காலில் விழலாமா?

in 2017 அக்டோபர்

அ. ஹமிதா கலாம்

ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுவது அவர்களின் கால்களைக் கழுவி, கழுவப் பட்ட தண்ணீரை பக்தியுடன் அருந்துவது என்றெல் லாம் ஆன்மீகத் தலைவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு  வருகிறது.

நபி(ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒருக் காலும் தமது கால்களில் விழுந்து மக்கள் கும்பிடு வதை விரும்பவில்லை. அறியாத சிலர் அவ்வாறு செய்ய முயன்ற போது கடுமையாக அதைத் தடுத்து நிறுத்தாமல்  இருந்ததில்லை.

நபி(ஸல்) காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்! நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். “”இவ்வாறு சிரம் பணிவதற்கு நபி(ஸல்) அதிகத் தகுதியுடை யவர்கள்” என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபி(ஸல்) அவர்களிடம் வந்து “”நான் ஹியரா என் னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக் குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்” என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “”(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத்தலத் தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ? எனக் கேட்டார்கள். “”மாட்டேன்” என்று நான் கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “”ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. “”ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றி ருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன்” என்று கூறினார்கள்.     அறிவிப்பவர் : கைஸ் பின் ஸஅத்(ரழி)   நூல்:அபூதாவூத் : 1828

தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப் பட்டபோது “”எந்த மனிதரும் எந்த மனிதரின் காலி லும் விழக் கூடாது” என்று பொதுவாக நபி(ஸல்) அவர்கள் காரணம் காட்டுகிறார்கள். காலில் விழுப வரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் ஏக இறைவனுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள். உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம்  என்றும்  அவர்கள்  கண்டித்துள்ளனர்.

தமது மரணத்திற்குப் பிறகு தனது அடக்கத்தலத் தில் விழுந்து பணிவார்களோ அன்று அஞ்சி அதை யும் தடுத்தார்கள். “”எனது மரணத்திற்குப் பின் எனது அடக்கத்தலத்தில் வணங்காதீர்கள்” என்று வாழும்போதே எச்சரித்துச் சென்றனர். எனவே தமது கால் விழுமாறு  மக்களுக்கு வழிகாட்டுவோர் கயவர்களாவர்.

எழுந்து  நின்று  மரியாதை  செய்தல் : வயதில் பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன் றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை  உலகமெங்கும்  காண்கிறோம்.

மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியா தையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கி றோம். ஆனால் இஸ்லாத்தில் இதற்கு அனுமதி இல்லை. எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று  நபி(ஸல்)  கட்டளை  பிறப்பித்தார்கள்.

“”நபி(ஸல்) அவர்களுக்குப் பின் முஸ்லிம் சாம் ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா(ரழி), அவர் வெளியே வந்தபோது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர் களும், இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்ற னர். உடனே முஆவியா(ரழி) அவர்கள் “”அமருங் கள்” என்றனர். “”தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள் கிறார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா(ரழி) கூறினார்கள்.          நூல்கள் : திர்மிதீ 2769 அபூதாவூத் : 4552

மன்னருக்காகக் கூட மக்கள் எழக் கூடாது. அவ் வாறு எழ வேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர் பார்க்கக் கூடாது என்பதை நபி(ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்துச் சென்றதை இந்த வரலாற்றி லிருந்து  நாம்  அறிகிறோம்.

உலகத்தில் நபி(ஸல்) அவர்களை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழமாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.   அறிவிப்பவர் : அனஸ்(ரழி), நூல்கள்: அஹ்மத்: 12068, 11895, திர்மிதீ : 2678

 

“”அந்நாட்டு மன்னரே வந்தாலும் எழுந்தே நிற்கக் கூடாது எனும் போது காலில் விழலாமா…”  ஆன்மீக தலைவர்களாக இருந்தாலும் சரி! மதிக் கத்தக்கவராக இருந்தாலும் சரி! மனிதர்கள் மனிதர் காலில் விழுவதை இஸ்லாம் கடுமையாக கண்டிப் பதுடன், தடுத்தும் நிறுத்தியுள்ளது.

Previous post:

Next post: