மிடம், நமது முன்னோர்கள் தந்திருந்தால் அதன் அமைப்பே அதன் போலித் தன்மையை நமக்குத் தெளிவாக்கி இருக்கும். முன்னோர்கள் இதுதான் குர்ஆன் என்று நம்மிடம் எதை அறி முகம் செய்தார்களோ அதை அவர்களின் கூற்றை நம்பி ஏற்றுக் கொண்டதோடு நின்று விடாமல் சிந்தித்துப் பார்க்க முடிகின்ற விதத் தில் சிந்தித்துப் பார்த்தும் உறுதி செய்து கொள்கிறோம்.

அதுபோல், முன்னோர்கள் ஹதீஃத்கள் என்று எவற்றை அறிமுகப்படுத்தினார்களோ, அவற்றையும் செவி வழியாகவே நாம் கேள்வி யுற்றோம். ஆனால் ஹதீஃத்கள் என்று சொல்லப் படும் அத்தனையையும் கண்ணை மூடிக் கொண்டு நாம் ஏற்பதில்லை. ஹதீஃத்கள் என்று அறிவிக்கக் கூடியவர்களில் ஒருவர், அல்லது பலர், நம்பகமானவர்களில்லை. பொய் சொல் லக் கூடியவர் நினைவாற்றல் இல்லாதவர் என் றெல்லாம் முன்னோர்களில் சிலர் அவர்களைச் சந்தேகித்திருக்கும்போது, நாமும் சந்தேகிக்கி றோம். அதே நேரத்தில் நம்பகமான அறிவிப்பா ளர் என்பதில் எவரும் ஐயம் தெரிவிக்காமல் ஹதீஃத்கள் என்று சொல்லப்படுபவைகளை நாம் உறுதியாக நம்புகிறோம்.

நாம் எவரையும் பின்பற்றக் கூடாது என்று சொல்வது கருத்துக்கள் பற்றியதே, தகவல் களைப் பற்றியது அல்ல.
காந்தி சுடப்பட்டார் என்ற செய்தியை நம் முடைய பெற்றோர் வாயிலாகக் கேட்டு நம்பு வது தக்லீத் ஆகாது. தகவல்களை அப்படித்தான் நம்ப வேண்டும். அதே பெற்றோர், சந்திரனைப் பாம்பு விழுங்குகிறது என்று ஒரு கதையைச் சொல்லும்போது, நாம் கண்ணை மூடிக் கொண்டு நம்புவதே தக்லீது எனப்படும். அது தான் கூடாது. அல்லாஹ் இந்த வேறுபாடுகளை உணர்ந்து உண்மையை விளங்கிக் கொள்ள அருள் செய்வானாக.

Previous post:

Next post: