1990 ஏப்ரல்

நபி வழியில் நம் தொழுகை தொடர்: 40      அபூ அப்திர் ரஹ்மான் “என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்) சென்ற இதழின் “இமாமைப் பின்பற்றித் தொழுவோர் எந்தச் செயலிலும் இமாமை முந்துவது கூடாது” எனும் தலைப்பின் தொடர் : * ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழ வைத்தார்கள். தொழுகை முடிந்தவுடன் எங்களை நோக்கி பின்வருமாறு கூறினார்கள்: மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு இமாமாக இருக்கின்றேன். ஆகவே நீங்கள் […]

குர்ஆனின் நற்போதனைகள்:         தொடர்: 15 அல்லாஹ்வும் அவனது தூதரும் போதுமே!     ஏ. முஹம்மது அலி, எம்.ஏ.,எம்.பில்., 1. நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டு இறங்கி விடுங்கள்: என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறவுரைகள்) வரும்போது யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தைகைய பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் (என ஆதிமனிதர் ஆதம்(அலை), ஹவ்வா(அலை) பூமியில் இறக்கப்பட்ட போது அல்லாஹ் உரைத்தது) (2:38) 2. நிச்சயமாக நாம் ஒவ்வொரு சமுதாயத்திலும்  “அல்லாஹ்வையே வணங்குங்கள்;  “ஷைத்தானை […]

ஹதீஸ் பெட்டகம் தொடர்: 2     A. முஹம்மது அலி M.A., B.Ed., M.Phill 4. ஜகாத்துல் பித்ர்: நீங்கள் விரும்ப கூடியவற்றிலிருந்து செலவு செய்கின்றவரை நீங்கள் நன்மையை அடையவே முடியாது.   (3:92) முஸ்லிமான அடிமை, அடிமையல்லாதவன், ஆண், பெண், சிறியவர், பெரியவர், இளைஞர் அனைவர் மீதும் நோன்பு(பெருநாளன்று தரவேண்டிய பித்ரு) தர்மத்தை ரசூல்(ஸல்) அவர்கள் (பர்ளு) கடமையாக்கினார்கள். பேரித்தம் பழத்திலிருந்து ஒரு “சாஉ” அல்லது கோதுமையிலிருந்து ஒரு “சாஉ” பித்ர் தர்மம் கொடுக்கும்படி ஆணையிட்டார்கள். மற்றொரு அறிவிப்பின்படி : ஈத்(பெருநாள்) தொழுகைக்கு […]

  யா அல்லாஹ் ! புலவர்.செ. ஜஃபர் அலி,பிலிட்., நாகப்பட்டினம். அல்லாஹ்வின் நல்லடியார்களே! நாம் நம்முடைய தேவைகள் அனைத்தையும் இறைவனிடமே முறையிடக் கூடியவர்களாக இருக்கின்றோம். தொழுகையின் ஒவ்வொரு ரகாஅத்திலும், உனக்கே நாங்கள் அடிப்பணிகிறோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவித் தேடுகிறோம்; எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக” என்று பணிவுடன் இறையஞ்சுகிறோம்.   (1:4,5) படைத்தவனிடம் தானே படைப்பினங்கள் இரு கையேந்த வேண்டும் அதுதான் முறையுங்கூட! முறையான இறையஞ்சுதல் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படுவது உறுதி! நம்முடைய முறையீடுகள் தூய்மையானதாகவும்-உள்ளத் […]

மத மாற்றம்! அபூ அப்துல்லாஹ்  21ம் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் உலகெங்கும் “இஸ்லாம்” பற்றிய சிந்தனை உணர்வு மக்களிடையே ஏற்பட்டு வருகிறது. அதுவும் 19-ம் நூற்றாண்டில் தோன்றிய கம்யூனிஸம் பற்றி மக்கள் நம்பிக்கை இழந்தப்பின் அவர்களிடையே இஸ்லாமிய சிந்தனை ஏற்ப்பட்டு வருகிறது. உலகின் பல பகுதிகளில் மக்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு வருகிறார்கள். இதனை செய்திப் பத்திரிக்கைகள் தங்கள் சொந்தக் கண்ணோட்டத்துடன் தங்கள் இதழ்களில் இடம் பெற செய்து வருகின்றனர். […]

சின்னஞ்சிறிய விஷயங்கள் தான் ஆனாலும்!    அபூ ஃபாத்திமா உண்மையிலேயே சிந்தனையாளர்களான   இவர்களுக்கு சென்ற  இதழில் பார்த்ததுப் போல் இந்த தடுமாற்ற நிலை ஏன் ஏற்ப்பட்டது என்பதை விரிவாகப் பார்ப்போம். இகாமதுத்தீன்” என்றால் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவது தான் என்று இவர்களுக்குத் தவறாகப் போதிக்கப்பட்டு விட்டது. இந்த தவறான போதனை காரணமாக இவர்களது சிந்தனையெல்லாம் உலகிலுள்ள நாடுகளின் ஆட்சிகளைப் பிடிப்பதிலேயே சுழன்று வருகின்றது. அது விஷயமாக எந்த ஒரு நாட்டிலாவது எதாவதொரு முயற்சி நடந்தாலும் அது இவர்களை பெரிதும் […]

துலாக்கோல்  கிரிட்டிக் இந்த இதழில் அல் ஜன்னத் டிசம்பர்’89 இதழின் 53ம் பக்கத்தில் இடம் பெற்ற மறுப்புக் கட்டுரையின் ஆட்சேபனை 3 விளக்கம் 3 ஐ அலசுவோம். நான் நினைவில் வைத்திராத ஒன்றை என்னிடம் கேட்கிறீர். உமக்கு முன்னர் வேறு எவரும் என்னிடம் (இதுப் பற்றி) கேட்டதில்லை. என்று அனஸ்(ரழி) அவர்கள் கூறியதாக ஆறு நூல்களில் இடம் பெற்று அதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருக்கும் ஒரு ஹதீஸை அவர்கள் எடுத்து எழுதியதாகக் கூறியுள்ளனர். (பார்க்க அல் ஜன்னத் […]

குர் ஆனை விளங்குவது யார்?  தொடர் :16  இப்னுஹத்தாது அல்குர்ஆன் 3:7 வசனம் அல்குர்ஆனிலுள்ள இரண்டு வகையான வசனங்கள்  பற்றித் தெள்ளத் தெளிவாகச் சொல்லும் முஹ்க்கமான வசனம். இதில் ஒருவகை, திட்டமான உறுதியான இறுதியான பொருள் கொள்ள முடியாமல் பல பொருள்களில் விளங்க முடிந்த பல பொருள்களில் விளங்க முடிந்த முத்தஷாபிஹ் வசனங்கள். அப்படிப்பட்ட இரண்டாம் வகையைச் சார்ந்த வசனங்களின் உண்மைப் பொருளை இறுதி முடிவை அல்லாஹ் அல்லாத யாராலும் அறிய முடியாது. 3:7 வசனத்திலுள்ள தஃவீல் […]

ஐயமும், தெளிவும் ஐயம் : தஸ்பீஹ் தொழுகைக்கு ஹதீஸ்களில் முறையான ஆதாரம் உண்டா?  ஷேக்தாவூத், சுப்ரமணியபுரம், திருச்சி.  எம்.எல்.எம் ஸாபிர் மன்வானை, கொழும்பு தெளிவு : இது சம்பந்தமாக அபூதாவூத், இப்னுமாஜ்ஜா ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள அறிவிப்பாளர் தொடரில் “முஸப்னு அப்தில் அஜீஸ்” என்பவரும், “ஹக்கமுப்னு அஃப்பான்” என்பவரும் இடம் பெற்றுள்ளனர். இவ்விருவருமே பலஹீனமானவர்கள் என்று ஹதீஸ் கலாவல்லுநர்கள் கூறுகிறார்கள். இமாம் அஹ்மது பின் ஹம்பல்(ரஹ்) அவர்களிடம் தஸ்பீஹ் தொழுகைப் பற்றிக் கேட்கப்பட்ட போது, அதற்கு அவர்கள், இதற்கு ஆதாரமே கிடையாது என்று […]

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! தங்களின் அறிவுப்பூர்வமான, மார்க்க ரீதியான சிந்தனையைத் தூண்டக்கூடிய எழுத்து வன்மையால் வாசகர்கள் மிகவும் கவரப்பட்டுள்ளார்கள். ஆனால் மார்ச் மாத “அந்நஜாத்தில்” சின்னஞ்சிறிய விஷயங்கள் தான் ஆனால்…..” என்ற தலைப்பில் எழுதப்பட்ட விஷயங்கள் முஸ்லிம்களிடையேயும், அந்நஜாத் வாசகர்களிடையேயும் ஒரு அதிருப்தியையும், பீதியையும் ஏற்ப்படுத்தியுள்ளது.  “பாபரி மஸ்ஜித் விவகாரம் அறிவு ஜீவிகளிடையே மிகப்பெரிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது. முஸ்லிம்களின் கெளரவப் பிரச்சனை, இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையினரான முஸ்லிம்களின் வாழ்வா, சாவா என்பதை முடிவு செய்யும் பிரச்சனை […]