பொதுத் தேர்தலும்! முஸ்லிம்களும்! 

in 2023 ஜூலை

பொதுத் தேர்தலும்! முஸ்லிம்களும்! 

K.M.H. அபூ அப்தில்லாஹ்

பொதுவாக ஐந்து வருடங்களுக்கொரு முறை இந்திய மக்கள் சந்திக்கும் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. ஏமாற்றிப் பிழைப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள். அரசியல் புரோகிதர்கள் மக்களை ஏமாற்றுவது எப்படி? அவர்களின் வாக்குச் சீட்டுக்களை கவர்வது எப்படி? என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார் கள். இந்த அரசியல் புரோகிதர்களில் இவன் ஓசத்தி, அவன் மட்டம் என்று சொல்லுவ தற்கு யாரும் இல்லை. எல்லோரும் இன் றைய சாக்கடை அரசியலில் ஊறிய மட் டைகள்தான்.

ஆட்சியைப் பிடிக்கும் அதிகார மோகத் தில் கொள்கையில் முழுக்க முழுக்க மாறு பட்டவர்களுடனும் கூட்டணி அமைக்க வும், அதற்காக கோடி கோடியாக கொள் ளையடித்த பணத்திலிருந்து பேரம் பேசி கொடுக்கவும் தயங்காதவர்கள் இன்றைய அரசியல்வாதிகள், ஆட்சியில் இருக்கும் போது 10 ஆயிரம் கோடி கொள்ளை அடித் தால். அதில் பாதி 5 ஆயிரம் கோடியை வாக் காளர்களுக்கும், மற்றவர்களுக்கும் லஞ்ச மாகக் கொடுத்து மீண்டும் ஆட்சி கட்டி லேறி 20 ஆயிரம் கோடி கொள்ளை அடிக்க திட்டம் வகுப்பவர்கள் இன்றைய அரசியல் வாதிகள்.

இன்றைய அரசியல்வாதிகளைக் கொண்டு இந்திய நாட்டிற்கு விமோசனம் பிறக்கும் என்று எதிர்பார்ப்பது மலடி பிள்ளை பெறுவதை எதிர்பார்த்த கதை தான். ஒரு சமூகப் புரட்சி ஏற்பட்டாலே அல்லாமல் நம் நாட்டிற்கு விடிவு காலம் இல்லை. இந்த நிலையில் இன்றைய அரசியல், தேர்தல் இவைகளில் கவனம் செலுத்துவது வீண் வேலை என்பதில் ஐய மில்லை. இந்த அரசியல்வாதிகள் நமக்கு நல் லது செய்வார்கள் என்று நம்பி அவர்களைத் தேர்ந்தெடுப்பது முழு அறியாமையாகும். இன்றைய அரசியலை விட்டு ஒதுங்கி, தேர்தை புறக்கணிப்பதே சாலச் சிறந்தது என்றே பல சிந்தனையாளர்கள் நினைப் பார்கள். அது முஸ்லிம்களுக்கு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தாவிட்டால் அதுவே மிகவும் நல்லது என்று நாமும் சொல்லு வோம்.

ஆனால் அப்படிப்பட்ட பாதிப்புகள் இல்லாத நிலையில் இந்திய நாட்டு முஸ்லிம் கள் இல்லை. இந்திய முஸ்லிம்கள் பொதுத் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலை ஏற்பட் டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவது மட்டுமன்றி பிறந்த நாட்டின் மீது அவர்க ளுக்கிருக்கும் பற்றும், அக்கறையும் கேள்விக் குறியாக்கப்படும். இருக்கிற தொல்லைகள் போதாதென்று மேலும் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள். கேவலம் தேர்தலின் போது முஸ்லிம்கள் போடும் இந்த வாக்குரிமையை மட்டுமே காரணமாகக் கொண்டு கொஞ்சத்திற்குக் கொஞ்சமாவது முஸ்லிம்களை மதித்து நடக்கும் அரசும், அரசியல் கட்சிகளும் அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கா மல் உதாசீனம் செய்யும் நிலை ஏற்படலாம்.

ஜனநாயக அரசியல் முறை, குறிப்பாக இன்று இந்திய நாட்டில் பணம் படைத்த கொள்ளையர்களும், தாதாக்களும் இந்திய அரசியலை ஆட்டிப் படைக்கும் அரசியல் முறை இஸ்லாத்திற்கு முழுக்க முழுக்க முர ணானதாகும். ஆயினும் நிர்பந்த நிலையில் பொதுத் தேர்தலில் பங்கும் கொள்ளும் கட் டாயத்தில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். வட்டி தெள்ளத்தெளிவாக ஹறாம். முஸ் லிம்கள் கண்டிப்பாக வட்டி சம்பந்தப் பட்ட காரியங்களில் ஈடுபடக் கூடாது. ஆயி னும் இந்திய நாட்டில் நிர்பந்த நிலையில் வட்டி சம்பந்தப்பட்ட வங்கிகளில் முஸ்லிம் கள் எப்படி தொடர்பு கொள்ளும் கட்டாயம் இருக்கிறதோ அது போன்ற தொரு கட்டாயம் இந்திய பொதுத் தேர்த லிலும் இருக்கிறது.

எனவே எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்று பார்க்காமல், நமது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் இருப்ப வர்களில் நல்லவர்களாகப் பார்த்து அவர் கள் சுயேட்சையாக நின்றாலும் சரியே, அவர்களுக்கு நமது வாக்குரிமையை அளித்து நமது வாக்குச்சீட்டை நமது விருப் பப்படி உபயோகித்து விடுவதே சாலவும் சிறந்தது. அல்லது தகுதியுடையவர்கள் எவருமே இல்லை என்று எண்ணத்தில் அந்த சீட்டு யாருக்கும் கிடைக்காத நிலையில் குறியிட்டு அதாவது உபயோகித்து நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

யாரும் தகுதியில்லை, யாருக்கும் நாம் வாக்களிக்க வேண்டாம் என்று நாம் வீட்டி லிருந்து கொண்டால் நமது வாக்குச் சீட்டு இருப்பவர்களிலேயே கடும் அயோக்கியர் களுக்கு கள்ள ஓட்டாகப் போடப்படும். மாபெரும் அயோக்கியர்கள்தான் கள்ள ஓட்டு கலாச்சாரத்தை ஊக்கப்படுத்து வார்கள். எனவே அதிகாலையிலேயே சென்று நமது ஓட்டை நாமே போட்டு கள்ள ஓட்டு கலாச்சாரத்திற்கு இடம் கொடுப்பதைத்  தவிர்க்க  வேண்டும்.

மற்றபடி, நமது பெயர் வாக்காளர் ஜாபிதாவில் இருக்கும் நிலையில் வாக்களிப் பதைத் தவிர்ப்பது தவறாகும். அதற்காக வாக்காளர் ஜாபிதாவிலிருந்து நமது வாக்கு ரிமையை நீக்கிக் கொள்ளுவதும் பெருந் தவறாகும். காரணம் இந்த நாட்டின் பிரஜை என்பதை இழப்பதற்கு அதுவே காரணமாகிவிடும். பம்பாயில் வாக்காளர் ஜாபிதாவில் பெயர் இல்லாத முஸ்லிம் களின் பிரஜா உரிமை சந்தேகிக்கப்பட்டு அவர்கள் பலவிதமாகக் கொடுமைப்படுத் தப்படுவதும், பம்பாயை விட்டு விரட்டப் படுவதும் நாடறிந்த உண்மை. அப்படிப் பட்ட நிலைக்கு முஸ்லிம்கள் ஆளாகக் கூடாது. எனவே ஏதாவதொரு வகையில் தங்களின் வாக்குரிமையை உபயோகித்து விட வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.

இந்திய முஸ்லிம்கள் அனைவரும் தங்க ளுக்கிடையேயுள்ள கருத்து வேறுபாடு களை மறந்து இந்த தேர்தல் சமயத்திலாவது ஒன்றுபட்டு ஒரே தலைமையில் செயல் பட்டு முஸ்லிம் ஆண், பெண் அனைவரின் ஒட்டுமொத்த வாக்குகளும் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கே கிடைக்கும் நிலையை தோற் றுவித்தால் முஸ்லிம்கள் ஆதரிக்கும் கட் சியே ஆட்சியைப் பிடிக்கும் என்பதில் சந் தேகமுண்டா? அப்படி முஸ்லிம்களின் ஒன்றுபட்ட நிலை மட்டும் ஏற்பட்டு விட் டால் எந்த அரசியல் கட்சியும் முஸ்லிம் களை இழிவாக நினைக்க முடியுமா? புறக் கணிக்க முடியுமா? முஸ்லிம்களின் உரிமை களைப் பறிக்க முற்படுமா? முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்படுமா? முஸ் லிம் பெண்கள் கற்பழிக்கபடுவார்களா? இன்று முஸ்லிம்கள் அனுபவித்துக் கொண் டிருக்கும் எண்ணற்ற துன்பங்களுக்கு ஒரு முடிவு காலம் ஏற்படுமா? இல்லையா? இந் திய நாட்டில் இன்று முஸ்லிம்கள் அனுப வித்து வரும் கொடுந்துன்பங்களுக்கு அடிப் படை காரணம் அவர்கள் பல பிரிவுகளாக வும், அமைப்புகளாகவும் பிரிந்திருப்பதே யாகும்.

சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழும் இந்த நாட்டில் அவர்கள் இப்படி துண்டு துண்டாகப் பிரிந்து கிடப்பது பெரும் சாபக்கேடாகும். தங்களுக்கிடை யேயுள்ள கருத்து வேறுபாடுகளை மூட் டைக் கட்டி வைத்துவிட்டு கலிமா சொன்ன வர்கள் அனைவரும் முஸ்லிம்கள், அவர்க ளுக்கு ஒரே இறைவன்; ஒரே வேதம்; ஒரே இறுதி நபி; ஒரே வாழ்க்கை நெறி; ஒரே தலைவர் என்ற உறுதியான எண்ணத்துடன் ஒன்றுபட வேண்டும். கேவலம் உலகத்தில் கிடைக்கும் அற்ப லாபங்களுக்காக முஸ் லிம் சமுதாயத்தை பலிகிடாயாக்கும் மனோ நிலை எந்த தலைவனுக்கும் இருக் கக்கடாது. அப்படி உலக ஆதாயத்திற்காக அலைந்து திரியும் தலைவர்களைப் புறக் கணிக்க வேண்டும். மக்களின் மனோ நிலைக்கு ஏற்றவாறு தாளம் போடும் தலை வர்களும் உண்மையான தலைவர்கள் அல்ல. அவர்கள் அற்ப உலக ஆதாயத்திற் காக மக்களைக் கவர அவர்களுக்கேற்ற வாறு  தாளம் போடுகிறார்கள்.

முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்காக சொந்த விருப்புவெறுப்புகளைத் தியாகம் செய்ய வேண்டும். அல்லாஹ்வின் கட்டளை களுக்கு அடிபணிவதை தங்களின் தலை யாய பணியாகக் கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்களின் அடிச்சுவற்றைப் பின் பற்றி தங்களின் வாழ்க்கையின் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஷைத்தான் இதற்கு மாற்றமாக மனோ இச்சைக்கு ஆட் பட்டு அற்ப உலக ஆதாயங்களைப் பெரி தாக எண்ணச் செய்வான். அவனது வலை யில் விழக்கூடாது.

அவன் நமது பகிரங்க விரோதி என்று அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் மிகத் தெளிவாக எச்சரித்திருப்பதை முஸ்லி மான ஒவ்வொரு ஆணும், பெண்ணும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்படி முஸ்லிம்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து அனைவரும் ஓரணி யில் ஒரே தலைமையில் ஒன்றுபட்டாலன்றி இந்திய நாட்டில் நாம் இழுத்துக் கொண்டி ருக்கும் சுதந்திரத்தையும், உரிமைகளையும் மீண்டும் அடைவது நடவாத காரியமாகும்.

முஸ்லிம்கள் ஒன்றுபடுவதே இன்று காலத்தின் கட்டாயமாகும். மற்றபடி அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதி களுக்கும் விரோதமாக கோ­ங்கள் போடுவதோ, இன்றைய நடைமுறையில் பே­னாகி விட்ட பந்த், சாலை மறியல், உண்ணாவிரதம், இன்னும் இவை போன்ற செயல்களால் சம்பந்தப்பட்டவர்கள் உலக ஆதாயம் அடையலாமே தவிர, முஸ்லிம் களுக்கு கடுகின் முனையளவும் ஆதாயம் கிடைக்கப் போவதில்லை. இவை அனைத் தும் இஸ்லாம் தெளிவாக மறுக்கும் தவறான அணுகுமுறையாகும்.

முஸ்லிம்களே பொறுப்புணர்ந்து ஓரணியில் ஒன்றுபட்டு ஒரே தலைமையில் இயங்க முன்வாருங்கள்!

——————–

பெண்களே! சொர்க்கம் செல்லவேண்டுமா…. 

அன்சர் ய­ரீப்பின் R.A. மாலிக் 

ஹஜ்ஜுப் பெருநாளன்றோ, நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி (ஸல்) அவர்கள் சென்றுபெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்!’ ஏனெனில் நரகவாசிகளில் அதிகமாக இருப்பது நீங் களே என எனக்கு காட்டப்பட்டது என்று கூறினார்கள். “இறைத் தூதர்(ஸல்) அவர் களே! ஏன் என்று அப்பெண்கள் கேட்ட தற்கு, நீங்கள் அதிகமாக சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக் கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக, உங்களைவிட வேறு யாரையும் நான் காணவில்லை என்று இறை தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது இறை தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும், எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன? என்று பெண்கள் கேட்டனர்? “ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்குஆம்என அப்பெண் கள் பதில் கூறினர். அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டு கிறது. ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும், நோன்பையும் விட்டுவிடுவதில்லையா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும், “ஆம்எனப் பெண்கள் பதில் கூறினர். “அது தான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறை வானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்என்று நபி(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீதுல் குத்ரி(ரழி) அறிவித்தார். புகாரி: 304.

இதே ஹதீதைப் பற்றி அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அவர்கள் அறிவித்தார். முஸ்லிம்132.

பெண்களே! நீங்கள் அதிகமாக நரகத் தில் இருப்பதாக காட்டப்பட்டதாக நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள். எனவே நீங்கள் உங்கள் கணவரிடம் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள். அவருக்கு சிறந்த முறையில்  பணிவிடை  செய்யுங்கள். 

உங்கள் கணவர் ஒரு காரியத்தை செய்ய உங்களிடம் கலந்து ஆலோசித்தால், அதன் நிறை மற்றும் குறைகளை அவருக்கு எடுத்து கூறி சிறந்த ஆலோசனை கூறுப வராக இருங்கள். அதை விட்டுவிட்டு, அவரிடம் உங்கள் கருத்தே சரியானது என்று அவரிடம் வாதிட்டு அவரை அவரின் காரியத்திலிருந்து  மாற்றிவிடாதீர்கள்.

ஒரு நல்ல கணவன் தன் மனைவி மற்றும் தன் பிள்ளைகளை நினைத்தே வாழ்கிறான். அவர்களின் தேவைகளுக்கா கவே தன் வாழ்நாள் முழுவதும் செலவிடு கிறான், உங்களுக்காகவே உழைக்கிறான். தன் தேவைகளை குறைத்துக்கொண்டு உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறான் என்பதை மறந்துவிடாதீர்கள். அப்படி இருந்தும் இவரைக் கட்டிக்கொண்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன் என்று கூறுபவர்களும் உங்களில் இருக்கிறார்கள். எனவே எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவீராக! பெண்களே அதிக அதிகமாக தர்மம் செய்வீராக! இன்ஷா அல்லாஹ்! இனிவரும் காலங்களி லாவது கணவனிடம் நல்ல முறையில் நடந்துகொள்ள  முயற்சி  செய்வோமாக!

 

Previous post:

Next post: