2024 ஏப்ரல்

தலையங்கம் : 39-ம்  ஆண்டில் அந்நஜாத்! அல்லாஹ்வின் கிருபையைக் கொண்டு “அந்நஜாத்’தனது 38 ஆண்டுகள் பணியை முடித்துக் கொண்டு இந்த 39ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.  அல்ஹம்துலில்லாஹ்! வரலாற்று  குறிப்பு : “அந்நஜாத்தின் ஆசிரியர் அவர்கள் சுமார் 42வயது வரை பல மவ்லவிமார்களுடன் இணைந்து இல்யாஸ் சாஹிபின் தப்லீஃக் பணியில் தீவிரமாக பணியாற்றி வந்தவர்கள்தான். அது மட்டுமல்ல இறைநூலை (குர்ஆனை) தினசரி ஒரு பாகம் அளவிற்கு (ஜுஸ்வு) அரபி மொழியில் மட்டுமே படித்து (ஓதி) வந்தவர்தான். […]

அஹ்மதும் முஹம்மதுமாகிய அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே நமக்கு அழகிய முன்மாதிரி! அஹமது இப்ராஹீம், புளியங்குடி எல்லாம் வல்ல அல்லாஹ் தனது நெறிநூலில் (அல்குர்ஆனில்)  இவ்வாறு  கூறுகின்றான்: “அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறுபவருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.”    (அல்குர்ஆன் 33:21) உண்மையான உறுதியான வாழ்க்கையாகிய மறுமையை நம்பும் முஸ்லிம்களாகிய நாம் நமது இம்மை மறுமை சம்பந்தப்பட்ட அனைத்து வாழ்வியல் நடைமுறைகளுக்கும் […]

சிந்தனை செய் மனமே!  எம். அபூ நஜ்மி, நெல்லை, ஏர்வாடி சிந்தனை ஏன் செய்யவேண்டும்? சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது என்று சிந்தனை செய் மனமே. அன்றியும் “சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது; நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்” என்று (நபியே!) கூறுவீராக.   அல்குர்ஆன் 17:81 அல்லாஹு ரப்புல் ஆலமீன் திருமறை குர்ஆனில் சத்தியம் வந்துவிட்டது. அசத்தியம் அழிந்துவிட்டது என்று கூறுகிறான். ஆனால் நாமோ சத்தியத்தை மறந்து அசத்தியத்தில் வீழ்ந்து கிடக்கிறோம்; நாம் ஏன் அசத்தியத்தில் […]

முதுமை என்னும் முனகல்! அபூ அஹமது இப்ராஹிம், ஒரத்தநாடு நீ எல்லாம் இருந்து என்ன பயன்?  பெற்ற பிள்ளையே சனியனே! என்று கூறுவது!  கட்டிய மனைவி சலிப்படைந்து வெறுப்பது! உறவுகள் கூடி கைத்தட்டி சிரிப்பது!  உடல் நிலை பாதிக்கப்பட்ட நேரத்தில் இந்த இம்சை எப்போ போய் சேரும் என அவர் காதுபட பேசுவது.  இல்லை என்று சொல்லாமல் உணவைக் கொடுத்து  தின்னு  தொலை  என்பது. மேற்கண்ட வார்த்தைகளை முதுமையானவர்கள் குடும்பத்தார், உறவினர் மூலம் பேசுவதை கேட்டதால் மனம் […]

முஸ்லிம்–முஸ்லிமீன்–முஸ்லிமன்–முஸ்லிமத்தின்– முஸ்லிமத்தன்–முஸ்லிமைனி என்பது குறித்து… எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2024  மார்ச்  தொடர்ச்சி…. உமர்(ரழி) அவர்கள் அறிவித்ததாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் துணைவியர் அனைவரும் சேர்ந்து கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்துகொண்டபோது, “நபி(ஸல்) அவர்கள் உங்களை விவாக விலக்குச் செய்தால் உங்களை விடவும் சிறந்த முஸ்லிமான துணைவியரை உங்களுக்கு பதிலாக இறைவன் அவர்களுக்குத் தரமுடியும்” என்று சொன்னேன். அப்போது (நான் கூறியவாறு) இந்த(த் திருக்குர்ஆன் 66:5வது) இறைவசனம் அருளப்பட்டது. (புகாரி : 4916, 402, 4481, […]

விரைவாக நோன்பு திறப்பது மட்டும் நபி வழி அல்ல! S. சித்தீக் M.Tech. விரைவாக நோன்பு திறப்பது மட்டும் நபி வழி அல்ல! விரைவாக மஃக்ரிப் தொழுவதும் சேர்த்து தான் நபி வழி! விரைவாக நோன்பு திறக்க வேண்டும் என்ற செய்தி மக்களிடம் பரவலாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது. அது ஹதீதின் ஒரு பகுதிதான். பரவலாக பிரச்சாரம் செய்யப்படாத அந்த ஹதீதின் மறு பகுதியை பார்ப்போம். நபி(ஸல்) அவர்கள் “நோன்பு துறப்பதையும், மஃக்ரிபையும்”விரைவுப்படுத்துபவர்களாக இருந்தார்கள் என அன்னை ஆயிஷா(ரழி) […]

வாசிப்பவருக்கு ஏற்பட வழிகாட்டும் இறைநூல்!  M. சையது முபாரக், நாகை ஹிஜ்ரிமுதல்நூற்றாண்டில்வரலாற்றில்நிகழ்ந்தமகத்தானபுரட்சிக்கு, மாற்றங்களுக்குக் காரணமாகத் திகழ்ந்தது அல்குர்ஆன் ஆகும். அந்த அற்புதம் வாய்ந்த இறைநூல் இன்று நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்தாதற்குக் காரணம் அல்குர்ஆன்  அல்ல,  நாமே தான்.  வளமானவாழ்விற்கும், நேர்வழி காட்டி நன்னெறிப்படுத்துவதற்கும், வாழ்க்கையின் அனைத்துப் பிரச்சனைகளின் தீர்வுக்கும், இம்மை மறுமை வெற்றிக்கும் நமக்கு இறக்கப்பட்ட ஒரே ஒரு நூல் அல்குர்ஆன். ஆனால், அதை நாம் மறந்துவிட்டு குர்ஆனை ஓதுவதன் மூலம் கிடைக்கும் சிறிதளவு நன்மையே நமக்குப் […]

அல்குர்ஆன் வழியில் அறிவியல்…. விண்ணையும் மண்ணையும் பிரித்தவன் யாரு?…  K.K.H. ஹழரத் அலி மறு  பதிப்பு :  மார்ச் மாத தொடர்ச்சி…. பூமிப்பந்து  விரிந்தது எப்படி? “இன்னும் (பூமியை) நாம் அதனை விரித் தோம்; எனவே இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.”  அல்குர்ஆன் 51:48 “இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)”  அல்குர்ஆன் 88:20 “பூமியின் மீதும், இன்னும் அதை விரித்த தின் மீதும் சத்தியமாக….”  அல்குர்ஆன் 91:6 என்றுபலஇடங்களில்பூமியைவிரித்ததைஅல்லாஹ்விரிவாகக்கூறுகின்றான். வானத்தை […]

“லைலத்துல் கத்ர்”  (ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்!) முஹிப்பில் இஸ்லாம் முன் இறை நெறி நூல்களும், ரமழான் மாத இரவுகளும்: நமக்கு முன் உள்ள சமுதாயங்களுக்கு அருளப்பட்ட நெறிநூல்கள் தவ்ராத், ஜபூர், இன்ஜில் போன்றவைகளை நாம் அறிந்துள்ளோம். இஃதன்றி, நம்மில் மிகப் பலருக்கு வியப்பூட்டும் தகவல் யாதெனில், முதன் முதலில் நெறிநூல் அருளப்பட்டவர்கள் இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களாவர். அவர்களுக்கு என்ன நெறிநூல்? எந்த மொழியில் அருளப்பட்டது? என்ற குறிப்புகள் காணக்கிடைக்கவில்லை. அறியத்தரப்படவில்லை. தேவை எனில் ரப்பில் ஆலமின் […]

உலகே மாயம்! ஸலஃபியே மாயம்!! அபூ அப்தில்லாஹ் அல்லாஹ்வின் அருளினால் தர்கா, தரீக்கா, மத்ஹபு வழிகேடுகளிலிருந்து விடுபட்டு குர்ஆன், ஹதீஃதை மட்டும் 3:103 இறைக் கட்டளைப்படிப் பற்றிப் பிடிக்க முன்வந்த சகோதரர்களில் சிலர் மீண்டும் ஸலஃபி, அஹ்லுல் குர்ஆன் என இரண்டு வழிகேடுகளில் சிக்கியுள்ளனர். அவற்றில் ஸலஃபி வழிகேட்டைப் பற்றி இங்கு ஆய்வு செய்வோம். குர்ஆனைப் பாமரர்களாக இருந்தாலும், படித்துப் பட்டம் பெற்ற அறிஞர்களாக இருந்தாலும், மதரஸாவில் ஓதிய மவ்லவியாக இருந்தாலும், நேரடியாகப் படித்து விளங்க வேண்டும் […]