அறிந்து கொள்வோம்!

in 2019 பிப்ரவரி

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்,

  1. யாரை நீர் விரட்டவேண்டாம் என அல்லாஹ் கூறுகிறான்?
    யாசிப்பவரை நீர் விரட்டவேண்டாம். (அல்குர்ஆன் : 93:10)
  2. பாறைகளை குடைந்து வசித்த கூட்டத் தார் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
    ஸமூது கூட்டத்தார். (அல்குர்ஆன்: 89:9,10)
  3. ஸமூது கூட்டத்தினர் எந்த ஒட்டகத்தை அறுத்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
    அல்லாஹ்வின் பெண் ஒட்டகத்தை. (அல்குர்ஆன்: 91:12,13)
  4. யார்யாரெல்லாம் கொழுந்து விட்டு எரியும் நெருப்பை விட்டு தூரமாக்கு வதாக அல்லாஹ் கூறுகிறான்?
    அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவர். (அல்குர்ஆன்: 92:17)
  5. ஜீப்ரீல்(அலை) அவர்களை அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
    “ரூஹுல் குத்ஸ்” என்று கூறுகிறான். (2:87) 06. “குன்” என்றால் என்ன? ஆகுக என்று அல்லாஹ் கூறுகிறான். (2:117)
  6. யூஸுப்(அலை) அவர்கள் என்ன ஆனார்கள் என்று அவரது சகோதரர் கூறினர்?
    அவரை ஓநாய் தின்றுவிட்டது என்று கூறினர். (அல்குர்ஆன்: 12:17)
  7. அல்கலம் என்றால் என்ன?
    எழுதுகோல். (அத்தியாயம் : 68)
  8. குழப்பம் விளைவிப்பதை அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
    கொலையை விட பெரும் பாவம் என கூறுகிறான். (அல்குர்ஆன் : 2:217)
  9. மது, சூது பற்றி அல்லாஹ் எவ்வாறு எச்சரிக்கிறான்?
    “பயனை”விட “கேடு” மிகப் பெரிது என கூறுகிறான். (அல்குர்ஆன்: 2:219)
  10. யாரை மேலானவன் என அல்லாஹ் கூறுகிறான்?
    உங்களை கவரக்கூடிய இணை வைக்கும் ஆணை விட மூஃமினான அடிமை மேலானவன். (அல்குர்ஆன்: 2:221)
  11. எதையயல்லாம் சமமாக மாட்டாது என அல்லாஹ் கூறுகிறான்?
    தீயதும், நல்லதும் சமமாகமாட்டாது. (அல்குர்ஆன் : 5:100)
    குருடனும், பார்வையுடையோனும் சமமாக மாட்டார்கள். (அல்குர்ஆன்:35:19)
    இருளும், ஒளியும் சமமாகாது. (35:20)
    நிழலும், வெயிலும் சமமாகாது. (35:21)
    உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாகமாட்டார்கள். (அல்குர்ஆன் : 35:22)
  12. மனிதனின் நிலை பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
    அவசரக்காரணாகவே இருப்பதாக கூறுகிறான். (அல்குர்ஆன் : 17:11)
    அறியாமை நிறைந்தவன் (33:72) பலஹீனமானவன் (அல்குர்ஆன் : 4:28)
    நன்றி கெட்டவன். (அல்குர்ஆன் : 100:6)
    தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்பவன். (அல்குர்ஆன் : 10:44)
    கண்ணியப்படுத்தப்பட்டவன். (17:70)
  13. யாருடைய உடலை பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
    ஓர் அத்தாட்சிக்காக பிர்அவ்னின் உடலை பாதுகாப்பதாக கூறுகிறான். (10:92)
  14. அழ்ழுஹா என்றால் என்ன?
    முற்பகல். (அத்தியாயம் : 93)
  15. மூஸா(அலை) அவர்களுக்கு யார் உதவியாளராக ஆக்கியதாக அல்லாஹ் கூறுகிறான்?
    மூஸாவின் சகோதரர் ஹாருனை. 25:35
  16. அல்லாஹ்வைத் தவிர வணங்குபவைகளை அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
    நரகத்தின் எரிகொள்ளிகள். (21:98)
  17. அல்புர்கான் என்றால் என்ன?
    பிரித்தறிவித்தல் என்பதாகும். (அத்தி.25)
  18. ஒருபோதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்கமாட்டேன் என அல்லாஹ்விடம் கூறியவர் யார்?
    மூஸா(அலை) (அல்குர்ஆன் : 28:17)
  19. சுகபோகிகளை வேதனையைக் கொண்டு நாம் பிடிக்கும்போது அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
    அபயக்குரல் எழுப்புவர்களாக. (23:64)

Previous post:

Next post: