யூசுஃப்,  நபியும்  இறைச்சட்டமும்…

in 2025 ஜுன்

யூசுஃப்,  நபியும்  இறைச்சட்டமும்

A. அன்னார், சென்னை.

மறு பதிப்பு :

இஸ்லாமிய ஆட்சிக்குப்படாத ஏனைய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் நாட்டு ஆட்சியாளருககு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். மேலும் அந்நாட்டின் சட்டங்களை செயல்படுத்துவதோடு ஆட்சியில் (எவ்வகை ஆட்சியாயினும்) பங்கு பெறலாம். அதற்கு  முன்னுதாரணமாக யூசுஃப்(அலை) விளங்கினார்கள் என்பதாக நவீன கால தவ்ஹீத் பேச்சாளர் ஒருவர் பேசி வருகிறார். அல்லாஹ்வின் சட்டங்களை பின்பற்றவேண்டும் என்பதாக வலியுறுத்தும் வசனங்களை அதற்கான ஆட்சி அதிகாரம் கிடைக்கும் போது செயல்படுத்த வேண்டியதை என்றும் குறிப்பிடுகிறார்.    (பக்கம் 1121, குறிப்பு 237)

தான்அரசியல்நடத்தியதற்போதுஅரசியல்நடத்துகின்றஇயக்கங்களுக்குஆதாரம்தெரிவிக்கவே, அல்லாஹ்வின் தூதராக இருந்த யூசுஃப் (அலை) குஃப்ர் சட்டங்களை (அல்லாஹ்வின் சட்டங்களை அல்லாத மனிதச் சட்டங்களை) நடைமுறைப்படுத்தியவர் என்பதாக நவீன ஆய்வைத் தெரிவித்துள்ளார். யூசுஃப்(அலை) முஸ்லிம் அல்லாத ஆட்சியாளரிடம் அமைச்சராக இருந்தார்கள். எனவே நாமும் முஸ்லிமல்லாதவரின் ஆட்சி யில் (எவ்வகை ஆட்சியாயினும்) பதவியைக் கேட்டுப் பெறலாம் என்பதாகக் குறிப்பிட் டுள்ளார் (குர்ஆன் மொழிபெயர்ப்பு பக்கம் 1324) நிர்பந்தத்தின் காரணமாக சில சட்டங்களுக்குக் கட்டுப்படுவது வேறு; அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவது என்பது வேறு என்பதை அவர் உணரவில்லை. அல்லாஹ்வின் கடுமையான எச்சரிக்கையை அறிந்தவர்கள் அவரது ஆய்வை நிச்சயமாகப் புறக்கணிப்பார்கள். யூசுஃப்(அலை) எவ்வித நிர்பந்தமுமின்று தான் விரும்பியவாறு அதிகாரத்தில் இருந்ததோடு இறைச் சட்டத்தையே நடைமுறைப்படுத்தினார் என்பதையூசுஃப்என்ற பன்னி ரண்டாவது அத்தியாயத்தை  முழுமையாக படித்தவர்கள் விளங்கிக் கொள்வார்கள். மனோ இச்சையின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்பவர்களுக்கு எதிர்மறையான முடிவே கிடைக்கும். அல்லாஹ்வின் எச்சரிக்கையை  அவர்களுக்குச்  சமர்ப்பிக்கிறோம்.

எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக  காஃபிர்கள்  அல்குர்ஆன் 5:44

எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்கள்”. அல்குர்ஆன் 5:45

எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக பாவிகளாவார்கள்”. அல்குர்ஆன் 5:47

இன்னும் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பு செய்வீராக; அவர்களுடைய மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்”. அல்குர்ஆன் 5:48,49

“(நபியே!) உம்மீது இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னால் இறக்கப்பட்டதையும் நம்புவதாக வாதித்துக் கொண்டிருப்போரை நீர் பார்க்கவில்லையா? (எந்த ஷைத்தானை) நிராகரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளை இடப்பட்டிருக்கிறதோ அந்த ஷைத்தானை (தாகூத்தை) தீர்ப்புக் கூறுபவனாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள். அந்த ஷைத்தானோ அவர்களை வெகுதூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறான்”. அல்குர்ஆன் 4:60

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டாம்”. அல்குர்ஆன் 5:2

எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு பரிந்துரை செய்தால், அதில் ஒரு பங்கு (நன்மை) அவருக்கு உண்டு; எவரேனும் ஒரு தீமையான காரியத்திற்கு பரிந்துரை செய்தால்; அதில் ஒரு பங்கு (தீமை) அவருக்கு உண்டு”.  அல்குர்ஆன் 4:85

மேலும் அரசியல் என்ற தலைப்பில் சில ஆபத்தான குறிப்புகளை (புனைந்துள்ளார் (குர்ஆன் மொழிபெயர்ப்பு பக்கம் 1324)

1. ஆட்சி அமைப்பது நபியின் வேலையல்ல (12:55 வசனத்தை ஆதாரமாக குறிப்பிட்டுள்ளார்).

2. நிரபராதியை சிறையில் அடைத்த ஆட்சியாயினும் அந்த ஆட்சியில் பதவியைப் பெறலாம். (12:55 வசனம்)

3. முஸ்லிம் அல்லாதவரின் ஆட்சியில் பதவி வகித்தல் (12:55 வசனம்)

4. இறைத்தூதர் முஸ்லிமல்லாதவரின் ஆட்சியில் பதவி வகித்தல். (12:55 வசனத்தையே குறிப்பிடுகிறார்)

5. இறைத்தூதர் அல்லாதவரின் சட்டங்களை இறைத்தூதர் அமுல்படுத்தல். (12:76 வசனம்)

6. அந்நிய நாட்டவர் விரும்பினால் அவரது நாட்டுச் சட்டத்தை அவருக்கு அமுல்படுத்துதல். (12:75,76 வசனம்)

மேற்கண்ட வசனங்களைப் புரட்டிப் பார்த்தால் கற்பனை எந்த அளவிற்கு அவரை மயக்கியுள்ளது என்பதை விளங்கமுடியும். முந்தைய நபிமார்களின் நடைமுறைகளை நாம் பின்பற்றலாமா? என்று கேள்வி எழுப்பினால், அல்லாஹ் யூசுஃப்(அலை) அவர்களின் வரலாற்றை அழகிய வரலாறு என்று குறிப்பிடுவதால் தாராளமாக பொருந்தும் என கூறி வருகிறார். ஆனால் அவரது திருகுர்ஆன் மொழி பெயர்ப்பில் (பக்கம் 1175, குறிப்பு 326)  முந்தைய சமுதாயத்திற்கு அனுமதிக்கப்பட்டவை இறைவனாலோ, இறைத்தூதராலோ மாற்றி அமைக்கப்படாவிட்டால் மட்டுமே நாம் அவற்றை கடைபிடிக்க வேண்டும் என்பதாக முரண்பட்டு எழுதியுள்ளார். யூசுஃப் (அலை) அவர்களின் நடைமுறையை நாம் பின்பற்றலாம் என்று எடுத்துக் கொண்டாலும், இவரது நவீன இஜ்திஹாதின் அடிப்படையில் யூசுஃப்(அலை) அவர்கள் இருக்கவில்லை என்பது சிந்திப்பவர்களுக்கே விளங்கும். அவரது ஆதரவாளர் களுக்கு (அவரை தக்லீது செய்வதால்) விளங்க வாய்ப்பில்லை.

யூசுஃப்(அலை) முஸ்லிமல்லாதவரின் ஆட்சியில் அமைச்சராக இருந்தார் என்பது இவருக்கு எப்படி தெரியும்? எகிப்து மன்னர் இணைவைப்பாளராக இருந்தார் என்பது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் என்பதை அவர் விளக்கியாக வேண்டும். யூசுஃப் (அலை) அவர்களுடன் சிறையில் இருந்த வாலிபர்கள், தாங்கள் கண்ட கனவின் விளக்கத்தை கோரிய போது, கனவின் விளக்கத்தைக் கூறுவதற்கு முன்னர் ஏகத்துவ அழைப்பை விடுத்த பின் னரே கனவின் விளக்கத்தை கூறினார். (12:39,40). மேலும் அந்த உணவு இடைவேளை நேரத்தை ஏகத்துவ அழைப்பிற்காக செலவிட்டார்கள். (12:37) தனக்கு கிடைத்த சொற்ப நேர வாய்ப்பை பயன்படுத்திய யூசுஃப்(அலை) நீண்ட காலம் எகிப்திய மன்னருடன் இருந்தும் பயன்படுத்த வில்லை என்று கூற விரும்புகிறாரா? அல்லாஹ்வின் சட்டத்தை அமுல்படுத்தாமல் முஸ்லிம் அல்லாத ஆட்சியாளரின் சட்டங்களை (குஃப்ர் சட்டங்கள்) அமுல்படுத்தினார் என்பது  விதண்டாவாதமாகும்.

நிரபராதியான யூசுஃப்(அலை) அவர்களை அநியாயமாக சிறைச்சாலைக்கு மன்னர் அனுப்பி வைத்தார் என்பதும் தவறாகும். அநியாயமாக யூசுஃப்(அலை) அவர்களை அடைய முயன்றும், இறுதியில் தோல்வியை தழுவிய அஜீஸின் மனைவியிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவே யூசுஃப் (அலை) சிறைச்சாலையை விரும்பினார். அல்லாஹ்வின்  ஏற்பாடாகவும்  அமைந்திருந்தது.

என் இறைவனே! அவர்கள் அழைக்கும் (தவறான) காரியத்தை விட சிறைச்சாலையே எனக்கு அதிக விருப்பமுடையதாகும். இவர்களின் சதியை விட்டு நீ என்னை காப்பாற்ற வில்லையானால், நான் இவர்களின்  பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகி விடுவேன் என்று (பிரார்த்தித்தவராக)  கூறினார்.

எனவே அவருடைய பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொண்டான். அப்பெண்களுடைய சதியை அவரை விட்டு நீக்கிவிட்டான். நிச்சயமாக அவன் (யாவற்றையும்) கேட்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கிறான்  அல்குர்ஆன் 12:33,34

யூசுஃப்(அலை) அவர்களின் பிரார்த்தனையின் பலனே அவரை அவர்கள் சிறையிலடைக்க தோன்றியது (12:35), நிரபராதியான யூசுஃபை அநியாயமாக சிறையிலடைத்தனர். எனவே அப்படிப்பட்டவர்களிடமும் பதவியைக் கேட்டு பெறலாம் என்றால் நரேந்திர மோடியிடமும், அமெரிக்க  அதிபரிடமும் அமைச்சர் பதவியை கேட்டுப் பெறமுடியுமா? சிந்திக்க வேண்டும்.

பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாக) ஆக்கிவிடுங்கள்; நான் அவற்றை பாதுகாக்க  நன்கறிந்தவன்”. அல்குர்ஆன் 12:55

என்பதாக யூசுஃப்(அலை) அவர்கள் கோரியது பதவியை பெறவேண்டும் என்ற நோக்கில் அல்ல. அந்த நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தை உணவு தானியத்தை சேமித்து வைத்து பின்னர் அதை சீரிய முறையில் விநியோகித்து அதன் மூலம் நன்மை செய்யவே ஆகும். இதை விடுத்து யூசுஃப்(அலை) பதவியைக் கேட்டிருக்கிறார்; எனவே நாமும் அரசிடம் பதவியை கேட்டுப் பெறலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. யூசுஃப்(அலை) அந்நாட்டில் விரும்பிய விதத்தில் காரியங்கள் செய்துவர நாம் அவருக்கு வாய்ப்பை இவ்வாறு ஏற்படுத்திக் கொடுத்தோம். (12:56) என்று கூறப்பட்டிருப்பது சான்றாகும். முஸ்லிமல்லாத வரின் ஆட்சியில் பதவியை கேட்டுப்பெற்றார் என்று கூறுவது பதவியை அடைய முனைபவர்களின் கூற்றாகத் தானிருக்கும்.

அல்லாஹ் நாடினாலன்றி அவர் தம் சகோதரரை தன்னுடன் வைத்துக்கொள்ள மன்னரின் சட்டப்படி இயலாமலிருந்தார்என்று  மொழிபெயர்ப்பதை விட; (12:76) மன்னரின் சட்டப்படி எடுத்துக்கொள்ள விருப்பமில்லாமலிருந்தார் என்று மொழி பெயர்ப்பதே பொருத்தமாகும் (ணூய்வீ திருகுர் ஆன் மொழி பெயர்ப்பு). “யூசுஃப்(அலை) விரும்பியவாறு காரியங்கள் செய்துவர அந் நாட்டில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம் என்று (12:56) அல்லாஹ் கூறியிருப்பது சான்றாகும். யூசுஃப்(அலை) விரும்பியவாறு அந்நாட்டில் காரியங்கள் செய்துவர வாய்ப்பை பெற்றிருந்தும் மன்னரின் சட்டப்படி நடந்து வந்தார் என்று கூறுவது கற்பனையாகும்.

தனது சகோதரரை தன்னுடன் வைத்துக் கொள்ள யாகூப் நபியின் ­ரீஅத்தை யூசுஃப் நபியவர்கள் பயன்படுத்தியிருக்க, (இதுவே இப்ராஹீம்(அலை) அவர்களின் ­ரீஅத் என்பது அறிஞர்களின் கருத்து; சான்று 12:28 வசனம்) இறைத்தூதர் அல்லாதவரின் சட்டத்தையும் (குஃப்ர் சட்டம்) யூசுஃப் (அலை) நடைமுறைப்படுத்தினார். (பக்கம் 1324 என்பது நபிமார்கள் மீது கூறப்படும் வகை மொழியாகும். அரசியலில் நுழைவதற் கும், இயக்கம் நடத்துவதற்கும் ஆதாரம் காட்டவே “”இறைத்தூதர் அல்லாதவரின் சட்டங்களை (மனிதச் சட்டங்கள்) இறைத் தூதர் அமுல்படுத்துதல் (பக்கம் 1324) என்று நபிமார்களின் மீது ஏவுகணை வீசியுள்ளார். நபிமார்கள் அல்லாஹ் அல்லாதவர்களின் சட்டங்களை நடைமுறைப்படுத்த முனைவார்களா?

யாகூப்(அலை) அவர்களின் மூலம் கிடைக் கப்பெற்ற சட்டத்தை அமுல்படுத்தும் விதமாக, சகோதரரின் பொதியில் அளவு குவளையை மறைத்து வைத்து; பின்னர் தன்னுடைய சகோதரர்களின் மூலமாகவே அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்க மனிதச் சட்டத்தை யூசுஃப்(அலை) அவர்கள் நடைமுறைப்படுத்தினார் என்பது அபாண்ட மாகும். மேலும் அந்நிய நாட்டவர் விரும்பி னால் அவரது நாட்டுச் சட்டத்தின் மூலம் தீர்ப் பளிக்கலாம் (பக்கம் 1324) என்று குறிப்பிட் டுள்ளார். இது ஏற்புடையதா? என்பதை நாம் சிந்திக்க  கடமைப்பட்டுள்ளோம்.

யூசுஃப்(அலை) அந்நாட்டில் ஆட்சி அதி காரத்தை அடைந்தார் என்பதற்கு சான்றாக 12:101 வசனம் உள்ளது. “”என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து கனவுகளின் விளக்கத்தையும் எனக்கு கற்றுத் தந்தாய்என்று யூசுஃப்(அலை) கூறியதே போதுமாகும். “இன்னும்,  அவர் தம் தாய், தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்”. (12:100) என்பதும் சிந்திக்க வேண்டிய வசனமாகும். அதிகாரம் யூசுஃப் (அலை) அவர்களுக்கு கிடைக்கப் பெற்றதற்கு வேறு சான்று தேவையில்லை. யூசுஃப்(அலை) தன் தாய், தந்தையர், சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர்களை எகிப்தில் குடி அமர்த்தி னார். இவ்வாறே யாகூப் நபியின் சந்ததியினர் (பனீ இஸ்ராயீல்) எகிப்தில் வசிக்க நேரிட்டது. யூசுஃப்(அலை) அவர்களைத் தொடர்ந்து பனீ இஸ்ராயீல்கள் அதிகாரத்திலிருந்தனர். காலப் போக்கில் கிப்தி வம்சத்தினர் (ஃபிர்அவ்ன் சமுதாயத்தினர்) பனீ இஸ்ராயீல்களை அடிமை களாக்கி அதிகாரத்தைப் பறித்தனர். அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்கவும், கிப்தி வம்சத்தினருக் கும் சேர்த்து நபியாக மூஸா (அலை) அவர்கள்  அனுப்பப்பட்டார்கள்.

மூஸா தம் சமூகத்தாரை நோக்கி, என் சமூகத்தாரே! அல்லாஹ் உங்கள் மீது புரிந்தி ருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; அவன் உங்களிடையே நபிமார் களை ஏற்படுத்தி உங்களை அரசர்களாகவும், ஆக்கினான்; உலக மக்களில் எவருக்கும் கொடுக்கா ததை உங்களுக்குக் கொடுத்தான்”.    அல்குர்ஆன் 5:20

என்ற வசனம் மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. எனவே யூசுஃப்(அலை) அவர் களைப் பற்றி தவறான கருத்தைக் கொண்டார் தங்களது வாதத்தை மறுபரிசீலனை செய்யு மாறு கேட்டுக் கொள்கிறோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக. ஆமீன்.

Previous post:

Next post: