ஆசையில்லாத பெண் மனமா? N. ஆயிஷா மர்யம், ஒரத்தநாடு அல்லாஹ் தன் வழிகாட்டி நூலில்(அல்குர்ஆனில்) பெண்களைப் பற்றி குறிப்பிடும்போது “…ஆண், பெண்ணை போன்றவன் அல்ல”    அல்குர்ஆன் 3:36 என்று கூறிவிட்டு, அதனால் பெண்களுக்குரிய சில சலுகைகளையும், பெண்களுக்குரிய சில தனிப்பட்ட சட்டங்களையும், பெண்களுக்குரிய பாதுகாப்பைப் பற்றியும், பெண்களுக்கு சொத்தில் உள்ள உரிமைகளையும், இன்னும் பலவற்றையும் கூறியுள்ளான். குறிப்பாக ஆண்களால் செய்யமுடியாத, தாங்கமுடியாத பெண்களால் மட்டுமே முடிந்த ஒரு சிரமத்தை பற்றியும் இறைநூலில் குறிப்பிடுகிறான். அது என்னவென்றால், […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. இரு ஒளிச்சுடர்கள் என்று எந்த அத்தியாயங்களை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? அல்பகரா, ஆலிஇம்ரான் ஆகிய சூராக்கள். முஸ்லிம் 1470 2. நோன்பு எதைப் போன்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? பாவங்களிலிருந்துகாக்கின்றகேடயம்போன்றது.    புகாரீ: 1894 3. ஜோசியம் பார்ப்பவரின் (கேட்பவரின்) எத்தனை நாள் தொழுகை அங்கீகரிக்கப்படாது என நபி(ஸல) அவர்கள் கூறினார்கள்?  நாற்பதுநாட்களின்தொழுகை. முஸ்லிம் 4488 4. வல்லமையுடைய (சக்தியுடைய) அடியார் என யாரை அல்லாஹ் குறிப்பிடுகிறான்? தாவூத்(அலை) […]

தினமும் (பாவ) மன்னிப்புத் தேடுவோம்! M. சையத் முபாரக், நாகை. நாம் பாவம் செய்யும்போது ஈமான் குறைகிறது. நம்மிடமிருந்து ஈமான் விடை பெறுகிறது. (புகாரி:5578) ஈமான் நீங்கிய நிலையில் நம்மை மரணம் தழுவி விட்டால் நம்மை அரவணைக்கக் காத்திருப்பது நரகமே. ஆகவே, பாவம் செய்வதைத் தவிர்க்கலாம். நம்மை அறியாமல் ஏற்படும் பாவத்திற் காகவும், அறிந்து செய்யும் பாவத்திற்காகவும் தினமும் தவ்பா (பாவமன்னிப்பு)  அல்லாஹ்விடம்  கேட்போம். அல்லாஹ்வின்  விருப்பம் : பாவம் செய்வது அல்லாஹ்விடமிருந்து நம்மை தூரமாக்குகிறது. மன்னிப்பு […]

மார்க்கத்தில் குழப்பமா? மக்களிடம் குழப்பமா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் “…இன்று இஸ்லாம் மார்க்கத்தை உங்களுக்காக முழுமைக்கிவிட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் இஸ்லாத்தை (மார்க்க)த்தை வாழ்க்கைக்கு வழிகாட்டியாக ஆக்கி வைத்துள்ளேன்”.   அல்குர்ஆன் 5:3 என்று இறைநூலில் இறைவன் பிரகடனப்படுத்தியுள்ளான். எந்தவொரு சரியான வழிகாட்டுதலும் இல்லாத எத்தனையோ மதங்கள் உலகில் இருக்கின்றன. ஆனால் இதுதான் நேர்வழி (இஸ்லாம் மார்க்கம் மட்டுமே) என தெளிவு படுத்திய பின்பும் ஏன் இத்தனை பிரிவுகள், பல […]

மண்ணும் – மனிதனும் அய்யம்பேட்டை A. நஜ்முதீன் மனித படைப்பைப் பற்றி இறைநூல் (அல்குர்ஆன்) கூறும்பொழுது, “மனிதனை மண்ணால் படைத்தோம்‘ என்பதாக. இறைவனால் படைக்கப்பட்ட பொருள்கள் இலட்சக்கணக்கில் இருக்கும்போது “மனிதனை ஏன் மண்ணால் படைத்தான்?’ என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். மேலும் இறைநூலில் மனித படைப்பை பற்றி இறைவன் கீழ்கண்ட வசனங்களில் சுமார் 10 இடங்களில் கூறியுள்ளான்.  அவை: 3:59,4:1, 15:26, 15:28, 23:12, 32:7, 37:11, 38:71, 49:13, 55:14. மேற்கண்ட வசனங்களுக்கு மாற்றமாக கீழ்கண்ட […]

அவர் யார்? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் நான் குழந்தையாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு ஒருவரை(?) புதியதாக அழைத்து வந்தார் என் அப்பா, அவரை(?) என் அம்மாவுக்கும் பிடித்திருந்தது, இருவரும் (அம்மா–அப்பா) என்னிடம் செலவழிக்கும் நேரத்தை விட அவரிடம்(?) அதிக நேரம் செலவழித்தனர். அதனால்  ஆரம்பத்தில் எனக்கு அவரை(?) பிடிக்கவில்லை, ஆனாலும்  வெகு சீக்கிரமே அவர்(?) எங்கள் குடும்பத்தில் ஒருவராக போனார். நாட்கள் செல்ல செல்ல எனக்கும் அவரை(?) பிடித்துவிட்டது. என் அப்பாவும், அம்மாவும் எதாவது அறிவுரை சொல்லிக் […]

பன்றியின் மாமிசம் மட்டும்தான் ஹராமா? N. அஹமது இப்ராஹிம், ஒரத்தநாடு. பொதுவாக உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று பன்றியின் மாமிசம் ஹராம் என்பது. அது ஏன் ஹராம்? என்று கேட்டால் குர்ஆனில் இறைவன் அதை ஹராம் என்று சொல்லி உள்ளான் என்று தெரிந்து வைத்திருப்பவர்களே அதிகம். ஆனால் ஏன் ஹராம்? என்று கேட்டால் அதைப்பற்றி விரிவாக தெரியாதவர்களே அதிகம். எனவே பன்றியின் மாமிசத்தை இறைவன் ஏன் ஹராம்? என்று கூறியுள்ளான் என்று பார்ப்போம். இவ்வுலகில் படைக்கப்பட்டு […]

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : இவ்வுலகில் நம் உறவினர்களுடனான சண்டைகள் மறுமையிலும் நினைவூட் டப்பட்டு விசாரிக்கப்படுமா?  சுல்தான் தெளிவு : அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர் களாகப் பிரிந்து வருவார்கள்.  (அல்குர்ஆன் 99:6) எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதற்குரிய பலனை அவர் கண்டுகொள்வார்.  (அல்குர்ஆன் 99:7) அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (அல்குர்ஆன் 99:8) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் […]

தலையங்கம் : நீரும் – நெருப்பும்… பொதுவாக மதங்களை பின்பற்றக்கூடிய எல்லா மதத்தினரும் கடவுளை (இறைவனை) வழிபடும்பொழுது “நெருப்பை‘ துணையாக ஏற்படுத்திக் கொள்கின்றனர். உதாரணமாக: இந்துக்கள் : விளக்கில் எண்ணெயை ஊற்றி கடவுளை வழிபடுகின்றனர். கிறிஸ்தவர்கள் : மெழுகுவர்த்தியை ஏற்றி இயேசுவை வழிபடுகின்றனர். பெளத்தர்கள் : பெரும் பெரும் ஊதுவத்தியை ஏற்றி புத்தரை வழிபடுகின்றனர். சீனர்கள், சீக்கியர்கள் மற்றும் மதங்களை பின்பற்றும் பலரும் கடவுளை வழிபடும் பொழுது “நெருப்பை‘யே துணையாகக் கொள்கின்றனர். ஆனால் இஸ்லாம் மார்க்கத்தில் அத்தகைய […]

ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களை நிராகரிப்பது குர்ஆனையே நிராகரிப்பதாகும்! அபூ அப்தில்லாஹ் மறுபதிப்பு : 2025 ஜனவரி  மாத  தொடர்ச்சி…. 7:3, 53:4 இந்த இரண்டு வசனங்களை நடுநிலையோடு, உள்ளத்தில் எவ்வித வழிகெட்ட சிந்தனையும் இல்லாமல் படித்து விளங்குகிறவர்கள், இன்னும் மேலே எழுதப்பட்டுள்ள எண்ணற்ற வசனங்கள் கூறுவது போல் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பின்பற்றியே ஆகவேண்டும். அதுவே ஒரே நேர்வழி என்பதை  நிச்சயம்  உணர  முடியும். ஹதீஃத் மறுப்பாளர்கள் பல குர்ஆன் வசனங்களுக்கு எவ்வித குர்ஆன், ஹதீஃத் ஆதாரமுமின்றி சுயவிளக்கம் […]

பல்சமயச் சிந்தனை! ஆசிரியர் குழு 2025 ஜனவரி தொடர்ச்சி… சந்தேக  நிவர்த்தி : நியாயமான சந்தேகம்; தெளிவாக்கப் பட வேண்டியதே. சந்தேகத்தை விளங்கிக் கொண்டால் செய்தி எளிதாகிவிடும். உலக ஆதாயத்திற்காக மனிதர்களால், சுயநல நோக்கோடு ஏற்றுக் கொள்ளப்பட்டவை மதங்கள் என்று பார்த்தோம். மார்க்கத்தைத் திரித்து மதங்களாக ஆக்கும் ஒரு (புரோகிதர் கள்) கூட்டம் உலக ஆரம்பத்திலிருந்தே இருக்கிறார்கள். உலகம் முடியும் வரை இருப்பார்கள். இக்கூட்டத்தாரால் முந்தைய  தூதர்களின் மார்க்கம் மதங்களாக ஆக்கப்பட்டது போல், இறுதித் தூதரின் நிறைவு […]

வருமுன் காப்போம் வளம் பெறுவோம்! (அ) நிம்மதியாக (சந்தோ­மாக) வாழ வழி! அய்யம்பேட்டை A. நஜ்முதீன் ஜனவரி மாத தொடர்ச்சி…. நோயே!  என்னை  நெருங்காதே (உடல்நலம்) சித்த  வைத்தியம் : ஒரு காலத்தில் மருத்துவம் யூத மதவாதிகளின் கையில் ஏகபோகமாக இருந்தது. அவ்வாறு இருந்தபோது நோய்களை ஆவி எனவும், பேய் பிசாசு என்றும், பில்லி சூனியம் என்றும் கூறி மந்திரித்தல் என்ற பெயரில் பல பித்தலாட்டங்கள் செய்து மக்களை ஏமாற்றி வந்தனர். அத்தகைய நம்பிக்கையை முதன்முதலில் தகர்த்தது […]

உறவுமுறைகளைப் பேணுவதன் அவசியமும் – அதனைப் பேணுவதால் ஏற்படும் சிறப்புகளும் – அதனை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்…. எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2025  ஜனவரி  தொடர்ச்சி… ஒரு வருடம் வெறுத்திருந்தால் அவரது செயல் அவரின் இரத்தத்தை ஒட்டிக் கொலை செய்வது போலாகும்: “ஒருவர் தனது சகோதரனை ஒரு வருடம் வெறுத்திருந்தால் அவரது செயல் அவரின் இரத்தத்தை ஓட்டுவது (கொலை செய்வது) போலாகும்‘ என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். (அறிவிப்பவர்: அபூஹிராஷ் ஹத்ரத் இப்னு […]

அறிவியலை விட இஸ்லாம் சிறந்ததா? எப்படி? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் உலகில் ஒவ்வொரு நாளும் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக புதிதுபுதிதான கண்டுபிடிப்புக்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஒரு காலத்தில் கனவாக, கற்பனையாக இருந்தவை எல்லாம் இன்று நினைவாகி நம்மை  வியப்பில்  ஆழ்த்துகின்றன. மிக சமீபகால அறிவியல் வளர்ச்சியின் கண்டுபிடிப்பான புணூ (புrமிஷ்க்ஷூஷ்உஷ்ழியி ணூஐமிeயியிஷ்ஆeஐஉe) (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் மிகவும் ஆச்சரியத்தையும், ஆபத்தையும் தருகின்றன. அறிவியல் மின்னல் வேகத்தில் வளர்ச்சி பெற்று மனிதனுக்கு சில சேவைகளை செய்கிறது என்பது உண்மைதான். […]

அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2025  ஜனவரி  மாத  தொடர்ச்சி… தூதர்கள் மூலமாகவும் அவர்களிடம் எடுத்துக்கொண்ட  உறுதிமொழிகள்: “உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்தபின் உங்களிடம் இருப்பதை உண்மைப் படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?’ என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து “இதை ஒப்புக்கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டீர்களா?’ என்று கேட்டபோது, […]

சொர்க்கம் எங்கே இருக்கிறது? சொர்க்கம் ஏன்? யாருக்காக? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் பொதுவாக சொர்க்கத்தைப் பற்றியான கருத்து பல்வேறாக நிலவுகிறது. அவை : 1. வானில் இருக்கிறது. 2. இறைவன் எங்கே இருக்கின்றானோ அங்கே இருக்கிறது, 3. தூய்மையான இடத்தில் உள்ளது, 4. நாம் வாழ்வதே சொர்க்கத்தில்தான், 5. சொர்க்கம் இருப்பதை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. 6. சொர்க்கம்–நரகம் என்பதெல்லாம் அழகிய கற்பனையே! இதில்  எது  உண்மை? இறை நம்பிக்கையாளர்கள் (ஈமான் கொண்டவர்கள்) மறைவானவற்றை […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. இறப்பின் நெருக்கத்தில் இருப்பவருக்கு நாம் எதை நினைவுபடுத்தவேண்டும் என நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள்? லாஇலாஹஇல்லல்லாஹ்என்றுநினைவுப்படுத்தவேண்டும்.  முஸ்லிம்: 1672 2. இறை நம்பிக்கையில் பாதி என்று எதை நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்? தூய்மை :  முஸ்லிம் : 381 3. எந்த நபியுடைய சமுதாயத்தினர் மானக்கேடான செயல்களை செய்தனர் என அல்லாஹ்  கூறினான்? லூத்  நபியின்  சமுதாயத்தினர்.   அல்குர்ஆன் 29:28 4. ஹிஜ்ரத் என்ற நிகழ்ச்சி நடந்திராவிட்டால் நான் யாரில் […]

தொப்பியும், தொழுகையும்! K. ரஹிமுத்தீன், குண்டூர், திருச்சி. மறு பதிப்பு : அன்பு இஸ்லாமிய தோழர்களே, கடந்த 40 வருடங்களுக்கு முன் தொழுகையின்போது தொப்பி அணிவது, அணியாமல் தொழுவது போன்ற பிரச்சனைகள் எந்தப் பள்ளிவாசலிலும் எழவில்லை. இன்றும் இந்த தொப்பி விவகாரம் ஒருசில பள்ளிவாசலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கு உரியன என அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டாலும் ஜமாஅத்துல் உலமாக சபைக்கு கீழ் இயங்கும் பள்ளிவாசல்கள் நான்கு மத்ஹப்களை பின்பற்றுபவர்களுக்குச் சொந்தமானது என பகிரங்கமாகவே விளம்பரம் […]

ஆலிம்களால் அலைக்கலைக்கப்படும் பிறை! M. சையத் முபாரக், நாகை. அல்குர்ஆனிலும் சரி; நபி(ஸல்) அவர்களின் வாழ்விலும் சரி பிறை பற்றி எந்தக் குழப்பமும் இல்லை; பிரச்சனையும் எழவில்லை. மிகத் தெளிவாகவே இருக்கின்றது. ஆலிம் வர்க்கமே பிறை குழப்பத்தை, பிரச்சனையை ஆரம்பித்து தூண்டி வளர்க்கின்றது. குர்ஆன் ஆதாரம் : ரமழானில் நோன்பு பிடிப்பது நமது இலக்கு (கடமை) அதற்காக ரமழான் மாதத்தை அடைவது நமது நோக்கம். அதை அடையும் வழி சந்திரநாட்காட்டி (வானவியல் கணக்கு). “…ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் […]

(அறிவியல் கட்டுரை) பூமியை  பற்றிய  விளக்கம் அய்யம்பேட்டை A. நஜ்முதீன் 1. பூமியைப்  பற்றி : A. பூமி உருண்டை என்பதை நிரூபிக்கிறது: வசனம் : 18:86, 18:90 பொதுவாக எந்த ஒரு உருண்டையான பொருளை நாம் பார்த்தாலும் பாதி உருண்டை முன்புறமும், மீதி உருண்டை எதிர்புறம் தான் இருக்கும். எனவேதான் இறைவன் சூரியன் மறைவதை வசனம் 18:86லும் சூரியன் உதிப்பதை 18:90லும் ஒரு வரலாற்று சம்பவம் மூலம் நமக்கு பூமி தட்டை அல்ல உருண்டை தான்  […]