அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்!
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
2025 மே மாத தொடர்ச்சி…
தீஹ் பாலைவனத்தில் நாற்பது ஆண்டுகள் நாடோடிகளாக அலைந்தார்கள் :
எனது சமுதாயத்தாரே! உங்களுக்கென்றே அல்லாஹ் எழுதிவைத்துள்ள தூய்மையான (பைத்துல் மக்திஸின்) இந்தப் பூமியில் நுழையுங்கள். (அடக்குமுறையாளர்களான அங்குள்ள “அமலேக்கியர்” எனப்படும் எதிரிகளை அஞ்சி) புறமுதுகிட்டு ஓடாதீர்கள். (அவ்வாறு ஓடினால்) நீங்கள் இழப்புக்குள் ளானவர்களாகவே திரும்புவீர்கள் (என்றும் கூறினார்) அதற்கு அவர்கள் மூஸா அந்தப் பூமியில் (அமலேக்கியரான) ஆதிக்க வர்க்கத்தார் இருக்கின்றார்கள் அவர்கள் அங்கிருந்து வெளியேறாத வரையில் நாங்கள் அதற்குள் நுழையமாட்டோம். அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டால் நாங்கள் நுழைவோம் என்று கூறினார்கள்.
அப்போது (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பவர்களில் இறையருளைப் பெற்ற இருவர் (இஸ்ரவேலர்களிடம்) அவர்களை எதிர்த்து(போரிட அவ்வூரின்) நுழைவாயில் வழியாக நுழையுங்கள் அவ்வாறு அதில் நீங்கள் நுழைந்துவிட்டால் நீங்களே வெற்றியாளர்கள். நீங்கள் (உண்மையிலேயே) இறை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வையே சார்ந்திருங்கள் என்று கூறினார். அதற்கு அவர்கள் மூஸா அவர்கள் அங்கிருக்கும் வரை அதில் நாங்கள் ஒருபோதும் நுழையவே மாட்டோம் (வேண்டுமானால்) நீரும் உம்முடைய இறைவனும் சென்று போரிடுங்கள்! நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின்றோம் என்று கூறியதனாலும்; (அ.கு.5:21-26) இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களின் உத்தரவுக்குப் பணிய மறுத்துவிட்டதனாலும்;
அவர்கள் “தீஹ்” எனும் பாலைவனத்தில் திக்குத் தெரியாமல் நாற்பது ஆண்டுகள் சுற்றித் திரியும் நிலையில் நாடோடிகளாக அலையவிடப்பட்டார்கள். (அ.கு.5:26) இதையடுத்து அவர்கள் “தீஹ்” பாலைவனத்திற்குள் சிக்கி அதிலிருந்து வெளியேற வழி தெரியாமல் சுற்றித் திரிந்தவண்ணம் இருந்தார்கள். ஓரிடத்திலிருந்து பயணப்படும்போதெல்லாம் மீண்டும் அதே இடத்திற்கே வந்து சேருவார்கள். இதனால் எந்த இடத்திலும் நிலையாகத் தங்காமல் பயணத்திலேயே அவர்களின் நாட்களெல்லாம் கழிந்தன (இப்னு அப்பாஸ்(ரழி) கஅபுல் அஹ்பார் (ரஹ்), பைஹகீ, மஸ்ம உஸ் ஸவாயித், அஸ்ஸுனனுல் குப்ரா லிந்நஸயீ, முஸ்னது அபீயஅலா, தப்ரானீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் 3:119-135, 5:723-726)
அவர்களில் சிலர் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாற்றப்பட்டார்கள்:
உங்களில் (ஒரு பகுதியினர்) சனிக்கிழமை வரம்பு மீறினர். எனவே “நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று அவர்களிடம் கூறினோம். இதை நீங்கள் அறிந்தே இருக்கிறீர்கள். (அ.கு.2:65)
அந்த இஸ்ரவேலர்களில் சிலரைக் குரங்குகளாகவும், சிலரைப் பன்றிகளாகவும் முதியவர்கள் பன்றிகளாகவும் உருமாறினார்கள். அ.கு. 5:60 அதன் பின்னர் அவர்கள் மூன்று நாட்களே உயிர் வாழ்ந்தார்கள் உருமாற்றப்பட்ட யாரும் மூன்று நாட்களுக்கு மேல் உயிர் வாழ்ந்ததில்லை அவர்கள் அதற்குப் பிறகு உண்பதோ, பருகுவதோ, ஈனுவதோ கிடையாது என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர் : 1:241-249)
கர்வமும், காழ்ப்புணர்ச்சியும், பொறாமையும், மேலோங்கியதால்தான் அவர்கள் வரம்பு மீறியவர்களாக இறை வசனங்களை மறுத்துக்கொண்டும் இறைத் தூதர்களை நியாயமே இன்றிக் கொலை செய்து கொண்டும் இருந்த காரணத்தினால் தான், அந்த பாவத்தினால்தான், அவர்களுக்கு அல்லாஹ் இழிவையும், சிறுமையையும், வறுமையையும், மறுமையின் நிரந்தர இழிவையும் சேர்த்துக் கொடுத்துவிட்டான். (விவிலியம் பழைய ஏற்பாடு நெகேமியா 9:26, புதிய ஏற்பாடு மத்தேயு : 23:31)
இத்தொடரில் “வறுமை” என்பதைச் சுட்டிக்காட்ட மூலத்தில் “அல்பஃசாஉ” எனும் சொல்லும், “துன்பம்” என்பதைச் சுட்டிக்காட்ட “அள்ளர்ராஉ” என்ற சொல்லும் ஆளப்பட்டுள்ளது. இவை மொத்தத்தில், நோய்நொடிகள், வேதனைகள், வலிகள், சோதனைகள், மற்றுமுண்டான நெருக்கடிகள், துயரங்களைக் குறிக்கும் சொல்லாகும் குறிப்பாக! “அல்பஃசாஉ” என்பது “ஏழ்மை‘யையும் “அள்ளர்ராஉ” என்பது நோய், நொடியையும் குறிக்கும் என்பதாக இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர் : 1:672)