சமாதி வழிபாட்டினரை விட தவ்ஹீத்வாதிகள் என தங்களை அழைத்துக் கொள்வோரே கொடிய முஷ்ரிக்கள்!

in 2025 ஜுன்

சமாதி வழிபாட்டினரை விட தவ்ஹீத்வாதிகள் என

தங்களை அழைத்துக் கொள்வோரே கொடிய முஷ்ரிக்கள்!
அபூ அப்தில்லாஹ்

மறு பதிப்பு :

2025 மே மாத தொடர்ச்சி….

உலகியல் ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்ட மதகுருமார்கள் ஒருபோதும் நேர்வழியை ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழியாகப் போதித்து மக்களை ஏமாற்றி நரகில் தள்ளுவார்கள் என்றே கூறுகிறோம். அதுவும் குர்ஆன் கூறுவதையே எடுத்து வைக்கிறோம்.

இதற்கு ஆதாரமாக அ.கு.33:66-68, 34:31-33, 37:26-34, 38:55-64, 40:47-49, 41:29, 43:36-45 போன்ற பல குர்ஆன் வசனங்களையே தருகி றோம். மேலும் அ.கு. 34:31-33, 40:47,48 இறை வாக்குகள் கூறும் பெருமையடித்தோர் என்று குறிப்பிடுவதுநாங்கள்தான் மவ்லவிகள், மதகுருமார்கள், மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள், நீங்கள் அவாம்கள், எங்கள் சொல்லைக் கேட்டு அதன்படி நடக்கவேண்டும் என்று பெருமை பேசியவர்களே என்பதில் சந்தேகம் உண்டா? நரகத்தில் உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட்டாய் என்று புலம்புவதை இந்த இறைவசனங்கள்  உணர்த்தவில்லையா?

அதிகமான மக்கள் இணைவைக்காத நிலையில் ஈமான் கொள்ளவில்லைஎன்று அ.கு.12:106 வசனம் கூறுவதும், நாளை மறுமையில் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம்என்னுடைய ரப்பே! என்னுடைய சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள் என்று அ.கு.25:30 இறைவாக்கில் கூறுவதும் எதை உறுதிப்படுத்துகிறது? மேலும் 32:13, 11:118,119 இறை வச னங்கள் பெருங்கொண்ட மக்கள் நரகத்திற்குரியவர்களே; அல்லாஹ் அருள்புரிந்த ஒரு சிலரைத் தவிர என்பதை உறுதிப்படுத்தவில்லையா?

இந்த குர்ஆன் வசனங்கள் கூறுவதை வைத்துத்தான் மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், மார்க்க மேதைகள் என பெருமை பேசும் மதகுருமார்களை அல்லாஹ்வுக்கும் தங்களுக் குமிடையில் இடைத்தரகர்களாகப் புகுத்திய வர்கள் அ.கு.33:66-68 இறைவாக்குகள் கூறுவது போல் நாளை நரகில் கிடந்து வெந்து கொண்டு வேதனைத் தாங்க இயலாமல் கதறு வார்கள் என்றே கூறுகிறோம். நமது சுய விளக்கமாக  எதையும்  நிச்சயம்  கூறவில்லை.

சுருக்கமாகச் சொன்னால் 1446 வருடங்களுக்கு முன்னர் அன்றைய அரபியர்கள், இப்றாஹீம், இஸ்மாயீல்(அலைம்) நேரடி வாரிசுகள், நபி இப்றாஹீம்(அலை) அவர் களின் மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு, ஆதி ஆலயமான கஃபாவைச் சுற்றி வாழ்ந்துகொண்டு, சுன்னத்திடப்பட்டவர்களாக, அப்துல்லாஹ், ஆமினா, அப்பாஸ், ஹம்சா என முஸ்லிம்கள் பெயரிட்டவர்களாக, அல் லாஹ்வைத் தங்களைப் படைத்த ஒரே இறை வனாக ஏற்று தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகளை அவர்களில் ஒரு சிலர் தாருந்நத்வா ஆலிம்கள் காட்டிய வழியில் நிறைவேற்றிக்கொண்டு, அதே சமயம் 360 சிலைகளையும், எண்ணற்ற கபுருகளையும், (சமாதி) அடையாளச் சின்னங்களையும், முன்னோர்களையும், அன்று அவர்களை ஆட்டிப்படைத்த மதகுருமார் களான தாருந்நத்வா ஆலிம்களையும் அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையில் இடைத்தரகர்களாகக் கொண்டு, அம்மதகுருமார்கள் நேர்வழி என்று பொய்யாகக் கூறி போதித்த மூட நம்பிக்கைகள், மூடச்சடங்கு சம்பிரதாயங்கள், அறிவுக்கே பொருந்தாத அனாச்சாரச் சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கி இருந்தனர். விரல் விட்டு எண்ணப்பட்ட ஒரு சிலரைத் தவிர எஞ்சிய பெருங்கொண்ட மக்கள் அனைவரும் பித்அத், குஃப்ர், ´ர்க் எனப் பெரும் இணை வைப்பிலும் மூழ்கி இருந்ததை யாரால் மறுக்க முடியும்? அல்லாஹ் அ.கு.3:103ல் கூறி இருப் பதுபோல் அன்றைய முஸ்லிம்கள் நரக விளிம்பில் நின்றிருந்தார்கள் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

அப்போது அல்லாஹ் தனது இறுதித் தூதரை அனுப்பி அவருக்கு வஹீ மூலம் இறுதி நெறிநூல் அல்குர்ஆனை இறக்கியருளி அவர்களில் அல்லாஹ் நாடியவர்களை மட்டும் முஸ்லிம்களாகத் தேர்ந்தெடுத்து அவர்களை நரகத்திலிருந்து காப்பாற்றினான். அன்றைய மதகுருமார்களான தாருந்நத்வா ஆலிம்களை நம்பி, அல்குர்ஆனை நிராகரித்தவர்கள் காஃபிர்கள் என அல்லாஹ்வால் அடையாளம் காட்டப்பட்டு நரகிற்குரியவர்கள் ஆனார்கள்.

அன்று இப்றாஹீம், இஸ்மாயீல்(அலைம்) சமூகத்தில் எப்படி மதகுருமார்களான தாருந்நத்வா ஆலிம்கள் திருட்டுத்தனமாகப் புகுந்து கொண்டு அன்றைய மக்களை வழிகெடுத்து நரகிற்கு இட்டுச் சென்றார்களோ அதேபோல் இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களது இந்த உம்மத்தில் மதகுருமார்களான மதரசா ஆலிம்கள் திருட்டுத்தனமாகப் புகுந்துகொண்டு இன்றைய  முஸ்லிம்களை  வழிகெடுத்து  நரகிற்கு  இட்டுச்  செல்கிறார்கள்.

அன்றைய அரபு நாட்டு முஸ்லிம்களிடம் காணப்பட்டது போல், அல்லாஹ்வே தங்களைப் படைத்த ஒரே இறைவனாக ஏற்று தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகளை இன்றைய முஸ்லிம்களில் ஒரு சிலர் நிறைவேற்றிக் கொண்டு, அதுவும் இறுதி நபி காட்டித்தந்த வழிவிட்டு இம்மதகுருமார் கள் காட்டும் வழியில் நிறைவேற்றிக் கொண்டு அதேசமயம் எண்ணற்ற தர்காக்களையும், (சமாதிகள்) அடையாளச் சின்னங்களையும், முன்னோர்களையும், இன்று இவர்களை ஆட்டிப் படைக்கும் மதகுருமார்களான மதரஸா ஆலிம்களையும் அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையில் இடைத்தரகர்களாகக் கொண்டு, இந்த மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள் நேர்வழி என்று பொய்யாகக் கூறி போதிக்கும் மூட நம்பிக்கைகள், மூடச்சடங்கு சம்பிரதாயங்கள், அறிவுக்கே பொருந்தாத அனாச்சாரங்கள், சம்பிரதாயங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். விரல் விட்டு எண்ணப்படும் ஒரு சிலரைத் தவிர எஞ்சிய பெருங் கொண்ட முஸ்லிம்கள் அனைவரும் பித்அத், குஃப்ர், சிர்க் எனப்படும் இறைவனுக்கு பெரும் இணை வைப்பில் மூழ்கிக் கிடக்கின்றனர். 

1446 வருடங்களுக்கு முன்னர் அரபு நாட்டு முஸ்லிம்களிடம் காணப்பட்ட பித்அத், குஃப்ர், சிர்க்குகளில் சிலை வணக்கத்தைத் தவிர எஞ்சியவை அனைத்தும் இன்றைய முஸ்லிம்களிடமும் சிந்தாது, சிதறாது அப்படியே காணப்படுகின்றன. அப்படியானால் இன்றைய முஸ்லிம்களிலும் மிகப் பெரும்பாலோர் நரக விளிம்பில் நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமுண்டா? இந்தப் பெரும்பாலோரில் அல்லாஹ் அருள்புரியும் வெகுசிலரே இம்மதகுருமார்களான மவ்லவி ஆலிம்களைப் புறக்கணித்து நேரடியாக அல்குர்ஆன், ஹதீதைப் பற்றிப் பிடிப்பவர்களே  ஈடேற்றம்  பெறுவார்கள்.

அடுத்து தங்களின் மத்ஹபு இமாமைத் தவிர மற்ற அனைத்துப் பிரிவாரும் அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையில் பிரிதொரு படைப்பையோ, முன்னோர்களையோ தங்களைப் பற்றி இறைவனிடம் பரிந்துரை செய்வதற்காக (வஸீலாவாக) இடைத்தரகர்களைப் புகுத்துகிறார் கள். தாங்கள் பெரும் பாவிகள், அல்லாஹ்வை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் தகுதி தங்களுக்கு இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையே இதற்குக் காரணம். இங்கு அவர்களின் அறிவீனமான பணிவு வெளிப்படுகிறதே அல்லாமல் மமதையோ ஆணவமோ வெளிப்பட வில்லை. 

பெரும்பாலான வீடுகளிலும் நீங்கள் பார்க்கலாம் பிள்ளைகள் நேரடியாக தகப்பனை நெருங்க அஞ்சுவார்கள். தாயின் பரிந்துரையைக் கொண்டே தங்களுக்கு வேண்டியவற்றை அடைந்து கொள்வார்கள். இங்குள்ள அனைத்து உதாரணங்களிலும் ஒருவருக்கு ஒருவர் தேவையுடையவர்களாகவே இருக்கிறார்கள். அதனால் ஒருத்தர் மற்றவருடைய பரிந்துரையை ஏற்கும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். இது மனித பலகீனம்.

இந்தப் பலகீனத்தை அல்லாஹ்வோடு இணைக்கக்கூடாது. அல்லாஹ் எவரின் தேவையும் இல்லாதவன். (அல்லாஹுஸ்ஸமது) அவனது அனுமதியின்றி யாரும் யாருக்காகவும் பரிந்துரை செய்யமுடியாது (.கு.2:255); அல்லாஹ்வையே முழுமையாக நம்பி அவனிடமே கேட்கவேண்டும் (2:186). அவன் நமது பிடரி நரம்பை விட நமக்கு நெருக்கமாக இருக்கிறான். (50:16) ஷைத்தானின் வலையில் சிக்கி அறியாதிருக்கிறார்கள். அதனால் அல்லாஹ்வுக்கு  இணை  வைக்கிறார்கள். 

குர்ஆன், ஹதீத் மட்டுமே மார்க்கம், தவ்ஹீத்வாதி, தவ்ஹீத் ஜமாஅத் என வாயளவில் கூறிக்கொண்டு அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளைப் புறக்கணிக்கும் இவர்கள் எப்படிப்பட்ட பாவிகளாக இருக்கமுடியும் என்பதை அ.கு.47:24 சொல்வது போல் தங்கள் உள்ளங்களுக்குப் பூட்டு போட்டுவிட்டு அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்பவர்களைத் தவிர மற்றவர்கள் சிறிது சிந்தித்தாலும்  நிச்சயம்  விளங்க முடியும்.

குர்ஆனிலும், ஹதீதிலும் இல்லாததவ்ஹீத்என்ற பதம் முதன்முதலாக அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. மதகுருமார்கள் என்ற இடைத்தரகர் இல்லாமல் இறைவனை ஒருமைப்படுத்தவே அவர் தவ்ஹீத் பதத்தைப் பயன்படுத்தியுள்ளார். அதன் பின்னர் இப்னு தைமிய்யா, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் போன்றோரும் அல்லாஹ்வை இடைத்தரகர் இல்லாமல் ஒருமைப்படுத்தக் கையாண்டுள்ளனர். மற்றபடி அவர்களில் யாரும் பெயராகப் பயன்படுத்தவில்லை என்பதே  உண்மையாகும்.

மேலும் மேலே நாம் குறிப்பிட்ட அனைத்துப் பிரிவினரும் அல்லாஹ்வை நாம் நேரடியாக நெருங்கமுடியாது என்ற தாழ்வு மனப்பான்மையுடன் அவர்களிடம் பணிவு காணப்படுகிறதே அல்லாமல் மமதை ஆணவம் அவர்களிடம் இது விசயத்தில் இல்லை. அதற்கு மாறாக தவ்ஹீத்வாதியிடம் பணிவுக்குப் பதிலாக மமதையே ஆணவமே மேலோங்கி இருக்கிறது. நீ என்ன அல்லாஹ்வா? மறுமைக்கென்று தீர்ப்பை ஒத்திவைப்பதற்கு நான் இவ்வுலகிலேயே  தீர்ப்பளிக்கிறேன்  பார்!

நாங்கள் தவ்ஹீத்வாதிகள், நேர்வழி நடந்து சுவர்க்கம் நுழைவோர், எஞ்சியோர் வழிகேடர்கள். அவர்களும் நாங்களும் சமமாக முடியுமா? என்று அகந்தை பேசியே தவ்ஹீது ஜமாத் என்ற தவறான பெயரிட்டு அழைக்கின்றனர். 

இறைவாக்கு 49:16 சொல்வதுபோல் அல்லாஹ்வுக்கே தீன் மார்க்கத்தைக் கற்றுக்கொடுத்து, இறைவாக்கு 42:21 சொல்வது போல் அல்லாஹ்வுக்கு மேல் அல்லாஹ்வாகி (நவூதுபில்லாஹ்) இணை வைக்கும் அனைத்துப் பிரிவினரையும் விட மிகமிகக் கொடிய இணையாளர்களாகி மிகக் கொடிய முஷ்ரிக்  ஆகின்றனர்.

Previous post:

Next post: