இஸ்லாத்தின் இலட்சியம்! ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயம்!!

in 2025 மே

இஸ்லாத்தின் இலட்சியம்! ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயம்!!

நபி(ஸல்) கால இஸ்லாமிய ஒற்றுமை

முஹிப்புல் இஸ்லாம்

சிந்திப்போம்!  சீர்பெறுவோம்!!

1. குருடனும் பார்வையுடையவனும் ஒப்பாகமாட்டார்கள். (அதுபோல) ஈமான் கொண்டு அதற்கேற்ப நற்செயல்கள் செய்பவர்கள் தீமை செய்பவர்களுக்கு ஒப்பாகமாட்டார்கள். உங்களில் குறைவானவர்களே (இதனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுகிறீர்கள். (சிந்தனைக்கும் படிப்பினைக்கும் உரிய  இறைவாக்குகள்) அல்முஃமின் 40:58)

2. குருடரும், பார்வையுடையவரும் சமமானவரல்ல, இருளும், ஒளியும் (சமமானது) அல்ல. நிழலும், வெயிலும் (சமமானது) அல்ல.

உயிருள்ளவையும், இறந்தவையும் சமமானவை அல்ல. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுபவரைக் கேட்கச்செய்கிறான். கல்லறைகளில் உள்ளவர்களை உம்மால் கேட்க செய்ய முடியாது.

நீர் ஓர் எச்சரிக்கையாளரேயாவீர், (சிந்தனைக்கும் படிப்பினைக்கும் உரிய இறைவாக்குகள்  அல்ஃபாத்திர் 35:19-23)

3. நம்முடைய வாக்குகள் மறுத்தவர்கள் காரிருளில் உள்ள செவிடர்களும், ஊமையர் களுமாவர். அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டில் விட்டுவிடுகிறான். மேலும் நான் நாடுபவரை நேர்வழியில் நடத்துகிறான். (சிந்தனைக்கும் படிப்பினைக்கும் உரிய இறைவாக்குகள்  அல்அன்ஆம் : 6:30)

இம்மை  மேம்பாடே  இலட்சியம் :

சத்தியத்துக்குச் சான்றுரைக்க வேண்டிய சமுதாயம் இன்று அசத்தியத்துக்குத் தாலாட்டுப் பாடிக்கொண்டிருக்கிறது. மனித சமுதாயத்தில் நித்தமும் நினைத்துக் கொண்டிருக்கும் கண்மூடித்தனத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டிய முஸ்லிம்கள் அந்த கண்மூடித் தனத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கண்மூடித்தனத்தை கொழுக்கச் செய்து அடிபட்டு, உதைப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம்களே! இதற்கெல்லாம் என்ன காரணமென்று என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா? அதற்கெல்லாம் எங்களுக்கு  ஏது  நேரம்?’ 

நாங்கள் இம்மையைச் சுற்றிக் கொண்டிருக்கிறோம். இம்மை எங்களைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. நாங்கள் இம்மை மேம்பாட்டை இலட்சியமாக்கி இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். (கனவுலகில் மிதந்து கொண்டிருப்பவர்கள்) இதற்கே எங்களுக்கு நேரம் போதவில்லை. மற்றதை எல்லாம் நாங்கள் எப்படி ஏறெடுத்துப் பார்க்கமுடியும்?

நாங்கள் மட்டுமா இப்படி? உலகில் வாழும் மற்ற மனிதர்களும் இதைத்தானே இயல்பாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மிகச் சிலர்தானே இதிலிருந்து விடுபட்டு சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்துமா இப்படி கேட்கிறீர்கள்?” என்று சீறிப் பாய்கிறார்கள். இன்றைய பெயர்தாங்கி முஸ்லிம்கள்.

மனிதர்கள் இம்மைக் கவர்ச்சியில் மயங்கக் கூடியவர்களே!

இம்மைக் கவர்ச்சி போதையேற்றுகிறது போதை மயக்கத்தில் (சிந்தனையைப் பறிகொடுத்து) மனித வாழ்வு தள்ளாடிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் அங்காடிக் கொண்டிருக்கிறார்கள். அல்லல்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் ஏனோ இதை மறந்து விட்டார்கள். அல்லது மறக்கடிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். அல்லது மறைத்து விடுகிறார்கள்.

இம்மை நிகழ்வுகளை மனிதர்கள் நிதர்சனமாய் சந்திக்கிறார்கள். கண்களால் காண்கிறார்கள், சொந்த வாழ்விலும் அனுபவிக்கிறார்கள். மற்றவர்களுக்கேற்படும் அனுபவங்களையும் பார்க்கிறார்கள். இதனால் இம்மை சார்ந்தவர்களில் இயற்கையில் மனதைப் பறிகொடுக்கிறார்கள். இம்மை கவர்ச்சியில் மயங்கக் கூடியவர்களே  மனிதர்கள். 

மனித வாழ்வு இம்மையை மையமாக்கியே சுழல்கிறது. மற்றெல்லா விசயங்களையும் பின்னுக்குத் தள்ளி, இம்மையின் மேன்மையை மட்டும் மனித சிந்தனை ஆக்கிரமித்துக் கொள் கிறது. இம்மையில் பலன் அளிக்கக் கூடியவர்களுக்காக மனித சிந்தனை, உழைப்பு, முயற்சி, ஆற்றல் அனைத்தும் அளவிற்கதிகமாய் விரயமாக்கப்பட்டு வருகிறது. இம்மை நலனுக்கு அச்சாணியாய்த் திகழ்வது பொருள், பொருளாதார மேம்பாட்டிற்காக இன்று மனிதர்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராகி விட்டார்கள். 

குறிப்பாக பொருளாதார ரீதியில் உயர்வதற்காக, பொருள் ஈட்டுதல் ஈட்டிய பொருளைப் பன்மடங்காக்குதல் ஈட்டிய பொருளை அனுபவித்தல்! அதன் மூலம் சமுதாய அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளுதல்! மற்றவர்களிடம் ஆதிக்கம் செலுத்துதல் தான் மட்டுமின்றி தன் சந்ததியார்களும், தன்னைச் சார்ந்தவர்களும் பொருளாதார மேம்பாட்டடைய உழைத்தல்! என்று மனித வாழ்வின் மிகப் பெரும்பகுதி பொருளாதாரத்தை (பொருளியலை)யே ஆதாரமாக கொண்டு இயங்குகிறது. இன்றைய மனித வாழ்வைப் பொருளாதாரம் சுவீகரித்துவிட்டது பொருளைத் தேடுவதிலும், அதனை சார்ந்தவைகளில் ஈடுபடுவதிலும் மனிதர்களுக்குள் விகிதாச்சாரங்கள் வேண்டுமானால் வித்தியாசப்படலாம். அன்றி பொருள் திரட்டுவதிலிருந்து முற்றாக விலகி வாழ்வோர் எவரையும் சர்வதேச அளவில் காண்படு  கூட  அரிதானதே!

பொருள் (இயல்)தான் வாழ்க்கை! வாழ்க்கை தான் பொருள் (இயல்)

வாழ்வதற்குப் பொருள் வேண்டும். அதற்காக பொருள் ஈட்டப்பட வேண்டும். அதற்காக உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதிலெல்லாம் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. பொருள் மட்டுமின்றி மனித வாழ்வோடு மற்ற இயல்களும், துறைகளும் சம்மந்தப்பட்டுள்ளன. அந்த இயல்கள், துறைகள் அனைத்தும் மனித வாழ்வில் அங்கம் வகிப்பதும் தவிர்க்க முடியாததாகும். மற்ற இயல்கள் துறைகளைப் பின்னுக்குத் தள்ளி, பொருளியல் முன்னேற்றத்துக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பொருள், பொருளை சார்ந்த இயல்கள், துறைகளை சுற்றியே மனித வாழ்வு கழன்று கொண்டிருக்கிறது. பொருள் (இயல்)தான் வாழ்க்கை, வாழ்க்கைதான் பொருள் (இயல்) என்று சொல்லாமல் மனிதர்கள் அதை செயலாலும், நடைமுறையாலும் மெய்ப்பித்து வருகிறார்கள். ஆனால் மனிதர்கள் பொருளியல் தொடர்புடையவைகள் பற்றியே சிந்திக்கிறார்கள். இருந்தாலும் மனிதர்கள் வாழ்வோடு தொடர்புடைய அனைத்து இயல்கள், துறைகள் பற்றியும் சிந்திக்கும் இயல்பில் படைக்கப்பட்டுள்ளார்கள்.

1. மனித சிந்தனையின் இலக்கு எப்படியிருக்க வேண்டும்? அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

நீங்கள் காணும்படி அல்லாஹ் வானங்களைத் தூண்களின்றி உயர்த்தியவனாவான். பின்னர் தனது அரியாசன (ஆட்சிபீட)த்தில் அமர்ந்தான். இன்னும் அவனே சூரியனையும், சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான். (இவை) அனைத்தும் குறிப்பிட்ட கால திட்டப்படியே நடந்து வருகின்றன. அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான். நீங்கள் உங்கள் இறைவனை சந்திப்பதில் உறுதி கொள்வதற்காக, அவன் தன்னுடைய அத்தாட்சிகளைத்  தெளிவாக  விளக்குகின்றான்.

மேலும் அவனே பூமியைப் பரப்பி அதில் மலைகளையும், ஆறுகளையும் அமைத்தான். மேலும் அதில் எல்லா (வகைப்) பழங்களையும் ஆண், பெண் என இரட்டையாக ஆக்கினான். அவன் இரவால் பகலை மூடச் செய்கிறான். சிந்திக்கும் மக்களுக்கு இதில் (பல) அத்தாட்சிகள் உள்ளன. (சிந்தனைக்கும் படிப்பினைக்கும் உரிய இறைவாக்குகள் அர்ரஃது 13:2,3)

மனிதர்கள் சிந்திக்க வேண்டும் என்ற சிந்தனையைத் தூண்டும் இறைவேதம்! அந்த வேதத்தை ஏற்றிருப்போர் முஸ்லிம்கள்! மனித சமுதாயத்துக்கு சிந்தனையின் சிறப்பை எடுத்துக் காட்ட வேண்டிய முஸ்லிம்கள்! சிந்திப்பதிலிருந்து ஒதுங்கி விட்டார்களோ? ஐயம் ஏற்படுகிறது. (அந்தோ பரிதாபம்) இன்றைய முஸ்லிம்கள்  வாழ்வு  இதை  மெய்ப்பிக்கும்.

2. உலக  வாழ்வின் நிலையாமை, அல்லாஹ்வால் ஓர் இனிய, அழகிய உவமை நயத்துடன் ஒப்பிட்டுக் காட்டப்படுகிறது. சிந்தித்து செயல்படும் மக்களுக்காக.

இவ்வுலக வாழ்க்கை, மேகத்திலிருந்து நாம் பொழியச் செய்யும் தண்ணீரைப் போன்றதாகும். இதன் பின்னர் மக்களும், கால்நடைகளும் உண்ணுகின்ற விளைச்சல், அத்துடன் கலந்து விடுகிறது. எதுவரையயனில் பூமி(அதன் மூலம்) தனது அணிகலன்களைப் பெற்று தோற்றமளிக்கிறது. மேலம் அதில் வாழ்பவர்கள் தாங்கள் (அதன் விளைச்சல்) ஒன்று திரட்டிக் கொள்ளத் தகுதி பெற்றதாக எண்ணுகின்றனர். அப்போது அதன் மீது இரவிலோ பகலிலோ நம்முடைய (வேதனைப் பற்றிய) கட்டளை வருகிறது. நேற்று இவ்விடத்தில் (எதுவுமே) இல்லாதிருந்தது போன்று நாம் அதனை அறுவடைசெய்த வயலைப் போல் ஆக்கிவிடுகிறோம். சிந்தித்து செயலாற்றுபவர்களுக்கு இவ்வாறே நாம் நம்முடைய  அத்தாட்சிகளை மிகத் தெளிவாக விளக்குகின்றோம். (சிந்தனைக்கும் படிப்பினைக்கும் உரிய இறைவாக்குகள் யூனுஸ் 10:24)

3. அல்லாஹ்(ஜல்) வானம் பூமி, அவ்விரண் டிற்குமிடையே உள்ளவைகளைப் படைத்த தன் நோக்கத்தைச் சிந்திப்பவர்களே உணர முடியும்.

இறைவன் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கிடையே உள்ளவற்றையும் குறிப்பிட்ட நோக்கத்துடன் குறிப்பிட்ட ஒரு காலத்திற்காக படைத்துள்ளான் என்பதை அவர்கள் தங்கள் உள்ளத்தால் சிந்தித்துப் பார்ப்பதில்லையா? ஆனால் மக்களுள் பெரும்பாலோர் தங்கள் இறைவனைச் சந்திக்க இருப்பதனை நிராகரிப்பவர்களாக இருக்கின்றனர். (சிந்தனைக்கும் படிப்பினைக்கும் உரிய இறைவாக்குகள் அர்ரூம் 30:8)  

இன்னும் இதுபோன்று சிந்திக்கத் தூண்டும் சிந்தனையைக் கிளர்ந்தெழச் செய்யும் இறை வாக்குகள் ஏராளம். இறுதி இறை நூலில் பரவலாக காணக்கிடக்கின்றன. ஆனால் அவைகளை எல்லாம் சிந்திப்போர் எங்கேயிருக்கிறார்கள்? அல்லது இன்றைய பரபரப்பான உலக சூழலில் அவர்கள் எங்கே தங்களை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்? அல்லது ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்? (புரியாத புதிர்தான்)

மனிதர்கள் வாழ்வோடு தொடர்புடைய துறைகள், இயல்கள் பற்றியும், உலகம், உலகில் படைக்கப்பட்டுள்ள மற்ற படைப்பினங்கள் பற்றியும் சிந்திக்கும் இயல்பில் படைக்கப்பட் டுள்ளார்கள். இருந்தும் மற்ற வியங்களில் அவைகளுக்குத் தேவையான அளவு சிந்தனை யைப் பொருளியல் நீங்கலாய் செலுத்த முடிவதில்லை. நேரத்தை ஒதுக்க முடிவதில்லை.

எந்த துறைகள், இயல்களில் எல்லாம் மனிதர்கள் நேரடியாக சிந்தனையைச் செலுத்த முடியவில்லையோ, எந்த வியங்களில் மனி தர்கள் அசிரத்தையாய் இருக்கிறர்களோ அங்கே அழையாத விருந்தாளியாய் கண் மூடித்தனம் உள்ளே நுழைந்துவிடும். அல்லது உள்ளே நுழைக்கப்பட்டுவிடும். மனிதர்கள் எளிதில் கண்மூடித்தனத்தின் பிடியில் சிக்கக் கூடியவர்கள். சிறுக, சிறுக உள்ளே நுழைந்த கண்மூடித்தனம், பின் ஆதிக்கம் செலுத்தவும் ஆரம்பித்து விடும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…..

Previous post:

Next post: