யார் சாதனையாளர்?

in 2022 ஜுன்

யார் சாதனையாளர்?

அபூ அப்தில்லாஹ்

யார் சாதனையாளர் என்ற கேள்விக்குப் பலரும் பலவிதமான பதிலைத் தருவார் கள். ஒரு அரசியல்வாதியிடம் கேட்டால் அரசியலில் ஈடுபட்டு மந்திரி, முதன் மந்திரி, பிரதம மந்திரி ஆகிறவர்கள் சாதனையாளர் கள் என்பார். பல கோடிகளைத் திரட்டி வைத்திருக்கும் பெரும் செல்வந்தர் ஒருவரி டம் இதைக் கேட்டால் பணம் பண்ணுவதே சாதனை என்பார்; பெரும் படிப்பு படித்துப் பெரும் மேதையாகத் திகழ்பவரிடம் கேட்டால் கல்வியின் மூலம் மேதையாகத் திகழ்பவரே சாதனையாளர் என்பார்; புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்து மக்களிடையே பிரபல்யமானவர் பெரும் விஞ்ஞானியே சாதனையாளர் என்பார்; இதுபோல் யார் யார் எந்தெந்த துறையிலிருந்தாலும் அது வியாபாரத் துறையாக இருந்தாலும், கல்வித் துறையாக இருந்தாலும், விஞ்ஞானத் துறையாக இருந்தாலும், விளையாட் டுத் துறையாக இருந்தாலும் இவை போல் எந்தத் துறையாக இருந்தாலும் அத்துறையில் மேலே வந்து மக்களிடம் அறிமுகமாகி பிரபல்யமாகி விட்டால் அவர்கள் சாதனை யாளர்கள் பட்டியலில் இடம் பெற்று விடுவார்கள். மக்கள் கணிப்பில் இவர்கள்தான் சாதனையாளர்கள்.

ஆனால் இப்படிப்பட்ட சாதனைகள் மனிதனுக்கு அசலான வெற்றியைத் தருமா? ஈடேற்றத்தைத் தருமா? அவன்தான் உண்மை யான சாதனையாளனா? என்றால் “நிச்சய மாக இல்லை’ என்ற பதில்தான் சரியானது. காரணம் இறைவன் மனிதனை இந்த உலகில் படைத்திருப்பது இப்படிப்பட்ட சாதனைகளை நிகழ்த்திக் காட்ட அல்ல. மனிதப் படைப்பின் அசல் நோக்கம் இவை அல்ல. பின்னர் மனிதன் ஏன் படைக்கப்பட்டிருக்கிறான். மனிதனைப் படைத்த இறைவன் ஏன் மனிதனைப் படைத்தான் என்று அவனே சொல்லுவதை அப்படியே ஏற்று நடப்பவர்கள் உண்மையான சாதனையாளர்கள்.

இறைவன் ஆதி மனிதனின் படைப்பில் இருந்து காலத்திற்குக் காலம் மனிதனை மனிதனாக வாழச் செய்ய, மனித நேயத் தோடு வாழச் செய்ய தன் புறத்திலிருந்து பல இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான். ஆதம், நூஹ்(நோவா), இப்ராஹீம் (ஆப்ரஹாம்), மூஸா(மோஸஸ்), ஈஸா (ஜீஸஸ்) இவர்கள் எல்லாம் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களே, இந்த இறைத் தூதர்களுக்கு முத்திரையாக இறு தித் தூதராக அனுப்பப்பட்டவர்களே முஹம்மது(ஸல்) அவர்கள். இதற்கு முன் னால் கொடுக்கப்பட்ட வேதங்கள் அனைத் தும் ரத்து செய்யப்பட்டு இறுதியாகக் கொடுக்கப்பட்டதே இறுதி வேதம் அல்குர்ஆன். அரசு அன்றிலிருந்து இன்று வரை ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்தில் விட்டுக் கொண்டிருக்கிறது. 100 வருடங்களுக்கு முன்பு விடப்பட்டதும் அரசின் ரூபாய் நோட்டுதான். இப்போது இருப்பதும் அரசின் ரூபாய் நோட்டுதான். அன் றைய நோட்டுக்கும், இன்றைய நோட்டுக் கும் எத்தனையோ ஒற்றுமைகள் காணப் படத்தான் செய்யும். யாரிடம் காட்டினாலும் ரூபாய் நோட்டுகள் என்றுதான் சொல்வார்கள்.

ஆனால் 100 வருடங்களுக்கு முன்னர் இருந்த நோட்டை இப்போது செலாவணி பண்ண முடியுமா? முடியாது? பழங் காலத்து நோட்டு என்று பத்திரப்படுத்த லாம். நினைவுச் சின்னமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் புழக்கத்தில் செலா வணியில் விடமுடியாது. இதை நம்மில் யாருமே மறுக்கமாட்டோம். அதேபோல் 1948ல் அரசு ஒரு சட்டம் இயற்றி இருக்கும். இன்று அந்த சட்டத்தை மாற்றி புதிய சட் டத்தை (புதுeஐdதுeஐமி) ஏற்படுத்தியிருக்கும் இப்போது அமுலில் இருப்பது புதிய சட் டமா? பழைய சட்டமா? பழைய சட்டம் செல்லாது; புதிய சட்டமே அமுலுக்குரியது என்று நாம் சட்டென பதில் சொல்லி விடுவோம்.

இப்போது நிதானமாகச் சிந்திப்போம். இவ்வுலகைப் படைத்து விண்ணைப் படைத்து, அனைத்து கோளங்களையும் படைத்து விண்ணிலும், மண்ணிலுமுள்ள அனைத்தையும் படைத்து மனிதனையும் படைத்து ஆட்சி செய்யும் ஆட்சியாளனா கிய இறைவன் நாம் பார்க்கும் ஆட்சியாளர் களுக்கெல்லாம் மாபெரும் ஆட்சியாள னாக இருக்கிறான். அந்த மாபெரும் ஆட்சி யாளனுக்கு முன்னால் இவ்வுலக ஆட்சியா ளர்கள் எல்லாம் கால்தூசி பெறமாட்டார் கள். அப்படியானால் சாதாரண இவ்வுலக ஆட்சியாளர்களின் மாற்றப்பட்ட சட்டங் களை (புதுeஐdதுeஐமிவி) மதித்து நடக்கும் மனி தன் ஆட்சியாளர்களுக்கெல்லாம் மாபெரும் ஆட்சியாளனாகிய இறைவனின் மாற்றப்பட்ட இறுதி வடிவமைந்த இறுதி வேதத்தை புறக்கணித்து மாற்றப்பட்ட வேதங்களைத் தூக்கிப்பிடித்து நடப்பது எவ் வளவு பெரிய மாபாதகச் செயல் என்பதை மனிதர்கள் உணர வேண்டும். இறைவனால் முன்பு கொடுக்கப்பட்ட வேதங்கள் அனைத் தும் இந்த இறுதி வேதத்தால் மாற்றப்பட்டு விட்டன. அவற்றை அமுல்படுத்த முடி யாது. அமுல்படுத்த தகுதி பெற்ற நடை முறைக்கான உறுதியான சட்டங்கள் இறை வனின் இறுதி வேதமான அல்குர்ஆனி லேயே இருக்கின்றன.

இந்த இறுதி வேதத்தில் அனைத்து மக் களின் இறைவன் கூறுவதைப் பாருங்கள்.

“உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்தான்” (அதாவது இவ்வுலகில் மனித ரைப் படைத்தான்) அல்குர்ஆன் 67:2

ஆக, மனிதனை இறைவன் இவ்வுல கில் நற்செயல்கள் செய்வதற்காகப் படைத் துள்ளதாக அறிவிக்கிறான். நற்செயல்களின் வரையறை என்ன? மனித அறிவில் நற் செயல்களாகப்படுபவை எல்லாம் நற் செயல்கள் ஆகிவிடுமா? அதுதான் இல்லை. இறைவன் எவற்றை எல்லாம் நற்செயல்கள் என்று தனது இறுதி வேதத்தில் வரையறுத்தி ருக்கிறானோ அவை மட்டுமே நற்செயல் கள். அவற்றில் மகா பிரதானமானது இறை வனால் படைக்கப்பட்ட மனிதன் அந்த இறைவனை மட்டுமே வணங்கவேண்டும். அவனுக்கு யாரையும், எந்த மேதையையும், எந்த மஹானையும், எந்த மூதாதையரை யும் வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கி இணையாளர்கள் ஆக்கக் கூடாது. இச் சயலை இறைவன் ஏற்றுக் கொள்வதே இல்லை. ஒரு கணவன் தனது மனைவி தன்னிடம் எவ்வளவு அன்பாக இருந்தா லும், உயிரையே வைத்திருந்தாலும், இரவு, பகல் பணிவிடை செய்வதிலும், இன்பம் அளிப்பதிலும் அதிக அக்கறையுடையவ ளாக இருந்தாலும் தனது ஆத்ம நண்பனு டன் சோரம் போனால், அதை எந்த வகை யிலும் ஏற்றுக் கொள்ள மாட்டானோ அதே போல் இறைவன் தனக்கு மிகவும் நெருக்க மான மஹானாக இருந்தாலும் இறைவனை விட்டு அவரை வணங்குவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டான். அந்த இணை வைக்கும் குற்றத்தை நான் மன்னிக்கவே மாட்டேன் என்று இறைவன் தனது இறுதி வேதத்தில் தெளிவாகப் பிரகடனப்படுத்தி யுள்ளான். (பார்க்க அல்குர்ஆன் 4:116) எனவே உலகில் பிறந்து இறைத்தூதர்களாக, மஹான்களாக வாழ்ந்து மறைந்த எந்த மஹான்களையும் சிலைகளாகவோ சமாதி களாகவோ, வேறு எந்த ரூபத்திலும் வணங் குவது கூடாது. மீறி வணங்கினால் அது இறைவனுக்கு இணைவைக்கும் மாபெரும் குற்றம். ஒரு பெண் தன் கணவன் அல்லாத பிரிதொரு ஆடவனுக்கு தனது கணவனின் ஸ்தானத்தைக் கொடுக்கும் குற்றத்தை விட பெருங்குற்றமாகும். இதை இறைவன் மன் னிக்கவே மாட்டான். அதேபோல் உயிரோடு இருந்து கொண்டு அவர்கள் இவ்வுலக மக்கள் அனைவருக்கும் செழிப் பாக வாழ வழியமைத்துக் கொடுத்தாலும் அவர்களை வாழவைக்கும் தெய்வம் என்றோ, நடமாடும் தெய்வம் என்றோ, கூறுவது படைத்த இறைவனைக் கோபப் படுத்தும் செயலாகும். இந்த குற்றத்தையும் இறைவன் மன்னிக்க மாட்டான்.

இப்படிப்பட்ட செயல்களை மனிதன் தன் அறிவுப்படி நற்செயல்களாகக் கருதினா லும் படைத்த இறைவன் தனது இறுதி வேதத்தில் இவை அனைத்தும் தனக்கு இணைக் கற்பிக்கும் துர்ச் செயல்கள் என்றே வரையறுத்துள்ளான். எனவே இச்செயல் களைச் செய்வோர் உலக மக்களின் பொருத் தத்தைப் பெற்றுக் கொண்டாலும், படைத்த இறைவனின் பொருத்தம் பெறவே முடி யாது. ஆக மனிதனின் நற் செயல்களிலேயே மிகப் பிரதானமான நற்செயல் தன்னைப் படைத்த அந்த ஒரே இறைவனுக்கு அவ னல்லாத யாரையும் எதையும் இணையாக் காமல் அவனை மட்டுமே வணங்கி வழிபடு வதாகும். அந்த இறைவனிடம் பரிந்துரைப் பவர்களாக யாரை ஆக்கிக் கொண்டாலும் அதுவும் இறைவன் நிராகரிக்கின்ற துர் செயலேயாகும்.  (பார்க்க:அல்குர்ஆன் 10:18,39:3)

ஆனால் கைசேதம் இன்று மனிதர் களில் மிகப் பெரும்பான்மையினர் படைத்த இறைவனின் இந்த கட்டளைக்கு மாறாக அவனால் படைக்கப்பட்டவர் களையே தெய்வமாக்கி வணங்கி வழிபட்டு இறைவனுக்கு இணை வைக்கின்றனர். ஒரு மனைவி தனது கணவனின் ஸ்தானத்தை மற்ற மனிதர்களுக்கும் கொடுத்து தன் கண வனுக்குத் துரோகம் செய்வதை விட மாபெரும் துரோகம், படைத்த இறைவனது ஸ்தானத்தில் அவனால் படைக்கப்பட்டவர் களை ஆக்கி அவர்களை வணங்கி வழிபடு வது என்பதை விளங்காதவர்களாக இருக் கின்றனர். இந்த துர்ச் செயலை விட்டு அறி வுடையோர் நிச்சயமாக விலகி இறைவனி டம் மன்னிப்புக் கேட்பார்கள். ஆக மனிதர் களில் மிகப் பெரும்பான்மையினர் நற்செய லாகக் கருதி படைத்த இறைவன் அல்லாத வர்களை வணங்கி வழிபடுவது துர்ச் செயலே அல்லாமல் நற்செயலாக படைத்த இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படாது.

இதுபோல் மனிதன் செய்யும் ஒவ் வொரு செயலும் நற்செயலா? அல்லது துர்ச் செயலா? என்பதை படைத்த இறைவனின் இறுதி நெறிநூலில் பார்க்கவேண்டுமே அல் லாது வேறு எங்கும் பார்க்கக்கூடாது. மனி தர்களாகப் பார்த்து நற்செயல்கள் என்று கூறிக் கொள்வதும் நற்செயலாக இறைவனி டம் ஏற்கப்படாது.

மனிதனுக்கு இவ்வுலக வாழ்க்கை நிரந்தரமல்ல. பிறந்த மனிதன் இறப்பது சர்வ நிச்சயம். இறந்த மனிதன் மீண்டும் இவ் வுலகில் பிறப்பதில்லை. மறுபிறப்பு உண்டு என்பது மனிதனின் கற்பனையே அல்லா மல் படைத்த இறைவன் தனது இறுதி நெறிநூலில் அவ்வாறு கூறவில்லை. கறந்த பால் எப்படி மீண்டும் மடுவுக்குள் நுழை .யாதோ, பிறந்த மனிதன் எப்படி மீண்டும் தாயின் கருவறைக்குள் நுழைய முடியாதோ அதே போல் இறந்த மனிதன் மீண்டும் மறு பிறப்பு எடுத்து இவ்வுலகத்திற்கு வர முடி யாது. மனிதன் இவ்வுலகிற்கு ஒரு வழிப் போக்கனாக வந்துள்ளான். இங்கிருந்து சென்று விடுவான். மீண்டும் இங்கு வரமாட் டான். மனிதன் தாயின் வயிற்றில் 10 மாதம் இருந்துவிட்டு இவ்வுலகிற்கு வந்துள்ளான். மனிதனின் இவ்வுலக பிரயாணத்திற்குத் தேவையான அவனது உடல், உடல் உறுப் புக்கள் அனைத்தும் தாயின் வயிற்றிலேயே உற்பத்தியாயின. ஆனால் தாயின் வயிற்றில் இந்த மனிதனுக்கு உடலோ , உடல் உறுப்புக்களோ தேவையாக இருக்கவில்லை. கண், காது, மூக்கு, வாய், கைகள், கால்கள் மற்றும் உடல் உள், வெளி உறுப்புகள் எதுவுமே தாயின் வயிற்றில் தேவையாக இருக்க வில்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால் தாயின் வயிற்றிலிருக்கும் போது, இந்த உறுப்புக்கள் அனைத்தும் மனிதனுக்கு இடஞ்சலாக, சுமையாகத்தான் இருந்தன. ஆயினும் அந்த உறுப்புக்கள் அனைத்தும் தாயின் வயிற்றில்தான் தயாராகும் கட்டா யம் இருந்தது. அந்த உறுப்புக்களில் ஏதா வதொன்றில் குறைபாடு இருந்திருக்குமா னால் அது அந்த மனிதனுக்கு தாயின் வயிற் றில் எந்தச் சிரமத்தையும் கொடுத்திருக்காது காரணம் அது அங்கு தேவைப்படவில்லை.

ஆனால் அக்குழந்தை, இவ்வுலகிற்கு வந்த பின்னர் உடல் உறுப்புக்கள் அனைத்தும் செயல்பட ஆரம்பிக்கின்றன. அப் போதுதான் உடல், உறுப்புக்கள் முறையாக சரியாக உருவாகவில்லை என்றால் இந்த உலகிற்கு வந்த பின்னர் முழு வாழ்க்கையி லும் 50,75,100 என்று எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அந்த உடல் உறுப்புக்களின் குறைபாட்டினால் ஏற்படும் சிரமத்தை அனுபவித்தே ஆகவேண்டும். பிறப்பினால் ஏற்படும் உடல் உறுப்புக்களின் குறை பாட்டை உலகில் எந்த வைத்தியனாலும் நிவர்த்தி செய்ய முடியாது. ஆக வழிப் போக்கனாக வந்த மனிதனின் இரண்டா வது தற்காலிகமாகத் தங்கும் இடமாக இவ் வுலகம் இருக்கிறது. தாயின் வயிற்றில் 10 மாதம் ஆனவுடன் எப்படி நிர்ப்பந்தமாக வெளியேற்றப்படுகிறானோ அதேபோல் அவனது இவ்வுலக வாழ்நாள் தீர்ந்து விட் டால் இங்கிருந்தும் பலவந்தமாக வெளி யேற்றப்படுவான். இதை இறைவனை மறுக் கும் நாஸ்திகனும் மறுக்க முடியாது.

தாயின் வயிற்றில் மனிதன் இருப்ப தற்கு தக்கதொரு காரணம் இருக்கிறது. அந்தக் காரணம் என்ன? அந்த மனிதன் இந்த வுலகில் நல்ல முறையில் சிறப்பாகச் சீருடன் வாழ அவனுக்கு அத்தியாவசியத் தேவை யான உடலும் அதன் உள், வெளி உறுப்புக் களும் அங்குதான் தாயின் வயிற்றில்தான் உருவாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த தயாரிப்பில் நிறைவு இருந்தால் நிறை வான இவ்வுலக வாழ்க்கை. அதில் குறை இருந்தால் இவ்வுலகில் குறைவான சிரம மான வாழ்க்கை. இதையும் நாஸ்திகனும் மறுக்க முடியாது. இதுபோலவே இவ்வுல கில் மனிதன் இருப்பதற்கும் தக்கதொரு காரணம் இருக்கவே செய்கிறது. அந்தக் கார ணத்தை மனிதன் சரியாக விளங்கிக் கொண் டால், அதன்படி நடக்க ஆரம்பித்துவிட் டால் அவன் தான் உண்மையான சாதனை யாளன் ஆவான். ஆம்! மனிதனின் ஆன்மா வின் அசலான உறுப்புக்கள் இந்த உலகில் தான் தயாராக வேண்டிய கட்டாயத்தில் மனிதன் இருக்கிறான். ஆனால் ஒரு வித்தி யாசம்; தாயின் வயிற்றில் அவனது உடலும், உறுப்புகளும் தயாராவதற்கு அவன் காரண முமல்ல; அதற்கு பொறுப்புதாரியுமல்ல. ஆனால் மனிதனின் ஆன்மாவின் உறுப்புக் கள் முறையாகத் தயாராவதும் அல்லது குறைகளுடன் தயாராவதும் அல்லது முற் றிலுமே தயாராகாமல் போவதும் மனித னின் கையில்தான் இருக்கிறது. இதையே மனிதனைப்படைத்த இறைவன் தனது இறுதி வேதத்தில் “”மனிதன் இவ்வுலகில் சோதனைக்காகப் படைக்கப்பட்டுள்ளான். பரீட்சை வாழ்கை வாழ்கிறான்” என்று தெளிவுபடுத்துகிறான். (பார்க்க : 67:2)

பரீட்சை என்றால் என்ன? பரீட் சையை நடத்துபவர் கேட்கும் கேள்விக்கு உரிய பதிலையே எழுதவேண்டும். உதாரணமாக பரீட்சை எழுதும் ஒரு மாணவனுக்கு சரித்திரத்தில் ஒரு கேள்வி? இந்தியாவை ஆண்ட முன்னால் பாரதப் பிரதமர் சாஸ்திரியைப் பற்றி எழுது, மாணவன் கேள்வியை முழுமையாகப் படிக்கவில்லை. பாரதப் பிரதமர் என்றவுடன் நேருதான் அவனது சிந்தனையில் வந்தார். அவரது சரித்திரத்தை நன்றாகவே படித்தும் இருக்கி றான். விருவிருவென்று நேருவின் சரித்தி ரத்தை வரைந்து தள்ளிவிட்டான். உண்மை யில் கேள்வி நேருவைப் பற்றி இருந்தால் நிச்சயம் அவனுக்கு நூற்றுக்கு நூறு புள்ளி கள் கிடைத்திருக்கும். ஆனால், கேள்வியோ சாஸ்திரியைப் பற்றி, அவனுக்கு எவ்வளவு மார்க் கிடைக்கும். அவ்வளவு பிரமாதமாக எழுதி இருக்கிறானே என்று பாஸ் மார்க் கூட கிடைக்காது. இதுதான் உண்மை.

ஆரம்பத்தில் சாதனையாளர்கள் என்று பட்டியலிட்டோமே அவர்களில் யாருமே உண்மையில் சாதனையாளர்கள் இல்லை. காரணம் அவர்களில் யாருமே கேள்விக்குரிய பதிலைத் தருபவர்களாக இல்லை. அவர்களாக ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதில் பாடுபட்டு முன்னுக்கு வந்து மக்களி டம் பேரும் புகழும் பெற்றிருக்கிறார்கள். அவ்வளவுதான், மற்றபடி அவர்களைப் படைத்த இறைவன் அவர்களிடம் எழுப்பி யுள்ள கேள்விக்கு அவர்கள் பதில் அளிக்க வில்லை. இதுதான் உண்மை நிலை. சரித்திரப் பாடத்தில் பாடதிட்டத்திலுள்ள இன்னொரு பாரத பிரதமரைப் பற்றி எழுது வதையே ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், பாடதிட்டத்தில் இல்லாத ஒன்றுக்கு விடை எழுதினால் எப்படி இருக்கும்? அதுபோல் இன்றைய பெரும்பான்மை மனிதர்கள் இறைவன் தங்களை எதற்காக இந்த உலகத் தில் படைத்திருக்கிறான் என்பதை விளங்கா மல், அவர்கள் மனதில் பட்டதை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் படைத்த இறைவனிடம் வாழ்க்கைப் பரீட் சையில் வெற்றிபெற முடியுமா? சிந்தியுங் கள். ஆக மிகப் பெரும்பான்மை மக்கள் (97%) எவ்வித குறிக்கோளுமில்லாமல் வாழ் வது ஒரு புறம், மறுபுறம் ஏதோ குறிக்கோ ளுடன் வாழும் அந்த சிலரும் (3%) தாங்க ளாக ஒரு குறிக்கோளை ஆக்கிக் கொண் டார்களே அல்லாமல் படைத்த இறைவன் இவ்வுலக வாழ்க்கையின் அசல் குறிக்கோ ளாகக் கொடுத்துள்ளது எது என்பதை அறியாது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு நாம் எழுதுவதால் இவ்வுல கைத் துறந்து துறவியாகி காட்டிற்குச் சென்று இறைவனைப் பற்றிய சிந்தனையி லேயே சதா மூழ்கி விடவேண்டும் என்று நாம் சொல்லவும் இல்லை. அப்படிச் சொல் லும் அதிகாரமும் நமக்கு இல்லை. காரணம் படைத்த இறைவன் அப்படிப்பட்ட ஒரு துறவு வாழ்க்கையை இந்த மனிதனிட மிருந்து எதிர்பார்க்கவில்லை. இறைவனுக்கு விருப்பமானது முக்திதரக்கூடியது துறவு வாழ்க்கை என்றால் உண்மையில் இந்த உலகமே ஸ்தம்பித்துவிடும் ஏன்? துறவு மூலம் முக்தி பெற ஒருவர் எண்ணினால் அதே எண்ணத்தை அவரது தகப்பன் நடை முறைப்படுத்தி இருந்தால் இவர் முக்தி பெற இவ்வுலகில் பிறந்திருக்க முடியுமா?

எனவே உலகைத் துறந்து வாழும் வாழ்க்கையை இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அப்படியானால் இறை வன் நம்மிடமிருந்து எதை எதிர்பார்க்கி றான்? எதை உண்மையான சாதனை என்கிறான்? ஆம்! இறைவன் தனது இறுதி நெறிநூலில் மனிதன் இவ்வுலகில் எப்படி வாழவேண்டும் என்று கட்டளையிட்டி ருக்கிறானோ எதை எதைச் செய்ய வேண் டும் என்று கட்டளை இட்டிருக்கிறானோ? எதை எதைச் செய்யக் கூடாது என்று கட் டளை இட்டிருக்கிறானோ? அவனது தனிப் பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை இவை அனைத்தும் எப்படி இருக்கவேண்டும் என்று கட்டளை இட்டிருக்கிறானோ? அவை அனைத் தையும் அப்படியே அமைத்துக் கொள்வதே உண்மையில் சாதனை வாழ்க்கையாகும். இவை எவற்றிலாவது நமக்கு உடன் பாடில்லை, நமது கருத்து ஒன்றாகவும் இறைவனது கட்டளை வேறாகவும் இருக் கிறது. இந்த இடத்தில் நமது கருத்திற்கு ஏற்ற வாறு இறைவனின் கட்டளைக்கு சுய விளக் கம் கொடுப்பதோ அல்லது அதை நிராகரிப் பதோ கூடாது. இது மனோ இச்சைப்படி நடப்பதாகும். இது நற்செயலில் இடம் பெறாது. துர்ச்செயலில் இடம் பெறும். இவ்வாறு நடப்பவன் சாதனையாளனாக மாட்டான். இவ்வுலகில் பேர் புகழ் பெற்றா லும் மக்களில் பெருங்கூட்டம் அவனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினா லும் படைத்த இறைவனது பார்வையில் இவன் தோல்வியாளனே. சாதனையாளன் அல்லன்.

அழிந்து போகக் கூடிய அற்ப இவ் வுலக வாழ்க்கையை நிரந்தர மறுஉலக வாழ்க்கையோடு ஒப்பிட்டால் இவ்வுலக வாழ்க்கை ஒன்றுமே இல்லை. குப்பைத் தொட்டி ஓரத்தில் 3,4 பிச்சைக்காரர்கள் நின்று கொண்டு பண்டத்திலிருந்து கொண்டுவந்து போடும் எச்சில் இலைக்காக நான், நீ என்று முண்டியடிப்பதைப் பலரும் பார்த்திருப்போம். அதிலுள்ள பலசாலி மற் றவர்களை தள்ளிவிட்டு முன்னால் போய் எச்சில் இலையிலுள்ள மிச்சப்பட்டதை எடுத்துச் சாப்பிடுவான். அவனது அகராதி யில் அவன் சாதனையாளன். ஏன் என்றால், மற்றவர்களை வீழ்த்திவிட்டு தான் நினைத் ததைச் சாதித்துக் கொண்டான் அல்லவா? ஆனால் நம்முடைய பார்வையில் அவனது நிலை? பிச்சைக்காரன் தானே! இதேபோல் அசலான மறுஉலக வாழ்க்கையை மறந்து இவ்வுலகைத் தேடுவதையே முழு மூச்சாகக் கொண்டு செயல்படுகிறவனும், உண்மை யான சாதனையாளர்களுடைய பார்வை யில் பிச்சைக்காரனே! முன்னால் பிச்சைக் காரன் முண்டியடித்து மற்றவர்களை வீழ்த் திவிட்டு எச்சில் இலைகளை நெருங்கி சாப் பிட்டுவிட்டு, எஞ்சியதை தூக்கிக் கொண்டு போகிறானா?அப்படியே தூக்கிச் சென்றா லும் இரவு வரைதான் தாக்குபிடிக்கும். அதன் பின்னர் தூக்கி எறிய வேண்டியது தான். அதேபோல் இவ்வுலகே சதம் என்று இங்கு வாரிக் கொட்டுவதையே குறிக் கோளாகக் கொண்டு பாடுபட்டுச் சேர்த்துக் குவித்தவர்கள் அவர்களது வாழ்நாள் முடிந் ததும் அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு வெறுங் கையினாராகத்தான் செல்லுகின் றனர் என்பதை உண்மையான சாதனை யாளர்கள்தான் விளங்கிக் கொள்ள முடியும்.

உலகைத் தேடுவதில் ஈடுபடவேண்டும். ஆனால் மறுமையைப் பாழ்படுத்திக் கொண்டு, படைத்த இறைவனின் கட்ட ளைகளுக்கு மாறாக உலகைத் தேட முற் படக்கூடாது. உலக வாழ்க்கையில் மற்றவர் களிடம் தேவை இல்லாமல் இருக்க, ஏழை எளியவர்களுக்கு கொடுத்து உபகாரம் செய்ய, ஒரு கண்ணியமான வாழ்க்கை வாழத் தேவையானதை ஆகுமான வழியில் தேடிக் கொள்வதும் இறைவன் நம்மீது விதித்துள்ள கட்டளையே. அதையும் நிறை வேற்றியே தீரவேண்டும்.

இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் உணவுண்டு, கழிவுகளைக் கழிக்கும் கட்டாயத்திலேயே இருக்கிறான். ஒரு தனவந்தர் வீட்டில் விருந்து, இவனுக்கும் அழைப்பு உண்டு. உணவுகள் தயாரிப்பின் வாசம் கமகம என்று தெருவெல்லாம் வீசு கிறது. ஆவலுடன் விருந்துண்ண சென்ற வனின் வயிற்றில் திடீரென்று கோளாறு. வயிற்றைக் கலக்கி வேட்டியோடு போய் விடும் போல் தெரிகிறது. இப்பொழுது அவனின் எண்ணமெல்லாம் அறுசுவை விருந்தில் இருக்குமா? அல்லது நாற்றமெடுக் கும் மலக்கூடத்தில் இருக்குமா? எங்கு விரைந்து செல்வான்? சிந்தியுங்கள்! சரிஅப்படி மலக்கூடம் நோக்கி விரைந்து சென்றவன் அங்கேயே நாள் முழுவதும் தங்கி விடுவானா? நிச்சயமாக இல்லை. போன வேலை முடிந்தவுடன் திரும்பி விடு வான். ஆம்! உண்மையான சாதனையாள னின் இவ்வுலக வாழ்க்கை முயற்சி இவ்வாறு தான் இருக்கும். இவ்வுலகத் தேவைகளின் அவசியம் கருதி படைத்த இறைவனின் கட்டளையின் அவசியத்தை உணர்ந்து தனக்காகவும், தனது குடும்பத்திற் காகவும், தான தர்மத்திற்காகவும் இவ்வுல கச் செல்வங்களை தேடத்தான் செய்வான். அதே சமயம் இவ்வுலக செல்வங்களைத் தேடுவது காரணமாக அசலான தனது மறு உலக வாழ்க்கைக்குத் தேவையான அதா வது தனது ஆன்மாவின் உறுப்புக்களைச் செவ்வனே உருவாக்குவதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டான். எப்படி தாயின் வயிற்றிலிருக்கும்போது உடல் உறுப்புக்க ளின் குறைபாடு தெரியாதிருந்து இவ்வுல கில் பிறந்தவுடன் தெரிய வருகிறதோ, அதே போல் ஆன்மாவின் உறுப்புக்கள் இவ்வுல கில் தயாராவதில் குறைபாடிருந்தாலும் இங்கு தெரியாது. ஆனால் மரணத்திற்குப் பின் நிச்சயம் தெரிய வரும் என்பதை தனது தெளிவான சிந்தனையில் கொண்டு சுதாரிப் பாகச் செயல்படுவான்.

ஆக வழிப்போக்கனான மனிதன் தனது அசலான நிரந்தரமான இடத்திற்குச் செல்லும் வழியில் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். போகும் இடத்தை மறந்து, நடைபாதையான இவ்வுலக வாழ்க் கையில் சாதிப்பதைப் பெரிய சாதனையா கக் கொண்டால் அது சாதனையே அல்ல, மாறாக தான் யார்? எங்கிருந்து வந்தோம்? எங்கே போகப்போகிறோம்? தனது இறுதி இருப்பிடம் எது? தன்னைப் படைத்தவன் யார்? தன்னை ஏன் படைத்திருக்கிறான்? படைத்த இறைவன் தன்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறான்? அவனது கட்டளைகள் என்ன? ஏவல்கள் என்ன? விலக்கல்கள் என்ன? இவை அனைத்தையம் முறையாக ஒழுங்காகச் சிந்தித்து அதனடிப்படையில் இவனாக ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்காமல், தன்னைப் படைத்தவன் எப்படிப் பட்ட வாழ்க்கை வாழக் கட்டளை இட்டி ருக்கிறானோ அந்த வாழ்க்கையை அவனது இறுதி நெறிநூல் அல்குர்ஆனிலிருந்தும், அந்த குர்ஆன்படி வாழ்ந்து காட்டிய இறை வனது இறுதித்தூதர் அவர்களின் வாழ்க்கை முறைகளிலிருந்தும் ஆய்ந்தறிந்து அதன்படி வாழ்ந்து மரிப்பவனே உண்மையான சாத னையாளன். மற்றபடி இவ்வுலக மக்கள் சாதனையாளர்களாகக் கணிப்பவர்கள் அனைவரும் உண்மையான சாதனையாளர் கள் அல்லர் என்பதை உணர்வோமாக. படைத்த இறைவனது சந்நிதானத்தில் உண் மையான சாதனையாளர்களாக ஆக முழு முயற்சிகள் செய்வோமாக.

Previous post:

Next post: