அறிந்து கொள்வோம்! 

in 2023 செப்டம்பர்

அறிந்து கொள்வோம்! 

மர்யம்பீ, குண்டூர்

1. எந்த சமுதாயத்தின் மீது அல்லாஹ் கல் மழை  பொழிந்தான்?

லூத் நபி சமுதாயத்தின் மீது.  (அல்குர்ஆன் 27:52)

2. பூமியில் பணிவுடன் நடப்பவர்கள் யார் என அல்லாஹ்  கூறுகிறான்?

அர்ரஹ்மானின்  அடியார்கள்தான்.  (அல்குர்ஆன் 25:63)

3. நூஹ் நபியின் மகனைப் பற்றி அல்லாஹ் எவ்வாறு  கூறுகிறான்?

நிச்சயமாக அவன் உனது குடும்பத்தை சேர்ந்தவனில்லை.  (அல்குர்ஆன் 11:4)

4. உம்மி என்று யாரை அல்லாஹ் கூறுகிறான்?

எழுத்தறிவற்றவர்களை.  (அல்குர்ஆன் 2:78)

5. இந்த குர்ஆன் யாருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்? 

நம்பிக்கை  கொள்ளும்  சமூகத்திற்கு.  (அல்குர்ஆன் 7:52)

6. சூனியக்காரர்கள் யாரை நம்பிக்கை கொண்டோம்  என்று  கூறினர்?

ஹாருன் மற்றும் மூஸாவின் இரட்சகனை.  (அல்குர்ஆன் 20:70)

7. எந்த நபிக்கு மலைகளை வசப்படுத்திக் கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான்?

தாவூத்  நபிக்கு. (அல்குர்ஆன் 38:18)

8. முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பணி பற்றி அல்லாஹ்  எவ்வாறு  கூறுகிறான்?

நீர் எச்சரிக்கை  செய்பவரேயன்றி  வேறில்லை.  (அல்குர்ஆன் 35:23)

9. எவைகள் சமமாகாது என அல்லாஹ் கூறுகிறான்?

இருளும்ஒளியும்.  (அல்குர்ஆன்35:20)

10. நம்பிக்கை கொண்டவர்களின் சப்தம் எவ்வாறு இருக்க வேண்டும் என அல்லாஹ்  கூறுகிறான்?

நபியின்  சப்தத்தற்கு  மேல்  உயர்த்தக் கூடாது.  (அல்குர்ஆன் 49:2)

11. நபி(ஸல்) அவர்களை எந்த நாளை எதிர்பார்க்க  கூறுகிறான்?

வானம் தெளிவான புகையை கொண்டு வரும் நாளை.  (அல்குர்ஆன் 44:10)

12. பிர்அவ்னின் கூட்டத்தாரை எதைக் கொண்டு சோதித்ததாக அல்லாஹ் கூறுகிறான்?

பஞ்சம்,  விளைச்சலில்  குறைவைக்  கொண்டு.   (அல்குர்ஆன் 7:130)

13. ஷிஐப் நபியை பின்பற்றாதவர்களுக்கு எவ்வாறு தண்டனை தந்ததாக அல்லாஹ்  கூறுகிறான்?

பூகம்பத்தால்  பாரீய  நிலநடுக்கத்தால்.  (அல்குர்ஆன்7:91)

14. நல்ல கனவு யாரிடமிருந்து வரும் என நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள்?

அல்லாஹ்விடமிருந்து. புகாரி : 6984

15. பேரீச்சை பழத்திற்கு எது கிடையாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

வாசனை. முஸ்லிம் 1461

16. அரேபியர் சொன்ன சொற்களில் மிகவும் சிறந்தது எது என நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்? 

அல்லாஹ்வை தவிர அனைத்தும் அழியக் கூடியவையே. (முஸ்லிம்: 4542)

17. நேரத்தோடு ஜும்ஆவுக்கு வருபவரது நிலை பற்றி நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு கூறினார்கள்?

முதலில் வருபவரது நிலை. ஒட்டகம் குர்பானி தந்த  நிலை. (புகாரி: 929)

18. தேங்கி நிற்கும் நீரில் எதை செய்ய நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்?

சிறுநீர் கழிப்பதையும், பின் குளிப்பதையும் தடுத்தார்கள்.  (முஸ்லிம் : 475)

19. எதை தர்மம் செய்வது சிறந்தது என நபி (ஸல்) அவர்கள்  கூறினார்கள்?

தேவைக்கு போக  எஞ்சியதை.  (புகாரி: 5356)

20. யாசகம் கேட்பதை விட சிறந்தது எது என  நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்?

விறகு  கட்டை  முதுகில் சுமந்து  விற்று  வாழ்வது. (புகாரி: 2374)

Previous post:

Next post: