விபச்சாரம் பற்றி இஸ்லாம்

in 2013 பிப்ரவரி

விபச்சாரத்திற்கு இட்டுச் செல்பவை என்ற வகையில் பின்வருவன விளக்கப்பட்டுள்ளன:
அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில் இருத்தல், சுதந்திரமாகப் பழகுதல்.

இது பற்றி நபியவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்:
“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.” (அஹ்மத்)

“”உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.”
(புகாரி, முஸ்லிம்)

குறிப்பாக ஒரு பெண் தனது கணவரின் சகோதரர்கள் முதலான நெருங்கிய உறவினர் களுடன் தனித்திருப்பது, சுதந்திரமாகப் பழகு வது கூடாது. இதனை நபியவர்கள் மரணத்திற்குச் சமமானது என வர்ணித்துள்ளார்கள். ( புகாரி)

அடுத்த பாலினரை இச்சையுடன் பார்த்தல்:
ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண் களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப் பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையைத் தாழ்த்திக் கொள் ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக் கின்றது. (பார்க்க: ஸூரத்துன் நூர்: 24: 30,31)

“”அலியே! (தற்செயலான) ஒரு பார்வை யைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரிய தல்ல.” (அஹ்மத், அபூதாவூத்)

கெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்.

“”இரு கண்களும் விபச்சாரம் செய்கின்றன. அவை செய்யும் விபச்சாரம் பார்வையாகும்.”
(புகாரி)

உடலைக் காட்டுவதும், பார்ப்பதும் உடலை வெளிக்காட்டுவதும் அதனைப் பார்ப்பதும் துர்நடத்தைக்குத் தூண்டுபவை என்ற வகை யில் இஸ்லாம் ஓர் ஆண் உடம்பில் மறைக்க வேண்டிய பகுதி என்ன என்பது பற்றியும், ஒரு பெண் மறைக்க வேண்டிய பகுதியாது என்பது பற்றியும் விரிவாக விளக்குகின்றது.
இவ்வாறு பாலியல் சீர்கேடுகளுக்கான எல்லா வழிகளையும் அடைத்துள்ள இஸ்லாம், மறுபக்கத்தில் மனிதன் தனது உணர்ச்சியைத் தீர்த்துக் கொள்வதற்கு புனிதமானதும் கெளர வமானதுமான திருமணம் என்ற ஒழுங்கை அறிமுகம் செய்துள்ளது.

திருமணத்தின் மூலம் கிட்டும் நிம்மதியையும் நிறைவையும் பற்றி அல்குர்ஆன் பின்வரு மாறு விளக்குகின்றது.

“”நீங்கள்(அமைதி) ஆறுதல் பெறுவதற்குரிய துணையை உங்களில் இருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும், உங்களுக்கிடையே அன்பையும் கிருபையையும் ஏற்படுத்தி இருப் பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ள தாகும்.” (30:21)

குடும்ப வாழ்வை அச்சுறுத்தும் அம்சங்கள் துர் நடத்தை விபச்சாரம், தன்னினச் சேர்க்கை முதலான முறைகேடான ஆண்-பெண் உறவு கள் குடும்பம் என்ற சிறிய சமூகத்தைத் தகர்க் கக்கூடியவையாகும். இயற்கை நியதிக்கும் இறை நியதிக்கும் முரணான இத்தகைய உறவு கள் குடும்ப அமைதியைக் குலைத்து சமுதாயத் தைச் சீரழிக்கும் பயங்கர ஈனச் செயலாகும்.

இவ்வாறான இழி செயல்களில் ஈடுபடு வோர் திருமணத்தில் ஆசையற்று, இல்லற வாழ்வில் விருப்பமற்றவராக இருப்பர். இவர் கள் திருமணம் செய்துகொண்டாலும் தமது மனைவிமாரைப் புறக்கணிப்போராக இருப்பர். இதனால் பெண்கள் உளரீதியாக பாதிக்கப் பட்டு அவர்கள் மத்தியிலும் பல சீர்கேடுகள் தோன்ற வழி பிறக்கும். இத்தகைய நிலையில் கணவன், மனைவிக்கிடையே விரிசல் உருவாகி குழந்தைகளின் நல்வாழ்வு பாதிக்கப்படும். மொத்தத்தில் குடும்ப நிறுவனம் சீர்குலைந்து சமூக வாழ்வு சின்னாபின்னமாகி விடும்.

இவை தவிர, முறைகேடான பாலியல் உறவு களால் எத்தகைய பயங்கர நோய்கள் தோன்று கின்றன என்பதை இன்றைய மருத்துவ உலகம் எடுத்துக் கூறுகின்றது. மேக நோய் முதலான பல் வேறுபட்ட மோசமான பாலியல் நோய்கள் இன்று உலக சுகாதாரத்தை அச்சுறுத்திய வண் ணம் இருக்கின்றன.

இன்று உலகையே ஆட்டி வைக்கும் பயங்கர ஆட்கொல்லி நோய் எய்ட்ஸின் தொடக்கப் பள்ளி முறைகேடான பாலியல் உறவுகள் என்பதை அறியாதவர் எவரும் இல்லை. மன நோய்கள் உருவாவதற்கும் முறைகேடான பாலியல் உறவுகள் காரணமாக அமைகின்றன என்பது இன்று நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையாகும். இத்தகைய காரணங்களுக்காகவே இஸ்லாம் முறைகேடான பாலியல் உறவுகளை மிகக் கடுமையாக கண்டித்து தடை செய்துள்ளது.

விபச்சாரம் :
விபச்சாரமும் இஸ்லாமிய நோக்கில் மிகப் பெரிய பாவமும் குற்றச் செயலுமாகும். இஸ்லாம் விபச்சாரத்தை மட்டுமின்றி அதற்குத் தூண்டுதல் வழங்குகின்ற அனைத்தையும் விலக்கியுள்ளது. இந்த வகையில் நாம் மேலே குறிப்பிட்டது போல, ஓர் ஆண் அந்நிய பெண் ணுடன் அல்லது ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனித்திருத்தல், ஆண்கள்-பெண்கள் சுதந்திர மாகப் பழகுதல் ஆகியவற்றுடன் நடனம், ஆபாசப் படங்கள், பாடல்கள், தரக்குறைவான இலக்கியப் படைப்புக்கள், கெட்ட பார்வை, (திருமணத்திற்கு முன்னர்) காதல் போன்றவற் றையும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது.

விபச்சாரத்தை ஆகக் கொடிய தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றமாக இஸ்லாம் கருதுகின்றது. இஸ்லாமிய ­ரீஅத் அமுலில் உள்ள இடத்தில் ஓர் ஆணோ பெண்ணோ விபச் சாரம் புரிந்தால் அவருக்குக் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்பட வேண்டும். திருமணமாகாதவருக்கு தலா நூறு கசையடி வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.

(நம்பிக்கை கொண்டோரே!) நீங்கள் விபசாரத்திற்கு நெருங்காதீர்கள்; அது மானக் கேடானதாகும். மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீயவழியாகவும் இருக்கின்றது. (17:32)

விபசாரியும், விபசாரனும்-இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர் களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில் அவ்விருவர் மீதும் உங்க ளுக்கு இரக்கம் ஏற்படவேண்டாம்; இன்னும், அவ்விருவரின் வேதனையையும் நம்பிக்கை யாளர்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். (24:2)

————————————————————————————————————————————–
இன உணர்வுக்கு அடிமையாவோரே சிந்தியுங்கள்!
சமீபத்திய விஸ்வரூபம், துப்பாக்கி போன்ற நிகழ்வுகளை ஒட்டி Facebook  இல் படித்த ஒரு தகவல். TNTJ, SDP, PFI, TMMK  போன்ற அமைப்புகளில் உள்ள சகோதரர்கள் சிந்திக்கட்டுமாக!

எந்த ஒரு கட்டத்திலும் உணர்வுகளுக்கு ஆளாகாமல் அறிவுப்பூர்வமாக நாம் நமது நிலைப்பாட்டை ஒன்றிணைத்து வைக்க வேண்டும்.

முகலாய அரசின் கடைசி மன்னர் “”பஹாதுர் ஷாஹ் ஜஃபர்”ன் எச்சரிக்கையில் ஒன்று நினைவுக்கு வருகிறது. “”எவன் ஒருவனுக்கு மகிழ்ச்சியான சமயத்தில் இறைவனின் நினைவோ உணர்ச்சிப் பிழம்பென கொதிக்கும் நேரத்தில் இறைவனின் அச்சமோ இல்லை எனில் அவன் எத்தகைய அறிவாளியாக இருப்பினும் சூட்சுமம் மிக்கவனாக இருந்தாலும் ஜஃபர் அவனை மனிதனாகக் கருத மாட்டான்.
தகவல்: பஷீர், புதுக்கோட்டை

————————————————————————————————————————————-

Previous post:

Next post: