கல்வியின்  அவசியம்

in 2025 மே

கல்வியின் பயன்!

M. சையத் முபாரக், நாகை

கல்வியின்  அவசியம் :

“…(நபியே!) அறிந்தவர்களும், அறியாதவர் களும் சமமாவார்களா? என்று நீர் கேட்பீராக! அறிவுத்திறனுடையோர்தான்  உபதேசம்  பெறுவர்.”   (அல்குர்ஆன் 39:9)

அல்குர்ஆன் உண்மை; அது நேர்வழி காட்டி  (பார்க்க : 34:6)  என்றும் அல்லாஹ்விடமிருந்து அருளப்படுவது உண்மை என்று அறிபவர் பார்வையில்லாதவரைப் போலாவாரா? (பார்க்க : 13:19) என்றும் அல்குர்ஆன் சான்று பகர்ந்துக் கொண்டிருக்கிறது ஒவ் வொருவரும் கல்வியறிவு பெறவேண்டும் என்பதற்காக. ஆகவே, நாம் கல்வியறிவு பெற அனைத்து முயற்சிகளும்  எடுக்கவேண்டும்?

மார்க்கக்  கல்வியா?  உலகக்  கல்வியா?

நாம் கல்வியை மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என்று இரு கூறாகப் பிரித்து வைத்திருக் கின்றோம். ஆனால், இஸ்லாம் இரண்டையும்  இணைத்தே  கூறுகிறது.

அல்லாஹ்வை அறிந்து (பார்க்க: அல்குர் ஆன் 12:40, 29:17), அவனது படைப்புகளைப் பற்றி சிந்திக்கமாட்டீர்களா? (பார்க்க : .கு. 12:105, 45:13,86:5) என்று அல்குர்ஆன் அறை கூவல் விடுப்பதிலிருந்தே மார்க்கக் கல்வியும், உலகக் கல்வியும் இரண்டறக் கலந்தே அறிவு, ஞானம் என்பதை இஸ்லாம் உணர்த்திக்  கொண்டிருக்கிறது.

ஆனால், இஸ்லாமும் கல்வியை இரண்டாகப் பிரிக்கின்றது. அது 1.பயனுள்ள கல்வி, 2. பயனற்ற கல்வி என்பதாகும். பயனுள்ள கல்வி அனைத்து படைப்பினங்களுக்கும் நன்மையை விளைவிக்கும். பயனற்ற கல்வியோ அனைத்திற்கும்  கெடுதலை  விளைவிக்கும்.

1.  பயனற்ற  கல்வி :

முயற்சி செய்வதன் மூலம் நாம் கல்வியறிவை பெற்றுக்கொள்ள முடியும். நாம் நன்மையை (மறுமை வெற்றியை)ப் பெற்றுத் தரும் கல்வியை தேட முயற்சிக்காமல், பொருளா தாரத்தைத் தேடித் தரும் கல்வியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எப்படியும் சம்பாதித்துவிட வேண்டும் என்று செல்வத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட பயனற்ற கல்வியால் உலகம் சீரழிவைக் கண்டு  கொண்டிருக்கிறது.

அணுகுண்டால் நாசமான ஜப்பான் (ஹிரோசிமா, நாகசாகி) நகரங்கள் முதல் தற்போது சொல்லமுடியாத இன்னல் களை யூத ஜியோனிஸ்ட்களால்  அனுபவித்துக் கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்கள் வரை எடுத்துக் கொள்ளுங்கள். இவைகள் எல்லாம் பயனற்ற கல்வியால் ஏற்பட்ட பெருமை, பொறாமை, அகந்தையால் நிகழ்கின்றன. இப்படிப்பட்ட அழிவை, குழப்பத்தை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. நாங்கள் மிக கற்றவர்கள், உலகையே ஆட்டி வைப்பவர்கள் என்ற ஆணவமும், கீழ்த்தரமான புத்தியும் தான் மக்களுக்கும் மற்ற படைப்பினங்களுக்கும் தீங்கைத் தரக்கூடியச் செயல்களைச் செய்ய இவர்களைத் தூண்டுகிறது. இந்த பயனற்ற கல்விதான் இவர்களின் மனச்சாட்சியையும் கூட கொன்றுவிடுகிறது, மனிதாபி மானத்தை குழி தோண்டி  புதைத்துவிடுகிறது.

அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுத் தருகின்ற கல்வியை, உலக ஆதாயத்தை அடையும் நோக்கில் ஒருவர் கற்றால் அவர் மறுமை நாளில் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

கடலில் வியாபாரம்பெருகும் அளவு, இறை வழியில் குதிரை புறப்படும் அளவு இஸ்லாம் வெளியாகும். பின்புஎங்களை விட படித்தவர், அறிந்தவர், மார்க்கச் சட்டங்களை புரிந்தவர் எவர் உண்டுஎன்று கூறி குர்ஆனை ஓதும் சில கூட்டம் வெளியாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, தம் தோழர்களிடம்அவர்களிடம் நற்செயல் உண்டா?’ என்று கேட்டார்கள். “”அல்லாஹ்வும் அவனது தூதருமே மிக அறிந்தவர்கள்என்று நபித் தோழர்கள் கூறினர். “”அவர்களும் உங்களைச் சேர்ந்த இச்சமுதாயத்தினரே. (எனினும்) அவர்களே நரகவிறகுகள்என்று நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள். (தப்ரானீ)

2.  பயனுள்ள  கல்வி :

கற்ற கல்வியைச் செயல்படுத்தும்போது தானும் மற்ற படைப்பினங்களும் பயன் பெற வேண்டும் என்பதே கல்வி கற்பதன் நோக்கமாக இருக்கவேண்டும். “ஒரு வணக்கசாலியை விட ஒரு அறிஞரின் சிறப்பு உங்களில் சாதாரண தோழரை விட என்ற சிறப்புப் போன்றதாகும்”. “நிச்சயமாக அல்லாஹ் மக்களுக்கு நல்லதை போதிக்கும் ஒருவருக்கு அருள் புரிகிறான். மேலும் இவருக்காக வானவர்களும், வானம், பூமியில் உள்ளோரும்; காட்டில் உள்ள எறும்புகள், நீரில் உள்ள மீன்கள் உட்பட (அவருக்காக அருள்புரிய வேண்டி) பிரார்த்திக்கின்றனஎன அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

ஒரு மனிதர் இறந்துவிட்டால், மூன்றைத் தவிர அவரது மற்றச் செயல்கள் துண்டிக்கப்பட்டு விடும். அவை (1)நிரந்தர நன்மை பெற்றுத் தரும் தர்மம். (2) பயன்  பெறப்படும் கல்வி. (3) அவருக்காக துஆ செய்யும் அவரது பிள்ளைஎன நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள். (முஸ்லிம்)

கல்வி ஒருவரை இறையச்சம்; பணிவு; அடக்கம்; பார்வையில் கனிவு; பேச்சில் இனிமை; உடலில், மனதில் தூய்மை; சொல், செயலில் உண்மை; நேர்மை; நீதி போன்ற மேலானப் பண்புகளைக் கொண்ட நற்குணங் களின்  சங்கமமாக  இருக்கச்  செய்யும்.

கல்வி அவரது உள்ளத்தில் ஒளியாகி கண்ணியம் கொடுக்கும். அனைத்திலும் பேணுதலை மேற்கொண்டு நடுநிலையைக் கடைபிடிப்பார்.

அல்லாஹ்விற்கு விருப்பமான செயல்களை ஆர்வத்துடன் செய்வார்; அவனுக்குப் பிடிக்காததை  விட்டு விலகி இருப்பார்.

அல்லாஹ்வின் மீது ஆதரவு வைத்து அவனைச் சார்ந்திருப்பார். அவனிடமிருந்து நன்மைகளை எதிர்பார்த்தும், அவனது தண்டனைகளுக்கு  பயந்தும்  இருப்பார்.

தான் கற்ற கல்வியின் மூலம் நற்செயல்களைச் செய்து சொர்க்கம் செல்ல முயற்சி செய்வார்;  பாவங்களை அறிந்து, அதனை விட்டும் தவிர்த்து நரகத்தின் பக்கம் செல்லாதிருக்க  முயற்சிப்பார்.

கல்வியின் கடலாக, ஞானத்தின் ஊற்றாக இருந்தாலும் பெருமை, கர்வம், அகந்தை, ஆணவம், வீண் பேச்சு, முகஸ்துதி, கோள், புறம், அவதூறு, கெட்ட குணம், கெட்ட நடத்தை போன்றவற்றிலிருந்து  விலகி  இருப்பார்.

தொடர்பு, பொருத்தம்:

அல்லாஹ்வே! பலன் தரும் கல்வியை, தூய்மையான உணவை, ஏற்றுக் கொள்ளப்பட்ட அமலை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்என நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள்.  (ஸுனன் இப்னு மாஜா)

மேற்கண்ட துஆவில் செயல்கள் ஒவ்வொன்றுக்குமான தொடர்பும், பொருத்தமும் எவ்வளவு அன்னியோன்யமாக, இருக்கிறது. நபி(ஸல்) அவர்களின் சொல்லாற்றலை ரசித்து, அதனை நாம் செயல்படுத்துவோம்.

பயன் தரும் கல்வியைக் கற்றவரின் பொருளாதாரத் தேடலும் தூய்மையானதாகவே இருக்கும். அதனால், தூய்மையான உணவையே உண்பர். அதன் மூலமாக அவர் செய்யும் அமல்கள் (செயல்கள்) அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதாகவே இருக்கும். அவரின் கல்வி எவ்வளவு உயர்ந்ததாக  இருக்கிறது. பயனற்ற கல்வி மூலம் தேடும் பொருளாதாரம் பேராசையின் காரணமாக தவறான செல்வமாகவே இருக்கும். அதன்மூலம் சாப்பிடும் உணவு, குடிக்கும் பானம் ஹராமாகி விடுகிறது. அதனால் அவரது செயல்களும் ஏற்றுக் கொள்ளப்படாததாக ஆகிவிடுகிறது. இதை கீழ்க்காணும்  ஹதீத்  தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்மக்களே! அல்லாஹ் தூய்மையானவன். தூய்மை யானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன் தூதர்களுக்குக் கட்டளையிட்டதையே இறை நம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிடுகிறான்எனக் கூறிவிட்டு, பின்வரும் இரு வசனங்களை ஓதினார்கள். “தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள்; நற்செயல்களை செய்யுங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் (23:51) “நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ் வைத்தான் வணங்குகிறீர்கள் என்றால் அவனுக்கு நன்றி பாராட்டுங்கள்” (2:172) பிறகு, ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள்: அவர் தலைவிரி கோலத்துடன், புழுதி படிந்த நிலையில் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்திஎன் இறைவா! என் இறைவா!” என்று பிரார்த்திக்கிறார். அவர் உண்ணும் உணவு ஹராம், அவர் குடிக்கும் பானம் ஹராம்; அவர் அணியும் ஆடை ஹராம்; அவர் ஹராமான உண வையே உட்கொண்டிருக்கிறார். இத்தகையவரின் (பிரார்த்தனை)  எவ்வாறு  ஏற்கப்படும்?”    (முஸ்லிம்)

ஆகவே, நமது கல்வி பயனுள்ள கல்வியாக அமைந்து, அதன்மூலம் தேடும் பொருளாதாரம் ஹலாலாக, உணவு ஹலாலாக, பானம் ஹலாலாக, உடை ஹலாலாக இருக்க; நமது அமல்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக அமைய அல்லாஹ்விடம் துஆ செய்வோம்! அல்ஹம்துலில்லாஹ்!!

Previous post:

Next post: