ரமழானின் பிந்தியது பத்து!

in 2023 மார்ச்

ரமழானின் பிந்தியது பத்து!

இப்னு ஹத்தாது

லைலத்துல்  கத்ரின்  சிறப்பு:

அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக, நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) இரவில் இறக்கினோம். கண்ணியமிக்க இரவு எதுவென உமக்கு அறி வித்தது எது? மேலும் கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலான தாகும். அதில் வானவர்களும் ருஹூம் (ஜிப் ரீலும்) தம் இறைவனின் அனுமதியுடன் (அவனுடைய) கட்டளை ஒவ்வொன்றை யும் செயல்படுத்துவதற்காக இறங்குகின்ற னர். (அந்த இரவு முழுக்க) சாந்தி (பொழிந்த வண்ணமிருக்கும்); அது விடியற்கால உதய மாகும்வரை நீடிக்கும்!’ (அல்குர்ஆன் 97:1-5)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூரினார்கள்:

யார் ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற் கிறாரோ அவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! யார் லைலத் துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன் னிக்கப்படும்!’ 

இதை அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, பாகம்:2, ஹதீத்: 2014)

லைலத்துல் கத்ர் இரவை (ரமழானின்) கடைசி ஏழு நாட்களில் தேடுதல் :

இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறியதாவது:

நபித் தோழர்களில் சிலருக்கு, (ரமழா னின்) கடைசி ஏழு நாட்களில் (வந்த) கன வில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட் டது; அப்போது, நபி(ஸல்) அவர்கள்உங் கள் கனவுகள் கடைசி ஏழு நாட்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட வி­யத்தில்) ஒத்து அமைந்திருப்பதை நான் காண்கிறேன்!

ஆகவே, அதைத் தேடுபவர், (ரமழா னின்) கடைசி ஏழு நாட்களில் அதைத் தேடட்டும்!’  என்று கூறினார்கள். (புகாரி, பாகம்: 2, ஹதீத் : 2015)

அபூ ஸயீத்(ரழி)  அவர்கள்  கூறியதாவது :

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமழானின் நடுப்பத்தில் இஃதிகாஃப் இருந் தோம். அவர்கள் இருபதாம் நாள் காலை யில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) “எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது: பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே, நீங்கள் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல் கத் ரில்) ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய் வது போல் (கனவு) கண்டேன்! ஆகவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!’ என்றார்கள். நாங்கள் திரும்ப சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட அப் போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண் ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்சை மட்டையினால் அமைந்திருந்தது. தொழு கைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி (ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் நான் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை நான் பார்த்தேன். (புகாரி: பாகம்: 2, ஹதீத் : 2016)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத் துல் கத்ரைத் தேடுங்கள்!’ இதை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, பாகம்: 2, ஹதீத் 207)

அபூஸயீத் அல்குத்ரீ(ரழி) அவர்கள் கூறியதாவது :

நபி(ஸல்) அவர்கள் ரமழான் மாதத் தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; இருபதாம் தினம் கழிந்து மாலையாகி, இருபத்தொன் றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள்; அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தவர்களும் திரும்புவார்கள். இவ்வழக் கப்படி நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம், எந்த இரவில் இல்லம் திரும்புவார்களோ, அந்த இரவில் தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தி னார்கள். அல்லாஹ் நாடிய வி­யங்களை அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பின் னர்நான் இந்தப் பத்து நாட்கள் இஃதி காஃப் இருந்தேன்; பிறகு கடைசி பத்து நாட் களில் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது; எனவே என்னுடன் இஃதிகாஃப் இருந்தவர்கள் இருந்த இடத்தி லேயே தங்கியிருக்கட்டும்! இந்த (லைலத் துல் கத்ர்) இரவு எனக்கு காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது; எனவே கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடுங்கள்! (அந்த நாட்களிலுள்ள ஒவ்வொரு ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்! நான் ஈரமான களிமண் ணில் (அந்த இரவில்) ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன்! எனக் குறிப்பிட் டார்கள். அந்த இரவில் வானம் இரைச்சலு டன் மழை பொழிய, பள்ளிவாசல் கூரையி லிருந்து) நபி(ஸல்) அவர்கள் தொழும் இடத் தில் (மழை நீர்) கொட்டியது. இருபத் தொன்றாம் இரவில் நடந்த இதை நான் என் கண்களால் பார்த்தேன்! மேலும், நபி(ஸல்) அவர்கள்  தமது முகத்தில் ஈரமான களிமண் நிறைந்திருக்க ஸுப்ஹு தொழுதுவிட்டுத் திரும்புவதையும் நான் கண்டேன். (புகாரி, பாகம் 3, ஹதீத் 2018)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“(லைத்துல் கத்ரை) தேடுங்கள்!’ இதை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி,  பாகம்: 2, ஹதீத் :2019)

ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியதாவது:

நபி(ஸல்) அவர்கள் ரமழானின் கடை சிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார் கள், ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்! எனக் கூறு வார்கள். (புகாரி, பாகம்:2, ஹதீத்: 2020)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமழானின் கடைசிப் பத்து நாட்க ளில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்!’ லைலத் துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருப்பத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள்! இதை இப்னுஅப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கி றார்கள். (புகாரி, பாகம்:2, ஹதீத்: 2021)

உபாதா பின் ஸாமித்(ரழி) அவர்கள் கூறியதாவது :

லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறி விப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட் டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்கள், “லைலத்துல் கத்ரை உங்க ளுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட் டேன், அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டு விட் டது! அது உங்களுக்கு நன்மையாக இருக் கலாம்! எனவே, அதை இருபத்தொன்ப தாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்! எனக் கூறினார்கள். (புகாரி, பாகம்:2, ஹதீத்:2023)

ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியதாவது:

(ரமழானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்ல றத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப் பிப்பார்கள், (இறைவனை வணங்குவதற் காத்) தம் குடும்பத்தினரை எழுப்பி விடு வார்கள்! (புகாரி: பாகம், 2, ஹதீத்:2024)

லைலத்துல் கத்ர் துஆ:

அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல்  அஃப்வ  ஃபஃ பு  அன்னீ :

பொருள் : யா அல்லாஹ்! நிச்சயமாக நீயே மன்னிப்பவன். மன்னிப்பை விரும்புகிற வன். எனவே என்னை மன்னித்தருள்வாயாக!

மேலே எழுதப்பட்டுள்ள குர்ஆன் வசனம் மற்றும் ஹதீத்களிலிருந்து ஆயிரம் மாதங்களை விட சிறப்புக்குரிய லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புகளும், அந்த இரவை அடைந்து கொள்வதற்காக முஸ்லிம்கள் பாடுபட வேண்டும் என்பதும், அதுவும் சிறப்பாக பிந்திய பத்தில் அதிலும் ஒற்றைப் படை இரவுகளில் அந்த இரவை அடைந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்று ஆர்வமூட்டப்பட்டுள்ளது. ரமழானின் பிந்திய பத்தில் இஃதிகாப் இருந்து லைலத் துல் கத்ர் இரவை அடைய ஆர்வமூட்டப் பட்டிருக்கிறது. அதில் எப்படி துஆ கேட்க வேண்டும் என்றும் கற்றுத்தரப்பட்டுள்ளது. குர்ஆன், ஹதீத்படி நடப்பவர்கள் கண்டிப் பாக நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டிய அல்லது செய்யச் சொன்ன, அல்லது நபி தோழர்கள் செய்ததைப் பார்த்து அங்கீ கரித்த செயல்களை மட்டுமே மார்க்கமாக எடுத்துச் செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதிலும் எவ் வித சந்தேகமுமில்லை. அந்த அடிப்படை யில் பாங்குக்கு முன்னால் சொல்லப்படும் ஸலவாத்பித்அத்என்கிறோம். ரமழான் இரவுகளில் தொழும் இரவுத் தொழு கையை (தராவீஹ்) 20+3 தொழுதால் அது பித்அத் என்கிறோம். இப்படி நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத எந்த அமலையும் செய்வதுபித்அத்என்றே கூறி வருகிறோம். இதற்குக் காரணம் நபி(ஸல்) அவர்கள் தெள்ளத் தெளிவாகநமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் அதில் புகுத்து கிறாரோ அது மறுக்கப்பட வேண்டிய ஒன்றுஎன்று ஆணித்தரமாக அறிவித்து இருக்கிறார்கள்.       (ஆயிஷா(ரழி), புகாரி)

இந்த எச்சரிக்கையை சிரம் மேற் கொண்டு செயல்படுவதாகத் தம்பட்டம் அடிக்கும் தெளஹீத்வாதிகள் என்று பறை சாற்றிக் கொள்ளும் சகோதரர்களும் தங் களை அறியாமலேயே நபி(ஸல்) காட்டித் தராத சில, பல செயல்பாடுகளை செய்து வருகிறார்கள். அது மட்டுமல்ல; தங்களது வாதத் திறமையால் அவற்றை நியாயப்படுத் தவும் செய்கின்றனர். இவ்வாறு செய்வது கொண்டு அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்களே அல்லாமல் உண்மை விசுவாசிகளையும், அல்லாஹ்வை யும் அவர்கள் ஏமாற்ற முடியாது. (பார்க்க: 2:9)

அந்த வரிசையில் ரமழானின் பிந்திய பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் மார்க் கப் பிரச்சாரர்களைக் கொண்டு விமரிசை யாக மார்க்க உபதேசங்களைச் செய்து வரு கிறார்கள். மார்க்கம் தெரியா மக்களுக்கு மார்க்கத்தைத் தானே போதிக்கிறோம் என்று தங்களின் இந்தச் செயலை நியாயப் படுத்துகின்றனர்.

மற்றபடி பாங்குக்கு முன்னால் சொல் லப்படும் ஸலவாத் தொழுகைக்குப் பின் னால் கூட்டாக ஓதப்படும் துஆ, ரமழானின் இரவுகளில் தொழப்படும் 20+3 ரகாஅத்து கள் இவையனைத்தும்பித்அத்என்பதற்கு அவர்கள் கொண்டிருக்கும் அளவுகோல் இங்கே காற்றில் பறக்க விடப்படுகிறது. மத்ஹபுவாதிகள் செய்யும் பித்அத்கள் வி­ யத்தில் மிகமிகக் கடுமை காட்டும் வானத் திற்கும் பூமிக்கும் குதிக்கும் இந்த தவ்ஹீத் வாதிகள் தாங்கள் செய்யும் பித்அத்களை உணராதிருப்பதுதான் வேதனையான வி­யம்.

ரமழானின் பிந்திய பத்தின் ஒற்றைப் படை இரவுகளில் தனித்தனியாக நின்று வணங்கி, திக்ர் செய்து, குர்ஆன் ஓதி, துஆ செய்து லைலத்துல் கத்ர் இரவை அடைந்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந் திருக்கிறார்களே அல்லாமல், பயான் செய்து காட்டித் தந்தார்களா? என்று இவர்கள், பார்ப்பதில்லை. நபி(ஸல்) அவர்கள் ரமழான் இரவு களில் இப்படி தொடர் பயான் களையோ, அல்லது ஒற்றைப்படை இரவு களில் தொடர்ந்து பயான் செய்திருக்கிறார் களா? என்று ஆதாரங்களைத் தேடினால் ஆதாரம் பூஜ்யம்தான். ஆனால், “லைலத்துல் கத்ர்இரவை அடையும் முயற்சி பற்றி புகாரி 2016 ஹதீதில் 20ஆம் நாள் காலையில் உரை நிகழ்த்தியதாகவும் 2018 ஹதீதில்எந்த இரவில் இல்லம் திரும்புவார்களோ அந்த இரவில் தங்கி மக்களுக்கு உரை நிகழ்த் தினார்கள்;  அல்லாஹ் நாடிய வி­யங்க ளை அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்என்றே காணப்படுகிறது. மற்றபடி பிந்திய பத்திலோ அல்லது பிந்திய ஒற்றைப்படை இரவுகளிலோ மக்களுக்கு மார்க்க உபதேசம் செய்ததாக  எந்த  ஆதாரமும்  இல்லை.

இப்போது இந்த தவ்ஹீத்வாதிகள் சிந் திக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் காட் டித்தராத ஒருஅமலைநாமாகச் செய்தால் அதன் நிலை என்ன? மத்ஹப்வாதிகள் செய் தால்தான் அது நிராகரிக்கப்படும்; தவ்ஹீத் வாதிகளாகிய நாங்கள் செய்தால் அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்வான் என்று யூதர்கள் சொன்னதுபோல் சொல்லப் போகிறார் களா? அல்லது நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத அனைத்துச் செயல்களும்பித்அத் களேஎன்று விளங்கி ஒதுங்கப் போகிறார் களா? பொறுத்திருந்து  பார்ப்போம்.

ரமழான் பிந்திய பத்தின் ஒற்றைப் படை இரவுகளில் தான் மக்கள் அதிகமாகக் கூடுகிறார்கள். அவர்களிடையே மார்க்கப் பிரசாரம் செய்ய நல்லதொரு அரிய வாய்ப் புக் கிடைக்கிறது என்று கூறியும் தங்களின் இந்த பித்அத்தான செயலை நியாயப்படுத்த முடியாது. இவர்கள் இப்படி சாக்குப் போக் குச் சொல்லி தங்களின் இந்த பித்அத்தான செயலை நியாயப்படுத்த முற்பட்டால், அவர்கள் அறிந்து கொள்ளட்டும். அதே போல் மத்ஹபுவாதிகள் தங்களின் 20+3 ரகாஅத் இரவுத் தொழுகையை நியாயப் படுத்த இவர்களை விட பல மடங்கு நியா யம் உள்ளவர்களாக ஆகிவிடுகிறார்கள். ரமழான் இரவுகளில் நின்று வணங்குவது விரும்பி வரவேற்க வேண்டிய வி­யம். (பார்க்க. புகாரி பாகம் 2, ஹதீத் 2014) ரம ழான் இரவுகளில் மார்க்கப் பிரசாரம் செய் வது விரும்பி வரவேற்கப்படுவதாக ஒரு ஹதீதையும் பார்க்க முடியாது. ஆனால் மத் ஹபுவாதிகள் நபி(ஸல்) காட்டித்தராத 20+3 ரகாஅத்துகளை ஸுன்னத்நபிவழி என்று பொய்யாகக் கூறி மக்களைக் கூட்டாகஜமாஅத்தாக தொழச் சொல்லுவதையே பித்அத் என்கிறோம்; கண்டிக்கிறோம், காரணம்:

உண்மையை எளிதாக்குங்கள்; சிரமப் படுத்திவிடாதீர்கள்; நல்லதைக் கூறுங்கள்; சலிப்படைந்து வெருண்டோடும்படி செய்து விடாதீர்கள்என்பது நபி(ஸல்) அவர்களின்  கடுமையான  எச்சரிக்கை.   (அனல்(ரழி), புகாரி)

தொழுகையில்தான் மக்கள் சலிப் படைவார்கள்; பயானில் மக்கள் சலிப் படையமாட்டார்கள் என்று இவர்கள் சப் பைக்கட்டுக் கட்டலாம். அதற்கும் மறுப்பு இருக்கிறது. இதோ பாருங்கள்:

இப்னு மஸ்வூத்(ரழி) அவர்கள் வியாழக்கிழமை தோறும் எங்களுக்கு உரை நிகழ்த்திடுவார்கள். அப்போது அவர்களி டம் ஒருவர்அபூஅப்துர்ரஹ்மான் அவர் களே! தினமும் நீங்கள் எங்களுக்கு உரை நிகழ்த்துவதை நான் விரும்புகிறேன்என்று கூறினார். அதற்கு இப்னு மஸ்வூத்(ரழி) அவர் கள்: 

அறிந்துகொள்ளுங்கள்! உங்களை நான் (தினமும் உரை நிகழ்த்தி) சலிப்படை யச் செய்திடுவேனோஎன நான் அஞ்சுவது தான் இவ்வாறு செய்ய என்னைத் தடுக் கிறது. நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு சலிப் படைவதை அஞ்சியே சந்தர்ப்பம் அறிந்து உரை நிகழ்த்துவார்கள். இதுபோலவே நானும் சந்தர்ப்பம் அறிந்து உங்களுக்கு உரை நிகழ்த்துகிறேன்என்று கூறினார்கள். அபூவாயில் இப்னு ஸலமா. (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

இந்த ஹதீத் மார்க்க உரையை மக்கள் விரும்பித் தினசரி செய்யச் சொன்னாலும் நபி(ஸல்) அவர்களின் நடைமுறையைப் பேணி நடப்பவர்கள் ஒருபோதும் அதை ஏற்கமுடியாது. அதுபித்அத்என்ற நவீன செயலே  என்பதை  உணர்த்துகிறது.

இதுபோல் தவ்ஹீத் சகோதரர்கள்பித் அத்களைமிகக் கடுமையாகக் கண்டித்துக் கொண்டே இவர்களும் தனித்தனிப் பிரிவு, ரமழான் ஒற்றைப்படை தொடர் பயான் போன்ற பித்அத்களை ஆர்வமாகச் செய்யக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். இந்த புனித ரமழானில் தங்களின் குறை நிறை களை அலசி ஆராய்ந்து நபி(ஸல்) அவர்கள் 73 பிரிவுகளில் சுவர்க்கம் செல்லும் ஒரே பிரிவு எப்படி நடந்து கொள்வார்கள் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்களோ. அதா வது நபி(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் ஒரே ஒரு ஒன்றுபட்ட ஜமா அத்தாக இருந்தபோது, மார்க்க வி­யத்தில் அவர்களிடம் காணப்பட்ட வி­யங்களை மட்டும் மார்க்கமாகவும், அவர்களிடம் காணப்படாத வி­யங்கள் இவர்களுக்கு எவ்வளவு அழகாக இவர்களது அறிவில் பட் டாலும் அவற்றை நிராகரித்து மார்க்கத்தில் நபி(ஸல்) அவர்களால் காட்டித் தரப்பட்ட வற்றை மட்டும் செய்து ஈடேற்றம் பெற வேண்டுகிறோம்.

Previous post:

Next post: