நபிகால இஸ்லாமிய ஒற்றுமை
முஹிப்புல் இஸ்லாம்
மறு பதிப்பு :
2025 மே மாத தொடர்ச்சி….
கண்மூடித்தனத்திடம் மாட்டிக் கொள்வது சுலபம் விடுபடுவதுதான் கடினத்திலும் கடினம். ஒரு முறை கண்மூடித்தனத்தின் பிடியில் சிக்கிக்கொண்டவர்கள். காலம் கடந்து அதன் கெடுதியை உணர்ந்து கொள்கின்றனர். ஆனால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. தவியாய் தவிக் கிறார்கள். சில நேரங்களில் கண்மூடித் தனத்திலிருந்து விடுபட செய்யப்படும் அரிய முயற்சிகளும் தோல்வியைத் தழுவுகின்றன. அதையும் மீறி சிலர் ஒன்றி ரண்டு வியங்களில் கண்மூடித்தனத்திலிருந்து மீள்கின்றனர். அதுவும் நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை. தற்காலிகமாய் நீர்த்து விடுகிறது. குடும்ப நிர்பந்தம், சமுதாய நிர்பந்தம், பணிபுரியும் இடங்க ளில் ஏற்படும் நிர்பந்தம். என்று தவிர்க்க முடியாத நிர்பந்தங்களால், மீண்டும், மீண் டும் மனிதர்கள் கண்மூடித்தனத்திடம் தஞ்சம் அடைந்து விடுகிறார்கள். இந்த கண்மூடித்தனத்தின் கொடிய பிடியிலிருந்து முழுமையாக தப்பித்தவர் யாராவது உண்டா? என்று மனித சமுதாயம் முழுமையும் தேடினாலும், அங்கொன்றும், இங்கொன்றும் விரல் விட்டெண்ணும் ஒரு சிலரைக் காண்பது கூட அரிதானதே!
கண்மூடித்தனத்தின் ஆதிக்கப் பிடியிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொண்டோர் யாரும் இல்லையா? நபி ஆதம்(அலை) அவர்கள் முதல் இறுதி இறைத் தூதர் நபி(ஸல்) அவர்கள் வரை யாரெல் லாம் இறைவன் அருளியதைப் பின்பற்றி வாழ்ந்தார்களோ, வாழ்கிறார்களோ, இன்ஷா அல்லாஹ், இனியுக முடிவு நாள் வரை, வாழப்போகின்றார்களோ அவர்கள் மட்டுமே கண்மூடித்தனத்தின் நச்சுப் பிடியிலிருந்து விடுபட்டவர்கள். இப்படிப்பட்டவர்கள் நபி ஆதம்(அலை) அவர்கள் முதல் யுக முடிவு நாள் வரை எண்ணிக்கையில் மிகக் குறைவாகவே இருப்பார்கள். இதையும் அல்லாஹ் கோடிட்டுக் காட்டத் தவறவில்லை.
மனித சமுதாயம் குறிப்பாக முஸ்லிம்களே!
1. உங்களுக்கு உங்கள் இறைவனால் அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்.
2. மற்றவர்களைப் பாதுகாவலர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்.
3. உங்களில் குறைவானவர்களே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (சிந்தனைக்கும், படிப்பினைக்கும் உரிய இறைவாக்குகள். அல்குர்ஆன் 7:3)
கண்மூடித்தனம் ஒரு தெளிவாக்கம் :
கண்மூடித்தனம் என்றால் என்ன? நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு எதையும் பின்பற்றவில்லையே…? கண்ணை மூடிக்கொண்டு எதையாவது பின்பற்ற முடியுமா? என்ன அர்த்தமில்லாத பிதற்றல்? என்று கண்மூடித்தனத்தைக் கண்டிக்கும்போது, கண்டனக் கணைகள் தொடுப்போரும் பெருகி வருகிறார்கள். கண்மூடித்தனத்தின் கெடுதிகள் சிறிதேனும் உணரப்பட்டால் கூட பக்கம் பக்கமாய், தொகுதி தொகுதியாய் எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் அது எமது நோக்கமல்ல. மாறாக, படைப்பினங்களின் எஜமானன் அல்லாஹ். இரத்தின சுருக்கமாய்.
1. அல்லாஹ் அருளியதற்கு மாற்றமாய் மனித சமுதாயத்தால் பின்பற்றப்படும் அனைத்தும் கண்மூடித்தனம் என்று நம் (மனித சமுதாயத்து)க்கு தெளிவுபடுத்து கிறான்.
“(நபியே!) நீர் கூறுவீராக! (பிரகடனப்படுத்திவிடுவீராக!) அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் இருக்கின்றன. (என்றும்) மறைவானவற்றை நான் அறிகிறேன் என்று(ம்) உங்களிடம் நான் கூறவில்லை. மேலும் நான் ஒரு மலக்கு என்றும் உங்களிடம் கூறவில்லை.
எனக்கு (இறைவனால் வஹி மூலம்) அறிவிக்கப்படுவதையே நான் பின்பற்றுகிறேன். (மேலும் நபியே!)
நீர் கூறுவீராக! குருடனும் பார்வையுள்ளவனும் சமமானவர்களா? பின்னர் நீங்கள் ஏன் சிந்திப்பதில்லை? (சிந்தனைக்கும் படிப்பினைக்கும் உரிய இறைவாக்குகள் அல்குர்ஆன் 6:50)
இறைவன் அருளியதைச் சிந்தித்து பின்பற்றுபவர்களே! கண்மூடித்தனத்திலிருந்து விடுபட முடியும் என்பதை அல்லாஹ்.
“குருடனும் பார்வையுள்ளவனும் சமமானவர்களா? பின்னர் நீங்கள் ஏன் சிந்திப்பதில்லை …..?’ என்பதன் மூலம் உணர்த்துகிறான்.
கண்மூடித்தனம், அதிலிருந்து விடுபடுவது எப்படி?
ஒரு கொள்கையை அல்லது செயலைப் பின்பற்றும்போது நடைமுறைப்படுத்தும்போது, இது இறைவன் அருளியது தானா? என்று சிந்திக்காமல்,
1. எங்கள் மூதாதையர்கள் இதை செய்தார்கள் என்பதற்காக நாங்கள் இதை ஏற்று செயல்படுத்துகிறோம் என்பதும்.
2. எல்லோரும், பெரும்பான்மையானவர்கள், அதை செய்வதால் நாங்களும் அப்படியே செய்கிறோம் என்பதும்,
3. எங்கள் அறிஞர்கள், பெரியவர்கள், தலைவர்கள், சமுதாயத்தவர்கள் சரிகண்டதை அப்படியே நாங்களும் சரிகண்டு செய்து வருகிறோம் என்பதும்,
4. எங்கள் மனது இதை சரிகண்டுவிட்டதால் அதை அப்படியே ஏற்று செயல்படுகிறோம் என்பதும், கண்மூடித்தனத்தின் பல்வேறு வகைகளாகும்.
அவைகளே கண்மூடித்தனம் என்பதற்கும் விளக்கமாய் அமைந்து விடுகின்றன. இது நாம் வகைப்படுத்தியதென்றும் யாரும் தப்பு கணக்கு போட்டுவிட வேண்டாம். அல்லாஹ் இந்த கண் மூடித்தனத்தின் பல்வேறு வகைகள் அல்குர்ஆனில் பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டுவதில் சிலவற்றை… மேலே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அல்லாஹ் கண்மூடித்தனத்தைக் கண்டித்து, கண்டனமும் தெரிவித்து, கண்மூடித்தனத்தின் பக்கம் மனித சமுதாயம் நெருங்கிவிடாமல் தடுக்கிறான். அதையும் மீறி கண்மூடித்தனத்திடம் தஞ்சமடைந்து விட்டால் அதன் பின் விளைவுகள் எப்படியிருக்கும்? என்பதைக் கடுமையாக எச்சரித்துள்ளான். அவைகள் முறையே அ.கு.2:170, 6:116, 33:66, 67,68, 25:43
கண்மூடித்தனத்தில் மூழ்கிக் கிடப்போர் யார்?
அல்லாஹ் அருளியதைக் கேட்காமலும், பார்க்காமலும் இருப்பவர்களே, சிந்தனையற்றவர் கள், இவர்கள்தான் கண்மூடித்தனத்தில் மூழ்கிக் கிடப்போர், இப்படி கண்மூடித்தனத்தில் மூழ்கிக் கிடப்போர், வழிகேட்டிலிருந்து விடுபட முடியாது.
“எனவே (நபியே!) நீர் அல்லாஹ்விடமே நம்பிக்கை வைப்பீராக. நிச்சயமாக நீர் தெளிவான உண்மையில் இருக்கின்றீர். நிச்சயமாக இறந்தவர்களை உம்மால் செவியேற்க செய்ய முடியாது. செவிடர்களையும் (உமது) அழைப்பைச் செவியேற்குமாறு செய்யமுடியாது. (குறிப்பாக) அவர்கள் புற முதுகு காட்டி திரும்பிவிடும்போது,
மேலும் உம்மால் குருடர்களுக்கும் அவர்களின் வழிகேட்டிலிருந்து நேர்வழிகாட்ட முடியாது. எமது (அத்தாட்சியாகிய இறை)வாக்குகளிடத்து ஈமான் கொள்பவர்களை மட்டுமே நீர் செவியேற்குமாறு செய்கின்றீர். மேலும் அவர்கள்தான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து கட்டுப்பட்டு நடக்கும்) முஸ்லிம்கள் ஆவார்கள். சிந்தனைக்கும் படிப்பினைக்கும் உரிய இறைவாக்குகள். (அ.கு.27:79-81)
அல்லாஹ்வின் அருள்வாக்குகள் அடங்கிய, அவனுடைய இறுதி இறைவேதம், அல்குர்ஆனை ஏற்று, அதனை கற்று செவிமடுப்பவர்கள் தான், கண்மூடித்தனத்தி லிருந்து மீட்சி பெற்றவர்கள்.
“எமது வாக்குகளிடத்து ஈமான் கொள்பவர்களை மட்டுமே நீர் செவியேற்குமாறு செய்கின்றீர் என்ற அல்லாஹ்வின் வாக்கு உறுதி செய்கிறது.
இப்போது சிந்திப்போம் !
நம் சிந்தனை எந்த பொருளியலைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கிறதோ அந்த பொருளியல் சம்மந்தப்பட்டவைகளில் யாராவது இதை செய்துள்ளார்கள் என்று எதையாவது செய்து பாதிக்கப்பட்டுவிட்டால் அதன் பின்விளைவை இம்மையில் இனம் கண்டு கொள்கிறோம். மீண்டும் அதுபோன்று நிகழ்ந்து, நஷ்டம் ஏற்படாமலிருக்க என்ன நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமோ, அத்தகையவைகளில் நமது கவனத்தைக் கூர்மையாக்கிக் கொள்கிறோம். அதற்குப் பின் அதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதென்றால் ஒன்றிற்குப் பலமுறை ஆழ்ந்து சிந்திக்கிறோம். அலசி ஆராய்கிறோம் அதன் பின்னரே செயல்படுகிறோம். இதுபோன்று.
அல்லாஹ் அருளியதை வாழ்வு முழுவதும் பின்பற்றுவதற்கு என்ன முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம் என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். (ஒரு முயற்சியும் செய்யவில்லை என்பதை ஒத்துக்கொள்ள இன்னும் தயக்கமா? அல்லது வெட்கமா??
கண்மூடித்தனத்தால் சீரழிந்து கொண்டிருக்கும் மனித சமுதாயம் ஒரு பக்கம்! அந்த கண்மூடித்தனத்தில் இருந்து மனித சமுதாயத்தை மீட்க வேண்டிய கடமையும், பொறுப்பும் வாய்ந்த முஸ்லிம் சமுதாயம் மறுபக்கம், மற்றவர்கள் சீரழி கிறார்கள். கண்மூடித்தனத்தால், அதிலிருந்து விடுபட அவர்களுக்கு வழிகாட்டுதல் இல்லை. வழிகாட்டுதல் இருந்தும், முஸ்லிம் சமுதாயம் மற்றவர்கள் பார்த்து கைகொட்டி சிரிக்கும் வண்ணம் கண்மூடித்தனத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிற தென்றால், மற்றவர்களைக் காட்டிலும் முஸ்லிம்கள் மோசமான நிலையில் இருக்கிறார்கள் என்பதை தெளிவாய் உணர முடிகிறது. இறையருளியதைப் பின்பற்றுவதற்கு மாற்றமாய் கண்மூடித்தனத்தில் மூழ்கிக் கிடப்பதால் முஸ்லிம்கள் மறுமையில் அடையப்போகும் நஷ்டத்தை எதைக் கொண்டும் ஈடு செய்ய முடியாது. நவூதுபில்லாஹ். அல்லாஹ் காத்தருள்வானாக. இறை அருளியதைப் பின்பற்றாததன் பின் விளைவுகளை இன்றைய முஸ்லிம்கள் இம்மையிலும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை இன்று முஸ்லிம்கள் சரியாக உணரமால் இருக்கிறார்கள். (இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்! சிந்திப்போம்! சீர்பெறுவோம்!)