அறிந்து கொள்வோம்!

in 2025 ஜுன்

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ,  குண்டூர்

1. நபி(ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஹபீபாரம்லா அவர்கள் யாருடைய மகள்?

மக்காவில் சக்தி வாய்ந்த காபிர்களின் தலைவன் அபஸுஃப்யான் அவர்களின் மகள். ஆதாரம்: முஹம்மது என்ற நூலில் பக்கம் 577.

2. பார்வை இல்லாமல் இருந்து பார்வை பெற்ற  நபி  யார்?

  யாஃகூப் (அலை).  12:93

3. இப்லீஸிடம் மரியாதைக்குரியவர் யார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

  மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்துபவர்.  முஸ்லிம்: 5418

4. உஸ்மான்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு  என்ன  உறவு  முறை?

  மருமகன் முறை.       முஸ்னத் அஹமது:529

5. அநாதைகளின் சொத்துக்களை சாப்பிடுபவர்களின் நிலை எவ்வாறு இருக்கும் என அல்லாஹ்  கூறுகிறான்?

   நெருப்பை விழுங்குபவர்கள்.    .கு.4:10

6. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவன் எங்கு தங்குவான் என அல்லாஹ்  கூறுகிறான்?

   நரகில்.    அல்குர்ஆன் 4:14

7. அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு நற்செயல் செய்பவர் எங்கு இருப்பார்கள் என  அல்லாஹ்  கூறுகிறான்?

   சுவனபதிகளில்.  அல்குர்ஆன் 22:14

8. ரோமர்கள் வெற்றிபெறும் நாளில் முஃமின்கள் எவ்வாறு இருப்பார்கள் என அல்லாஹ்  கூறுகிறான்?

  மகிழ்ச்சியாக  இருப்பார்கள்.    .கு. 30:4

9.  நபி(ஸல்) அவர்களை எதற்காக அனுப்பியதாக  அல்லாஹ்  கூறுகிறான்?

  நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும்.   .கு.48:8

10. எந்த நோக்கோடு உபகாரம் செய்யாதீர் என  அல்லாஹ்  கூறுகிறான்?

   கொடுப்பதை விட அதிகமாக பெறும் நோக்கோடு.    அல்குர்ஆன் 74:6

11. யாரை நேசிப்பதில்லை என அல்லாஹ் கூறுகிறான்?

   காஃபிர்களை.  அல்குர்ஆன் 3:32

12. ஃபிர்அவ்ன் பூமியில் யாரை அறுத்துக் கொலை செய்ததாக அல்லாஹ் கூறுகிறான்?

  ஆண் குழந்தைகளை.  அல்குர்ஆன் 28:4

13. நம்பிக்கை கொண்டவர்கள் யாரை அஞ்சிக் கொள்ளவேண்டும்.

  அல்லாஹ்வை. (அல்குர்ஆன் 9:119)

14. பனானா என்றால் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?

அல்லாஹ் அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.   (அல்குர்ஆன் 75:4)

15. கியாம நாளில் மனிதன் தப்பித்துக் கொள்ள வேண்டி எதை கூறி கேட்பான்?

 எங்கு விரண்டோடுவது. அல்குர்ஆன் 75:10

16. மனிதனை எந்த நிலையில் படைத்திருப்பதாக  அல்லாஹ்  கூறுகிறான்?

   கஷ்டத்தில் உள்ளவனாக.   அல்குர்ஆன் 90:4

17. பூமியில் உள்ளவற்றை எவ்வாறு படைத்ததாக  அல்லாஹ்  கூறுகிறான்?

   ஜோடி ஜோடியாக.  அல்குர்ஆன் 26:7

18. மூஸா(அலை) அவர்கள் எதற்காக பயப் படுவதாக  அல்லாஹ்விடம்  கூறினார்?

  ஃபிர்அவ்னின் சமூகத்தார் பொய்ப்பிப்பதை. அல்குர்ஆன் 26:12

19. யாருக்கு உதவி செய்வதாக அல்லாஹ் கூறுகிறான்?

  அல்லாஹ்வுக்காக உதவி செய்பவர்களுக்கு.  அல்குர்ஆன் 47:7

Previous post:

Next post: