அறிந்து கொள்வோம்!

in 2020 நவம்பர்

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்,

  1. ஸபவு வாசிகளுக்கு அல்லாஹ் அனுப்பிய பெருவெள்ளத்தின் பெயர் என்ன?
    அல்அரீம். அல்குர்ஆன்: 34:16
  2. எவர்கள் வேதனையில் முன் நிறுத்தப்படுவார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
    அல்லாஹ்வின் வசனங்களை தோற்கடிக்க முயற்சிப்பவர்கள். அல்குர்ஆன் : 34:38
  3. அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான் என்று யாரை கூறுகிறான்?
    நிராகரிப்பர்களாகவே மரணிப்பவரை.  அல்குர்ஆன் : 47:34
  4. அற்ப அளவும் அநீதி செய்யப்படமாட்டார்கள் என யாரை அல்லாஹ் கூறுகிறான்?
    எவர்கள் உண்மையிலேயே நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை. அல்குர்ஆன் : 4:12
  5. அல்லாஹ்விடத்தில் நிராகரிக்கப்பட்ட செயல் எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    நம்முடைய மார்க்கத்தில் இல்லாத செயல்.  முஸ்லிம் : 3541
  6. நோன்பு துறப்பதை விரைந்து செய்வதினால் என்ன பலன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    நன்மையில் ஈடுபட்ட பலன். புகாரி : 1957
  7. அல்லாஹ்வை நேசிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்?
    நபி(ஸல்) அவர்களை பின்பற்ற வேண்டும்.  அல்குர்ஆன் : 3:31
  8. நம்மைச் சார்ந்தவனில்லை என யாரை எல்லாம் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    துக்கத்தில் கன்னங்களில் அறைந்து கொள்பவர், சட்டைப் பைகளை கிழித்துக் கொள்பவன், அறியாமை கால அழைப்பை விடுபவன். புகாரி: 3519
  9. சுவர்க்கத்தில் அதிகமானோர் யார் இருப்பார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    ஏழைகள். புகாரி : 3241
  10. நாயும், உயிரினங்களின் உருவப்படங்கள் உள்ள வீட்டினுள் யார் நுழைய மாட்டார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    வானவர்கள். புகாரி: 3225
  11. தாம் இறைவனிடத்தில் இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது எது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    ஸஜ்தாவிலிருக்கும்போதேயாகும்.  முஸ்லிம் : 832
  12. குறை கூறி புறம் பேசித் திரிபவர்களுக்கு ஏற்படும் நிலை எது என அல்லாஹ் கூறுகிறான்?
    குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். குர்ஆன்:104:1
  13. சூனியக்காரர்கள் எப்போது ஒன்று சேர்க்கப்பட்டார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
    குறிப்பிட்ட நாள், குறித்த நேரத்தில்.  அல்குர்ஆன்: 26:38
  14. லூத்(அலை) அவர்கள் தனது சமூகத்தாரிடம் எது மாதிரியான விஷயத்தை கூறினார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
    அகிலத்தாரில் உங்களுக்கு முன்னர் எவரும் செய்திராத மானக்கேடானதை நீங்கள் செய்கிறீர்கள். அல்குர்ஆன்: 29:28
  15. கீழ்வானத்தை எதை கொண்டு அல்லாஹ் அலங்கரித்துள்ளான்?
    நட்சத்திரங்களை கொண்டு. குர்ஆன்:37:6
  16. வலிமையும், அறிவும் மிக்க எமது அடியார்கள் யார் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
    இப்றாஹீம்(அலை) இஸ்ஹாக்(அலை) யாஃகூப்(அலை). அல்குர்ஆன்: 38:45
  17. யாரை கடிந்து கொள்ள வேண்டாம் என நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ் கூறினான்?
    அநாதையை. அல்குர்ஆன் : 93:9
  18. ஒவ்வொரு ஆன்மாவும் எதை எப்போது அறிந்து கொள்ளும் என அல்லாஹ் கூறுகிறான்
    முற்படுத்தியதையும், பிற்படுத்தியதையும். கப்ருகள் திறக்கப்படும்போது அறிந்து கொள்ளும். அல்குர்ஆன் : 82:5
  19. மனிதனை எப்பொருளிலிருந்து அல்லாஹ் படைத்தான்?
    இந்திரியத் துளியில் இருந்து. 80:18,19
  20. நபி(ஸல்) அவர்களை எதை கொண்டு கற்பித்தேன் என அல்லாஹ் கூறுகிறான்?
    எழுதுகோல் கொண்டு. குர்ஆன் : 96:4

Previous post:

Next post: