வாழ்க்கையில் வெற்றி பெற….?
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
பொதுவாக வாழ்க்கையில் வெற்றிபெற ஆசைப்படாத மனிதர்களே இவ்வுலகில் இல்லை. எதை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கவேண்டும் என்பதுதான் எல்லோரும் விரும்புவதுமாகும். ஆனால் அந்த வெற்றி என்பது அவ்வளவு சுலபமாக பெரும்பாலோருக்கு கிடைப்பதில்லை. சிலருக்கு கிடைத்த உண்மையான வெற்றியும் கூட பல சோதனைகளுக்கு பிறகே கிடைத்ததாகும்.
மேலும் உலகில் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலோர் இளம் வயதில் வெற்றி எனும் கனியை சுவைத்தவர்களாக இருக்கமாட்டார்கள். அதுமட்டுமல்ல செல்வந்தர்களாக இருப்பவர்கள் எல்லோரும் வெற்றி பெற்றவர்கள் என்றும் சொல்லமுடியாது.
அவ்வாறு என்றால்;
வெற்றி என்றால் என்ன?
வெற்றிபெற என்ன செய்யவேண்டும்?
வாழ்க்கையில் வெற்றி பெற உழைப்பு மிகவும் அவசியம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
ஆனால் உலகில் இன்று நிலவும் போட்டி, பொறாமை, அரசியல் சூழ்ச்சி (வன்முறை) அதிகாரிகளின் அளவில்லா ஆசை (லஞ்சம்) இன்னும் பல்வேறு இடையூறுகளைத் தாண்டி வெறும் உழைப்பால் மட்டும் வெற்றியைப் பெற முடியுமா?
நிச்சயமாக முடியாது,
அதற்கு தேவை இரண்டு;
ஒன்று இறையருள் (அல்லாஹ்வின் நாட்டம்)
புத்திசாலிதனமான உழைப்பு.
இறையருள் : இறையருளால் கிடைக்கும் வெற்றி கூட நபிமார்கள் (இறைத்தூதர்கள்) முதல் சாதாரண மனிதர்கள் வரை அவ்வளவு சுலபமாக இவ்வுலகில் கிடைத்துவிடுவது இல்லை. சில நபிமார் (இறைத்தூதர்)களுக்கு இவ்வுலகில் கிடைக்காவிட்டாலும் மறுமையில் அவர்களுக்கு வெற்றி நிச்சயம். ஆனால் சாதாரண மனிதர்களில் பலருக்கு,
1. இம்மையிலும் (இவ்வுலகிலும்), மறுமை யிலும் வெற்றி கிடைக்காது.
2. சிலருக்கு இம்மையில் கிடைக்கும், மறுமையில் கிடைக்காது.
3. வெகுசிலருக்கு மட்டுமே இம்மை–மறுமை இரண்டிலும் வெற்றி கிடைக்கும்.
(நாம் மூன்றாவதாக குறிப்பிட்டவர்களே மிகவும் பாக்கியசாலிகள்)
ஆயினும் மூன்றாவதாக குறிப்பிட்டுள்ள உண்மையான வெற்றி என்பதை எவருக்கும் அதை அல்லாஹ் சுலபமாக்கவில்லை.
அதாவது உயிர் இழப்புக்களாலும் உணவாலும் (பசியாலும்) சில உறவுகளாலும், உழைப்பாலும், காலத்தாலும், பொருட் செல்வங்களாலும், நோய்களாலும் சோதிக்கப்பட்ட பின்பே அந்த வெற்றியை அடைய முடியும். மேலும் அல்லாஹ்வின் நாட்டமும், மனிதனின் முயற்சியும் இணைந்தால்தான் வெற்றி கிடைக்கும். எனவேதான் இறைவன் தன் வழிகாட்டி நூலில் (குர்ஆனில்) கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளான்.
“ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைக்க கூடியதே! மறுமை நாளில்தான் உங்களது (நமது)கூலிகள் முழுமையாக கொடுக்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டுச் சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுபவரே “வெற்றி‘ பெற்றவர் ஆவர். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் இன்பத்தைத் தவிர வேறில்லை” (அல்குர்ஆன் 3:185)
மேற்கண்ட வசனத்திலிருந்து மறுமை நாளில் கிடைக்கும் வெற்றியே உண்மையான வெற்றி ஆகும். ஆயினும் இவ்வுலக வாழ்விலும் வெற்றியைப் பெற சில வழிமுறைகள் உண்டு. அது நாம் முன்பு குறிப்பிட்டுள்ள புத்திசாலித்தனமான உழைப்பு ஆகும்.
அதாவது ;
1. சிறந்த முடிவுகளை (நிர்வாகத்தில்/குடும் பத்தில்) எடுக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2. சிக்கல்களை திறமையாக எதிர்கொள்ள தெரிந்து கொள்ளவேண்டும்.
3. நேரத்தை நிர்வகிக்க தெரிந்திருக்க வேண்டும்.
(வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றி பெற முடியவில்லை என்பவர்கள் அனைவருக்கும் 24 மணி நேரம்தான் உள்ளது)
4. இலட்சியம் என்ன என்பதை வரையறுத் துக் கொள்ளவேண்டும்.
5. முன்னேறிய தொழில்நுட்பங்கள் மற்றும் (இப்போதைய காலநிலை) விஞ்ஞான வளர்ச்சிகளை UPம்புவீசிஆக அறிந்து பயன்படுத்தவேண்டும்.
6. தோல்வியை பயமாக இல்லாமல் பாடமாக கருதவேண்டும்.
7. வெற்றியாளர்களின் வரலாறுகளை படித்து தெரிந்து கொள்ளவேண்டும்.
8. மாற்றத்திற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
இவைகள் எல்லாம் ஏனென்றால் உழைப்பு (முயற்சி) இல்லாமல் “வெற்றி‘ சாத்தியமில்லை என்பது எவ்வாறு உண்மையோ, அதுபோல புத்திசாலித்தனம் இல்லாத வெற்றி நீடிக்காது என்பதும் உண்மையே. ஆயினும் புத்திசாலி கள் எல்லாம் வெற்றி பெற்றவர்களா என்றாலும் இல்லை.
அப்படி என்றால்;
எவ்வாறு வெற்றியை பெறுவது?
இறையருள்(நாட்டம்) வேண்டும்.
எனவேதான் கீழ்கண்ட வசனத்தில் இறைவன் கூறுகிறான்.
“இறைவன்(அவன்) தான் நாடியோருக்கு ஞானத்தைக் கொடுக்கிறான். யாருக்கு ஞானம் வழங்கப்பட்டதோ அவரே அதிகமான நன்மைகள் வழங்கப்பட்டுள்ளார். அறிவுடையோரைத் தவிர எவரும் படிப்பினை பெறுவதில்லை. (அல்குர்ஆன் 2:269)
மேற்கண்ட வசனத்தில், தான் நாடியோருக்கு இறைவன் ஞானத்தைக் கொடுப்ப தாகக் கூறுகிறான்.
அந்த ஞானம் எது?
“இது (இறைநூல்/குர்ஆன்) ஞானமிக்க நேர்வழிகாட்டும் வசனங்களாகும்” (அகு.31:2)
“இது(இறைநூல்/குர்ஆன்) நம்மிடமுள்ள மூலப் பதிவேட்டில் (லவ்ஹுல் மஹ்ஃபூலில்) உள்ளது. இது மிக உயர்ந்ததும், மிகவும் ஞானமுடையதும் ஆகும்” (அ.கு.43:4)
“இது (குர்ஆன்) மனிதர்களுக்கு விளக்கமும், நேர்வழியும், இறைவனுக்கு அஞ்சி வாழ்வோருக்கு வழிகாட்டியும், அறிவுரையாகும்” (அ.கு. 3:138)
“இக்குர்ஆனில்(இறைநூலில்) பலவிதமான உவமைகள் மூலம் மனிதர்களுக்கு வழிகாட்டு தலை விவரித்துள்ளோம். ஆயினும் மக்களில் பெரும்பாலோர் (இதை படிக்காமல்) நிராகரிப்பில் இருக்கின்றார்கள்.” (அ.கு.17:89)
ஆயினும் குர்ஆன் படித்தாலும் விளங்காது என்று சில மதகுருமார்களால் மக்களிடையே போதிக்கப்படுகிறது. இது உண்மை அல்ல. எவ்வாறு என்றால்;
எந்தவொரு நூலும் (புத்தகம்) உயர்ந்த இலக்கியத்துடன் எழுதப்பட்டிருந்தால் அது படிக்காதவர்களிடமிருந்து விலகியே இருக்கும். அதாவது உயர்ந்த இலக்கியத்தில் இருந்தால் அந்த மொழியின் பயிற்சிப் பெற்றவர்களாலேயே அதை புரிந்து கொள்ள முடியும். அந்த மொழியை பேசும் மக்களால் அது அவ்வளவாக புரிந்து கொள்ள முடியாது.
அதுவே படிப்பறிவில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஒரு நூல் புரியும் வகையில் இருந்தால் அது உயர்ந்த இலக்கிய நூலாகவும் இருக்காது. (இது மனித கரங்களால் எழுதிய நூலுக்குரிய எதார்த்தம்)
ஆனால் குர்ஆன் அரபி மொழியை பேச மட்டுமே தெரிந்தவர்களுக்கும் தெளிவாக புரிந்தது. அதே வேளையில் மொழி கல்வியில் (இலக்கணத்தில்) தேர்ச்சி பெற்றவர்களுக்கும் அது புரிந்தது. அதனால் அன்றைய அரபு இலக்கணத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு கவிஞர் சொன்னார்.
“இது மனித சொல் அல்ல”.
சுமார் 1446 ஆண்டுகள் கடந்தும் எல்லா மனிதர்களுக்கும் புரியும்படி ஒரு நூல் உள்ளது என்றால் அது இறைநூல் மட்டுமே.
எனவே இறைவனின் ஞானத்தைப் பெற அவன் அருளிய,
அல்குர்ஆனை படியுங்கள்!
அல்குர்ஆனை பணியுங்கள்!!
அல்குர்ஆனை பரப்புங்கள்!!!
இன்ஷா அல்லாஹ். வெற்றி நிச்சயம்.