நாஸ்திகர்களிடம் சில பகுத்தறிவுக் கேள்விகள்!

in 2022 ஜுலை

நாஸ்திகர்களிடம் சில பகுத்தறிவுக் கேள்விகள்!

K.M.H. அபூ அப்தில்லாஹ்

நாஸ்திகர்கள் தாங்கள்தான் அசலான பகுத்தறிவாளர்கள் என்று பறைசாற்றிக் கொள்வது ஊர் அறிந்த உண்மை. எனவே எமது சில பகுத்தறிவுக் கேள்விகளுக்கு விடை தருவது அவர்கள் மீதுள்ள பொறுப்பாகும். அவர்கள் தரும் பதில்களிலிருந்து அவர்கள் பகுத்தறிவுப் பாசறையிலுள்ளவர் களா? அல்லது ஐயறிவுப் பாசறையிலுள்ளவர்களா என்பதை எம்போன்றவர்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

உலகில் காணப்படும் கோடான கோடி ஜீவராசிகளைப் போல் அதாவது புழு, பூச்சிகளைப் போல் மனிதனும் ஒரு புழு, பூச்சியே, ஜீவராசியே அனைத்து உயிரி னங்களும் மடிந்து மண்ணாகிப் போவது போல் மனிதனும் மடிந்து மண்ணாகிப் போகின்றவன்தான். மற்றபடி அவனுக் கொரு ஆத்மாவோ, மறுமை வாழ்க் கையோ இல்லை என்பதே நாஸ்திகர்களின் பகுத்தறிவு வாதம். அதாவது உலக வாழ்வோடு மனித வாழ்வு முற்றுப் பெற்று விடுகிறது.அதன்பின் ஒரு தொடர்ச்சியும் இல்லை என்பதே அவர்களின் வாதம். இப்போது அவர்களின் வாதத்தில் நமக்கு ஏற்படும் ஐயங்கள் இவைதான்.

மற்ற படைப்பினங்களைப் போன்ற தொரு சராசரி படைப்பினமே மனிதன் எனும் போது மற்ற படைப்பினங்களுக் குரிய சட்டங்களே மனிதனுக்கும் பொருந்த வேண்டும். மற்ற படைப்பினங்களைப் பொருத்தமட்டிலும் “வல்லனவற்றின் வாழ்வு வளம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே அவற்றின் வாழ்வு அமைந்துள்ளது. அதாவது வலிமையுள்ளவை வலிமையற்றவற்றை வீழ்த்தி, அல்லது அழித்து தம்மை வளப்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக பெரிய மீன்கள் சிறிய மீன்களைக் கொன்று தமக்கிரையாக்கிக் கொள்கின்றன. சிங்கம், புலி போன்றவை மான், மாடு போன்றவற் றைக் கொன்று தமக்கிரையாக்கிக் கொள் கின்றன. இந்த “வல்லனவற்றின் வாழ்வு வளம்” புழு பூச்சியிலிருந்து, ஊர்வனவற்றி லிருந்து நாலு கால் பிராணிகள் வரை பொருந்தும், கடலிலுள்ள பிராணிகளுக்கும் பொருந்தும். தரையிலுள்ள பிராணிகளுக் கும் பொருந்தும். இந்த சித்தாந்தத்தை நாஸ்திக பகுத்தறிவாளர்கள் அநீதி என்று தீர்ப்பு அளிப்பதில்லை.

அப்படியானால், அந்த ஜீவராசிகளைப் போன்றதொரு புழு பூச்சி, ஜீவராசிதான் மனிதன் என்று நாஸ்திக பகுத்தறிவாளர்கள் கூறும்போது, அதே “”வல்லனவற்றின் வாழ்வு வளம்” (றீற்rஸஷ்ஸழியி லிக்ஷூ மிஜுe க்ஷூஷ்மிமிeவிமி) என்ற சித்தாத்தம் மனிதனுக்கும் பொருந்திப் போக வேண்டுமல்லவா? மனிதர்களிலும் வலியவர்கள் வலிமை அற்றவர்களை வீழ்த்தி தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்வதை அநீதி என்று கூறமுடியுமா? இல்லை, இது அநீதிதான் என்று நாஸ்திகர்கள் கூறுவார்களேயானால், எந்த அடிப்படையில் அநீதி என்று கூறுகிறார்கள்? மற்ற படைப்பினங்களைப் போன்றதொரு மண்ணோடு மண்ணாகிப் போகும் ஒரு படைப்புத்தானே, புழு பூச்சிதானே மனிதனும் நாஸ்திகர்களின் கூற்றுப்படி, அப்படி யானால் மற்றப் படைப்பினங்களுக்குப் பொருந்திப் போகும் வல்லனவற்றின் வாழ்வு வளம் (றீற்rஸஷ்ஸழியி லிக்ஷூ மிஜுe க்ஷூஷ்மிமிeவிமி) என்ற கோட்பாடு மனிதனுக்கு மட்டும் ஏன் பொருந்திப் போகாது? இதற்குரிய சரியான விளக்கத்தை பகுத்தறிவு அடிப்படையில் தரக்கடமைப் பட்டிருக்கிறார்கள் நாஸ்திகர் கள். அது மட்டுமல்ல, மற்ற படைப்பினங் கள் வி­யத்தில் அது நீதியாகும். மனிதப் படைப்பு வி­யத்தில் மட்டும் அது அநீதி யாகும் என்று பிரித்துச் சட்டம் சொன்ன அதிகாரம் பெற்ற சக்தி எது? இதற்கும் பகுத் தறிவு ரீதியாக விளக்கம் தரக் கடமைப்பட் டிருக்கிறார்கள்.

அடுத்து வலுவில்லாதவர்களை வலுவுள்ளவர்கள் அடக்கி ஒடுக்கி தங்கள் வாழ்க் கையை வளப்படுத்திக் கொள்வது அநீதியே என்று பகுத்தறிவு ரீதியாகவும், மனசாட்சி யின் படியும் அப்பட்டமாக ஒப்புக் கொண்டிருக்கும் நாஸ்திகர்களில் பலர் இன்று அதற்கு மாறாக மக்களையும், அரசையும் ஏமாற்றி கோடி கோடியாகக் கொள்ளை அடித்து உள்நாட்டிலும் வெளிடுகளிலும் சொத்துக்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார்களே? இதற்குக் காரணம் என்ன? அவர்களே அநீதி என்று ஒப்புக் கொண்டுள் ளதற்கு மாற்றமாக, மக்களிடம் அநீதி என்று அப்பட்டமாக அறிவிப்பதற்கு மாற்றமாக அந்த அநீதியான கொள்ளை அடிக்கும் செயலை செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது? அவர்களது பகுத்தறிவும், மனச்சாட்சியும் பாவம், அநீதி. அக்கிரமம் என்று பகிரங்கமாகச் சொல்லும் குடி, விபச்சாரம், சூது போன்ற தீய காரியங்களில் அவர்களில் பலர் மூழ்கி இருக்கிறார்களே? இத்தீய செயல்களைச் செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது?

இறைவனையும், மறுமையையும் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களோ மனிதனின் உடம்பில் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் அவனது பகிரங்கப் பகைவனான ஷைத்தான் ஓடிக் கொண்டு மனிதனை வழிகெடுத்து நரகில் கொண்டு குவிக்க கங்கணம் கட்டிச் செயல்படுகிறான். அவனது வலையில் சிக்கியே மனிதன் தானே பாவம், அநீதி, அக்கிரமம் என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் துர்ச் செயல்களைச் செய்து பாவியாக நேரிடுகிறது என்று கூறிவிடுவார்கள். நிச்சயமாக நாஸ்திகர்கள் இறைவனையும், மறுமையை யும் ஷைத்தானையும் மறுப்பதால் இந்தக் கராணத்தை ஒப்புக்கொள்ளவும் மாட்டார்கள். சொல்லவும் மாட்டார்கள். அப்படி யானால் பாவம், அநீதி, அக்கிரமம் என்று மனிதனே பகிரங்கமாக ஒப்புக் கொண்டு விட்டு அடுத்த கனமே அவற்றைச் செய்வதற்குரிய காரணம் என்ன? பகுத்தறிவு பாசறையில் பயிற்சி பெற்ற நாஸ்திகர்கள் அதற்குரிய காரணம் கூற கடமைப்பட்டி ருக்கிறார்கள்

அடுத்து அவர்களே பாவம், அநீதி, அக்கிரமம் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு விட்டு அதற்கு மாறாக அந்த பாவமான செயல்களை, அநீதியான செயல்களை, அக்கிரமமான காரியங்களைச் செய்து கோடி கோடியாக கொள்ளை அடித்து உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் குவித்து வைத்துள்ளனர். அவர்களுக்கு இன்று மக்களுக்கு மத்தியில் பெருஞ் செல்வாக்கு, ஆள் அம்பு, பட்டம், பதவி, பலவித அதிகார ஆதிக்கம், அரசியல் செல்வாக்கு என்று மன்னாதி மன்னர்கள் போல் உல்லாச புரிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வுலகில் வாழ்நாள் பூராவும் அவர்கள் கொள்ளை அடித்த சொத்துக்கள் அவர்களுக்கு இவ்வுலகை சுவர்க்கப் பூமியாக ஆக்கித் தருகிறது. அவர்கள் செய்த அநீதி, அக்கிரமம், பாவச் செயல்கள், கொலை, கொள்ளைகள் இவை காரணமாக இவ்வுலகில் எவ்வித தண்டனையோ, கஷ்டமோ, துன்பமோ அனுபவிக்காமல், சுவர்க்கவாதிகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பாடையில் வைத்து மண்ணறையில் கொண்டு தள்ளும் வரை இன்பமோ இன்பம். மற்றபடி துன்பத்தின் சாயல் கூட படாதபடி வாழ்ந்து மடிகிறார்கள். பகுத்தறிவு நாஸ்திகர்கள் பாவம், அநீதி, அக்கி ரமம் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்ட செயல்களைச் செய்தே அவர்கள் இவ்வுல கில் குபேர வாழ்க்கையை சொர்க்கலோக வாழ்க்கையை அடைந்தார்கள்.

ஆனால் அவர்கள் செய்து முடித்த எந்த பாவமான செயலுக்கும், அநீதியான செயலுக்கும், அக்கிரமமான செயலுக்கும் அணு வத்தனை கூட தண்டனையோ துன்பமோ அனுபவிக்கவில்லை. மரணத்திற்குப் பின் மனிதனுக்கு வாழ்வு உண்டு என்று உறுதியாக நம்பும் முஸ்லிம்களோ நிச்சயமாக அப்படிப்பட்டவர்கள் இவ்வுலகில் மக்க ளையும், அரசுகளையும் ஏமாற்றித் தப்பிக் கொண்டாலும், இறைவனுடைய தர்பாரில் தப்பவே முடியாது. அங்கு வசமாக மாட்டிக் கொள்வார்கள். கடுமையான தண்ட னைகள் அவர்களது குற்றச் செயல்களுக்குக் காத்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லி விடுவார்கள். ஆனால் இறைவனையும், மறுமையையும் மறுக்கும் நாஸ்திகர்கள் இப் படிச் சொல்ல முடியாது. அப்படியாயின் அவர்களின் பகுத்தறிவைக் கொள்கைப்படி இப்படிப்பட்ட பாவமான, அநீதியான, அக்கிரமமான செயல்களைச் செய்து வளமான வாழ்வை அமைத்துக் கொண்ட கொடியவர்கள், அதற்குரிய தண்டனையை அனுபவிப்பது எப்போது? பகுத்தறிவு ரீதி யாக விடை தரக் கடமைப்பட்டிருக்கிறார் கள். ஒன்று புழு, பூச்சி போன்ற படைப்பினங்களைப் போல் மனிதனும் “வல்லன வற்றின் வாழ்வு வளம்” (றீற்rஸஷ்ஸழியி லிக்ஷூ மிஜுe க்ஷூஷ்மிமிeவிமி) என்ற கோட்பாட்டின்படி வாழக் கடமைப்பட்டவன் என்று ஒப்புக்கொள்ள வேண் டும். இல்லை அது பாவம், அநீதி, அக்கிரமம் என்று சொன்னால் இந்த சட்டத்தை வகுத் தளித்த சக்தி எது என்பதையாவது தெளிவு படுத்த வேண்டும்.

மேலும் அவர்களே அவர்களது மனச்சாட்சிப்படி பாவம். அநீதி, அக்கிரமம் என்ற அப்பட்டமாக ஒப்புக்கொண்டு விட்டு மறைமுகமாக அவற்றைச் செய்யத் தூண்டும் சக்தி எது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். இப்படி மனசாட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டு சொத்துக் களைக் குவித்து உலகில் குபேர வாழ்க்கை, சொர்க்கலோக வாழ்க்கை வாழ்ந்து மடியும் சண்டாளர்கள் தங்களின் குற்றங்களுக்குரிய தண்டனைகளை அனுபவிப்பது எப்போது? எங்கே? என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். இந்த எமது சந்தேகங்களுக்கெல்லாம் பகுத்தறிவு ரீதியான விளக்கங்களை அவர்கள் தரவேண்டும். அப்படியானால் மட்டுமே அவர்களைப் பகுத்தறிப் பாசறையில் பயிற்சி பெற்றவர்களாக உலகம் ஒப்புக்கொள்ளும். இல்லை என்றால் புறக்கண் ணால் பார்த்தே கடவுளை ஏற்பேன் என்ற ஐயறிவு வாதத்தையே அதாவது மிருக அறிவு வாதத்தையை அவர்கள் முன் வைக்கிறார்கள் என்ற முடிவுக்கே முறை யான பகுத்தறிவை உடையவர்கள் வர நேரிடும்.

Previous post:

Next post: