வருமுன் காப்போம் வளம் பெறுவோம்! (அ) நிம்மதியாக (சந்தோசமாக) வாழ வழி!

in 2025 மே

வருமுன் காப்போம் வளம் பெறுவோம்! () நிம்மதியாக (சந்தோசமாக) வாழ வழி!

அய்யம்பேட்டை A. நஜ்முதீன் 

ஏப்ரல்  மாத  தொடர்ச்சி….

இறையருளால் இந்த ஆண்டு 2025, ஜனவரி மாதம் முதல் வெளிவரும்வருமுன் காப்போம்கட்டுரை பரவலாக வாசகர்களிடமிருந்து எதிர்பார்த்தத்திற்கு மேலாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  அல்ஹம்துலில்லாஹ்.

பொதுவாக மார்க்க ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் சரியான விழிப்புணர்ச்சி இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். மார்க்க ரீதியாக  சரியான விழிப்புணர்ச்சி ஏற்பட சுமார் 40 ஆண்டுகளாக அந்நஜாத்தில் பணி தொடர்வது அனைவரும் அறிந்த ஒன்று. அதுபோல் மருத்துவ ரீதியாகவும் சரியான விழிப்புணர்ச்சி ஏற்பட பயணத்தை தொடர்ந்துள்ளோம். எந்தவொரு தனிப்பட்ட மருத்து வரையோ, அல்லது குறிப்பிட்ட மருத்துவத்தைப் பற்றியோ குறை கூறவேண்டும் என்பது நமது நோக்கமல்ல என்பதை மீண்டும் தெரிவித்துக் கொண்டு தொடர்கிறோம்.

உலகிலுள்ள பெரும்பாலான மனிதர்கள் விரும்புவது நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்பதாகவே உள்ளது. அதில் தவறு ஒன்று மில்லை. ஆனால் அல்லாஹ் விதித்ததற்கு மாறாக யாருடைய ஆயுளும் கூடுவதோ, குறைவதோ கிடையாது.

நீங்கள் எங்கே இருந்தபோதும் மரணம் உங்களை அடைந்தே தீரும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே  (.கு.4:78)

மேலும் பார்க்க வசனம்:  .கு. 35:11

ஆயினும் வாழும் காலம் வரை ஆரோக்கியமாக வாழும் வழி நம் கையில்தான் உள்ளது. நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்பதை விட ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதே அவசியம்.

கூனிக்குறுகி நடக்க முடியாமல், படுத்த படுக்கையாக வாழ்வதில் என்ன பயன்?

ஏன் என்றால் அல்லாஹ்வின் அருட்கொடைகளில் மாபெரும் அருட்கொடை ஆரோக்கியமாகும்.

பெரும்பாலான இளைஞர்கள் தற்பொழுது உடம்பில் கவனம் செலுத்தாது பிற்காலததில் (வயதான பிறகு) பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள்.

எல்லா மனிதர்களுக்கும், எல்லா உயிரினங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் இருக்கின்றது. மனிதன் சுமார் 70 ஆண்டு காலம் வாழ்ந்தால்  அது  சிறப்பானதாகும். 

ஒவ்வொரு உயிருள்ள பிராணிக்கும் அதன் வாழ்க்கை இறைவனால் நிர்ணயப்பட்டி ருக்கிறது. 

உதாரணமாக :

ஆமைக்கு சுமார் 300 ஆண்டுகள், மாடு, நாய் போன்ற பிராணிகளுக்கு சுமார் 15 ஆண்டுகள்.

அதுமட்டுமல்ல மரம், செடி, கொடிகளுக்கு கூட ஒவ்வொன்றுக்கு ஆயுள் (வாழும்) காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.

தேக்கு மரத்தின் ஆயுள் காலம் 60 ஆண்டுகளாகும். இவ்வாறாக சராசரி மனிதனுடைய வாழ்நாள்  63 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் ஆகும்.

ஆனால் அவரவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் காலத்தில் ஆரோக்கியமாக வாழ வேண்டும்  என்பதுதான்  முக்கியம்.

(நமது தொடர் கட்டுரையின் நோக்கமும் அதுவே)

இது  சாத்தியமா?

நிச்சயமாக  சாத்தியமே!

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது  அற்றது  போற்றின்  உணின்

இதன் பொருள் : முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து பிறகு தேவையான அளவு உண்டால் உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

சராசரியாக மனிதன் ஒரு வேளை சாப்பிட்ட பின்  அடுத்த வேளை சுமார் 5 முதல் 6 மணி நேரம் கழித்து தான் சாப்பிட வேண்டும். இடையே சாப்பிடக்கூடாது. நாம் சாப்பிட்ட உணவு நமது வயிற்றில் செரிமானம் ஏற்பட சுமார் 90 நிமிடங்கள் எடுத்து கொள்கின்றன.

எனவே, உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும், அதாவது பாம்பு விழுங்குவது  போல்  விழுங்கக்கூடாது.

குறிப்பாக மொபைல் பார்த்துக் கொண்டோ, மற்றும் (தேவையற்ற பேச்சுகளை) பேசிக் கொண்டோ  சாப்பிடக்கூடாது.

ஏன் என்றால் நமது வாயில் ஊறும் எச்சில் தான் சாப்பாட்டுடன் கலந்து அதை ஜீரணிக்க  செய்கிறது.

“EAT” என்ற ஆங்கில வார்த்தைக்கு அப்துல் கலாம் அவர்கள் கொடுத்த விளக்கம் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அது என்னவென்றால், “EXPERIENCE ALL TASTES” என்பதாகும்.

ஏற்கனவே நபி(ஸல்) அவர்கள் கூறிய சில ஹதீத்களையும் நாம் முன்பே கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம். எனவே ஆரோக்கியமான வாழ்வுக்கு தேவையானவை என்னவென்றால்;

1. நல்ல  ஒழுக்கம்,

2. நற்சிந்தனைகள்,

3. நற்ச்செயல்கள்

4. நல்ல (சத்தான) உணவு,

5. நல்ல சுற்றுப்புறச் (மாசற்ற) சூழலில் வாழ்வது

6. நல்ல (போதுமான) உடற்பயிற்சி (தொழுகை)

7. நல்ல (தேவையான) ஓய்வு.

மேற்கண்ட 7லில் நல்லொழுக்கம்தான் முதற்படி.

எனவேதான் இறைவன் மனிதனின் உடலுக்கு தீங்கு தரக்கூடிய (ஆரோக்கியத்தை கெடுக்க கூடிய) மதுவைப் பற்றி இறைநூலில் (அல்குர்ஆனில்) எச்சரித்துள்ளான்.

மது மற்றும் சூதாட்டம் பற்றி (நபியே) உம்மிடம்  கேட்கின்றனர், அவ்விரண்டிலும் பெரும் கேடும், சில பயன்களும் உள்ளன. ஆனால் அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப்பெரியது”.  (.கு. 2:219)

மேற்கண்ட வசனத்தை அடுத்து மற்றொரு வசனத்தில் மனநிலையும், மறுமையையும் பாதிக்க கூடியதைப் பற்றி இறைவன் எச்சரித்துள்ளான்.

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள், அதன்மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்.” (.கு. 5:90)

நாம் முதலில் குறிப்பிட்ட (2:219ல்) வசனத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலான மதுவையும், பொருளாதார கஷ்டம் ஏற்பட காரணமான சூதுவையும் இறைவன் குறிப்பிட்டுள்ளான். அடுத்து வசனம் (5:90ல்) பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகளால் ஏற்படும் தீமைகளால் (நம்பிக்கையால்) மனநிலை பாதிக்கப்பட்டு ஆரோக்கியம் கெட்டுவிடும் என்பதையும், மறுமை வாழ்வில் வெற்றி கிட்டாது என்பதையும் இறைவன் கூறியுள்ளான்.

இத்தகைய அனைத்து தீமைகளிலிருந்தும் காப்பாற்றப்பட்டு ஆரோக்கியமாக வாழ அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்….

நடப்பதெல்லாம் (நடை பயிற்சி) நன்மைக்கே  என்பதைப் பற்றி பார்ப்போம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…..

Previous post:

Next post: