இறைவனுக்கு எதிராகவே சூழ்ச்சி செய்ய நினைக்கும் இறைமறுப்பாளர்கள்!

in 2023 செப்டம்பர்

இறைவனுக்கு எதிராகவே சூழ்ச்சி செய்ய நினைக்கும் இறைமறுப்பாளர்கள்!

பிரித்தாளும் சூழ்ச்சி கொண்டு, மக்களை பல பிரிவுகளாக பிரித்து அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்த ஃபிர்அவ்ன் தன்னுடைய ஆளுமைக்குட்பட்ட நிலத்தில் பிறக்கப்போகும் ஆண் குழந்தையால்தான் தனக்கு முடிவு காத்திருக்கிறது என்பதை ஜோதிடர்கள் சொல்லக் கேட்டு, அதைத் தடுப்பதற்கு அவன் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் விழலுக்கிறைத்த நீராகி போன சரித்திரம்  இவர்களுக்கு  தெரியாதா?

சிந்தித்து  பார்க்க  வேண்டாமா?

இறை நிராகரிப்பாளர்கள் உங்களை ஒழித்துக் கட்டுவதற்காக எப்படியயல்லாம் சூழ்ச்சி பண்ணிக் கொண்டிருந்தார்கள்? அவர்களும் சூழ்ச்சி பண்ணுகிறார்கள், இறைவனும் சூழ்ச்சி பண்ணினான். சூழ்ச்சி பண்ணுவதில் இறைவன் கைதேர்ந்தவன். எல்லோரையும் மிகைத்தவன் என்பதை யயல்லாம் (இவர்களுக்கு) எடுத்துச் சொல்லுங்கள்.    (இறைநூல்  8:30)

அவர்களும் விதவிதமாகத்தான் சூழ்ச்சி பண்ணிப் பார்த்தார்கள். அவர்களுடைய சூழ்ச்சி, மலைகளையே பெயர்த்துவிடக் கூடியவையாக இருந்தாலும் அவர்களுடைய ஒவ்வொரு சூழ்ச்சியையும் முறியடிக்கும் சூழ்ச்சி இறைவனிடம் இருந்தது. (இருக்கிறது).
(
இறைநூல் : 14:46)

இறைவன் அவர்கள் செய்த சூழ்ச்சியை அடியோடு பெயர்த்தெடுத்து அவர்களின் தலை மீதே விழ வைத்ததையும், அவர்கள் சுதாரிக்கும் முன் நினைத்துக் கூடப் பார்க்காத திசையிலிருந்து அவர்களுக்கு தண்டனை வந்ததையும்  எடுத்துச்  சொல்லுங்கள்.    (இறைநூல் : 16:26)

இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இப்படித்தான் சூழ்ச்சி பண்ணிக் கொண்டிருந்தார்கள்.    (இறைநூல் : 13:42)

உங்களை ஒழித்துக் கட்டுவதற்கு என்னென்ன தில்லுமுல்லுகளைக் கையாள வேண்டுமோ அத்தனை தில்லுமுல்லுகளையும் அவர்கள் கையாண்டார்கள். கடைசியில் அவர்கள் விரும்பாத நிலையில்தான் (அவர்கள் பார்த்துக்கொண்டே இருக்கும் போதேதான்) இறைவனின் சத்திய மார்க்கம்  வந்தது, வெற்றி  வாகை சூடியது.  (இறைநூல் : 9:48)

அவன்தான் தன்னுடைய தூதரை வழிகாட்டுதலோடு சத்திய மார்க்கத்தோடு அனுப்பிவைத் தான். இணை வைத்து வணங்குபவர்கள் (அதை) வெறுத்தாலும் சரி (உலகத்திலுள்ள மற்ற) எல்லா மார்க்கங்களையும் அந்த சத்திய மார்க்க(மான இஸ்லா)ம் விழுங்கும்படி செய்வான்.  (இறைநூல் : 9:33)

இறைவன் பூமியை (உருண்டையாக சுருட்டி அதன் கிழக்கு பகுதிகளும் மேற்கு பகுதிகளும் எனக்குத் தெரியுமாறு காட்டினான். எனக்கு காட்டப்பட்ட இடங்கள் வரை என் சமுதாயத்தின ரின் ஆட்சி பரவும் என்று இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.   ஆதாரம்: முஸ்லிம் : 5538

இறைவன் தன்னுடைய திட்டம் என்ன? என்பதை தன் தூதர்(ஸல்) அவர்களின் வாயிலாக முன்னறிவிப்புச்  செய்திருக்கிறான். 

உலகம் முழுவதும் உள்ள தங்களின் கூட்டாளிகளை இவர்கள் சேர்த்துக் கொள்ளட்டும் சூழ்ச்சி பண்ணட்டும், முடிந்தால், இதை  தடுத்து  நிறுத்தட்டும்.

அறிந்து கொள்ளுங்கள் சூழ்ச்சி பண்ணுவதில் இறைவன் கை தேர்ந்தவன்.

அவர்கள் இறைவனின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்துவிட நாடுகின்றனர். ஆனால் இறை மறுப் பாளர்கள் வெறுத்த போதிலும், இறைவன் தன் ஒளியைப் பூரணமாக்கியே  வைப்பான்.    (இறைநூல்: 61:8)

இன்றைய தினம் ஏக இறைமறுப்பாளர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்துவிடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீராக; இன்றைய  தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டுவிட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக இறைவன் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.       (இறைநூல்: 5:3)

(இறை நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்றுவிடாதீர்கள்; எவர்கள் இறைவன் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக இறை மறுப்பாளர்கள் தாம்.     (இறைநூல்: 5:44)

இறைவன் இறக்கி வைத்ததை முஸ்லிம்கள் ஒற்றுமையாக இணைந்து பற்றி பிடிக்காமல் இருக்கும்வரை  இறைவனின்  உதவி  தூரம்தான்.

Previous post:

Next post: