சும்மா கிடைக்குமா சொர்க்கம்!
K. ரஹீமுத்தீன், குண்டூர்
மறு பதிப்பு :
அன்பு இஸ்லாமிய ஈமான் கொண்ட தோழர்களே, தோழியர்களே! அல்லாஹ் தனது திருகுர்ஆனில் உங்களில் சிலரைச் செல்வம் கொடுத்து சோதனை செய்வோம். (அத்தியாயமும் வசனமும் 3:186, 5:48, 6:165, 8:28,29) இதுபோன்ற சோதனைகளை உங்களுக்கு முன்பிருந்த சமுதாயத்திற்கும் செய்துள்ளோம், நபிமார்களுக்கும் செய்துள்ளோம். இப்படி சோதனை செய்து இச்சோதனையில் வெற்றி பெற்றவர்களுக்கு, வெற்றி பெறப் போகிறவர்களுக்கு மட்டுமே தன்னுடைய வாக்குறுதியின்படி சொர்க்கம் தரப்படும் என்று நன்றாக தெரிந்தும் இம்மை மீது ஆசை கொண்ட மெத்தப் படித்த 80% (பேர்) ஆலிம்கள் தங்களது வருமான சொற்பொழிவுகளில் “லாஇலாஹ இல்லல்லாஹ்” என்று கூறினால் சொர்க்கம் செல்லலாம், மற்றும் ரமழான் மாத 27ம் நாள் இரவில் தொழுதால் 1000 மாதங்களின் இபாதத்திற்குச் சமமாகிவிடும். (அதாவது நீங்கள் 83 வருடம் இபாதத் செய்யாவிட்டாலும்) இந்த லைலத்துல் கத்திரின் 27ம் நாள் இரவில் தொழுதால் கிடைத்துவிடும் என்று மக்களை மற்ற இபாதத்களின் பக்கம் வரவிடாமல் தங்களது பொய்ப் பிரசாரத்தின் மூலம் கிடைக்கும் சில அற்பத் தொகைகளைப் பெற்று தங்களது வயிற்றில் நரக நெருப்பைக் கொண்டு நிரப்பு கிறார்கள். இதற்கு பள்ளி நிர்வாகிகளும் துணை போகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டு இந்த நாளை கூறவில்லை. மாறாக ரமழானின் கடைசி 10 இரவுகளின் ஒற்றைப் படை இரவுகளில் தேடிக்கொள்ளுங்கள் என்று மட்டுமே கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி 3வது வால்யூம் பக்கம் 102,103 வரிசை எண்: 939) ஆனால் மவ்லவிகளும் நிர்வாகி களும் நபி(ஸல்) அவர்களின் கட்டளையினை மீறி செயல்படுவதுடன் நல்ல ஈமான் கொண்ட முஸ்லிம்களின் வாழ்வையும் பாழ்படுத்தி வருகின்றனர். ஆகவே ஈமான் கொண்ட முஸ்லிம்கள் தயவு செய்து சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே சொர்க்கம் உண்டு.
உதாரணம்: கேவலம் இந்த தற்காலிக இம்மை வாழ்க்கைக்காக உழைக்கும் உங்களுக்கு வருடம் முழுவதும் சரியாக வேலைக்கு வந்த வர்களின் நிலைக்கு தக்கவாறு வருடக் கடைசி யில் ஒரு கம்பெனியின் முதலாளி போனஸ் தருவது போல், அல்லாஹ்வும் ஒவ்வொரு மூமினும் இணைவைக்காத இறையச்சத்துடன், வருடம் முழுவதும் தொழுகை, ஜகாத், பொறுமை போன்ற ஹலாலான விசயங்களை எடுத்து, ஹராமான விசயங்களை தவிர்த்து அல்லாஹ்வும், அவனது ரசூலும் கூறியதை மட்டுமே எடுத்து நடந்தால் மட்டுமே ரமழானின் கடைசி 10ன் ஒற்றைப்படை இரவின் பலன் (போனஸ்) கிடைக்கும். ஆகவே மக்களே மெத்தப் படித்த ஆலிம்களின் வசூல் பயான்களை கேட்டு தொழுகையை விட்டு மற்றும் இஸ்லாமிய ரீஅத்திற்கு எதிராகச் செயல்பட்டு தங்களது நிரந்தர வாழ்க்கையின் இடமான சொர்க்கத்தை இழந்து நரகம் சென்றுவிடாதீர்கள்.
தாங்கள் அனைவரும் ஜுமுஆ பயானில் மெத்தப் படித்த ஆலிம்கள் அல்லாஹ்வையும், கண்மணி நாயகம் எங்களது ரசூல்(ஸல்) அவர்கள் என ஆரம்பிப்பார்கள். ஆனால் நடை முறையில் ஒரு செயலும் செய்வதில்லை. உதாரணமாக தையல்கலை வல்லுனர்கள் கூலி வாங்கி கொண்டு சட்டை தைத்து கொடுத்து விடுகிறார். நாம் கொடுக்கும் துணியில் சிறிதும் எடுக்காமல் சரியாக தைத்து கொடுக்கிறார். கூலி வாங்கியதற்கு அவர் நமக்காக வேலை செய்வார். அவருக்கு சட்டை அவர்தான் தேடிக்கொள்வார். அதேபோல் பள்ளியின் இமாம் கூலி வாங்கிக் கொண்டு ஜமாத்தார்களுக்கா பர்ளு தொழுகை நடத்திவிட்டார்.
ஆனால் அவருக்காக பர்ளு தொழுகை எங்கே தொழுதார்? ஆகவே நாம் சிந்தித்து நிரந்தரத் தங்கும் இடமான சொர்க்கத்திற்கு செல்ல அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறிய அனைத்தையும் செயல்படுத்திட உங்களுக்கும் எனக்கும் ஈமான் கொண்ட அனைவருக்கும் அல்லாஹ் அருள் வழங்கிட துஆ செய்த வண்ணம் இருக்கிறேன். இதில் ஏதேனும் அல்குர்ஆன் மற்றும் சஹீஹ் ஹதீஃத்களுக்கோ மாற்றமாக இருப்பின் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டவும் திருந்துகிறேன், திருத்திக் கொள்கிறேன்.
தியாகம் செய்யாமல் கிடைக்காது சொர்க்கம். உதாரணம் : நபி(ஸல்) அவர்களும், நபி (ஸல்) அவர்களின் உயிர்த் தோழரும் மாமனாரும் ஆகிய அபூபக்கர் சித்திக்(ரழி) ஆகிய இருவரும், தங்களது ரத்தம் சம்பந்தப்பட்ட உறவுகளையும் தாங்கள் பிறந்த ஊரையும் விட்டு, அல்லாஹ்வின் கட்டளைப்படி மக்காவை விட்டு, முஸ்லிம்களின் விரோதிகளுக்கு தெரியாமல் பசியோடும், பட்டினியோடும் பயணமாக மக்காவிலிருந்து மதினா வரை பயணித்து மதினாவுக்கு வந்ததும் அல்லாமல் அவ்வப்போது எதிரிகளினால் ஏற்படும் துன்பங்களையும், சோதனைகளையும் தாங்கிக்கொண்டு மதினாவிலும், பசியோடும், பட்டினியோடும் தங்களது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தீனுல் இஸ்லாத்திற் காக செய்த தியாகங்களாலேயே, மறுமையில் சொர்க்கவாதிகள், மெத்தப்படித்த வசூல் ராஜாக்களான ஆலிம்கள் கூறுவது போல் “லாஇலாஹ இல்லலல்லாஹ்” கூறியவர்கள் சொர்க்கவாதிகள், லைலத்துல் கத்ர் 27ம் நாள் இரவு மட்டும் தொழுதவர்கள் சொர்க்கவாதிகள் என்று ஆகிவிட முடியாது.
ஆகவே முஸ்லிம்களாக வாழ்ந்து (முஸ்லிம் ஜமாஅத்தாக இல்லாமல் மற்ற எந்த ஜமாஅத்தும் அலலாஹ்வினாலோ, நபி(ஸல்) அவர்களி னாலோ அங்கீகரிக்கப்படாதவர்கள்) முஸ்லிமாக மரணித்தவர்கள் மட்டுமே சொர்க்கம் செல்லமுடியும். ஆகவே இஸ்லாமிய ஆண், பெண் அனைவரும் உங்களுக்கும் உங்களுக்கு முந்தைய சமுதாயத்திற்கும் அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட அல்குர்ஆன், மற்றும் சஹீஹ் ஹதீஃதுகளைக் கொண்டு ஐங்கால தொழுகை களை இமாம் ஜமாஅத்தாகவும், மற்றும் சுன்னத்தான தொழுகைகளையும் தொழுவதுடன், நோன்பு, ஜகாத், தகுதியானவர்களின் ஹஜ் ஆகியவைகளை முழு ஈமானுடன் பரிபூரணமாக நிறைவேற்றுபவர்கள் மட்டுமே இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) சொர்க்க்வாதிகள். ஆகவே நீங்கள் வசூல் ராஜாக்கள் கூறுவதை விட்டு அல்குர்ஆனையும், சஹீஹ் ஹதீஃதுகளை மட்டுமே பற்றிப் பிடித்து அனைத்து நல் அமல்களை நானும், நீங்களும் “அல்லாஹ் ஒருவனே” என்ற முழு ஈமானுடனும் கடைப்பிடித்து சொர்க்கம் செல்ல எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.
(முஸ்லிம்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் நெறிநூல் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களி லும் (நன்மையைத் தேடித் தரும்) தீர்மானத்திற்குரிய செயலாகும். (3:186) மேலும் பார்க்க: முஸ்லிம் : 316
மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த இறைநெறிநூலை நாம் உம்மீது இறக்கியுள்ளோம். இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) நெறிநூலையும் மெய்ப்படுத்தக்கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த (சட்டதிட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி), அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம். ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்) எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது. நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான். (5:48)
நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (8:28)
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு பயபக்தியுடன் நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான். இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான். ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன். (8:29)
அவன்தான் உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாக ஆக்கினான். அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரை விட சிலரைப் பதவிகளில் உயர்த்தினான், நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன். (6:165)
ரமழான் கடைசி வாரத்தில் லைலத்துல் கத்ர்:
ரமழானின் கடைசி வாரத்தில் லைலத்துல் கத்ர் ஏற்படுவதாக நபி(ஸல்) அவர்களின் நபித் தோழர்களில் சிலர் கனவில் கண்டனர். (இவ் விபரத்தை அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினர்) அப்பொழுது கடைசி வாரத்தில் (லைலத்துல் கத்ர் ஏற்படுகிறது என்பதில்) உங்கள் கனவுகள் ஒற்றுமையாக இருப்பதை நான் காண்கிறேன். எனவே, லைலத்துல் கத்ரை அடைய வேண்டுமென விரும்புபவர் (ரமழான் மாதத்தில்) கடைசி வாரத்தில் அதை அடைய முயலவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி)
ரமழான் மாதக் கடைசி பத்தில் ஒற்றைப் படையுள்ள தேதிகளில் லைலத்துல் கத்ர்:
ரமழான் மாத நடுப்பத்தில் நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் இஃதிகாஃப் இருந்தோம். இருபதாம் தேதி காலை (இஃதிகாஃபி லிருந்து) வெளியில் வந்து, எங்களுக்கு உபதேசம் செய்யும்போது லைலத்துல் கத்ர் எனக்குக் காண்பிக்கப்பட்டது. பின்னர் அதை நான் மறக்கடிக்கப்பட்டேன். அல்லது அதை மறந்துவிட்டேன். கடைசிப் பத்தில் ஒற்றைப்படை உள்ளதில் அதை அடைய முயலுங்கள். (லைலத்துல் கத்ரின் தினத்தில்) நான் தண்ணீரிலும் மண்ணிலும் (அதாவது சேற்றில்) ஸுஜூது செய்வதைக் கண்டேன். எனவே, நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தவர்கள் மீண்டும் (ஒவ்வொருவரும் தங்கள் இருப்பிடம் சென்று) இஃதிகாஃப் இருக்க வேண்டும் என்று கூறினார்கள். நாங்கள் மீண்டும் (இஃதிகாப்) இருந்தோம். வானில் மேகத்தின் சிறு துண்டைக் கூட நாங்கள் காணவில்லை. திடீரென பெரிய மேகம் ஒன்று திரண்டு வந்தது. மஸ்ஜிதுடைய கூரை ஒழுகும் அளவுக்குப் பெருமழை பெய்தது. அக்காலத்தில் (மஸ்ஜிதின் கூரை) பேரீச்சமர ஓலையால் மேயப்பட்டிருந்தது. பின்னர் தொழுகை நடந்தது. மண்ணிலும் தண்ணீரிலும் (அதாவது (சேற்றில்) நபி(ஸல்)) அவர்கள் ஸுஜூது செய்வதை நான் பார்த்தேன். அவர்களுடைய நெற்றியில் மண்ணின் அடையாளத்தை (அதாவது சேறு ஒட்டியிருந்ததை) நான் பார்த்தேன். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரழி)