அல்லாஹ்வும் அடியாரும் மிக நெருக்கமாக இருக்குமிடம்

in 2025 ஜுன்

அல்லாஹ்வும் அடியாரும் மிக நெருக்கமாக இருக்குமிடம்

M.A.ஹனீபா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

அல்லாஹ்வும் அடியாரும் மிக நெருக்கமாக இருக்குமிடம், அடியார் தனது நெற்றியை நிலத்தில் வைத்து சிரம் பணியும் மிகவும் தாழ்ந்த நிலையான ஸஜ்தாவாகும்.

ஸஜ்தாவில் அதிகம் துஆச் செய்யுங்கள் என்பது நபி(ஸல்) அவர்களின் ஏவலாகும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியார் தம் இறைவனிடம் (அவனது அருளுக்கு இலக்காகி) இருக்கும் நிலைகளில்  மிக நெருக்கமானது, அவர் ஸஜ்தாவிலிருக்கும்போதேயாகும். எனவே, நீங்கள் (ஸஜ்தாவில்)  அதிகமாகப்  பிரார்த்தியுங்கள்.

இதை அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (தொழும்போது) தமது சஜ்தாவில் அல்லாஹும் மஃக்பிர்லீ குல்லஹு, திக்கஹு வ ஜில்லஹு, வ அவ்வலஹு வ ஆகிரஹு, வ அலானிய்யத்தஹு வ சிர்ரஹு  என்று  பிரார்த்திப்பார்கள்.

(பொருள் : இறைவா! என் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! அவற்றில் சிறியதையும், பெரியதையும், ஆரம்பமாகச் செய்ததையும், இறுதியாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும், மறைமுகமாகச் செய்ததையும் மன்னிப்பாயாக)
 (
நூல்: முஸ்லிம்: 832,833)

Previous post:

Next post: