ஜமாத் அல் முஸ்லிமீன்….
சுன்னத் வல் ஜமாத்தாக மாறியது சரியா?
S. ஹலரத் அலி
நபி(ஸல்) அவர்களின் காலத்திலிருந்து நான்கு கலீஃபாக்கள் வரை முஸ்லிம்கள் “ஜமாத் அல் முஸ்லிமீன்” என்றே அறியப்பட்டனர். அதாவது, “முஸ்லிம்களின் சமுதாயம்” என்று பொருள். அப்போது எந்தப் பிரிவுகளோ அல்லது தனித்துவமான பெயர்களோ இருக்கவில்லை. “சுன்னத் வல்ஜமாத்” என்ற பெயர் பிற்காலத்தில் உருவானது. இதற்கான காரணங்களையும், எப்பொழுது உருவானது என்பதையும் விரிவாகப் பார்ப்போம்.
சுன்னத் வல் ஜமாத் என்ற பெயர் உருவாகக் காரணம் :
நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு, இஸ்லாமிய சமுதாயத்தில் தலைமைத்துவம் யார் ஏற்க வேண்டும் என்ற கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு சாரார் நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த அலி(ரழி) அவர்களை ஆதரித்தனர். அவர்கள் “துஆ” என்று அழைக் கப்பட்டனர். மற்ற பெரும்பான்மையான முஸ்லிம்கள், நபி(ஸல்) அவர்களின் வழியையும், சமுதாயத்தின் ஒருமித்த கருத்தையும் (ஜமாஅத்) பின்பற்றி அபூபக்கர்(ரழி) அவர்களை முதல் கலீஃபாவாக ஏற்றுக் கொண்டனர்.
காலப்போக்கில், இந்த இரண்டில் குழுக்களுக்கிடையிலான வேறுபாடுகள் அரசியல் மற்றும் இறையியல் ரீதியாக தீவிரமடைந்தன. இந்தச் சமயத்தில்தான், பெரும்பான்மையான முஸ்லிம்களை, பிரிவினை கலகம் செய்த கவாரீஜ்களிலிருந்தும் துஆக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக “அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாத்” (அதாவது, நபி வழியையும் சமுதாயத்தின் ஒருமித்த கருத்தையும் பின்பற்றுபவர்கள்) என்ற பெயர் பயன்படுத்தப்படத் தொடங்கியது.
“சுன்னத் வல் ஜமாத்” என்று பெயர் குறிப்பிடுவது:
சுன்னத் : நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய நபிவழி.
ஜமாத் : முஸ்லிம் சமுதாயத்தின் ஒருமித்த கருத்து மற்றும் பெரும்பான்மையான அறிஞர் களின் வழிமுறை.
ஏனெனில் கவாரீஜ்களும், அதன் வழி வந்த துஆக்களும் ஸஹாபாக்களை காஃபிர் என்று அறிவித்து விட்டனர். ஆகவே நபிதோழர்கள் அறிவிக்கும் ஹதீத்களை ஏற்க மறுத்துவிட்டு, தாங்களே அசல் முஸ்லிம் என்று பிரச்சாரம் செய்தனர்.
இந்த பிரிவினைவாத முஸ்லிம்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக அக்கால மார்க்க அறிஞர்கள் தங்களை சுன்னத்தை கடைப்பிடிக்கும் முஸ்லிம்கள் என்ற பொருளில்…. “சுன்னத் வல் ஜமாத்” என்ற பெயர் தாங்களாக வைத்துக்கொண்டனர்.
“சுன்னத் வல்ஜமாத்” என்ற பெயர் ஒரே நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மாறவில்லை. இது படிப்படியாக 9ஆம் மற்றும் 10ஆம் நூற்றாண்டுகளில் (ஹிஜ்ரி 3ஆம் மற்றும் 4ஆம் நூற்றாண்டுகளில்) முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.
இந்தக் காலகட்டத்தில், இஸ்லாமிய அறிஞர்கள் நபிவழி மற்றும் சமுதாயத்தின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இஸ்லாமிய சட்டத்தையும் இறையியலையும் முறைப்படுத்த தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். துஆக்களின் தனித்துவமான கருத்துக்கள் வலுப்பெறத் தொடங்கியிருந்தன. எனவே, தங்களை அவர்களின் வழிமுறையிலிருந்து வேறுபடுத்திக் காட்டவும், நபி(ஸல்) அவர்களின் உண்மையான போதனைகளையும், சமுதாயத்தின் ஒற்றுமையையும் நிலைநாட்டவும் இந்தப் பெயர் அக்கால பெரும்பான்மையான முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சில வரலாற்றாசிரியர்கள் 118ம் நூற்றாண்டை (ஹிஜ்ரி 5ஆம் நூற்றாண்டு) சுன்னத் வல் ஜமாத் என்ற அடையாளத்தின் முழுமையான உருவாக்கமாகக் கருதுகின்றனர். இந்தக் காலகட்டத்தில், சுன்னி இஸ்லாத்தின் முக்கிய இறையியல் பள்ளிகளான அஷ்அரிய்யா மற்றும் மாதூரிதிய்யா போன்றன செழித்தோங்கி, சுன்னி முஸ்லிம்களின் நம்பிக்கை களையும் கோட்பாடுகளையும் மேலும் வலுப்பெற்றன.
சுருக்கமாக :
நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்து நான்கு கலீஃபாக்கள் வரை முஸ்லிம்கள் “ஜமாத் அல் முஸ்லிமீன்” என்றே அறியப்பட்டனர். பிற்காலத்தில் துஆக்களுடனான வேறுபாடுகள் வலுப்பெற்றபோது, பெரும்பான்மையான முஸ்லிம்கள் தங்களை நபிவழியின் (சுன்னத்) மற்றும் சமுதாயத்தின் ஒருமித்த கருத்தின் (ஜமாத்) அடிப்படையில் அடையாளப்படுத்திக் கொள்ளத் தொடங்கினர்.
இந்த “சுன்னத் வல் ஜமாத்” என்ற பெயர் 9ஆம் மற்றும் 10ஆம் நூற்றாண்டுகளில் முக்கியத்துவம் பெறத் தொடங்கி 11ஆம் நூற்றாண்டில் முழுமையாக நிலைபெற்றது. இது நபி(ஸல்) அவர்களின் போதனைகளையும், முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமையையும் பாதுகாக்கும் ஒரு அடையாளமாக உருவானது. ஆனால் பெயர் மாற்றம் செய்தது ஏற்புடையது அல்ல. நபி(ஸல்) வைத்த பெயர் மறைக்கப்படுவது தவறான வழியை ஏற்படுத்திவிடும்.
ஆகவே அன்று நபி(ஸல்) அவர்களால் மதீனாவில் துவக்கப்பட்ட “ஜமாத் அல் முஸ்லிமீன்” என்ற முஸ்லிம்கள் கூட்டமைப்பே இன்று வரை மஹல்லா பள்ளிவாசல்களில் பெயர் மாற்றம் பெற்று தொடர்கிறது.
இதனால் நான் உலகெங்கும் அதான் ஒலி கேட்டதும் அவரவர் ஊர் பள்ளி மஹல்லாவிற்கு தொழுவதற்கு மக்கள் கூடுகிறார்கள். ரமழான் மாதம் வந்ததும் ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மாவும் நோன்பை பிடிக்கிறார்கள்.
இந்த உம்மத்தை விட்டு வெளியேறி தனி ஜமாத் தனிப்பள்ளி, தனித்தலைமை உள்ளவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய ஃபிர்க்கா பிரிவினைவாதிகள் ஆகும். இவர்கள் தங்களை “தவ்ஹீத்‘ என்ற பட்டத்தை தலை மேல் தூக்கிக்கொண்டு திரிந்தாலும், சமுதாயத்தை பிரித்த பாவிகளாகவே கருதப்படுவார்கள்.
ஏனெனில் இஸ்லாமிய கொள்கைப்படி தங்களை “அஹ்லே தவ்ஹீத்!’ என்று சொல்லிக் கொண்டும் தீர்ப்பளிக்கும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே! “லாஹுக்கு முல்லாஹ்!’ என்று சொல்லி அலீ(ரழி), மற்றும் முஆவியா (ரழி) ஆகிய இருவருமே காபிர் என்று தீர்ப்பளித்தார்கள்.
இந்த அசல் ஆரம்ப தவ்ஹீதுகளான கவாரீஜ்களையே நபி(ஸல்) அவர்கள் நரகத்தின் நாய்கள்! என்றும் அக்காலத்தில் நான் வாழ்ந்தால் அவர்களைக் கொல்வேன் என்றும் கூறினார்கள்.
அந்த கவாரீஜ்கள் வழிமுறையை பின்பற்றி பிரிவினை ஃபிர்க்கா ஜமாத் அமைத்தவர்களே இன்றைய ஜாக், ததஜ, மற்றும் INTJ, NTF, ATJ, etc..
சுன்னக் ஜமாத் ஆலிம் உலமாக்கள் சிர்க் பித்அத் செய்கிறார்கள் என்பதை மக்களுக்கு சுட்டிக்காட்டி திருத்த வேண்டியவர்கள். அந்த ஜமாத்தில் அவர்களோடு ஒருவராக இருந்தே சத்தியத்தை சொல்ல வேண்டுமே தவிர.
ஹராமான புது பிரிவினை இயக்கம் ஆரம்பித்து ஒன்றுபட்ட முஸ்லிம் உம்மத்தை தக்லீது–தவ்ஹீது என இரண்டாக பிளக்கும் வேலையை செய்யக்கூடாது.
இந்த ஹராமான பிரிவினைக்கு இஸ்லாத்தில் ஆதாரம் இல்லை “”எவர்கள் தம் மார்க்கத்தை பலவாறாக பிரித்து விட்டனரோ அவர்களுடன் நபியே! உங்களுக்கு ஒரு சம்பந்தமுமில்லை!” என்று அல்லாஹ் தெளிவு படுத்திவிட்டான்.
ஒரு முஸ்லிம் சமுதாயம் அறியாமையின் காரணமாக இணை வைத்து சிர்க், பித்அத் செய்தாலும், அந்த உம்மத்தை விட்டு வெளியேறி தவ்ஹீது தனி இயக்கத்தை கட்டமைக்க எந்த ஒரு நபிக்கும் அதிகாரமில்லை என்பதையே மூஸா(அலை), ஹாரூன்(அலை), சாமிரீயின் காளை கன்று வழிபாடு வசனங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
ஒரு முஸ்லிம் சமுதாயம் இணை வைப் பதை பித்அத் செய்வதை அல்லாஹ்வுக்கு மாறு செய்வதை காரணமாக வைத்து, அம் மக்களை விட்டு பிரிந்து செல்வதற்கு ஒரு நபிக்கே அதிகாரம் இல்லை என்பதையே மீன் வயிற்றில் சிறை வைக்கப்பட்ட யூனுஸ் (அலை) நபியின் சரித்திரம் கூறுகிறது.
நபி(ஸல்) அவர்களின் 23 வருட நபித்துவ பயணத்தில் அவர்களின் பிரச்சாரம் முழுவதும் ஏகத்துவ ஒரு இறை வணக்கத்தையே முன்னிலைப்படுத்தினார்கள்.
எவரொருவர் ஒன்றுபட்ட முஸ்லிம் ஜமாத்தை விட்டு வெளியில் போய் விடுகிறாரோ, அவர் இஸ்லாம் என்ற கயிற்றை தம் கழுத்திலிருந்து கழட்டிவிட்டார்.
மேலும் அவரது மரணமும் ஜாஹிலீய மரணமாகவே இருக்கும் என்பதே நபி(ஸல்) முன்னறிவிப்பு.
கியாமத் நாள் வரை இருக்கக்கூடிய “அல்ஜமாத்” ஜமாத்அல் முஸ்லிமீன், முஸ்லிம் ஜமாத் ஹிஜ்ரி 300க்குப் பின் பெயரளவில் மாற்றப்பட்ட சுன்னத் வல் ஜமாத் என்று சொல்லக்கூடிய “ஜமாத்துல் முஸ்லிமீன்” எனும் முஸ்லிம் கூட்டத்திலேயே அவரவர் மஹல்லா தலைமையின் கீழ் ஒன்றிணைந்து முஸ்லிம்கள் அனைவரும் செயல்படுவோம். நன்மைகளை ஏவுவோம்! தீமைகளை தடுப்போம்!!
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து(த் தானும்) நற்செயல்களைச் செய்து “நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்டவர்களில் முஸ்லிம்களில் ஒருவன்” என்றும் கூறுகிறாரோ, அவரைவிட அழகான வார்த்தை கூறுபவர் யார்? (அல்குர்ஆன் 41:33)