அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
1. நபி(ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஹபீபாரம்லா அவர்கள் யாருடைய மகள்?
மக்காவில் சக்தி வாய்ந்த காபிர்களின் தலைவன் அபஸுஃப்யான் அவர்களின் மகள். ஆதாரம்: முஹம்மது என்ற நூலில் பக்கம் 577.
2. பார்வை இல்லாமல் இருந்து பார்வை பெற்ற நபி யார்?
யாஃகூப் (அலை). 12:93
3. இப்லீஸிடம் மரியாதைக்குரியவர் யார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்துபவர். முஸ்லிம்: 5418
4. உஸ்மான்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு என்ன உறவு முறை?
மருமகன் முறை. முஸ்னத் அஹமது:529
5. அநாதைகளின் சொத்துக்களை சாப்பிடுபவர்களின் நிலை எவ்வாறு இருக்கும் என அல்லாஹ் கூறுகிறான்?
நெருப்பை விழுங்குபவர்கள். அ.கு.4:10
6. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவன் எங்கு தங்குவான் என அல்லாஹ் கூறுகிறான்?
நரகில். அல்குர்ஆன் 4:14
7. அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு நற்செயல் செய்பவர் எங்கு இருப்பார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
சுவனபதிகளில். அல்குர்ஆன் 22:14
8. ரோமர்கள் வெற்றிபெறும் நாளில் முஃமின்கள் எவ்வாறு இருப்பார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
மகிழ்ச்சியாக இருப்பார்கள். அ.கு. 30:4
9. நபி(ஸல்) அவர்களை எதற்காக அனுப்பியதாக அல்லாஹ் கூறுகிறான்?
நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும். அ.கு.48:8
10. எந்த நோக்கோடு உபகாரம் செய்யாதீர் என அல்லாஹ் கூறுகிறான்?
கொடுப்பதை விட அதிகமாக பெறும் நோக்கோடு. அல்குர்ஆன் 74:6
11. யாரை நேசிப்பதில்லை என அல்லாஹ் கூறுகிறான்?
காஃபிர்களை. அல்குர்ஆன் 3:32
12. ஃபிர்அவ்ன் பூமியில் யாரை அறுத்துக் கொலை செய்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
ஆண் குழந்தைகளை. அல்குர்ஆன் 28:4
13. நம்பிக்கை கொண்டவர்கள் யாரை அஞ்சிக் கொள்ளவேண்டும்.
அல்லாஹ்வை. (அல்குர்ஆன் 9:119)
14. பனானா என்றால் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?
அல்லாஹ் அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். (அல்குர்ஆன் 75:4)
15. கியாம நாளில் மனிதன் தப்பித்துக் கொள்ள வேண்டி எதை கூறி கேட்பான்?
எங்கு விரண்டோடுவது. அல்குர்ஆன் 75:10
16. மனிதனை எந்த நிலையில் படைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
கஷ்டத்தில் உள்ளவனாக. அல்குர்ஆன் 90:4
17. பூமியில் உள்ளவற்றை எவ்வாறு படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
ஜோடி ஜோடியாக. அல்குர்ஆன் 26:7
18. மூஸா(அலை) அவர்கள் எதற்காக பயப் படுவதாக அல்லாஹ்விடம் கூறினார்?
ஃபிர்அவ்னின் சமூகத்தார் பொய்ப்பிப்பதை. அல்குர்ஆன் 26:12
19. யாருக்கு உதவி செய்வதாக அல்லாஹ் கூறுகிறான்?
அல்லாஹ்வுக்காக உதவி செய்பவர்களுக்கு. அல்குர்ஆன் 47:7