Sep
03
2010
Filed under 2010 செப்டம்பர்,ரமளான் by அந்நஜாத்
அபூ அப்தில்லாஹ்
எல்லாம் வல்ல அல்லாஹ் முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாள்களை மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாகக் கொண்டாட அனுமதி வழங்கி இருக்கிறான். ஆண்கள் மஹல்லா பள்ளிகளிலும், பெண்கள் கடமையான ஐங்கால தொழுகைகளை தங்கள் வீடுகளிலும் தொழுது கொள்ள அனுமதித்த நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று தொழத் தடுக்கப்பட்ட மாதவிடாய் பெண்களையும் பெருநாள் திடலுக்கு வரும்படி கட்டளையிட்டிருக்கிறார்கள் என்றால், தங்களின் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைப்பதற்கு உரிய ஆடைகள் இல்லாத பெண்கள் கூட இரவல் ஆடையை வாங்கி அணிந்து கொண்டு பெருநாள் திடலுக்கு வரக் கட்டளையிட்டார்கள் என்றால், முஸ்லிம் ஆண்கள், பெண்கள் அனை வரும் ஒன்று கூடி மகிழ்வுடன் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதை மார்க்கம் வலியுறுத்துவதை எளிதாக விளங்க முடியும். Continue Reading »
Sep
02
2010
Filed under 2010 செப்டம்பர் by அந்நஜாத்
நமது தாய்த்திருநாட்டின் 64ம் விடுதலை நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. எப்படித் தெரியுமா? பல்லாயிரம் கோடி ரூபாய்களை செலவிட்டு, பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, அவசர, அவசியத் தேவைகளுக்காகப் பிராயணம் செய்பவர்களுக்கும், கோவில், சர்ச், பள்ளிவாசல் செல்லும் மக்களுக்கும் பாதுகாப்புச் சோதனை என்ற பெயரில் பெரும் சிரமங்களைக் கொடுத்து, இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த பின்னரும் நமது இந்தியப் பிரதமர் சிறையில் அடைக்கப்பட்டது போல் குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் நின்று நமது இந்திய தேசியக் கொடியை ஏற்றும் பரிதாப நிலை. இந்த பரிதாப கேலிக் கூத்தான நிலையை நாம் நிதர்சனமாகப் பார்க்கும்போது அன்று வின்ஸ்ட்டன் சர்ச்சில் கூறிய வாசகங்கள்தான் நினைவுக்கு வருகிறது. அவை வருமாறு: Continue Reading »
Sep
01
2010
Filed under 2010 செப்டம்பர்,தலையங்கம் by அந்நஜாத்
1450 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வுலக மக்கள் எப்படிப்பட்ட அறியாமையில் மூழ்கி அழிவின் விளிம்பிலும், நரக விளிம்பிலும் நின்றார்களோ, அதேபோல் இன்றும் மக்கள் அறியாமையில் மூழ்கி அழிவின் விளிம்பிலும், நரக விளிம்பிலும் நிற்கிறார்கள். அன்று காணப் பட்ட அட்டூழியங்கள், அராஜகங்கள், பஞ்சமா பாவங்கள் அனைத்தும் இன்றும் நீக்கமறக் காணப்படுகின்றன. Continue Reading »
Sep
01
2010
Filed under 2010 செப்டம்பர் by அந்நஜாத்
அபூ யாசிர், உடன்குடி
இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் திருப் பத்தை ஏற்படுத்திய “”பத்ரு”போர் ரமழான் 17ல் நடைபெற்றது. ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்டது. சத்தியத்தை யும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டிய அந்த “பத்ரு” போரின் வயது இன்றைக்குச் சற்றொப்ப 1430 ஆண்டுகள். இறை மார்க்கத்தை மேலோங்கச் செய்யும் அறப் போராட்டத்தில் அயராது ஈடுபடும் நெஞ்சுரத்தை அளிப்பதற்காகவே இஸ்லாமிய வழிபாடுகள் அனைத்தும் விதியாக்கப்பட்டுள்ளன. எனவேதான் நோன்புக்கும் அறப்போருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை பார்க்க முடிகிறது. Continue Reading »
Aug
31
2010
Filed under 1996 ஜனவரி by அந்நஜாத்
Dr.A.முஹம்மது அலி, Ph.D.,
நமது மூலம் மண்ணே!
நிச்சயமாக அல்லாஹ் உங்களை மண்ணிலிருந்து படைத்தான் (அல்குர்ஆன் 35:11)
ஆதி மனிதனின் படைப்பு மண்ணிலிருந்து ஆரம்பமாகிறது. (அல்குர்ஆன் 32:7) Continue Reading »
Aug
30
2010
Filed under 1996 ஜனவரி,ஐயமும்! தெளிவும்!! by அந்நஜாத்
1.ஒரு டம்ளரில் தண்ணீரில் அதில் சில ஆயத்துகளை ஓதி ஊதி மற்ற சகோதரர்களுக்கு குடிக்க கொடுக்க அனுமதி உள்ளதா?
2.பல்லியை அடித்தால் பத்து நன்மைகள் எனக் கூறுகின்றனர். இது சரியா?
3.திருகுர்ஆனில் சஜ்தாக்கள் மொத்தம் 15. ஆனால் குர்ஆனில் 22:77 அத்தியாயத்தில் வரும் சஜ்தாவை இமாம் ஷாபீ (ரஹ்)ஐ பின்பற்றுபவர்கள்தான் செய்ய வேண்டும் என்கிறார்களோ?
4.பெண்களுக்கு பெண் ஜமாஅத் வைத்து தொழ தெளிவான ஹதீஸ் இருக்கிறதா? Continue Reading »
Aug
30
2010
Filed under 1986 ஜுலை,ரமளான் by அந்நஜாத்
S.N. குத்புதீன், B.A., பொதக்குடி
வழிமேல் விழி வைத்து “ரமழான்” மாதத்தை எதிர்கொண்டழைக்க நோன்பு நோற்போரைக் காட்டிலும் இறைச்சிக் கடைக்காரர்கள், காய் கறிக்கடைக்காரர்கள் …. தயாராகிக் கொண்டிருப்பது கண்கூடு. காரணம் அந்த மாதத்தில் பொருளீட்டி இலாபம் சம்பாதிப்போர் அனைவரும் அம்மாதத்தை இரு கரம் நீட்டி வரவேற்பர். (அம்மாதத்தால் வியாபாரம் குறையும் நிலையேற்படும். ஒரு சில வியாபாரிகள் மட்டும் உள்ளுக்குள் வெதும்புவர்.) ஆனால் எந்த இலாபத்தையடைய இறைவன் நோன்பை விதியாக்கினானோ அந்த இலாபத்தை அடையவேண்டுமென்ற இலட்சியத்தில் நம்மில் நோன்பு நோற்போர் எத்தனை பேர்… Continue Reading »
Aug
30
2010
Filed under 1996 ஜனவரி,ஐயமும்! தெளிவும்!! by அந்நஜாத்
ஐயமும்! தெளிவும்!!
ஐயம்: பெண் பிள்ளைகள் பெற்றெடுப்பதற்கு மனைவியை மட்டும் குறை கூறும் ஆண் ஆதிக்க வர்க்கத்தின் வாயடைக்க நல்லதொரு பதிலை தாருங்கள். பாத்திமா, திருவான்மியூர். Continue Reading »
Aug
29
2010
Filed under 1996 ஜனவரி,ஐயமும்! தெளிவும்!! by அந்நஜாத்
1.வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர்கள் என்று உள்ளதே அப்படியானால் இன்று வலக்கரம் சொந்தமான பெண்கள் உண்டா?
2.ஒளூச் செய்யும் இடம் தொலைவில் உள்ளதால் சிரமத்தின் பொருட்டு தயம்மம் செய்யலாமா?
3.ஒருவருக்கு வலது கையில் ஆட்காட்டி விரல் கிடையாது. அவர் இடது கை விரல் மூலமாக இஷாரா செய்கிறார். இவ்வாறு செய்யலாமா?
4.நபிமார்களின் கால கட்டம் எவ்வளவு? எத்தனை வயது வரை வாழ்ந்துள்ளார்கள்?
Continue Reading »
Aug
29
2010
Filed under 1996 ஜனவரி,ஐயமும்! தெளிவும்!!,கேள்வி-பதில் (தொகுப்பு) by அந்நஜாத்
ஐயமும்! தெளிவும்!!
ஐயம்: ஹிந்துமத பண்டிகைகள் வந்தால் அவர்கள் பலவிதமான பலகாரங்கள் செய்து அதை அவர்களின் இணை தெய்வங்களின் முன்னால் வைத்து படைத்து, பின்னர் பூஜை செய்து, அதன் பின்னர் அந்த பலகாரங்களை எங்கள் வீட்டிற்கு அனுப்புகின்றனர்.இத்தகைய பலகாரங்களை ஏற்றுக் கொள்ளலாமா? அதை உண்ணலாமா? குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கம் தரவும். Continue Reading »
Aug
28
2010
Filed under 1996 ஜனவரி by அந்நஜாத்
அபூ உ வைஸ்
ஹஜ்ரத்மார்களை கண்மூடி பின்பற்றி அவர்களுக்கு ஜால்ரா போட்டுக் கொண்டு இருக்கும் எனது அருமை சமுதாயத்தவர்களே! என்று உண்மையை உணரப் போகிறீர்கள்! Continue Reading »
Aug
27
2010
Filed under ரமளான் by அந்நஜாத்
மவ்லவிகளால் “தராவீஹ்’ என்று அறிமுகப் படுத்தப்படும் ரமழான் இரவுத் தொழுகை, நபி(ஸல்) அவர்களால் தொழுது காட்டப்பட்டதும், உமர்(ரழி) அவர்கள் பிந்திய இரவில் தொழுததும், முந்திய இரவில் முஸ்லிம்கள் ஜமாஅத்தாகத் தொழுவதை அனுமதித்ததும் 8+3=11 ரகாஅத்துகள் மட்டுமே என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்களை அந்நஜாத், 1986-லிருந்து மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறது. ரமழான் இரவுத் தொழுகையும்[PDF] Continue Reading »
Aug
27
2010
Filed under பொதுவானவை by அந்நஜாத்
M. முஹம்மது இப்ராஹீம் பாகவி, பேராசிரியர், மதரஸா காஷிபுல் ஹுதா, சென்னை.
இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.
தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)
Continue Reading »
Aug
26
2010
Filed under 1996 ஜனவரி by அந்நஜாத்
எல்லாம் வல்ல அல்லாஹ் அல்குர்ஆனின் 9:60 வசனத்தில் ஜகாத் பெறும் ஏழு கூட்டத்தினரைக் குறிப்பிட்டுவிட்டு எஞ்சிய ஒன்றில் மட்டும் “ஃபீஸபீலில்லாஹ்”, அல்லாஹ்வுடைய பாதையில் என்று பொதுவாக் குறிப்பிட்டுள்ளான். எனவே அந்நஜாத் “ஃபீஸபீலில்லாஹ்”, என்ற பாகத்திற்கு அல்லாஹ்வுடைய சத்திய மார்க்கத்தை நிலைநாட்ட செய்யப்படும் எல்லா முயற்சிகளும் இதில் அடங்கும் என்று தெளிவு படுத்தியிருந்தது. Continue Reading »
Aug
25
2010
Filed under 1996 ஜனவரி by அந்நஜாத்
”"நமது பகிரங்க விரோதி” Continue Reading »
Aug
25
2010
Filed under பகுத்தறிவாளர்களே! by அந்நஜாத்
இஸ்லாமிய இறை நம்பிக்கை!
இறை நம்பிக்கையால் நாஸ்திகர்களை விட ஆஸ்திகர்களே இவ்வுலகில் மன நிம்மதியுடனும், சந்தோசத்துடனும் வாழ முடிகிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்க நெறிப்படி ஒரே இறைவனில் மட்டும் நம்பிக்கை வைப்பவர்கள் இவ்வுலகிலும் பூரண மன நிம்மதியைப் பெறுகின்றனர். எனவே இறை நம்பிக்கையால் கண் முன் காணும் இவ்வுலக வாழ்க்கையை ஆஸ்திகர்கள் நஷ்டப்படுத்திக் கொள்ளவில்லை என்பதை விரிவாகப் பார்த்தோம்.
இனி இஸ்லாமிய இறை நம்பிக்கையின்படி செயல்படுத்தப்படும் செயல்களினால் மனிதன் இவ்வுலக வாழ்க்கையில் தனது பங்கை நஷ்டப்படுத்திக் கொள்கிறானா? என்பதை ஆராய்வோம்.
Continue Reading »
Aug
24
2010
Filed under 1996 ஜனவரி by அந்நஜாத்
Dr.A. முஹம்மது அலி Ph.D..
இந்திரிய துளியின் பரிணாம வளர்ச்சி : விதி எண் 5
1. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கப்பட்டும்; குதித்து வெளிப்படும் (ஒது துளி) நீரினால் படைக்கப்பட்டான். முதுகுத் தண்டிற்கும், விலா எலும்ழுகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. (அல்குர்ஆன் 86: 5-7 ) Continue Reading »
Aug
23
2010
Filed under 1996 நவம்பர் - டிசம்பர் by அந்நஜாத்
அபூ ஃபாத்திமா
அல்லாஹ்(ஜல்) கூறுகிறான்: “அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணையாளர்களும் அவர்களுக்கு இருக்கின்றனரா? மேலும்( மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க) கூலி கொடுக்கப்படும் எனும் இறைவனின் வார்த்தை இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.” (அல்குர்ஆன் 42:21) Continue Reading »
Aug
22
2010
Filed under 1996 நவம்பர் - டிசம்பர் by அந்நஜாத்
முஸ்லிம்களே ஒன்றுபட்டு! ஒரே அமீரின் கீழ் செயல்படுவோம் வாருங்கள்!!
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
1417 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ்வின் கட்டளைபடி நபி(ஸல்) அவர்கள் அமைத்து, நடத்திக்காட்டி, நமக்ககாக விட்டுச் சென்ற “ஜமாஅத்துல் முஸ்லிம்மீன்” சமூக அமைப்பில் முஸ்லிம்கள் தங்களுக்கிடையேயுள்ள வேற்றுமைகளை மறந்து இணைந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அதுபற்றிய தெளிவுகளை 1989 ஜனவரிலும், 1991 ஆகஸ்டிலும் அந்நஜாத்தில் வெளியிட்டிருந்தோம். மறந்துவிட்ட சகோதர சகோதரிகள் மீண்டும் உணர்வு பெற அக்கட்டுரையையே மீண்டும் இந்த இதழில் இடம் பெறச் செய்துள்ளோம். Continue Reading »
Aug
21
2010
Filed under வீடியோ by அந்நஜாத்
1.முஸ்லிமை காபிஃர் என்று கூறுவதற்கு யாருக்கும் அதிகாரமில்லை
2.இஸ்லாத்தில் புரோகிதத்திற்கு அனுமதி இல்லை
3.ஏன் நீங்கள் அனைத்து ஆலிம்களையும் வசைபாடுகிறீர்கள்?
Aug
21
2010
Filed under 1996 நவம்பர் - டிசம்பர் by அந்நஜாத்
M. அமீர்ஜான்
AIDS என்பதன் விரிவாக்கம்: Acquired Immune deficiceny syndrome என்பதாகும். இந்த நோயின் முக்கிய கரு HIV என்னும் வைரஸ் கிருமியாகும். இரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் மற்றும் இன்ன பிற நுண்பொருட்கள் உள்ளன. வெள்ளையணுக்களிலும் இரத்தத்தில் இருக்கும் பிலாஸ்மாவிலும் இம்முனோ குளோவின் எனும் நோய்த தடுப்பு சக்தி உண்டு. நம் உடல் நோய் வாய்ப்படும் போது, இந்த இம்யூனோ குளோவின் எனும் நோய்த் தடுப்பு சக்தி உண்டு. நம் உடல் நோய் வாய்ப்படும் போது, இந்த இம்யுனோ குளோபின் நம் உடல் நோய் வாய்ப்படும் போது, இந்த இம்யுனோ குளோபின் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பைத் தந்து ஈடு செய்யும். ஆனால் ‘எய்ட்ஸ்’ நோய்க்கு காரணமான இந்த HIV நோய் எதிர்ப்புத் தன்மையை முழுவதுமாக செயலிழக்கச் செய்கிறது. இதன் காரணமாக மனித உடல் நோய்க்கு ஈடு கொடுக்க முடியாமல் சோர்ந்து போய்விடுகிறது. மெல்ல மெல்ல இந்நோய்க்கு ஆளான மனித உடல் மரணவாசலை நோக்கி பயணிக்க தொடங்குகிறது. Continue Reading »
Aug
20
2010
Filed under 1996 நவம்பர் - டிசம்பர் by அந்நஜாத்
Dr.U.M.M.Nubar Mohamed Farook, SriLanka
இந்த இஸ்லாமிய சமுதாயம் ஒன்றுபடக் கூடாது; ஒருமைபாட்டுடனும், ஒத்த கருத்துடனும் இருந்து விடக் கூடாது என்பதற்காக உலக முழுவதும் படாதபாடுபட்டு கொண்டிருக்கின்றாரகள். அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு முஸ்லிம்களாகிய நாமும் அறிந்தும் அறியாமலும் துணை போய்க் கொண்டிருக்கின்றோம். Continue Reading »
Aug
19
2010
Filed under 1996 நவம்பர் - டிசம்பர்,பகுத்தறிவாளர்களே! by அந்நஜாத்
செப்டம்பர் இதழ் தொடர்:
“இறைவனைப் பார்த்துத்தான் ஏற்றுக் கொள்வேன்” என்ற வாதம் பகுத்தறிவு வாதமல்ல; பார்த்தறிவு வாதம் என்பதை அந்நஜாத் ஏப்.96 இதழில் தெளிவுபடுத்தி இருந்தோம்.அதைத மறுத்து “அந்நஜாத் ஏட்டுக்கு மறுப்பு” என்ற தலைப்பில் “உண்மை” ஏடு (ஜூ96, 16-30) கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்நஜாத் இதழ் அவர்களுக்குத் தொடர்ந்து சென்று கொண்டிருந்தாலும் அவர்கள் அதற்கு மாற்றுக் காப்பி அனுப்பும் பத்திரிகா தர்மத்தைக் கடை பிடிப்பவர்களாக இல்லை. Continue Reading »
Aug
18
2010
Filed under 1996 நவம்பர் - டிசம்பர் by அந்நஜாத்
எம்.பி.ரபீக் அஹ்மத்
உலகில் பிரபலமாக இருக்கும் மதங்கள் ஐந்து.
1.கிறிஸ்துவ மதம் 2. இஸ்லாமிய மார்க்கம் 3.யூத மதம் 4. இந்து மதம் 5. புத்த மதம் Continue Reading »
Aug
16
2010
Filed under 2010 ஆகஸ்ட் by அந்நஜாத்
இறைப்பிரியன்
மற்ற சமுதாய மக்கள் வருடா வருடம் சில குறிப்பிட்ட தினங்களில் விசேஷ நிகழ்வுகளை நினைவூட்டும்(?) விதமாக சில சடங்கு சம்பிர தாயங்களைச் செய்து வருவது நாம் அறிந்ததே. அதேபோல அவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் முஸ்லிம் சமுதாய மக்களும் வருடத்தில் மூன்று இரவுகளை அதாவது ரஜப் மாதத்தில் மிஃராஜ் இரவு, ஃபான் மாதத்தில் பராஅத் இரவு மற்றும் ரமழான் மாதத்தில், 26ம் நாள் இரவை 27ஆம் நாள் லைலத்துல் கத்ர் இரவு என்று சிறப்பித்து கொண்டாடி பள்ளிவாசல்களை பிரகாசமாக அலங்கரித்து சில விசேஷ பிரசங்கங்களை வைத்து பிரமாதமாக ஜமாய்த்து வருவதும் நாம் வழக்கமாக கண்டு வரும் காட்சி. Continue Reading »
Aug
15
2010
Filed under 2010 ஆகஸ்ட்,மூடநம்பிக்கை by அந்நஜாத்
அபூயாசிர்,உடன்குடி
அறிவுக்குப் பொருத்தமான நடைமுறைக்குச் சாத்தியமான வாழ்க்கை நெறியே இஸ்லாம் ஆகும். ஆயினும் இஸ்லாம் என்றாலே மூட நம்பிக்கையின் மொத்த உருவம் என்று கருதும் அளவிற்கு இன்று முஸ்லிம்களின் நிலை இருந்து வருகிறது. இந்த மூட நம்பிக்கைகளில் பெரும்பாலும் பெண்கள்தான் பெரும் பங்கு வகிக்கின்றனர் என்றால் மிகையாகாது. Continue Reading »
Aug
14
2010
Filed under பகுத்தறிவாளர்களே! by அந்நஜாத்
மதங்களாலேயே நஷ்டம்!
நாஸ்திகர்களுக்கு இறுதி அறிவுரையாக ஒன்றைப் பார்த்தோம். அதாவது நாஸ்திகர்கள் இறைவனோ, மறுமையோ இல்லை என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆஸ்திகர்கள் இறைவனும் மறுமையும் உண்டு என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இதில் நாஸ்திகர்களின் கூற்று உண்மையானால் பாதிப்பு இரு சாராருக்கும் இல்லை. நாஸ்திகர்களும் தப்பி விடுவார்கள். ஆஸ்திகர்களும் தப்பி விடுவார்கள் என்பதை நாஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தோம். அதே சமயம் நாஸ்திகர்களின் கூற்று பொய்யாகி ஆஸ்திகர்களின் கூற்று உண்மையானால் ஆஸ்திகர்கள் தப்பிக்கொண்டார்கள். நாஸ்திகர்கள் வகையாக மாட்டிக் கொண்டார்கள் என்பதையும் நாஸ்திகர்கள் மறுக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தோம். Continue Reading »
Aug
13
2010
Filed under 2010 ஆகஸ்ட் by அந்நஜாத்
பெங்களூர் M.Sகமாலுத்தீன்
“உடுத்தும் உடையில் மாற்றம் மட்டும் சந்நியாசம் ஆகாது, வீட்டைத் துறப்பதும் சந்நியாசமில்லை; உண்மையில் மனதிலுள்ள பாசத்தையும், பந்தத்தையும், ஆசையையும், கோபத்தையும், காமத்தையும் துறப்பதே உண்மையான சந்நியாசமாகும்’ ஸ்ரீரமணமகரி´. Continue Reading »
Aug
12
2010
Filed under 2010 ஆகஸ்ட்,தலையங்கம் by அந்நஜாத்
கடந்த ஜூன் 2010ல் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோலாகலமாக நடந்தேறியது. மெத்த மகிழ்ச்சி. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட எவரும் தமிழை நேசித்து அதை வளர்க்கப் பாடுபடாமல் இருக்க முடியாது. தாய் மொழித் தமிழை அதுவும் ஆதி மனிதன் பேசிய தமிழுக்கு மெருகூட்டி அதை வளர்த்து மக்கள் மத்தியில் செத்த மொழியாக ஆகிவிடாமல் பாதுகாத்து வருவது தமிழ்ப் பேசும் ஒவ்வொருவரின் நீங்காக் கடமையாகும் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்கமுடியாது. தூய தமிழ்ப்பேசும் தமிழகத்தின் தென் கோடியில் பிறந்த எமக்கு, எமது தாய்மொழி தமிழை வளர்ப்பதில் அக்கறையுண்டு. ஆயினும் தமிழை வளர்க்கிறோம்; தமிழை செம்மொழித் தமிழாக ஆக்குகிறோம் என்ற பெயரால் மூட நம்பிக்கைகளையும், பகுத்தறிவு ஏற்காத கட்டுக் கதைகளையும், கற்பனைகளையும் வளர்ப்பது உகந்த செயலாக ஒருபோதும் ஆகாது. Continue Reading »
Older Entries »