2020 ஜுலை

தலையங்கம்! இணைய வழி ரம்மி சூதாட்டம்! இளைஞர்களை தற்கொலைக்குத் தூண்டும் இணைய வழி ரம்மி சூதாட்டத்தை, சமுதாய நலன் கருதி, தடை செய்ய வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வலியுறுத்தி 17.06.2020 அன்று “இந்து தமிழ் திசை’யில் பாராட்டிற்குரிய ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையாவது : கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அனைத்துத் தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், இணையவழி சூதாட்டத் தளங்கள் இளைஞர்களை […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர், சுலைமான்(அலை) அவர்களின் படைகளில் கலந்துகொண்டவர்கள் யார் என அல்லாஹ் கூறுகிறான்? ஜின்கள், மனிதர்கள், பறவைகள். 27:17 யார் தேவை உள்ளவர்கள், யார் தேவை அற்றவர் என அல்லாஹ் கூறுகிறான்? அல்லாஹ்வை தவிர மற்ற அனைவரும் தேவை உள்ளவர்கள். அல்லாஹ் தேவை அற்றவன். குர்ஆன் : 35:15 ஸபா நாட்டு இளவரசியின் சிம்மாசனத்தை கொண்டு வந்தது யார் என அல்லாஹ் கூறுகிறான்? வேதம் பற்றி அறிவுள்ள ஒருவர். 27:40 நபி(ஸல்) அவர்களுக்கு அய்லாவின் […]

விமர்சனம்! விளக்கம்!! விமர்சனம் : நிர்பந்தத்தின் காரணமாக வீடுகளில் ஜும்ஆ தொழுவதற்கு குர்ஆனிலோ, ஹதீஃதிலோ தடை ஏதும் இல்லை என எழுதியுள்ளீர்கள். ஜும்ஆ தொழுவதாக இருந்தால், குத்பா ஓதித்தான் தொழ வேண்டும். மேலும், ஒரு நபர் மட்டும் ஜும்ஆ தொழுவதாக இருந்தால் (வீட்டில்) குத்பா இல்லாமல் தொழலாமா? இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுமா?  முகம்மது பாரூக், பேட்டை, திருவெல்வேலி. விளக்கம் : நடைமுறை உண்மை ஒன்றைக் கூறி, தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஜும்ஆ தொழுவதாக இருந்தால், குத்பா ஓதித்தான் தொழ வேண்டும் என்று […]

காயிப் ஜனாஸா… S.H. அப்துர் ரஹ்மான் அன்புள்ள சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்றைய லாக்டவுன் சூழலில் ஏற்படும் மரணங்களில் ஜனாஸா தொழுகைக்கு கூட்டம் கூட அனுமதி இல்லை. ஜனாஸாவில் கலந்து கொள்ள நெருங்கிய உறவினர் 20-25 நபர்களுக்குத்தான் அனுமதியுள்ளது. வெளியூர் பயணங்களுக்கும் பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் பலரும் ஜனாஸா தொழுகையில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைப்பது இல்லை. இதற்கு தீர்வு ஃகாயிப் ஜனாஸாத் தொழுகை ஆகும். இதை அவரவர் இருப்பிடங்களிலேயே செய்யலாம் அதுபற்றி போதிய விழிப்புணர்வு இஸ்லாமியரான […]

சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும்… எஸ்.எம். அமீர்,  நிந்தாவூர், இலங்கை. ஜூன் மாத தொடர்ச்சி…. சுவர்க்கவாசிகள் என்றைக்கும் நோயுற மாட்டார்கள் : சுவர்க்கத்தில் நுழைகின்ற முதலாவது அணியினர் பெளர்ணமி இரவில் ஒளிரும் பூரண சந்திரனைப் போன்று தோற்றமளிப் பார்கள், அவர்களுக்குப் பின்னே வருபவர்கள் விண்ணில் பேரொளி வீசும் நட்சத்திரத்தைப் போன்று இருப்பார்கள். அவர்கள் என்றைக்கும் நோயுறமாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி : 3246 முஸ்லிம் : 2837) மற்றுமொரு […]

ஹலாலான சொந்த செல்வத்திற்கே ஜகாத் நிஜாமுதீன் ஜூன் மாத தொடர்ச்சி…. நிபந்தனை நான்கு : சில பொருள்களுக்கு இஸ்லாம் உச்ச வரம்பை ஏற்படுத்தி இருப்பது போன்று பொருளுக்குரிய காலவரையையும் இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது. அந்த காலவரையை கடக்காமலிருக்கும் பொருள்கள் மீது ஜகாத் கடமையாகாது. யாரேனும் ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டால் ஓராண்டு நிறைவடையும் வரை அதற்கு ஜகாத் இல்லை என்பது நபி மொழி (இப்னு உமர்(ரழி), திர்மிதி:572) குறிப்பு : இந்த செய்தியில் அப்துர்ரஹ்மான் ஜைத் பின் அஸ்லம் […]

அமல்களின் சிறப்புகள்…. தொடர் : 60 அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது […]

தக்வாவும் ஃகெளஃபும் ஒன்றா? K.M.H. அபூ அப்தில்லாஹ் தக்வாவைப் பற்றி அல்குர்ஆனில் தக்வா என்று பதினைந்து (15) இடங்களிலும் முத்தக்கூன் என்று (6) ஆறு இடங்களிலும் முத்தக்கீன் என்று நாற்பத்தி மூன்று (43) இடங்களிலும் தக்வா-பயபக்தி பற்றி நேரடியாக அல்லாஹ் கூறியுள்ளான். அதேபோல் இருபத்தியயாரு (21) இடங்களில் ஃகெளஃப்-அச்சம் பற்றிக் கூறியுள்ளான். இவையன்றி ஃகாஃப் என்று ஆறு(6) இடங்களில் அல்லாஹ் கூறியுள்ளான். இப்போது கூர்ந்து கவனியுங்கள்: 21 இடங்களிலுள்ள ஃகெளஃபுக்கும், 6 இடங்களிலுள்ள ஃகாஃபுக்கும் மிகச் சரியாக அச்சம், […]