மனிதன்! ஓர் உன்னத படைப்பு!

in 2021 செப்டம்பர்

குர்ஆனின் நற்போதனைகள்…

மனிதன்! ஓர் உன்னத படைப்பு!

Dr. A. முஹம்மது அலி, Ph.D.,

  1. நிச்சயமாக நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம். நாம் படைத்துள்ள பலவற்றைவிட அவர்களை மேன்மைப்படுத்தினோம்.  (அல்குர்ஆன்17:70)
  2. நிச்சயமாக நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.  (அல்குர்ஆன் 95:4)
  3. (அல்லாஹ்) அவனே, தான் படைத் துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; மேலும், அவன் மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான். (அல்குர்ஆன் 32:7
  4. மனிதனே! சங்கைமிகு கொடையாளனான உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டிவிட்டது எது? அவன்தான் உன்னைப் படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி, உன்னைச் செவ்வையாக்கினான்; எந்த வடிவில் அவன் விரும்பினானோ (அப்படியே) பொருத்தினான். (அல்குர்ஆன் 82:6-8)
  5. (மனித இனத்தின் ஆதி மனிதன்) ஆதமுக்கு அல்லாஹ் எல்லாப் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான்.   (அல்குர்ஆன் 2:31)
  6. (அர்-ரஹ்மான்) அளவற்ற அருளாளன்; இந்த குர்ஆனை கற்றுத்தந்தான்; மனிதனைப் படைத்தான்; அவனே மனிதனுக்கு (பகுத்தறிவு, பேச்சு) விளக்கத்தையும் கற்றுத் தந்தான். (அல்குர்ஆன் 55:1-4)
  7. மனிதனுக்கு அவன் அறியாதவற்றையயல்லாம் (அல்லாஹ்) கற்றுக் கொடுத்தான். (அல்குர்ஆன் 96:5)
  8. ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)
  9. உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்த திகளை வெளியாக்கி, அவர்களைத் தங்க ளுக்கே சாட்சியாக வைத்து;

“நான் உங்களது இரட்சகனல்லவா?” எனக் கேட்டதற்கு அவர்கள், “”உண்மை தான், நாங்கள் சாட்சி கூறுகிறோம் என்று கூறியதை நினைவூட்டுவீராக.(அல்குர்ஆன் 7:172)

  1. (ஆதி மனிதர் ஆதத்தை இவ்வுலகுக்கு அனுப்பியபோது) அல்லாஹ் அறிவுறுத் தியது:

நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சமயாக நல்வழி(யைக் காட்டும் அறவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்)வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்த கைய அச்சமுமில்லை; அவர்கள் துக்கப் படவுமாட்டார்கள். (அல்குர்ஆன் 2:38)

  1. ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே(நம்) தூதர்கள் வந்து என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருத்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவுமாட் டார்கள். (அல்குர்ஆன் 7:35)
  2. ஆதமுடைய மக்களே! மெய்யாகவே நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள் ளோம்; ஆயினும் தக்வா(இறை உணர்வு) என்னும் ஆடையே உயர்வானது. (அல்குர்ஆன் 7:26)

குறிப்பு : எல்லாம் வல்ல அல்லாஹ், தானே ஆதி மனிதன் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து அழகிய உருவமைப்பைக் கொடுத்து, தனது ரூஹை(உயிரை) ஊதி, தானே பாடங்களையும் கற்பித்து மற்ற தனது படைப்புகளைவிட மேன்மையான தாக, கண்ணியமிக்க உன்னத படைப்பாக்கினான். வேறு எந்த படைப்பினத்திற்குமில் லாத பேச்சு, பகுத்தறிவு, விளங்கி செயல்படும் (பயான்) சக்திகளை இம்மனிதனுக்கு மட்டுமுள்ள சிறப்பு அம்சங்களாக்கினான். மனிதன் அறியாதவற்றையயல்லாம் கற்றுக் கொடுத்தான்; கற்று கொடுத்துக் கொண்டிருக்கின்றான்.

இச்சிறப்புக்களைப் பெற்ற மனித இனம் தன்னை மட்டும் இரட்சகனாக ஏற்று வணங்க வேண்டுமென ஆணையிடுகின்றான். நாமும் ஆதியிலேயே அவன் மட்டுமே இரட்சகன் என ஏற்று சாட்சி பகிர்ந்துள்ளோம். (பார்க்க 7:172) எப்படி அவனை வணங்கவேண்டும்? வணக்கம் என்றால் என்ன? என்ற விபரங்களை தனது அறவுரைகள் மூலம் தெரிவிப்பதாகவும் அல்லாஹ் ஆதி மனிதருக்கு அறிவித்தான். அவ்வறிவிப்புப்படி நம்மிலிருந்தே நமக்கு நேர்வழி காட்ட அவனது நேர்வழிகாட்டிகளை நபி- ரசூல்மார்களை அனுப்பிவைத்தான். அவர்கள் காட்டும் நேர்வழிபடி நடப்பவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. அவர்கள் எதற்கும் துக்கப்படமாட்டார்கள் என்ற உத் திரவாதமும் அளித்துள்ளான்.

அழகிய படைப்பு, ஆற்றல்மிக்க பகுத்தறிவு, அல்லாஹ் ஓரிறைவன் என்ற உணர்வு, அதனை அவ்வப்போது நினைவூட்ட அவனது நேர்வழிகாட்டிகள், அறிவுரைகள் வருகை என வரிசைப்படுத்தி அதன்படி இறையுணர்வுடன் வாழ்வதே மேன்மையான வாழ்வு, உன்னத வாழ்வு என நமக்கு தெளிவுபடுத்தியுள்ளான். இச்சிறப்புக்கள் வேறு எந்த படைப்பினத்திற்குமில்லாத சிறப்பு அம்சங்களாகும். இவ்வுலக வாழ்விலும் மனிதனை அல்லாஹ் சிறப்பித்துள்ளான்.

Previous post:

Next post: