அல்லாஹ்வின் பாதையில் ஜகாத்!

in 2023 மார்ச்

அல்லாஹ்வின் பாதையில் ஜகாத்!

K.M.H.  அபூ அப்தில்லாஹ்

எல்லாம் வல்ல அல்லாஹ் தனது வழி காட்டும் வான்மறையில் ஜகாத் என்னும் தானம் எந்தெந்த வகையில் செலவிடப்பட வேண்டும் என்று 9:60 வசனத்தில் தெளிவு படுத்தியுள்ளான்.

அந்த வசனம் வருமாறு :

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர் களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், (இஸ் லாத்தின் பால்) உள்ளங்கள் ஈர்க்கப்பட்ட வர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய் வதற்காகவும், கடன்பட்டிருப்பதற்காக வும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிப் போக்கர்களுக்கும் உரியவை. (இது) அல்லாஹ் (யாவும் அறிபவன். மிக்க ஞானம் மிக்கவன்)   (குர்ஆன் 9:60)

இந்த வசனத்தில் ஜகாத் எட்டு வகை யாகச் செலவிடப்பட வேண்டும் என்று தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஏழு வகை நேரடியாக நபர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால் எட்டாவது வகை யானஃபீஸபீலில்லாஹ்வும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்கள் அல்லது அல் லாஹ்வின் பாதையில் பாடுபடுகிறவர் களுக்கே அதாவது நபர்களுக்கே கொடுக் கப்படவேண்டும் என்று பிக்ஹு சட்டம் வகுத்து வைத்துள்ளனர். அதுவும் குறிப் பிட்ட நபர்களின் கையில் போய் சேரும் போதே ஜகாத் நிறைவேறும் என்று வைத் துள்ளனர். உதாரணமாக இறந்துப் போன ஒரு நபரின் மையித்து செலவுக்காக செல விடப்படும் பணம் ஜகாத்தில் சேராது. ஏன் என்றால் அதனைப் பெற்றுக்கொள்ள அந்த நபர் உயிரோடில்லை என சட்டம் வகுத் துள்ளனர். குர்ஆனில் பல இடங்களில் ஜகாத் கொடுக்கும்படி வலியுறுத்தப்பட்டி ருக்கிறது. கொடுப்பது என்றால் அங்கு வாங் குவதற்கும் ஒரு ஆள் இருக்க வேண்டும். எனவே ஜகாத் குறிப்பிட்ட நபரிடம் ஒப் படைத்தால் மட்டுமே நிறைவேறும் என்ற அவர்களின் யூகத்தின் அடிப்படையில் சட் டம் இயற்றியுள்ளனர்.

ஆனால் ஜகாத் நபர்களின் கையில் போய்ச் சேர்ந்தால் மட்டுமே அது நிறை வேறும் என்று சட்டம் வகுத்துள்ளது. அல் லாஹ்வின் கட்டளையைப் புறக்கணித்து விட்டு இவர்களாகத் தன்னிச்சையாக இயற் றியதாகும். “அல்லாஹ் விதிக்காததை விதிக் கும் இணையாளர்கள் அவர்களுக்கிருக்கின் றனரா?’ (42:21) என்ற அல்லாஹ்வின் எச்ச ரிக்கை அவர்களுக்கு அச்சத்தைத் தரவில் லையா? கடன்பட்டிருப்பவர் கையில் பணத் தைக் கொடுக்காமல் கடன் கொடுத்தவர் கையில் அந்தப் பணத்தைக் கொடுத்து கட னைத்  தீர்த்தால்  ஜகாத்  நிறைவேறாதா?

அதேப் போல அடிமையின் கையில் பணம் கொடுக்காமல் அடிமையின் உரிமை யாளர்களிடம் பணத்தைக் கொடுத்து அந்த அடிமையை உரிமை விட்டால் ஜகாத் நிறை வேறாதா? இவ்வாறு செய்தாலும் ஜகாத் நிறைவேறத்தான் செய்யும். இதனை 9:60 வசனத்தில் குறிப்பிடப்படும் முதல் நாலு வகையில் அவர்களுக்கு எனக் குறிப்பிடப் படும் எஞ்சியுள்ள ஒரு வகையை அல்லாஹ் வின் பாதையில் உள்ளவர்களுக்காக என்றே குறிப்பிடாமல் அல்லாஹ்வின் பாதைக்காக எனத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுத் தெளிவுபடுத்தியுள்ளான்.

அடுத்து முக்கியமாக ஜகாத் பணத்தை அல்லாஹ்வின் பாதையில் சத்தியமார்க்கம் நிலைநாட்டப்பட மக்கள் சத்திய மார்க் கத்தை அறிந்து செயல்பட்டால் ஜகாத் நிறைவேறாது என்று பிக்ஹு சட்டம் வகுத்து வைத்துள்ளதை ஆராய்வோம். ஆதார அடிப்படையில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டதாகத் தெரியவில்லை. அனு மான அடிப்படையிலேயே சட்டம் இயற் றப்பட்டுள்ளது. அதுவும் சுயநல நோக்கு டன் அவ்வாறு இயற்றப்பட்டுள்ளது. அந்த வகையைக் கொண்டு தங்கள் பாக்கெட்டு களை நிறைத்துக் கொள்ள சட்டம் வகுத் துள்ளனர். மார்க்கப் பிரசாரம் செய்ய பட்ட யம் பெற்ற ஏகபோக உரிமையாளர்கள் நாங்கள் மட்டுமே, அரபி மொழிக் கற்றுக் கொள்ளாதவர்கள் பிரசார பணிக்கு அருகதையற்றவர்கள் என்று மவ்லவிகள் மார் தட்டிக் கொள்வதும் இங்கு குறிப்பிடத் தக்கது. மற்றபடி குர்ஆன், ஹதீத் ஆதாரங் கள் அல்லாஹ்வின் பாதையில் எல்லா வகை களிலும் ஜகாத் பணம் செலவிடப்படலாம் என்பதையே வலியுறுத்துகின்றன. உதாரண மாக கீழ்வரும் வசனங்கள் உற்று கவனி யுங்கள்.

அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதை யில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார் கள். எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான். அல்லாஹ் எவ்வித தேவையு மற்றவன். நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங் கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான். பின்னர், உங்களைப் போன்று  அவர்கள்  இருக்கமாட்டார்கள். (47:38)

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள். இன்னும் உங்கள் கைகளா லேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். இன்னும் நன்மை செய்யுங் கள். நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களைநன்மை  செய்வோரை  நேசிக்கிறான்.  (2:195)

அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவ மையானது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்களைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு(இதை மேலும்) இரட்டிப்பாக்கு கின்றான். இன் னும் அல்லாஹ் விசாலமான (கொடையு டைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.  (2:261)

மேலும் பார்க்க 2:262, 8:60, 49:15, 61:11 இந்த வசனங்களிலெல்லாம்ஃபீ ஸபீலில்லாஹ்என்ற பதம் அல்லாஹ்வின் பாதையில் செலவிடப்படுவதைக் குறிக்கின் றனவே அல்லாமல் அல்லாஹ்வின் பாதை யில் பாடுபடுகிறவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் எனச் சொல்ல வில்லை. அவ்வாறு பொருள் கொள்வது பெருந்தவறாகும். ஆயினும் அவர்களுக்கு கொடுக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. “”ஜகாத் பற்றிக் குறிப்பிடும் இடங்களிலெல் லாம்ஆத்தூஸ் ஜகாத்என்று குர்ஆனிலும்ஈத்தாவுஸ் ஜகாத்என்று ஹதீதிலும் காணப் படுகின்றது. ஆனால் மேலே காணப்படும் வசனங்களில்அன்ஃபிகூசெலவிடுங்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். கொடுப் பதற்கும், செலவழிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. கொடுப்பதற்கு ஆள் கண்டிப்பாக இருக்க வேண்டும்என்ற வாதத்தை அவர் கள் எடுத்துவைக்கலாம். பொருளைக் கொடுப்பது செலவளிப்பது, தியாகம் செய் வது, இவை அனைத்தும் பெரும்பாலும் ஒத் தக் கருத்தை உடையவைதான். இவற்றில் வித்தியாசம் இருக்கிறது என்று வாதிடுகிற வர்கள் அல்லாஹ்வின் பாதையிலும் என்றி ருப்பதை அல்லாஹ் பாதையில் பாடுபடுகிற வர்கள் என்று மட்டும் பொருள் கொள்வது அதனைவிடப் பெருந்தவறு என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள்? பிக்ஹு சட்டம் கூறுவது போல் 9:60ல் வருடம்ஃபீஸபிலில் லாஹ்என்ற பதம் அல்லாஹ்வின் பாதை யில் பாடுபடுகிறவர்களை மட்டுமே குறிக் கும் என்றிருந்தால் அல்லாஹ் அதனைத் தெளிவாகவல்முஜாஹிதூன ஃபீஸபிலில் லாஹ்என்றே குறிப்பிட்டிருப்பானே? உதாரணமாக 4:95 வசனத்தில் அல்லாஹ் வின் பாதையில் பாடுபடுகிறவர்கள் என்று குறிப்பாகக் குறிக்கின்றான். அந்த வசனம் வருமாறு :

ஈமான் கொண்டவர்களில் எந்தக் காரணமுமின்றி உட்கார்ந்திருப்பவர்களும் தங்களுடைய சொத்துக்களையும், உயிர் களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுபவர் களும்  சமமாகமாட்டார்கள்.  (4:95)

இங்கு அல்லாஹ்வின் பாதையில் பாடு படுகிறவர்கள் என்று குறிப்பிட்டிருப்பது போல் 9:60 வசனத்திலும் தெளிவாகவே குறிப்பிட்டிருப்பான். ஆனால் அவ்வாறு குறிப்பிடவில்லை. இந்த நிலையில் இங்கு இதற்கு இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுகிறவர்களுக்கு மட்டுமே என்று எப் படி வலிந்து பொருள் கொள்கிறார்கள்? இப் படி சட்டம் வகுத்து வைத்துள்ளவர்கள் எப் படி அவர்கள் வைத்துள்ள சட்டத்தையே மதிக்காமல் நடந்து வருகிறார்கள் என்பதை யும் உங்களுக்கு அறியத் தருகின்றோம். அவர்களது இந்தச் சட்டப்படி அவர்கள் நடத்தி வரும் பிக்ஹு மதரஸாக்களுக்கு ஜகாத் பணத்தையும் வசூலிக்கவே செய்கின் றனர். ஜகாத் நிறைவேறாதே! எப்படி ஜகாத் பணத்தை வசூலிக்கிறீர்கள்? என்று கேட் டால், நாங்கள் வசூலித்த ஜகாத் பணத்தை மதரஸாவில் (பிக்ஹு சட்டங்களை) ஓதி வரும் மாணவர்களுக்கு உணவு வகைகளுக் குச் செலவிடுகிறோம். (இங்கு கொடுக்கா மல் செலவிடுகிறார்கள் என்பதைக் கவனத் தில் கொள்ளவும்) எனவே ஜகாத் நிறை வேறிவிடும் என்று சால்ஜாப்பு சொல்கிறார் கள். இங்கு அவர்கள் சட்டம் வகுத்து வைத் திருப்பது போல் மதரஸாவில் (பிக்ஹு சட் டம்) பயிலும் மாணவர்களின் கைகளில் ஜகாத் பணம் நேரடியாகக் கொடுக்கப்பட்டு அவர்கள் சுதந்திரமாக அதனைச் செலவிடு வதில்லை என்பதும், அவர்களுக்கு இலவச உணவும், தங்கும் வசதியும் செய்து கொடுத் துள்ளதாக அறிவிக்கப்படுவதும் சிந்தித்து உணர வேண்டிய  வி­யங்களாகும்.

ஆக அவர்கள் வகுத்துள்ள சட்டத்தை அவர்களே மதித்து நடப்பதில்லை. மக்களை ஏமாற்றவே அவர்கள் இவ்வாறு சட்டம் வகுத்து வைத்துள்ளனர் என்றே கூற வேண் டும். குர்ஆனையும், ஹதீதையும் குழித் தோண்டிப் புதைத்துவிட்டு குர்ஆனுக்கும், ஹதீதுக்கும்  முற்றிலும் முரணான தக்லீதை யும், தஸவ்வுஃபையும் நியாயப்படுத்தியும், அறிவுக்கே பொருந்தாத சட்டங்களையும், அசிங்கங்களையும் கொண்டுள்ள பிக்ஹு நூல்களை மார்க்கக் கல்வியாக போதிக்கும் அவர்களின் பிக்ஹு மதரஸாக்களுக்கும் ஜகாத் பணம் கொடுத்தால் அது நிறைவேறி விடுமாம். அல்லாஹ்வின் பாதையில் அல் லாஹ்வின் மார்க்கத்தைசத்தியத்தை நிலை நாட்டும் முயற்சிகளுக்கு ஜகாத் பணத்தை செலவிட்டால் அது நிறைவேறாதாம். அவர் களின் கூற்று வேடிக்கையாக இல்லையா?

எனவே பிக்ஹு நூல்களில் ஜகாத் வி­யமாக இயற்றி வைத்துள்ள இந்த தவ றான சட்டத்தை நாம் மதித்து நடக்க வேண் டியதில்லை. அதனை மார்க்கச் சட்டமாகக் கொள்ள வேண்டியதுமில்லை. அல்லாஹ் வின் பாதையில் குர்ஆன், ஹதீதை நிலை நாட்ட மக்களிடையே உண்மையான மார்க்கம் நடைமுறைக்கு வர செய்யப்படும் முயற்சிகளுக்குத் தாராளமாக ஜகாத் பணத் தைச் செலவிடலாம். நாம் மேலே எடுத் தெழுதியுள்ள வசனங்களிலிருந்து அல்லாஹ் வின் பாதையில் செலவிடப்படும் பணத்தை விட அதிக நன்மையைப் பெற்றுத் தரும்  வேறு வழி ஒன்று இருக்க முடியாது என்பதைத் தெளிவாக நாம்  புரிந்து கொள்கிறோம்.

வறுமை கொடியது; அதில் சந்தேகமே யில்லை. அதனைப் போக்க முயற்சிகள் செய்யப்பட வேண்டும் என்பதிலும் ஐய மில்லை. வசதி படைத்தவர்கள் வறுமையில் வாடுபவர்களுக்கு தங்களின் ஜகாத் பணத் தையும், சதகா பணத்தையும் தாராளமாகக் கொடுத்து அவர்களின் வறுமையைப் போக்க ஆவண செய்ய வேண்டும் என்பதிலும்  ஐயமில்லை. 

எனவே அந்நஜாத்தின் பணியின் அவசியத்தைப் புரிந்து கொண்டவர்கள் தங்கள் ஜகாத் நிதியிலிருந்தும், சதகா நிதியிலிருந்தும் தாராளமாக கொடுத்து அந்நஜாத் தனது பணியில் தொய்வின்றி முன்னேறிச் செல்ல தங்களால் ஆன ஒத்து ழைப்பை நல்குமாறு அன்புடன் வேண்டு கிறோம். அல்லாஹ்  அருள்  புரிவானாக.\

Previous post:

Next post: