அறிந்து கொள்வோம்!

in 2023 நவம்பர்

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்

  • துல்கர்னைன் சூரியன் மறையும் இடத்தை அடைந்தபோது எதைக் கண்டார் என அல்லாஹ் கூறுகிறான்?  

கருப்பு  நிற  சேற்று  நீரில்  சூரியன்  மறைவதைக்  கண்டார்.    (அல்குர்ன் 18:86)

  • எவர் தனது இரட்சகனின் சந்திப்பை ஆதரவு வைக்கிறாரோ அவர் என்ன செய்ய வேண்டும்?
    அவர்  நல்லறங்கள்  செய்யவேண்டும்.    (அல்குர்ஆன்  18:110)
  • ஸகரிய்யா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்திய அடையாளம் என்ன’?

எவ்வித குறையும் இல்லாது நீர் இருந்தும் மூன்று இரவுகள் மனிதர்களுடன் பேச முடியாமல்  இருப்பது.    (அல்குர்ஆன்  19:10)

4. மர்யம் (அலை)  முன்  ஜீப்ரயீல்(அலை)  எவ்வாறு  தோற்றமளித்தார்?

நேர்த்தியான  ஒரு மனிதராக  தோற்றமளித்தார்.   (அல்குர்ஆன்  9:17)

5. சூர் ஊதப்படும் நாளில் குற்றவாளிகள் பூமியில் எத்தனை நாட்கள் தங்கியிருந்ததாக பேசிக் கொள்வார்கள்? ]

பத்து  நாட்கள்.    (அல்குர்ஆன்  20:103)

6. காருன்  எந்த  சமூகத்தை  சார்ந்தவனாக  இருந்தான்?

மூஸா(அலை) அவர்களின்  சமூகத்தை.    (அல்குர்ஆன் 28:76)

7. நபிமார்களின்  பெயரால்  எத்தனை  சூராக்கள்  இருக்கின்றன?

6 சூராக்கள்.   (அத்தியாயம்: 10,11,12,14,47,71)

8.  துல்கர்ணன்  மக்களிடம்  எந்தவிதத்தில்  உதவி  வேண்டினார்?

   உடல்  பலத்தால்  எனக்கு  உதவுங்கள்.   (அல்குர்ஆன்  18:95)

9.  நபியின்  மனைவியரை  எவ்வாறு  நடந்துகொள்ள  அல்லாஹ்  அறிவுறுத்தினான்?

யாரிடமும்  குழைந்து  பேசகூடாது.    (அல்குர்ஆன்  33:32)

10. பிலால்(ரழி) அவர்களை அடிமைத் தனத்திலிருந்து  மீட்டவர்  யார்?

அபூ  பக்கர்  ஸித்திக்(ரழி)  அவர்கள்.

11. துல்கர்னைன் இரு மலைகளுக்கு இடைப்பட்ட இடத்தை அடைந்த போது எதனைக் கண்டார்  என  அல்லாஹ்  கூறுகிறான்?

பேச்சை  விளங்கி  கொள்ளாத  கூட்டத்தாரைக்  கண்டார்.   (அல்குர்ஆன் 18:93)

12. ஸகரிய்யா(அலை) தம் சமூகத்திடம் அல்லாஹ்வை துதி செய்யுங்கள் என்று எவ்வாறு  தெரிவித்தார்? 

சைகை  மூலம்  தெரிவித்தார். (அல்குர்ஆன் 19:11)

13. மர்யம் (அலை) மனிதர்களை கண்டால் என்ன கூறவேண்டும் என்று அல்லாஹ் கூறினான்?

அர்ஹர்மானுக்காக மெளனம் அனுஷ்டிக்க நேர்ச்சை வைத்துள்ளேன் எந்த மனிதருடனும் பேசமாட்டேன்  என்று  சைகை  மூலம்.   ( அல்குர்ஆன் 19:26)

14. சூர் ஊதப்படும் நாளில் மக்கள் எந்த ஓசையை மட்டும் செவியுறுவார்கள்?

காலடி   ஓசை.    (அல்குர்ஆன் 20:108)

15. காருனை  அல்லாஹ்  எவ்வாறு  தண்டித்தான்?

பூமிக்குள்  விழுங்கச்  செய்து.   (அல்குர்ஆன்  28:81)

16. நபியின் மனைவியர் நல்லறங்கள் புரிந்தால் அல்லாஹ் எவ்வாறு கூலி வழங்குவான்?

இரு   தடவை.   (அல்குர்ஆன் 33:31)

17. கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் செல்லும் 70 ஆயிரம் நபர்களில் உள்ளவராக யாரை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்?

உக்காஷா  இப்னு  மிஹ்ஸன்(ரழி).  புகாரி : 5705

18 .உமர்(ரழி) அவர்கள் மனமாற்றம் பெற்றிடுவதற்கு காரணமான அல்குர்ஆனின் சூரா  எது?

தாஹா.   அத்தியாயம் : 20

Previous post:

Next post: