வருமுன் காப்போம் வளம் பெறுவோம்!

in 2025 ஏப்ரல்

வருமுன் காப்போம் வளம் பெறுவோம்! () 

நிம்மதியாக (சந்தோசமாக) வாழ வழி! 

அய்யம்பேட்டை பு. நஜ்முதீன் 

மார்ச்  மாத  தொடர்ச்சி….

நோயே என்னை நெருங்காதே!

சென்ற  ஜனவரி மாதம் (2025) முதல் மருத்துவ கட்டுரை தொடராக வருவதை வாசகர்கள் அறிந்த ஒன்று. இதுவரை சித்த வைத்தியம், ஹோமியோபதி வைத்தியம்,  அக்குபஞ்சர்  மற்றும் அலோபதி மருத்துவத் தின் அவலங்களையும் எழுதி வந்தோம். மேலும் சென்ற இதழில் உடல் உறுப்புகளில் முக்கியமானதான மூளையைப் பற்றியும் அறிந்தோம். அல்ஹம்துலில்லாஹ்.

இந்த இதழில் முதுமையைப் பற்றி காணலாம். இந்திய மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதம் பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாகஇருக்கின்றார்கள். நவீன கால வாழ்க்கை முறையால் அவர்களுக்கு கீழ்கண்ட நோய்கள் வருவது அதிகமாக காணப்படுகிறது.

அவை : 1. மூட்டுவலி, 2, ஞாபக மறதி, 

3.  உடல் தளர்ச்சி, 4. எலும்பு தேய்மானம்

5.   சமநிலையின்மை, 6.சிறுநீர் அடங்காமை

முதியோர்களை பராமரிக்க தெரியாத இன்றைய இளைஞர்கள் (மகன்/மகள்) முதியோர் இல்லங்களில் கொண்டுபோய் விடுகின்றனர். இதைப் பற்றி (முதியோர் இல்லம்) விரிவாக  எழுதுவதை விட கீழ்க்கண்ட இரண்டு வரிகளில் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

இல்லத்தின் பெயரோ, “அன்னை இல்லம்ஆனால் அவன்/அவள்அன்னைஇருப்பதோ முதியோர் இல்லம். 

ஓர் உண்மை என்னவென்றால்,

முதுமை என்பது வாழ்க்கை என்ற புத்தகத்தின் கடைசி அத்தியாயம் என்று பலரும் நினைக்கின்றார்கள். அல்லது நினைக்க வைக்கப்படுகிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல.

வாழ்க்கையின் முக்கியமான அத்தி யாயமே முதுமைதான்! முழு மகிழ்ச்சியை அடையும் வயது. முதுமை என்பது. ஓய்வு எடுக்க வேண்டிய காலம் என்று மூளையில் திணிக்கப்படுகிறது. திணிக்கப்பட்டுள்ளது. இது  உண்மை  அல்ல.

உண்மை என்னவென்றால் ஓய்வு என்பது மரணத்திற்கு  பின்னர்தான்.

எனவேதான்  இறைவன்  இறைநூலில்,

கொடுக்கல், வாங்கலோ, நட்போ  இல்லாத ஒருநாள் வருவதற்கு முன்பே (மரணத்திற்கு முன்பு வரை) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும்என்று இறைவன் கூறியுள்ளான்.       அல்குர்ஆன்: 14:31

இந்த வசனத்திலிருந்து தெரியவருவது என்னவென்றால் ஓய்வு என்பது மரணத்திற்கு பிறகுதான்.

முதியோர்களே!

நம்மை யாருக்கும் பிடிக்கவில்லை என்று கவலைப்படாதீர்கள்.

கவலைப்படுவதற்கு நாம் சந்தையில் விற்கும் பொம்மை அல்ல.

நம்மை நமக்கு பிடித்தால் போதும்.

இந்த  உலகம் எப்படி தெரியுமா?

நம்மால் பிரயோஜனம் இருக்கின்றவரைத் தான் அதாவது ஆரோக்கியமாக இருக்கின்ற வரைதான். 

எவ்வாறு  என்றால்:

1. நீங்கள் தானாகவே குளித்துக் கொள்ள வேண்டும்.

2. உங்கள் ஆடைகளை நீங்களே அணிந்து கொள்ளவேண்டும்.

3. உங்களுக்கான உணவை நீங்களே எடுத்து சாப்பிட வேண்டும்.

4. உங்கள் மலஜலங்களை நீங்களே தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும்.

நீங்கள் கோடீஸ்வரனாகவே இருந்தாலும் சரி, ஆரோக்கியம் இல்லையயன்றால் குடும்பத்தார்களுக்கும், உங்களுக்கும் மன உளைச்சல்  ஏற்படும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

எனவே ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம். முதலில் உங்கள் உடம்பின் மீது கவனமும், மதிப்பும், மரியாதையும் வைக்க வேண்டும்.

ஏன் என்றால், உடம்பின் உறுப்புக்களுக்கு மாற்று உறுப்புகள் சந்தையில் கிடைக்காது.

ஆரோக்கியத்தின் அவசியத்தைப் பற்றி இறுதி இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறியதாவது.

அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விசயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.

ஒன்று  : ஆரோக்கியம்

இரண்டு : ஓய்வு

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் நூல்: புகாரி: 6412

ஆரோக்கியத்தை பேணுவது எப்படி?

நாம் வெளியூர் செல்லவேண்டும் என்றால் அல்லது தஹ்ஹஜத் எழுந்து தொழவேண்டும் என்றால் அதற்காக அலாரம் செட் பண்ணி விட்டு சிலர் தூங்குவார்கள். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன்பே எழுந்து விடுவதும் உண்டு.  இதற்கு பெயர் BIO CLOCK ஆகும்.

அதுபோல் இப்பொழுது 50 வயதானாலே எல்லா நோய்களும் குறிப்பாக நீரழிவு நோய் வந்துவிடும் என்று நமது மூளையில் BIO CLOCK செய்யப்பட்டுள்ளது. இது கார்ப்பரேட் மருந்து கம்பெனிகளாலும், சில அலோபதி மருத்துவர்களாலும் செய்யப்படுகிறது. மேலும் 60-70 வயதிற்குள் இறந்துவிடுவோம் என்றும் நமக்கு தெரியாமலேயே நமது மூளையில் தவறாக செட் செய்யப்படுகிறது.

ஆனால் அரபு நாடுகளிலும், ஜப்பானிலும், சீனாவிலும் பெரும்பாலோர் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ்கின்றார்கள். அதற்கு காரணம் அவர்களது மூளையில் BIO CLOCK அவ்வாறு செட் செய்யப்பட்டுள்ளது.

எனவே வாசகர்களே, முதியோர்களே நாமும் 60-70க்கு மேல் ஆரோக்கியமாக அல்லாஹ் நாடியவரை வாழ்வோம் என்று யணூநு ளீஸிநுளீலு ஐ மாற்றி அமைத்துக் கொள்வோம்.

எவ்வாறு  என்றால் நம்மோடு இருக்கின்ற அல்லது நாம் பார்க்கின்ற சிலர் சுமார் 50 வயதை கடந்தும் இளமையாக காட்சியளிப்பார்கள். அதாவது 20-30 வயது வாலிபன் போல் தோற்றமளிப்பார்கள். அவர்களின் செயல்பாடும் வாலிப வயதினை போன்று இருக்கும். 

இது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கும். எப்படி இவர்களால் இளமையான தோற்றத்திலேயே இருக்க முடிகிறது என்பதாக,

இதற்கான  ரகசியம்  என்ன?

பொதுவாக ஒருவருடைய வயதை முதலில் வெளிப்படுத்துவதுசருமம்தான். அதை ஒழுங்காக பராமரித்தாலே இளமை நீடித்திருக்கும். 

இளமையைத் தக்கவைப்பதில் முக்கிய பங்கு வைப்பது தண்ணீரும், காற்றுமே யாகும். சருமத்தை மென்மைப்படுத்தவதற்கும், பாதுகாப்பதற்கும் மாசற்ற காற்றை சுவாசிப்பதும், தேவையான அளவில் தண்ணீர்  பருகுவதும்  நல்லது. 

குறிப்பாக பஜர் தொழுகைக்காக (அதிகாலை நேர தொழுகை) பள்ளிக்கு நடந்து சென்று அந்த நேர காற்றை சுவாசிப்பது நம் உடலுக்கு  நல்லது.

மனிதர்களுக்குத் தேவை :

1. ஆரோக்கியமான உணவு

2. தேவைக்கு ஏற்ப தூய்மையான ஆடை.

3. வசிக்க தூய்மையான இடம்

4. தூய்மையான குடிநீர்

5. சுத்தமான காற்று

இந்த ஐந்தையும் பெற்று வாழவேண்டும்.

மேலும் உலகில் எந்த மருந்துகளும் தேவைப்படாத அதி அற்புதமான சில வழிமுறைகளை நாம் வாழ்க்கையில் கடைப் பிடிக்க வேண்டும்.

அவைகள் :

1. பஜ்ர் தொழுகைக்கு எழுவது

2. காலையில் எழுந்தவுடன் பல்லை சுத்தம் செய்துவிட்டு வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது.

3. காலை உணவு (யயூசிபுலுய்புறீவீ) உண்பது.

4. போதுமான (ஹிநுயூனிபுஸி) இயல்பான நடைபயிற்சி.

5. வயிற்றை முழுமையாக நிரப்பாமல் ¾ பங்கு  உணவு  உண்பது.

6. நன்றி  உணர்வு

7. பிறர் நமக்கு செய்த தவறை மன்னிப்பது.

8. கோபமான நேரங்களில் மெளனமாக இருப்பது.

9. குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடு வது.

10. ஐவேளை  தொழுகை

11. இரவு தூக்கம்  (சுமார் 6 மணி நேரம்)

மேற்கண்டவைகளையும், சில நம்பிக்கை களையும் நீங்கள் கடைபிடிக்க வேண்டும்.

முதுமையானால் (40-50 வயதை கடந்தால்) நீரழிவு நோய் வரும் என்றோ அல்லது அது வந் தால் குணமே ஆகாது என்றோ நம்பக்கூடாது.

ஏன்  என்றால்,

மனிதன் ஆரோக்கியமாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகவும் மற்றும் மருந்து மாத்திரைகளுக்கு அடிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்பதற்காக பொய்யாக பரப்பட்ட நோய்தான் நீரழிவு நோய்.

அதாவது மனிதன் இறந்துவிடவும் கூடாது. அதேநேரத்தில் மனரீதியாக ஆரோக்கியமாக வும் இருந்துவிடக் கூடாது ஏன் என்றால், மனிதன் உழைக்கனும், சம்பாதிக்கனும். ஆனால் மருந்தை வாங்கி உட்கொண்டே இருக்கனும். இதுவே கார்ப்பரேட் மருந்து கம்பெனிகளின் சூழ்ச்சி.

ஓர்  உண்மை என்ன தெரியுமா?

எல்லா  நோய்க்கும்  மருந்து  உண்டு

உங்களை சிந்திக்க விடாமல் மனதளவில் பாதிக்க வைத்து இயந்திர மனிதனாக இருக்க வைத்து மக்களிடமிருந்து வசூலிப்பது.

மருத்துவ ரீதியான வரி :

இதை நீங்கள் செலுத்தாமல் இருக்க வேண்டுமானால் யணூநு ளீஸிநுளீலுஐ மாற்றி செட்பண்ணுங்கள்.

அல்லாஹ் உங்களைத் தொடக்கத்தில் மண்ணிலிருந்தும், பின்னர் விந்துத் துளியிலி ருந்தும் படைத்தான். பின்னர் உங்களை இணைகளாக்கினான். அவன் அறியாமல் எந்த பெண்ணும் கருவுறுவதோ, பிரசவிப்பதோ இல்லை. வாழ்பவரின் வாழ்நாள் நீட்டிக்கப் படுவதும், குறைக்கப்படுவதும் இல்லை. வாழ்நாள் எவ்வளவு என்பது பதிவேட்டில் உள்ளது. (அது மாறாது) இது அல்லாஹ்வுக்கு எளிதானது.” அல்குர்ஆன் 33:11

Previous post:

Next post: