மறுமையில்….
சமாதி வழிபாட்டினரை விட தவ்ஹீத்வாதிகள் என தங்களை அழைத்துக் கொள்வோரே கொடிய முஷ்ரிக்கள்!
அபூ அப்தில்லாஹ்
இவ்வுலகில், உளப்பூர்வமாக நம்பிக்கை கொண்டிருந்தாலும் உதட்டளவில் நம்பிக்கை கொண்டிருந்தாலும், முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் செயல்களான சமாதி வழிபாடுகளில் ஈடுபட்டாலும், ஏன்? சபரிமலை, திருப்பதி போன்ற கோயில்களுக்கே சென்று வந்தாலும், அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில், அவுலியாக்கள், அஆபிரீன்கள், சதாத்துகள், இமாம்கள் போன்ற இறந்தவர்களை இடைத் தரகர்களாகக கொண்டாலும், மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள் மார்க்க மேதைகள், குர்ஆனையும், ஹதீத்களையும் கரைத்துக் குடித்தவர்கள் என்ற நம்பிக்கையில் உயிரோடு இருப்பவர்களை அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில் இடைத்தரகரகளாகக் கொண்டா லும், இவ்வுலகில இவர்கள் அனைவரையும் முஸ்லிம்களாக ஏற்று, 21:92, 23:52 இறைக் கட்டளைகளுக்கு அடிபணிந்து சமுதாய ஒற்றுமையைக் கட்டிக் காப்பது, மறுமையில் அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று சுவர்க்கம் நுழைய விரும்புவோரின் கடமையாகும்.
ஆயினும் அவரவர்களின் செயல்களுக் கேற்றவாறு அணுவளவும் அநீதி இழைக்கப்படாமல் மறுமையில் மட்டுமே யாசீன்: 36:59 இறைவாக்கு கூறுவது போல் சுவர்ககம் செல்லும் முஸ்லிம், நரகம் புகும் முஷ்ரிக் என அல்லாஹ் வால் தீர்ப்பு அளிக்கப்படும். இந்த உண்மையை 10:54, 19:39, 39:69,75, 40:78 போன்ற குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. அவர்கள் எப்படிப்பட்ட கொடிய பாவிகளாக, முஷ்ரிக்களாக இருந்தாலும் அவர்களைப் பற்றிய இறுதித் தீர்ப்பு நாளை மறுமையில் தான் அல்லாஹ்வால் அளிக்கப் படும். மதிகெட்ட மனிதன் அவசரப்படுவது போல் அல்லாஹ் இவ்வுலகிலேயே இறுதித் தீர்ப்பை அளிப்பதாக இருந்தால் அவர்களது அஜல் –காலம் முடிவு பெற்றே இருக்கும். ஆனால் அவர்களது வழிகேட்டிலேயே தட்டழிந்து அலையுமாறு நாம் விட்டு வைக்கிறோம் என்று அத்தியாயம் யூனூஸ் : 10:11, அந்நஹ்ல்: 16:61, கஹ்ஃபு: 18:58 வசனங்களில் எச்சரிக்கிறான் அல்லாஹ்.
இவ்வுலகிலேயே முஸ்லிம் அல்லது காஃபிர் என இறுதித் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் இறைவனின் இறுதித் தூதருக்கே இல்லை என அத்தூதரையே பகிரங்கமாக அறிவிக்க ஆன்ஆம்: 6:58 இறைவாக்கில் உத்தரவிடுகிறான் அல்லாஹ்.
அதற்கு மேலும் முழு அதிகாரமும் பெற்ற இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ்வே முஸ்லிம் என்றோ காஃபிர் என்றோ தீர்ப்பளிப்பதை இறுதித் தீர்ப்பு நாளாகிய நாளை மறுமைக்கென்று ஒத்தி வைத்திருப்பதாக 10:19, 41:45, 42:14,21 ஆகிய நான்கு வசனங்களில் திட்டமாக அறிவித்துள்ளான்.
இத்தனை குர்ஆன் வசனங்களைக் கொண்டு இவ்வளவு தெளிவாக, பகிரங்கமாக நம்மைப் படைத்த நமது எஜமானனான அல்லாஹ்வே திட்டமாக அறிவித்திருக்கும் நிலையில் அற்ப அறிவு படைத்த அல்லாஹ் வின் அடிமைகளான மனிதர்களில் உள்ளவர்கள் இந்த அனைத்து குர்ஆன் வசனங்களையும் 3:187 இறைவசனம் கூறுவது போல் துச்சமாக எண்ணி முதுகுக்குப் பின்னால் எறிந்துவிட்டு, முஸ்லிம்கள் என்ற நிலையில் முஸ்லிம் சமு தாயத்தில் வாழ்ந்து, மரித்து, தொழ வைக்கப்பட்டு முஸ்லிம் மையவாடியில் அடக்கப்படு கிறவர்களை முஸ்லிம்கள் இல்லை; காஃபிர் என இவ்வுலகிலே ஃபத்வா–தீர்ப்புக் கொடுத்து அவர்கள் பின்னால் நின்று தொழக்கூடாது. அவர்களுக்காகத் தொழ வைக்கக்கூடாது. அத்தொழுகையில் கலந்து கொள்ளக்கூடாது என்று ஆணவத்துடன், தற்பெருமையுடன் கூறுகிறவர்கள் எத்தகைய கொடும் பாவிகளாக, நாளை மறுமையில் கொடிய முஷ்ரீக்களாக எழுப்பப்படுவார்கள் என்பதை மேலே எடுத்தெழுதியுள்ள குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் நேரடியாக, சுய சிந்தனையுடன் படித்து அறிகிறவர்கள் நிச்சயம் உணரமுடியும்.
” எவர் நமது தொழுகையைத் தொழுகிறாரோ, நமது கிப்லாவை முன்னோக்கிறாரோ, நாம் அறுத்ததைச் சாப்பிடுகிறாரோ அவர் முஸ்லிம்; அவர் அல்லாஹ்வினதும், அல்லாஹ்வின் தூதரினதும் பாதுகாப்பில் உள்ளார். எனவே இந்தப் பாதுகாப்பில் இருப்பவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வது கொண்டு, அல்லாஹ்வுக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்.
இன்னொரு அறிவிப்பு இவ்வாறு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
அப்படியானால் அவர் ஒரு முஸ்லிம், மற்ற முஸ்லிம்களுக்கும் அனைத்து உரிமைகளும், கடமைகளும் அவருக்கும் உண்டு.
அனஸ்(ரழி), புகாரீ, (ர.அ.391,392,393) அபூதாவூது, திர்மிதி, இப்னு மாஜ்ஜா, தாரமி, அஹ்மத்.
மேலே கண்ட இறைவாக்குகளுக்கு அடிபணிந்து இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கை இதுவாகும்; காரணம் என்ன?
22:78ல் மனிதப் படைப்பின் ஆரம்பத்திலிருந்தே இந்த உம்மத்திற்கு “முஸ்லிம்கள்” எனப் பெயர் சூட்டியதாக அல்லாஹ் கூறுகிறான். 41:33ல் நபிமார்கள் செய்த அழைப்புப் பணியைச் செய்பவர்களும் தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்றே கூற வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். இப்போது சிந்தியுங்கள்!
ஒரு பெற்றோர் தாங்கள் பெற்ற பிள்ளைக்கு “அப்துல்லாஹ்” என்ற அழகிய பெயரைச் சூட்டியுள்ளனர். அவன் வளர்ந்து வாலிபமான பின்னர், இஸ்லாத்திற்கு முரணான சகல பித்அத், குஃப்ர், சிர்க் முதல் பஞ்சமா பாவங்கள் அனைத்தையும் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அதனால் அவனை “அப்துல்லாஹ்” இல்லை என்று சொல்பவன் அறிஞனா? மூடனா? அல்லது அப்துல்லாஹ் என்ற பெயருள்ள இன்னொருவன் குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் முற்றிலும் பொருத்தமான செயல்களைச் செய்கிறவன், “அப்துல்லாஹ்” என்ற பெயருடையவன் அனைத்து பித்அத், குஃப்ர், சிர்க், பஞ்சமா பாவங்கள் அனைத்திலும் மூழ்கி இருக்கிறான். அதனால் அவனிலிருந்து என்னை வேறுபடுத்திக் காட்டவேண்டும் எனக் கூறி “அப்துல்லாஹ்” என்ற தனது பெயரை வெறுத்து பிரிதொரு பெயரை தானாகச் சூட்டிக் கொண்டால் அவனை அறிவாளி என்போமா? வடிகட்டிய மூடன் என்போமா? சிந்தித்துச் சொல்லுங்கள். அப்படிப்பட்ட வடிகட்டிய மூடர்களாகத் தான் அல்லாஹ் மனித குல ஆரம்பத்திலி ருந்தே சூட்டிய “முஸ்லிம்கள்” என்ற மிக அழகியப் பெயரை, முஸ்லிம்கள் என்ற பெயரில் சிலர் பித்அத், குஃப்ர், சிர்க் மற்றும் பஞ்சமா பாவங்களில் ஈடுபடுகிறார்கள் என்று காரணம் கூறி, முஸ்லிம்கள் என்ற அல்லாஹ் சூட்டிய அழகியப் பெயரை வெறுத்து இவர்களாகக் கற்பனை செய்து குர்ஆன், ஹதீதில் இல்லாத பெயர்களைத் தங்களுக்குத் தாங்களே சூட்டிக் கொள்கிறவர்களும் வடிகட்டிய மூடர்களாக இருக்கிறார்கள் என்பதில் நேர்வழி நடுப்பவர்களுக்குச் சந்தேகம் இருக்கமுடியுமா?
7:3, 33:36, 59:7 குர்ஆன் வசனங்களை நிராகரித்து, 2:186, 50:16, 56:85 இறைவாக்குகளைப் புறக்கணிதக்து அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையில் இறந்துபோனவர்களையோ, உயிரோடிருப்பவர்களையோ இடைத்தரகர்களாகப் புகுத்துவார்கள் அனைவரும் நாளை மறுமையில் முஷ்ரிக்குகளாகத் தான் எழுப்பப்படுவார்கள் என்பதில் சந்தேகமுண்டா?
இப்படி குர்ஆன், ஹதீத் ஆதாரங்களைக் காட்டி அவர்கள் மறுமையில் அடையப்போகும் காஃபிர், முஷ்ரிக் நிலையையும், கொடிய வேதனைகளை, நரகத் தண்டனைகளை எடுத்துக்காட்டி கடுமையாக எச்சரிக்கலாம். ஆனால் இவ்வுலகிலேயே முஷ்ரிக், காஃபிர் எனத் தீர்ப்பளித்துச் சமுதாயத்தைப் பிளவுபடுத்த நேர்வழி நடப்பவர்களுக்கு அனுமதி இல்லை.
அப்படி முஸ்லிம்களுக்கு காஃபிர் ஃபத்வா கொடுத்தால் இவ்வுலகில் முஸ்லிம்கள் என்று கூற யாரும் இருக்கமாட்டார்கள் எப்படி என்று பாருங்கள்!
மனித குலம் இடைத்தரகர்களாகக் கொள்ளும் பொருட்கள் வேறுபடுகிறதே அல்லாமல் இணை வைப்பு–சிர்க் என்ற நிலை ஒன்றுதான். எப்படி? நாத்திகர்கள் மார்க்ஸ், லெனின், பெரியார், கோவூர் போன்றோரை இடைத்தரகர்களாகக் கொண்டு இறைவ னுக்கு இணை வைக்கின்றனர். இந்துக்கள் கற்களையும், சிலைகளையும், கண்ட கண்ட படைப்புகளையும், அவதாரங்கள் என்றும் துணை தெய்வங்களாக நம்பி அவற்றை இடைத் தரகர்களாக்கி இறைவனுக்கு இணை வைக்கின்றனர்.
யூதர்கள் உஜைர்(அலை) அவர்களையும், கிறித்தவர்கள் ஈசா(அலை), குருமார்கள், துறவிகளையும், மற்றும் பல மதத்தினர் தங்களிடையே வந்து மறைந்த இறைத் தூதர் களையும் துணை தெய்வங்களாக்கி இறைவனுக்கு இணை வைக்கின்றனர். துஆக்கள் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு அலீ(ரழி) அவர்கள்தான் கலீஃபாக ஆகி இருக்க வேண்டும் என்ற பொய்க் கூற்றைச் சொன்னவர்களை இடைத் தரகர்களாக்கி இறைவனுக்கு இணை வைக்கின்றனர்.
சுன்னத் ஜமாஅத்தினரில் ஆக அடிமட்டத்திலுள்ளவர்கள் அவுலியாக்கள்–இறை நேசர்கள் என்ற பெயரால் இறந்து போனவர்களை வசீலா பரிந்துரைப்போர் என்ற மூட நம்பிக்கையில் அப்படிப்பட்டவர்களிடம் வேண்டுதல் வைப்பதன் மூலம் அவர்களை இடைத்தரகர்களாக்கி இறைவனுக்கு இணை (சிர்க்) வைக்கின்றனர். இவர்கள் பரேல்வி கொள்கை உடையோர். சுன்னத் ஜமாஅத் இன்னொரு பிரிவைச் சேர்ந்தவர்கள். பீர்முரீது என்று அத்துவைத சூபிஸ கொள்கையை அதாவது மனிதன் இறைவனுடன் ஒன்று கலக்க முடியும் (அத்துவைதம்) என்று நம்பி இமாம் கஸ்ஸாலி, இப்னு அரபி மற்றும் ஷைகுகளை இடைத்தரகர்களாக்கி இறைவனுக்கு இணை– சிர்க் செய்கின்றனர்.
அடுத்தப் படித்தரத்தில் உள்ள சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த தேவ்பந்த், தப்லீஃக் கொள்கையுடையோர் அவுலியாக்களிடம் நேரடியாக கேட்பது தான் சிர்க், அந்த அவுலியாக்கள் மற்றும் முன் சென்ற நாதாக்கள் பொருட்டால் அல்லாஹ்விடமே நேரடியாகக் கேட்பது இறைவனுக்கு இணை (சிர்க்) அல்ல என்ற மூட நம்பிக்கையில் இமாம்களையும் ஷைகுகளை இறைவனுக்கு இடைத்தரகர்களாக்கி இணை(சிர்க்) வைக்கும் கூட்டம். ஆக, “அகல சுன்னத் வல்ஜமாஅத் பெருங் கூட்டமும்” “ஆகவில்லை சுன்னத் வல்ஜமாஅத் அதாவது “பித்அத் வல்ஜமாஅத்” என்ற எதார்த்த நிலையில் இறைவனுக்கு இணை வைக்கும் நிலையிலேயே இருக்கின்றனர்.
அடுத்து “நாங்கள் மத்ஹபுகளை விட்டும் விடுபட்டு விட்டோம் நாங்கள் முகல்லிதுகள் அல்ல: கைர முகல்லிதுகள், அஹ்ல ஹதீத் மஸ்லக்கைச் சேர்ந்தவர்கள் என்று கூறும் முஸ்லிம் களும் இந்த அஹ்லஹதீத் மஸ்லக்கைக் கற்பனை செய்த மதகுருமார்மகளான மவ்லவிகளின் சுயக் கற்பனைகளை வேதவாக்காகக் கொண்டு அவர்களை இடைத்தரகர்களாக்கி 9:31 கூறுவது போல் அவர்களை ரப்புகளாக்கி அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றனர்.
கேரளாவைச் சேர்ந்த முதூஹிதுகளும் முஜாஹித் மஸ்லக்கைக் கற்பனை செய்து உருவாக்கிய மதகுருமார்களான மவ்லவிகளை அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாக்கி 9:31 சொல்லுவதுபோல் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றனர். ஜமாஅத்தே இஸ்லாமியினர் அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில் அபூஅஃஃலா மெளதூதியை இடைத்தரகராக்கி அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றனர்.
சவுதியிலும் மற்றும் பல நாடுகளிலும் பரவி இருக்கும் “ஸலஃபி” கொள்கையுடையோர், நபி(ஸல்) அவர்களது காலத்திலிருந்து மூன்று தலைமுறைக்குப் பின்னால் வந்தவர்களின் (கலஃபிகள்) சுய விளக்கத்தை ஏற்பதுதான் கூடாது: மூன்று தலைமுறைக்குட்பட்டவர் களின் (ஸலஃபிகள்) விளக்கத்தை ஏற்பதே நேர்வழி என்று கூறி அல்லாஹ்வுக்கும் தங்களுக்கு மிடையில் ஸலஃபிகளை இடைத் தரகர்களாகப் புகுத்தி இறைவனுக்கு இணை வைக்கின்றனர்.
காதியானிகள் அல்லாஹ்வுக்கும், தங்களுக்கும் இடையில் பொய் நபி குலாம் அஹ்மதை இடைத்தரகராகப் புகுத்தி அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றனர். 19 என்ற அஹ்ல குர்ஆனிகள் அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில் ரஷாத் கலீஃபாவை இடைத்தரகராக்கி அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றனர்.
2005க்குப் பிறகு கற்பனை செய்யப்பட்ட ததஜ மத்ஹபினரோ(ஸலஃபி) முன்னோரோ (கலஃபி) பின்னோரோ எவரது சுய விளக்கத்தையும் ஏற்று நடப்பது கூடாது: ஆனால் புரோகிதர் பீ.ஜையின் சுய விளக்கத்தை ஏற்று நடப்பதே நேர்வழி என்று கூறி அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில் பீ.ஜையை இடைத்தரகராக்கி அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றனர்.
இப்படி மதகுருமார்களான மவ்லவிகள், ஆலிம்கள் பின்னால் செல்பவர்கள் 9:31 இறைவாக்குப்படி இறைவனுக்கு இணை வைக்கின்றனர்.
ஆக நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த 72 பிரிவினரும் அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையில் 7:3, 33:36, 59:7, 8:46, 3:102,103,105, 6:153,159, 30:32, 42:13,14, 21:92,93, 23:52-56 போன்ற எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து 3:187 இறைவாக்கு சொல்வது போல் முதுகுக்குப் பின்னால் போட்டுவிட்டு, தங்களின் மனோ இச்சை, யாரின் சுய விளக்கத்தைச் சரி காண்கிறதோ அவர்களின் பின்னால் அணி வகுத்து தங்களின் மனோ இச்சையை 6:19150, 7:176, 18:26, 25:43, 45:23,28, 28:50, 30:19,29, 47:14 ஆகிய எண்ணற்ற இறைவாக்குகள் சொல்வது போல் ரப்பாகவும் ஆக்கி, அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்கள்.
நாமோ குர்ஆன் வசனங்களை எடுத்து வைக்கிறோமே அல்லாமல் யாரையும் நாமாக நரகத்திற்குரியவர்கள் என்று கூறவும் இல்லை. நாமே நேர்வழியில் இருப்பதாகவும் ஒரு போதும் கூறியதுமில்லை. வழிகேட்டில் சென்று நரகை நிரப்புகிறவர்களே தாங்கள் தான் நேர்வழியில் இருப்பதாகவும், தங்கள் அணியில் வந்து சேரும்படியும் அழைப்பு விடுக்கிறார்கள். நாமோ அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில் இடைத்தரகர்களைப் புகுத்தாமல் குர்ஆன், ஹதீதை 3:103 இறை வாக்குக் கட்டளையிடுவது போல் ஒன்றிணைந்து ஜமாஅத்தாகப் பற்றிப் பிடித்து, 21:92, 23:52 குர்ஆன் கட்டளைப்படி முஸ்லிம்கள் அனைவரை யும் இவ்வுலகில் முஸ்லிம் களாக ஏற்று சமுதாய ஒற்றுமையை நிலைநாட்டவே கோருகிறோம். யார் வேண்டுமானாலும், தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் குர்ஆன், ஹதீதை மட்டுமே பற்றிப் பிடியுங்கள் என்றே சொல்லுகிறோம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…..