ரமழான் இரவுத் தொழுகை… 

in 2024 மார்ச்

ரமழான் இரவுத் தொழுகை 

அபூ ஃபாத்திமா

ஆயிரம் மாதங்களை விட சிறப்புக்குரிய லைலத்துல் கத்ருடைய நாளையுடைய பெரும் நன்மைகளைப் பெற்றுத் தரும் ரமழான் மாதம் இன்ஷா அல்லாஹ் 11.03.2024 புதன் அன்று ஆரம்பமாகிறது. எல்லா மாதத்தின் இரவுகளில் நின்று வணங்குவது நபியின் நடைமுறையில் (சுன்னத்) உள்ளதாகும். சுன்னத் என்ற அடிப்படையில் நாம் செயல் படும்போது அதை நபி(ஸல்) கண்டிப்பாக நமக்குக் காட்டித் தந்திருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராக எந்தச் செயலாக இருந்தாலும், அதை சுன்னத் என்று செயல்படுத்த முற்பட்டால் அதுபித்அத்என்ற வழிகெட்ட செயலாகவே ஆகும். இதை கீழ்வரும் ஹதீத்கள் உறுதிப்படுத்துகின்றன.

நற்செயல்களில் (அமல்களில்) எனக்கு மாறு செய்யக்கூடாதுஎன்று நபி(ஸல்) எங்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். உபாதா இப்னு ஸாமித்(ரழி), புகாரீ, முஸ்லிம், முஅத்தா, திர்மிதி, நஸயீ.

ஒரு காட்டரபி நபி(ஸல்) அவர்களிடம் உளூவின் விவரத்தைக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று முறைகளாக உளூ செய்து காட்டிஇவ்விதமாகத்தான் உளூ செய்யவேண்டும்என்று கூறிவிட்டு, “எவர் இதைவிட அதிகப்படுத்துகிறாரோ அவர் நிச்சயமாகத் தீமையைச் செய்தவராகவும், அளவு மீறியவராகவும், அநியாயம் செய்பவராகவும் ஆவார்என்று அம்ருப் னூல் ஆஸ்(ரழி) அபூதாவூது, நஸயீ.

எவரும் நம் மார்க்கத்தில், மார்க்கத்தில் இல்லாதவற்றை புதிதாகப் புகுத்தினால் (அதாவது அதிகப்படுத்தினால்) அவை நிராகரிக்கப்பட வேண்டியவையாகும்  ஆயிஷா(ரழி), புகாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராக ஒரு செயலை, அது அழகானது. நன்மை தரக் கூடியது என்று ஒருவன் கூறினால், அவன் நபி(ஸல்) அந்த நன்மை தரும் செயலை காட்டித்தராமல் மறைத்துவிட்டார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் மீது குற்றம் சுமத்துகிறான். அதாவது நபி(ஸல்) அவர்களின் ரிஸாலத்தைதூதுத்துவ பணியை மறுத்து வழிகெட்டுச் செல்பவனாகவே இருப்பன் என்று இமாம் மாலிக்(ரஹ்) மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

7:3, 33:66,67,68, 5:3, 3:19,85, 59:7 இந்த அனைத்து இறைவாக்குகளும் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு மார்க்கத்தில் அணுவளவும் கூட்டவோ, குறைக்கவோ முடியாது  என  உறுதிப்படுத்துகின்றன.

இந்த எச்சரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு ரமழான் இரவுத் தொழுகை பற்றிய ஆதாரப்பூர்வமான செய்திகளையும் ஷைத்தானின் தூண்டுதலினால் அற்ப உலகம் ஆதாயம் தேடும் மவ்லவிகளின் முன்னோர்களின் கற்பனை செய்திகளையும் உரிய ஆதாரங்களுடன் பார்ப்போம்.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம் அபூ சல்மதுப்னு அப்துர் ரஹ்மான்(ரழி) நபி (ஸல்) அவர்களின் ரமழான் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது என்று கேட்டதற்குரமழானிலும், ரமழான் அல்லாத காலங்களிலும் நபி(ஸல்) 11 ரகாஅத்துகளுக்கு மேல் தொழுததே இல்லைஎன்று கூறினார்கள். இந்த ஆதாரபூர்வமான செய்தி பிரபலமான அனைத்து ஹதீத் நூல்கள் உட்பட 14 நூல்களில்  இடம்  பெற்றுள்ளது.

இந்த ஹதீதை நடுநிலையோடு கவனமாக ஆராயும்போது, ஒரு விசயம் பளிச்சென்று நமது கவனத்திற்கு வருகிறது. ஆயிஷா(ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டது. ரமழான் இரவுத் தொழுகை பற்றியே; ஆனால் அவர்களது பதிலில் ரமழானிலும், ரமழான் அல்லாத காலங்களிலும் என்று அழுத்தமாக ரமழான் அல்லாத மற்ற நாட்களையும் குறிப்பிட்டு பதில் அளிக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரியவருகிறது? ரமழான் இரவுத் தொழுகையின் எண்ணிக் கையை மற்ற நாட்களை விட அதிகப்படுத்தவில்லை. வழமையாக மற்ற நாட்களில் இரவில் தஹஜ்ஜுத் என்று எத்தனை ரகாஅத்துகள் தொழுது வந்தார்களோ அதே எண்ணிககை அளவுதான் தொழுதார்கள் என்று உறுதிப்படுத்தினார்கள். மேலும் அவர்களின் இந்த பதில் ரமழானிலும் 8+3=11 ரகாஅத்துகளுக்குமேல் அதிகப்படுத்தவில்லை என்பதை அழுத்தமாக உறுதிப்படுத்துகிறது.

மக்களை வழிகெடுக்கும் மவ்வவி வர்க்கம் இந்த ஹதீத் நபி(ஸல்) நடுநிலையில் தொழுத தஹஜ்ஜுத் தொழுகையை குறிக்கிறது. இஷாவுக்குப் பிறகு தொழுத 20+3=23 ரகாஅத்தை அது குறிப்பிடவில்லை என்று சுயவிளக்கம் கொடுக்கிறார்கள். ஆயிஷா(ரழி) அவர்களை விட நாங்கள்தான் நபி(ஸல்) அவர்களின் நடைமுறையை சரியாகவும் தெளிவாகவும் அறிந்தவர்கள் என்று அகம்பாவம் கொள்கின்றனர். இவர்கள்தான் நபி(ஸல்) அவர்கள் கூட இருந்து நபி(ஸல்) அவர்கள் இஷாவுக்குப் பிறகு 23 ரகாஅத்துக்கள் தொழுததை தங்கள் கண்களால் கண்டு எடுத்துச் சொல்கின்றனர் போலும், எந்த அளவு நெஞ்சழுத்தம் இருந்தால் இப்படி ஒரு இறையச்சம் இல்லாத வார்த்தைகளை உதிர்க்க முடியும். நபி(ஸல்) அவர்கள் இஷாவுக்குப் பிறகு இரவுத் தொழுகை என்றோ, தராவீஹ் என்றோ தொழுததற்கு இந்த மவ்லவிகளால் ஒரே ஒரு ஆதாரபூர்வமான ஹதீதையும் தரமுடியாது. தராவீஹ் என்ற பெயரே முழுக்க முழுக்க இந்த மவ்லவிகளின் கற்பனையே!

நபி(ஸல்)அவர்கள் இஷாவுக்குப் பிறகு 23 ரகாஅத்துக்களும், நடுநிசித் தொழுகையாக 11 ரகாஅத்துக்களும் தொழுதிருந்தால் மொத்தம் 23+11=34 ரகாஅத்துக்கள் ஆகின்றன. மேலும் வித்ரு ஒரே இரவில் இரண்டு முறை தொழுத அபத்தமும் இருக்கிறது. இந்த நிலையில் நபி(ஸல்) அவர்களின் அருமை மனைவியாக சுமார் 9 வருடங்கள் வாழ்ந்து அவர்களின் இரவு பகல் அமல்களை உன்னிப்பாகக் கவனித்து அதை மக்களுக்கு அறிவிக்கும் ஆயிஷா(ரழி) அவர்கள், நபி(ஸல்)  அவர்கள் ரமழானில் 23+11=34 ரகாஅத்துகள் தொழுதிருக்க, ரமழானிலும், ரமழான் அல்லாத காலத்திலும் 11 ரகாஅத்துகளுக்கு அதிகமாக தொழுததில்லை என்று மிகஅழுத்தமாகக் கூறி இருக்க முடியுமா? இந்த சாதாரண நடுத்தர அறிவு கூட இல்லாத இந்த மவ்லவிகள் தாங்கள் தான் மெத்தப்படித்த மேதைகள் என்று எப்படி பீற்றிக் கொள்கின்றனர்?

நபி(ஸல்) அவர்கள் ரமழான் நடுநிசியில் தொழுதது 8+3=11 மட்டுமே என்பதை ஜாபிர்(ரழி) அறிவித்து இப்னு ஹுஸைமா பாகம் 2. பக். 138ல் காணப்படுகிறது. 

இப்படி மிகமிக ஆதாரபூர்வமாகக் காணப்படும் ஹதீத்களுக்கு முரணாக நபி(ஸல்) அவர்களே 20+3=23 தொழுதார்கள். உமர்(ரழி) தொழுதார்கள் போன்ற ஹதீத்களின் உண்மை நிலையை அவற்றை நடுநிலையோடு அல்லாஹ்வின் அச்சத்தோடு ஆராய்கிறவர்கள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்ட மவ்லவிகள் மட்டுமே வரிந்து கட்டிக்கொண்டு இந்த ஹதீத்களை தூக்கி  நிறுத்தப்  பார்ப்பார்கள்.

ரஜபு 27ல் ­பே மிஃராஜ், சஃபான் 15ல்­பே பராஅத், ரமழான் 27ல் மட்டும் லைலத்துல் கத்ர் நாளை தேடுவது இவை அனைத்தும் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட மவ்லவிகளின் கற்பனையில் உதித்தவையே அல்லாமல் ஆதாரபூர்வமான செய்திகள் அல்ல. அதிகமாகத் தொழுதால் நன்மைதானே, புண்ணியம்தானே என்று கூறி சுய சிந்தனையை இவர்களிடம் அடகு வைத்துள்ள மக்களை மயக்குவார்கள். ஐங்கால தொழுகை இல்லாத முஸ்லிம்களிடம் ஜும்ஆவுடையபித்அத்பயானில் இந்த இரவுகளில் நின்று வணங்கி, பகலில் நோன்பு நோற்றால் நேராக சுவர்க்கத்திற்குப் போய்விடலாம் என சில கனவு கற்பனைக் கதைகளைக் கூறி மயக்குவதிலிருந்தே இந்த புரோகித மவ்லவிகளின் சுயநலம் வெளிச்சத்திற்கு வரும். அதாவது நபி(ஸல்) அவர்களை விட நாங்கள் அதிபுத்திசாலிகள், மார்க்கத்தை நன்றாகவே அறிந்தவர்கள் என்று அகம்பாவம் கொண்டு, இமாம் மாலிக்(ரஹ்) கூறுவது போல் நபி(ஸல்) அவர்களின் ரிஸாலத்தை மறுப்பார்கள்.

எனவே இந்த மவ்லவிகளின் வஸீகர வலையில் சிக்காமல், நபி(ஸல்) அவர்களின் அழகிய நடைமுறையான சுன்னத்தைப் பின்பற்றி ரமழான் இரவுகளில் 8+3=11 மட்டுமே தொழுவோமாக அதுவும் பிந்திய இரவில் தனித்து தொழுவதே மிகவும் ஏற்றமாகும்; நபிவழியாகும். நாள் பஜ்ரில் ஆரம்பிக்கிறது. எனவே முதலில் நோன்பு, பின்னர் இரவுத் தொழுகை, பிந்திய இரவில் எழும்பி தொழமுடியாத சோம்பேரிகளுக்கு கொடுக்கப்பட்ட சலுகைதான் இஷாவுக்குப் பின்னால் தொழுவது மேலும் இத்தொழுகையை  ஜமாஅத்தாக தொழுவதில் மேலதிக நன்மைகள் இருப்பதாக ஆதாரம் எதுவும் இல்லை. இந்த ஏற்பாட்டைச் செய்த உமர்(ரழி) அவர்களே இதைத் தெளிவாகச் சொன்னது புகாரீயில் பதிவாகியுள்ளது. உமர்(ரழி) அவர்கள் தமீமுந்தாரி, உபை இப்னு கஃபு (ரழிம்) ஆகிய இருவருக்கும் மக்களுக்கு 8+3=11 ரகாஅத்துகள் தொழ வைக்கும்படி கட்டளையிட்ட ஹதீதை இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தனது முஅத்தாவின் 58ம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

மார்க்கத்தில் நன்மைதானே. புண்ணியம் தானே என்று சிந்திக்கத் தெரியாத மக்களை ஏமாற்றும் தந்திரம் எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் மவ்லவிகள் மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கி இருப்பதே காரணம் என்று புரியவரும். ரமழான் இரவுத் தொழுகையை தராவீஹ் என்றும் 23 ரகாஅத்துகள் என்றும் இவர்களாக ஆக்கிக் கொண்டு 15,000/-தரவேண்டும், 20,000/-தரவேண்டும், 25,000/-தரவேண்டும் என பேரம் பேசி கையேந்தி ஹராமான கூலி வாங்குவதை அவதானிப்பவர்கள் இந்த உண்மையை உணரும் காலம் விரைவில் இன்ஷா அல்லாஹ் வரும்.

Previous post:

Next post: