புதிய வக்ப் மசோதா திருத்தவா? திருடவா?

in 2025 மே

புதிய வக்ப் மசோதா திருத்தவா? திருடவா?

தற்பொழுது மீடியா, சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் மக்கள் மத்தியிலும் TRENDING  NEWS  (தலைப்புச் செய்தியாக) இருப்பது புதிய வக்ப் மசோதாவைப் பற்றியே. (இது சில வாரங்கள்தான், பின்பு இதற்கு முன்பு நடந்த பல விடயங்களை கடந்து போனது  போல் இதையும் கடந்து போய்விடுவார்கள்)

வக்ப் மசோதா இப்போதுதான் புதிய தாக திருத்தம் செய்யப்படுகிறது. இதற்கு முன்பு திருத்தம் செய்யப்படவே இல்லையா? என்றால் பலமுறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது  என்பதே  உண்மை.

ஆனால், இதற்கு முன்பு திருத்தம் செய்யப்பட்டதற்கும், இப்போது திருத்தம் செய்யப்படுவதற்கும் பல உள்நோக்கம் ஒன்றிய கூட்டணி அரசுக்கு தலைமை தாங்கும் பா... அரசுக்கு உள்ளது. எனவேதான் இது இப்போது பேசு பொருளாக   இருக்கிறது.

இந்தியாவில் ஆங்கில ஆட்சியாளர்களின் ஆட்சியின்போது 1913ஆம் ஆண்டு வக்ப் வாரியம் அமைக்கப்பட்டது. 1923ஆம் வருடம் வக்ப் சொத்துக்களை ஒழுங்குப்படுத்த முதன் முதலில் வக்ப் சட்டம்  இயற்றப்பட்டது.

அதன் பிறகு நமது நாடு விடுதலை அடைந்த பிறகு அந்தந்த மாநில அரசு களின் மூலமாக வக்ப் வாரியம் செயல்படுவதற்கு 1954ஆம் ஆண்டு வக்ப் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக  ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அத்தகைய சட்டத்தில் குறைபாடுகள் இருந்ததால் 1959, 1964, 1969 ஆண்டுகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மனிதன் இயற்றிய சட்டம்தானே, குறைபாடுகள் இருக்கத்தானே செய்யும். அத னால் 1995ஆம் ஆண்டு பல ஆய்வுகளுக்குப் பிறகு, புதிய சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டம் ஜம்மு காஷ்மீர் நீங்கலாக அனைத்து மாநிலங்களிலும், மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வந்தன.

ஆயினும் அருணாச்சல பிரதேசம், ஜார்கண்ட், மிசோராம், நாகலாந்து, சிக்கிம் மற்றும் அந்தமான் ஆகிய பகுதிகளில் இன்று வரை வக்ப் வாரியம் அமைக்கப்படவில்லை.

´யா பிரிவை சேர்ந்தவர்களின் வக்பு சொத்துக்கள் இருந்தால் (அவர்களுக்கு தனியே வக்ப் வாரியம் இல்லாததால்) ´யா பிரிவை சார்ந்த ஒருவர் வக்ப் வாரிய உறுப்பினராக இடம்பெற வேண்டும் என்று 1995ம் ஆண்டு சட்டம்  கூறுகிறது.

வக்ப்  சொத்துக்கள்  என்றால்  என்ன?

எந்தவொரு முஸ்லிமும் தனது அசையும், அல்லது அசையா சொத்தை (MOVABLE PROPERTY OR IMMOVABLE PROPERTY) இறைவனின் பொருத்தத்தை நாடி, தர்ம நோக்கத்திற்காகவும், நிரந்தர நன்மையை நாடியும் (ஸதக்கத்துல் ஜாரியா) அர்ப்பணிப்பு செய்த சொத்துக்கள் வக்ப் (அறக்கொடை)  ஆகும்.

அதாவது இஸ்லாமிய சமய, சமூகத்தினருக்கு பொருளாதார உதவி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது வக்ப் சொத்தாகும்.

இதன்மூலம் கல்விக் கூடங்கள், மருத்துவ மனைகள், விருந்தினர் இல்லங்கள், ஹாஸ்டல்கள், பள்ளிவாசல்கள், அடக்கத்தலங்கள் ஆகியவற்றுக்கு பொருளாதார உதவிகள் தங்கு தடையின்றி போய் சேரவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதி வைக்கப்படும் சொத்துக்கள் வக்பு சொத்துக்கள் ஆகும். இத்தகைய சொத்துக்களை நிர்வகிக்க ஒரு அமைப்பு தேவை என்பதால் வக்ப்வாரியம் தோற்றுவிக்கப்பட்டு அந்த அந்த மாநில அரசு கண்காணிப்பில் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையோர் நலத்துறையின் கீழ்  வக்ப்வாரியம்  செயல்படுகிறது.

அதாவது வக்ப் செய்யப்பட்ட சொத்துக்களின் இடம், வருமானம், அதன் மதிப்பு போன்ற சம்பந்தப்பட்ட தகவல்களை கொண்ட பதிவேட்டைப் (RECORD) பராமரித்தல்  ஆகும்.

வக்பு  சொத்துக்கள்  எத்தனை  வகைப்படும்?

1.  பள்ளிவாசல்கள், கல்லூரிகள், பொது கிணறு, சாலை, பாலம், கப்றுஸ்தான்கள், மற்றும் சில பொது நன்மையான செயல்களுக்காக பயன்படுத்தும் சொத்துக்கள் அறக் கொடைகள் பொது வக்ப் ஆகும்.

2.  பொதுநலனுக்காக பாதியும், குடும்ப நலனுக்காக பாதியும் கொடுக்கப்பட்ட அறக்கொடைகள் பொது வக்ப் பாதி,  தனி  வக்ப்  பாதி  எனப்படும்.

3. குடும்ப நலனுக்காகவும், உறவினர்களுக்காகவும் மட்டுமே நன்மை அளிக்க கூடிய வகையில் அறக்கொடைகள் செய்தவை  தனி  வக்ப்  (TRUST) ஆகும்.

மேற்கண்ட பிரிவுகளிலும், சட்டப் படியும் வக்ப் சொத்துக்கள் இருக்கும்போது இப்போது புதிய வக்ப் திருத்த (திருட)  மசோதா  ஏன்? 

இதுவரை மத்திய வக்ப் வாரிய குழு வினரும், மாநில வக்ப் வாரியக் குழுவினரும் சேர்ந்து நில ஆக்கிரமிப்பு மற்றும் நிதி முறைகேடுகளில் கோடிக்கணக்கில் ஈடுபட்டுள்ளதே  காரணமாகும். 

உதாரணமாக; கர்நாடகா வக்ப் வாரியம் மட்டும் சுமார் 2700 ஏக்கர் நிலத்தை முறை கேடாக தனி நபர்களுக்கு வழங்கியதால் அதில் சுமார் 2 டிரில்லியன் மதிப்பிற்கு ஊழல் நடைபெற்று வெளி உலகத்திற்கு  தெரிய  வந்துள்ளது. 

இதை பார்த்துக்கொண்டு ஒன்றிய கூட்டணி பா... அரசு சும்மா இருக்குமா?

நேர்மையானவர்கள்  அல்லவா?

எனவே புதிய திருத்த (திருட) மசோதாவை  கொண்டுவந்துள்ளார்கள்.

அதாவது இதுவரை நீங்கள் மட்டும் திருடினது போதும். இனி அதில் எங்களுக்கும் பங்கு வேண்டும் என்பதற்காக வக்ப் வாரிய உறுப்பினர் பதவியில், முஸ்லிம் அல்லாதவர்களை (அவர்களுக்கு வேண்டியவர்களை) அமர்த்தி திருட முயற்சி செய்கிறது. இதுவும் இறைவனின் முஸ்லிம்களின் ஒற்றுமை இன்மையாலும், நேர்மை இன்மையாலும் செய்த ஏற்பாடே ஆகும்.

நாம் ஏன் தலைப்பில் புதிய வக்ப் சட்டம் திருத்தவா? திருடவா? என்பதற்கான காரணத்தை புதிய வக்ப் திருத்த சட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றை கீழே  குறிப்பிட்டுள்ளோம்.

வக்ப் வரையரைச் சட்டம் 1963னின் 107வது பிரிவு வக்ப் சொத்துக்களுக்குப் பொருந்தாது என்பது முந்தைய சட்டமாக இருந்தது. ஆனால் புதிய சட்ட திருத்தத்தில் இந்த பிரிவு இப்போது நீக்கப்பட்டி ருக்கிறது.

அதாவது சுமார் 12 ஆண்டுகள் வக்ப் சொத்தை ஆக்கிரமித்தும் அனுபவித்தும் வந்த மாநில அரசு அல்லது தனி நபர் அதனை 12 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்திருந்தாலோ அல்லது அந்த சொத்தை மீட்க வக்ப் வாரியம் எத்தகைய சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காதிருந்தால் அந்த சொத்தை ஆக்கிரமித்திருந்தவர்கள் உரிமை கோர இந்த புதிய சட்டம் வழிவகுக்கிறது. அதாவது ஆக்கிரமிப்பாளர்களுக்கே சொத்தை தாரை வார்க்கும் முயற்சி இது. ஆக்கிரமிப்பாளர்கள் சொத்தை சொந்தமாக்கவும், உரிமை கோரவும் இது வழி வகுக்கும் 

எனவேதான் நாம் சொல்கிறோம் இது திருத்தமில்லை! திருடவே!

அல்லாஹ்வே ஆட்சியின் அதிபதி. அவன் நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறான். அவன் நாடியோரிடமிருந்து (ஊழல் செய்தவரிடமிருந்து) ஆட்சியைப் பறித்து கொள்கிறான்.

தான் நாடியோரைக் கண்ணியப்படுத்துகின்றான். அவன் நாடியோரை இழிவுப்படுத்துகின்றான். அனைத்தும் அவன் வசமே உள்ளன. அவன் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்என்று கூறுவீராக.  .கு.3:26

Previous post:

Next post: