அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்!
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
2025 மார்ச் மாத தொடர்ச்சி…
மதீனாவாசிகளுக்கும் அங்கு குடியேறிய யூதர்களுக்கும் சண்டை மூளும்போது “கடைசி காலத்தில் ஒரு நபி வருவார்” அவருடன் சேர்ந்து நாங்கள் உங்களைக் கடுமையாகக் கொலை செய்வோம்” என்று அந்த யூதர்கள் மதீனாவாசிகளைப் பார்த்துக் கூறுவார்கள். இவ்வாறு யூதர்கள் கூறுவதைப் பலமுறை மதீனாவாசிகள் கேட்டிருக்கின்றார் கள். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம் 178)
நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு விட்டதாகக் கேள்விப்பட்டு ஒவ்வொரு நாள் காலையிலும் மதீனாவின் எல்லைக்கு வந்து நண்பகலின் சூடு வெப்பம் அவர்களைத் திருப்பி அனுப்பும் வரையில் நபியவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள், அப்படி ஒருநாள் நீண்ட நேரம் எதிர்பார்த்துக் காத்தி ருந்துவிட்டு ஊருக்குள் திரும்பியபோது “யூதர்களில்” ஒருவர் அவர்களது உயரமான கோட்டை ஒன்றின் மீது எதையோ ஒன்றைப் பார்ப்பதற்காக ஏறிய வேளையில் நபி(ஸல்) அவர்களும், தோழர்களும் வெண்ணிற ஆடை களில் கானல் நீர்களின் மத்தியில் வெளிப்பட்டு வருவதைக் கண்ட மாத்திரத்தில் அந்த யூதரால் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் உரத்த குரலில் “ஓ அரபுகளே! இதோ நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பாக்கியம் பெற்ற அந்த அருட்கொடை நாயகர்” என்று கூவி அழைத்தார். (உர்வா இப்னு ஜுபைர்(ரழி), புகாரி:3906, அர்ரஹீக் அல்மக்தூம் 215)
யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் மத்தியில் செய்துகொண்ட உடன்படிக்கையில், நஷ்ட ஈடு கொடுக்கும் விசயத்தில் முஸ்லிம்களுக்கு யூதர்கள் உதவி செய்ய வேண்டும் என்பதும் ஒன்றாகும். ஆனால் “அம்ர் இப்னு உமையா ழம்ரி” என்ற தனது தோழரால் தவறு தலாகக் கொல்லப்பட்ட கிலாப் குலத்தவர்களின் குடும்பத்தவர்களுக்குக் கொடுக்க வேண்டிய நஷ்ட ஈடு தொடர்பாக நழீர் இனத்து யூதர்களுடன் நபி(ஸல்) அவர்கள் பேச வந்தபோது யூதர்கள் தங்களுக்குள் தனிமையில் சந்தித்து உடன்படிக்கையை உடைத்து நபி(ஸல்) அவர்களை வஞ்சகமாகக் கொல்வதற்குத் திட்டம் தீட்டினார்கள். அதற்காக ஆயத்தமானார்கள், ஆனால் “ஸலாம் இப்னு மிஷ்கம்” எனும் யூதர் “அவ்வாறு செய்ய வேண்டாம்” என்று தடுத்து “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் தீட்டும் திட்டமானது அவருக்கு அறிவிக்கப்பட்டு விடும். அது நமக்கும் அவருக்கு மிடையில் உள்ள உடன்படிக்கையை முறிப்பதாகி விடும்” என்று எச்சரித்தார். (அர்ரஹீக் அல்மக்தூம் 359)
இரண்டு யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து: நபி மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய பத்து கட்டளைகள் குறித்து வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அந்த பத்து கட்டளைகள் குறித்தும் வரிசைக் கிரமமாகக் கூறி முடித்தார்கள். இவ்வாறு நபியவர்கள் விடையளித்ததும் அந்த யூதர்கள் இருவரும் நபி(ஸல்) அவர்களின் கைகளையும், கால்களையும், முத்தமிட்டுவிட்டு “நீங்கள் நபிதான் என நாங்கள் உறுதிமொழிகிறோம்” என்றார்கள். ஆனாலும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை. (ஸஃப்வான் பின் அஸ்ஸால்(ரழி), திர்மிதி, 2733, இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத், ரியாளுஸ் ஸாலிஹீன்:889, தஃப்ஸீர் இப்னு கஸீர்: 5:358,359)
பணூ குரைளாவினர் முற்றுகையிடப்பட்டிருந்தபோது முஸ்லிம்களின் முற்றுகை கடுமையாக இருந்ததைக் கண்ட குரைளாவினரின் யூதத் தலைவன் “கஅப் இப்னு அஸது” தனது மக்களிடம், நாம் அனைவரும் முஸ்லிமாகி முஹம்மதுடைய மார்க்கத்தில் சேர்ந்தால் மாத்திரமே நாம் நமது உயிர், பொருள், உடமைகள், பிள்ளைகள், பெண்கள், அனைவரையும் பாதுகாத்துக் கொள்ளலாம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக முஹம்மது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட தூதர்தான் என்பதும் அவரைப் பற்றித் தவ்ராத்தில் கூறப்பட்டிருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியும் என்று கூறினார்.
(இப்னு ஹிஸாம், அர்ரஹீக் அல்மக்தூம் 384)
ஒருமுறை யூதர் ஒருவருக்கும் அன்சாரித் தோழர் ஒருவருக்கும் இடையே ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அப்போது அந்த யூதர் “நாம் முஹம்மதிடம் செல்வோம்; அவரே! நமக்குத் தீர்ப்பு வழங்கட்டும் என்று கூறினார். (தஃப்ஸீர் இப்னு கஸீர்: 2:600) எனினும் அவர்களில் ஒருசிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் முகம்மத்(ஸல்) அவர்களை ஏற்றுக்கொள்ளவில்ல. அதனையே அல்லாஹ்; பின்வரும் இறை வசனத்தில்;
நாம் யாருக்கு இறைநூலை வழங்கினோமோ அவர்கள், தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் (நன்கு) அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர். (2:146, 7:157, 48:29,61:6, புகாரி: 3745, 4380, 4381, 7554, 4958, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, தஃப்ஸீர் இப்னு கஸீர் 2:112-118) என்று குறிப்பிடுகின்றான்.
அறிந்துகொண்டே இறைத்தூதருக்குத் தொல்லை கொடுத்தார்கள்:
“என் சமுதாயமே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர் என்பதை அறிந்து கொண்டே ஏன் எனக்குத் தொல்லை தருகிறீர்கள்?” என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக. அவர்கள் தடம் புரண்டபோது அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தடம் புரளச் செய்துவிட்டான். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். (61:5)
அறிந்துகொண்டே உண்மையை மறைக்கின்றார்கள்:
அறிந்துகொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்! (2:42)
அறிந்துகொண்டே அவர்கள் பொய்யை இட்டுக்கட்டிக் கூறுகின்றார்கள்.
அறிந்துகொண்டே அவர்கள் பொய்யை இட்டுக்கட்டிக் கூறுகின்றார்கள். (3:75)
அறிந்துகொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்கின்றார்கள்:
அறிந்துகொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்! (2:42)
அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றார்கள்:
வேதமுடையோரே! உண்மையை ஏன் பொய்யுடன் கலக்கின்றீர்கள்? அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கின்றீர்கள். (3:71)
அறிந்துகொண்டே பொய்ச் சத்தியம் செய்கின்றார்கள்:
அல்லாஹ் யார்மீது கோபம் கொண்டுள்ளானோ அந்தச் சமுதாயத்தை உற்ற நண்பர்களாக்கிக் கொண்டோரை நீர் அறியவில்லையா? அவர்கள் உங்களைச் சேர்ந்தோரும் அல்லர். அவர்களைச் சேர்ந்தோரும் அல்லர். (அவர்கள் நன்கு) அறிந்துகொண்டே பொய்ச் சத்தியம் செய்கின்றார்கள். (58:14)
அறிந்து கொண்டே சத்தியத்தை மாற்றிவிட்டார்கள்:
அவர்கள் (இஸ்ரவேலர்கள்) உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்துகொண்டே அதை மாற்றிவிட்டார்கள். (2:75)
அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக வேறு கடவுளை கற்பனை செய்கின்றார்கள்:
அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன்மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள். (2:22)
அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுகின்றார்கள்:
அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். இறைநூலில் இல்லாததை இறைநூல் என்று நீங்கள் நினைக்கவேண்டும் என்பதற்காக இறைநூலை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது” எனவும் கூறுகின்றனர். அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. “அறிந்துகொண்டே அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுகின்றனர்” (3:78)
அவர்களுக்குத் தடை செய்யப்பட்ட கொழுப்பை உருக்கி நெய்யாக விற்றார்கள்:
யூதர்களை அல்லாஹ் சபிப்பானாக! அவர்களை அழிப்பானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்டிருந்தபோது அதனை உருக்கி(நெய்யாக) விற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), அபூஹுரைரா(ரழி), ஜாஃபிர் (ரழி), புகாரி: 2223, 2224, 2236, 3460, முஸ்லிம்: 3223, 3224, 3225, 3226)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “மகாமு இப்ராஹீம்” என்ற இடத்திற்குப் பின்னால் அமர்ந்திருந்தார்கள். அப்போது வானத்தைப் பார்த்து “அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக” என மூன்று முறை கூறினார் கள். பின்னர் “”அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பைத் தடை செய்திருந்தான் (ஆனால்) அதை (உருக்கி நெய்யாக) விற்று அதன் கிரயத்தை அவர்கள் உண்டார்கள். அல்லாஹ் ஒன்றை உண்பதற்குத் தடை செய்தால் அதன் கிரயத்தையும் தடை செய்யாமல் இருப்ப தில்லை என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரழி), அபூதாவூத், முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர் தபரீ, இப்னு கஸீர் : 3:640,641)
ஒட்டு முடியாலான சவுரி வைத்துக்கொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்:
“பனூ இஸ்ரவேலர்களான, யூதர்களை அல்லாஹ் சபிப்பானாக! அவர்களுடைய பெண்கள் தான் முதன் முதலாக ஒட்டு முடியாலான சவுரி வைத்துக்கொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். அதனால் அல்லாஹ் அவர்களை சபித்துத் தனது கருணையிலிருந்தும் அப்புறப்படுத்தியதால் அழிந்து போனார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஆவியா(ரழி), முஆவியா பின் அபீ சுஃப்யான்(ரழி), அபூஹுரைரா(ரழி), இப்னு உமர் (ரழி), ஆயிஷா(ரழி), அஸ்மா பின்த் அபீபக்கர்(ரழி), புகாரி: 3468,3488,4887,5205,5932-5942, 5943,5947, முஸ்லிம்: 4313, ஃபத்ஹுல் பாரீ, உம்தத்துல் காரீ)
உபதேசத்தை விட்டும் எங்களது உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன என்றார்கள்:
“எங்களது உள்ளங்கள் மூடப்பட்டுள் ளன” என்று அவர்கள் கூறினார்கள். (4:155, 2:88, 41:5) என்பதற்கு நபி(ஸல்) அவர்களது காலத்திலும் வாழ்ந்த யூதர்களிடம் “இறை மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறப்பட்ட போதும் அவர்கள் குதர்க்கமாக; எங்களது உள்ளங்களுக்கு மூடி போடப்பட் டுள்ளது. அவை முத்திரை இடப்பட்டுள்ளன. எனவே எதையும் புரிந்துகொள்ளாது, என்றும், எங்களது உள்ளங்கள் இறைத்தூதர் சொல்கின்ற எதையும் உள்வாங்காது; ஏனெனில் அவை உறைக்குள்ளும், திரைக்குள்ளும் இருக்கின்றன என்று அவர்கள் கூறினார்கள் என்பதாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும் (41:5, 4:155, 2:88) அந்த உள்ளங்களின் மீது திரை விழுந்து கிடக்கிறது என்பதாக முஜாஹித் (ரஹ்) அவர்களும், “அவற்றின் மீது உறை உள்ளது. அதுவே அவற்றுக்கு மூடியாகும். எனவே அவை எதையும் விளங்காது எதையும் தக்கவைத்துக் கொள்ளாது” என்பதாக சுத்தீ (ரஹ்) அவர்களும், “”எனது உள்ளம் உறைக்குள்ளே கிடக்கிறது. எனவே நீ என்ன கூறினாலும் அது ஏறவே ஏறாது” (41:5) என்பதாக அப்துர் ரஹ்மான் பின் ஸைத்(ரஹ்) அவர்களும், எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டுள்ளது என்பதாக இப்னு ஜரீர்(ரஹ்) அவர்களும், எங்கள் உள்ளங்கள் அறிவுப்பாத்திரங்கள் ஆகும். அவை ஏற்கனவே பூரண அறிவைப் பெற்று நிரம்பிவிட்டது. எனவே நீர் சொல்வதைக் கேட்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று அவர்கள் கூறுவதைக் கேட்கவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை என்று வாதிட்டார்கள்; என்பதாகச் சிலரும் விளக்கம் அளித்துள்ளார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர் 1:293-295, 2:787-789) இதனால், “அவர் களின் உள்ளங்களின் மீதும், செவியின் மீதும், பார்வைகளின் மீதும் அல்லாஹ் முத்திரை இட்டான்” (16:107,108)