ஒற்றுமையின் பலமும்! வேற்றுமையின் பலவீனமும்!!

in 2022 நவம்பர்

ஒற்றுமையின் பலமும்! வேற்றுமையின் பலவீனமும்!!

அகில இந்திய அளவில் இயங்கிவரும் அனைத்து இந்துத்வா அமைப்புகளும் நாக்பூர் RSS தலைமைக்கு கட்டுப்பட்டவைகளே!

அதன் காரணமாக அந்த அமைப்புகளுக்குள் எவ்வித பதவிச் சண்டைகளின்றி போட்டி பொறாமையின்றி ஒரே தலைமைக்குக் கட்டுப்பட்டு ஒற்றுமையாக இந்தியாவை வலுவான நிலையில் ஆளுகின்றனர்.

ஆனால் இஸ்லாமிய பெயர் தாங்கிய அமைப்புக்களோ ஒரே தலைமையின்றி தங்களுக்குள் நாயும், பூனையும் போன்று அடித்துக் கொண்டு கடித்துக் குதறும் வேற்றுமை தன்மையுடையவர்களாக இருக்கின்றனர்.

பிறகெப்படி அல்லாஹ்வின் உதவி நமக்கு வரும்?

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள், உங்கள் பலம் குன்றிவிடும், (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:46)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகின்றனர் :

ஜமாஅத்துல் முஸ்லிமீன் (என்ற) ஜமாஅத்தையும் அதன் இமாமையும் பற்றிப் பிடித்துக் கொள்வீராக!

மற்றப் பிரிவுகள் தவ்ஹீது இயக்க பிரிவுகள், ஹனஃபி, ஷாஃபி, காதியானி ´ஆ இவை போன்ற) அனைத்தையும் விட்டும் நீங்கிக் கொள்வீராக! என தமக்கு நபி (ஸல்) அவர்கள் உபதேசித்ததாக ஹுதை ஃபத்துல் யமான்(ரழி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழி புகாரி : 3606,7084) என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

ஹுதைஃபா இப்னு யமான்(ரழி) அறிவித்தார் :

மக்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப்பற்றிக் கேட்டேன்) நான், இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக்கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “ஆம்’ (இருக்கிறது) என்று பதிலளித்தார்கள். நான், “இந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா?’ என்று கேட்டேன்.

நபி(ஸல்) அவர்கள், “ஆம்’! ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும் என்று பதிலளிக்க நான், “அந்தக் கலங்கலான நிலை என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒரு சமுதாயத்தார் என்னுடைய நேர்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழிகாட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய், தீமையையும் காண்பாய் என்று பதிலளித்தார்கள். நான், “அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்’! நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள் என்று பதிலளித்தார்கள்.

நான், “இறைத்தூதர் அவர்களே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், “அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்த வர்களாகவேயிருப்பார்கள், நம் மொழிகளாலேயே பேசுவார்கள்’ என்று பதிலளித்தார்கள். “நான் இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பையும் அவர்களின் தலைவரையும் (இறுகப்) பற்றிக்கொள்’ என்று பதில் கூறினார்கள். அதற்கு நான்,

“அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ, ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால் (என்ன செய்வது?)’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், “அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு (விலகி) ஒதுங்கிவிடு, ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவினாலும் சரி! (எந்தப் பிரிவினரோடும் சேராமல் தனித்தே இரு)’ என்று பதிலளித்தார்கள். (புகாரி:3606, அத்தியாயம்: 61)

Previous post:

Next post: