மிகவும் ஆபத்தான  (Danger) மனிதர்கள் யார்?

in 2025 ஏப்ரல்

மிகவும் ஆபத்தான  (Danger) மனிதர்கள் யார்?

அய்யம்பேட்டை  A. நஜ்முதீன்

பொதுவாக மனிதர்களில் ஆண், பெண் என இரு சாரார்கள் உண்டு. இந்த இரு சாரார் களையும் சாராத மூன்றாவதாக ஒரு சாரார் உண்டு. திருநங்கை என்ற பெயரில் உலகம் முழுவதும் சிலர் பரவியுள்ளனர். இந்த மூன்றாம் வகுப்பினரால் பல அனாச்சாரங்கள் நடைபெற்று வருவது பலரும் அறிந்த ஒன்று. இவர்களை நாம் அடையாளம் காணமுடியும். (அவர்களின் செயலாலும், பேச்சாலும் ஆடை அலங்காரங்களாலும் அவர்களை (திருநங்கைகளை) இலகுவாக அடையாளம் காணமுடியும்)

அதுபோல மக்களில் மூன்று வகையினர் உண்டு. அவர்களில் நாம் கீழே குறிப்பிட்டுள்ள முதல் இரண்டு வகையினரை சுலபமாக அடையாளம் காணமுடியும். ஆனால் மக்களில் இருக்கின்ற மூன்றாம் வகுப்பினரை அவ்வளவு சுலபமாக அடையாளம் காணமுடியாது. இவர்கள்  மிகவும்  ஆபத்தானவர்கள் 

முதல்  இரண்டு  வகையினர்  யார்  என்றால்?

முதல்  வகையினர் :

1. அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள்.

2. தொழுகையை  நிலைநாட்டுவார்கள்.

3. நாம்(இறைவன்) அவர்களுக்கு வழங்கியவற் றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.

4. உமக்கு(முகம்மதுக்கு) அருளப்பட்ட இந்த வழிகாட்டி நூலையும் (அல்குர்ஆனையும்), உமக்கு முன் வழிகாட்டி நூல் அருளப்பட்டது  என்பதையும்  நம்புவார்கள்.

5. அவர்கள் மறுமையையும் உறுதியாக நம்புவார்கள்.

இந்த (முதல் வகையினரே) நேர்வழியில் இருப்பவர்கள், அவர்கள் வெற்றியாளரும் ஆவார்கள். அல்குர்ஆன் 2:2-5

இரண்டாவது  வகையினர் :

இறைவனின் வழிகாட்டுதலையும், இறை தூதரின் வழிகாட்டுதலையும் ஏற்க மறுப்பவர் கள். மேலும் மனோயிச்சைப்படி வாழ்கின்ற வர்களாகவும், முன்னோர்களின் மூடத்தன மான வழிமுறைகளை கண்மூடித்தனமாக பின்பற்றி  வாழக்கூடியவர்கள்.

இவர்களை எச்சரிப்பதும், எச்சரிக்காமல் இருப்பதும் அவர்களை (இரண்டாம் வகை யினரை)  பொருத்தவரை  சமமானதே.  பார்க்க  வசனம் : 2:6

மூன்றாம் வகையினர் மிகவும் மோசமானஆபத்தானவர்கள்:

எப்படி ஆண், பெண் என்ற பிரிவில் சாராத மூன்றாம் வகுப்பினர் என நாம் குறிப்பிட்டதிருநங்கைகள்எந்த அளவிற்கு மோசமான வர்களோ அதைவிட மோசமான ஆபத்தான வர்கள்  மூன்றாம்  வகுப்பினர்.

அவர்கள்  யார்  என்றால்?

இறைவன் தன் வழிகாட்டி நூலில் கீழ்க்கண்ட  வசனங்களில்  கூறுகிறான்.

இன்னும், மனிதர்களில் நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொள்கிறோம் என்று கூறுவோரும் இருக்கின்றனர்; ஆனால், (உண்மையில்) அவர்கள்  நம்பிக்கை  கொண்டோர்  அல்லர்.

(இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வை யும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கிறார்கள்; ஆனால், அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும், அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.

அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கிவிட்டான்; மேலும், அவர்கள் பொய் சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையுண்டு.

பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், “நிச்சயமாக நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே  என்று  அவர்கள்  சொல்கிறார்கள்.

அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள்; ஆனால், அவர்கள் இதை உணரமாட்டார்கள்.

(மற்ற) மனிதர்கள் நம்பிக்கை கொண்டது போன்று நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், “மூடர்கள் நம்பிக்கைக் கொண்டது போல் நாங்களும் நம்பிக்கை கொள்ளவேண்டுமா?” என்று அவர்கள் கூறுகிறார்கள். (அப்படியல்ல) இவர்களே மூடர்கள்; ஆயினும் (தம் மடமையை)  இவர்கள்  அறிவதில்லை.

இன்னும், நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும்போது, “நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்  எனக்  கூறுகிறார்கள்.

அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான்; இன்னும், இவர்களின் வழிகேட்டிலேயே தடுமாறுபவர்களாக இவர்களை விட்டுவிடுகிறான். (2:8-15)

மேற்கண்ட வசனத்தில் குறிப்பிட்டுள்ளது போல் இவர்கள் மிகவும் ஆபத்தான மனிதர்கள். அதாவது சமுதாயத்திற்கும், சன்மார்க்கத்திற்கும் (இஸ்லாத்திற்கும்) இவர்களால் தான் பல கெட்ட பெயர்கள் ஏற்படுவதுண்டு. இவர்களில் பெரும்பாலோர் ஆன்மீக கூட்டத்திற்கும் வருவார்கள். அதுபோல் அனாச்சாரங்கள் நடக்கும் கந்தூரி, உரூஸ், சந்தனக்கூடு, ஆடல் பாடல் இசை கச்சேரி இன்னும் ஏனைய மார்க்கத்திற்குப் புறம்பான கூட்டத்திற்கும் செல்வார்கள். அனாச்சாரங்கள் குர்ஆன், ஹதீதுக்கு மாற்றமானதாச்சே ஏன் அங்கு செல்கிறீர்கள் என்று கேட்டால், பல ஹஜ்ரத்களே வருகிறார்கள்  என்பார்கள், 

மேலும் பெரும்பான்மையானவர்கள் அங்கு வருகிறார்கள், அது தவறாக இருந்தால் இவ்வளவு பேர் வருவார்களா? என்று நம்மை பார்த்து திருப்பி கேள்வி கேட்பார்கள். அது மட்டுமல்ல அல்லாஹ்வுக்கு பயப்படுவதை விட ஆன்மீகவாதிகளின் தோற்றத்தை கண்டு மயங்கி அவர்கள் காலில் விழாத குறையாக அவர்களுக்கு பணிவிடை செய்வார்கள். அவர்களின் பெருமையைப் பற்றி பேசுவார்கள். மார்க்கத்தில் இல்லாததையும், கற்பனையாக புனையப்பட்டதையும்  நம்புவார்கள்.

இவர்களில் பாமர மக்கள் முதல் படித்தவர் கள் வரை உண்டு. அதுமட்டுமல்ல, இவர்களில் மார்க்கத்தை பேசக்கூடியசொல்லின் செல்வந்தர்களும்உண்டு. அவ்வப்போது குர்ஆனையும், ஹதீதையும் தங்களுக்கு சாதகமாக  பேசுவதும்  உண்டு. 

பாமரமக்களில் சிலர் குர்ஆன், ஹதீத் பேசக்கூடியவர்களை மார்க்க அறிஞர் (ஆலிம்) என்றும், ஆய்வாளர் என்றும் பட்டம் சூட்டி அழைப்பார்கள். அது மட்டுமல்ல மூன்றாம் வகையினரில் பெரும்பாலோர் வெள்ளிக்கிழமை மட்டும் தவறாது தொழக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். மற்றும் வெள்ளிக்கிழமை பெருநாள் தொழுகைக்கு மிகவும் பக்திமான் போன்று வருவார்கள். மேலும் மிஃஹராஜ் இரவு, பராத் இரவு, 27ம் கிழமை லைலத்துல் கத்ர் இரவு போன்ற வற்றில் கலந்துகொண்டு விட்டு 30 நாட்கள் நோன்பிற்கு பதிலாக 3 நாட்கள் (1,15,27) மட்டும்  நோன்பு  வைப்பார்கள்.

தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன. நாம் சுவர்க்கத்திற்கு செல்லக்கூடிய வர்கள் என்று இவர்களாகவே கற்பனையில்  மிதப்பார்கள்.

நாம் மேலே குறிப்பிட்ட சில வசனங்களில் இறைவன் கூறியுள்ளது போல் இவர்கள் மனதார மார்க்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. மாறாக அல்லாஹ் சொன்னது போல் இவர்கள். அல்லாஹ்வையும், இறை நம்பிக்கை கொண்டவர்களையும் ஏமாற்ற நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்பவர்கள் அன்றி வேறில்லை. ஆனால் அவர்கள் இதனை உணர்வதில்லை.

எனவேதான் நாம் இவர்களை மிகவும் ஆபத்தானவர்கள் என குறிப்பிட்டுள்ளோம். மேலும் இத்தகையவர்களைப் பற்றி இறைவன் தன் வழிகாட்டி நூலில் (அல்குர்ஆனில்) மேலும் என்ன கூறியுள்ளான் என்றால், “ஏக இறைவனை அவனது கட்டளையை மறுப்போரின் செயல்கள் பாலைவனத்தில் தெரியும் கானல் நீர் போன்றது. தாகம் ஏற்பட்டவுடன் அதை தண்ணீர் என நினைப்பான். ஆனால் அங்கே வரும்போது எதையும் காணமாட்டான்.” (.கு. 24:39)

இத்தகைய மனிதர்களின் செயலால் சமுதாயத்தில் பிரச்சனைகள் பல ஏற்பட்டு அதனால் முஸ்லிம் சமுதாயத்திற்கு இழிவும் ஏற்பட்டு தீர்வு காணமுடியாமல் தத்தளித்து வருகிறது.

இறைவனின் நியதிக்கு உட்பட்டு வாழும் மற்ற படைப்புகளில் இத்தகைய பிரச்சனைகள் இருப்பதில்லை. ஏன் என்றால் மற்ற படைப்புக்கள் யாவும் அல்லாஹ் விதித்த விதிமுறைகளின்படி தம் இயல்பில் அடிப்படையில்  வாழ்கின்றன.

அதாவது உலகில் வாழும் மற்ற உயிரினங்கள் தம் இயல்பின் அடிப்படையில் வாழ்கின்றன. 

தம்முடைய  உணவு  என்ன? 

அவற்றை  எப்படி  அடைவது? 

தம்இனப்பெருக்கத்தைஎவ்வாறுசெய்துகொள்வது?

தமக்கு  யாரால்  ஆபத்து  வரும்?

அந்த ஆபத்திலிருந்து எவ்வாறு தம்மைப் பாதுகாத்துக்  கொள்வது?

இதுபோன்ற வழிகாட்டுதல்கள் அதனதன் உடல் அமைப்பிலேயே உள்ளன. ஆனால் மனிதன் நிலை அவ்வாறில்லை. மனிதனுக்கு ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லிதர வேண்டும்.

எனவேதான் இறைவன் புறத்திலிருந்து வழிகாட்டி நூலையும், வழிகாட்டுதல்களுக்காக தூதர்களையும் ஏற்படுத்தி அவற்றை மட்டுமே பின்பற்றுங்கள் என்று இறைவன் கூறியுள்ளான்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி முடிவு செய்து அறிவித்து விட்டால், பிறகு அந்த காரியத்தில் சுயமாக முடிவு செய்யும் அதிகாரம் இறைநம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும், இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்த பெண்ணுக்கும் கிடையாது. எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றார்களோ அவர்கள் வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்துவிட்டான்.கு. 33:36

உண்மையில் இவர்கள் எப்படிப்பட்டவர் கள் என்று சுருக்கமாக சொல்வதாக இருந்தால்பல்லக்குச் சுமக்கிறவர்கள்ஏன் பல்லக்குச் சுமக்கிறீர்கள் என்றால், இந்த மகானை பார்க்கவும், இந்த நிகழ்ச்சியில் (அனாச்சாரங்களில்) கலந்து கொள்ளவும் கொடுப்பினை வேண்டும் தெரியுமா? என்பார்கள் நம்மை பார்த்து. எனவே இந்தப் பல்லக்குச் சுமப்பவர்களோடு, (ஆபத்தான மனிதர்களோடு) நாம் போராடிக் கொண்டிருக்க  வேண்டியுள்ளது.

எனவேதான் இறைவன் முதல் வகையினரை பார்த்து கூறுகிறான். “நல்லதை நோக்கி அழைத்து, நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் ஒரு கூட்டம் உங்களில் இருக்கட் டும்! அவர்களே வெற்றியாளர்கள்என்று குறிப்பிட்டுள்ளான். (.கு. 3:104)

இறை நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் அவர்களில் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள், அவர்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கின்றனர். தொழுகையை நிலைநிறுத்துகின்றனர், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுகின்றனர். இவர்களுக்குத்தான் அல்லாஹ் அருள் புரிகின்றான். அல்லாஹ் மிகைத்தவன், நுண்ணறிவாளன். (.கு. 9:71)

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதை(ச் செய்ய) ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் தடுக்கிறீர்கள்; இன்னும், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும்; அவர்களில் நம்பிக்கையாளர்களும் இருக்கின்றனர்; எனினும், அவர்களில் பலர் பாவிகளாகவே இருக்கின்றனர்.  (.கு. 3:110)

அல்லாஹ்விடம் பாக்கியம் பெற்ற முதல் வகையினராக நம்மை ஆக்கவேண்டும் என துஆச்  செய்வோம்.

Previous post:

Next post: