அறிந்து கொள்வோம்!

in 2019 ஜனவரி

மர்யம்பீ, குண்டூர்,

  1. ஈமானின் அம்சங்கள் எத்தனை? அவை யாவை?
    1. அல்லாஹ்வை நம்புவது
    2. மலக்குமார்களை நம்புவது
    3. வேதங்களை நம்புவது
    4. நபிமார்களை நம்புவது
    5. மறுமையை நம்புவது
    6. விதியை நம்புவது. (முஸ்லிம்:1,5)
  2. மன நிம்மதி அடைய எந்த மூன்றை நம்பவேண்டும்?
    1. அல்லாஹ்வை நம்புவது,
    2. மறுமையை நம்புவது,
    3. விதியை நம்புவது. (முஸ்லிம்:7)
  3. மலக்குகள் தங்களுடைய இறைவனின் புகழைக் கொண்டு என்ன தேடுகின்றனர்?
    உலகில் உள்ளவர்களுக்காக தஸ்பீஹ் செய்து மன்னிப்பு தேடுகின்றனர். (42:5)
  4. உம்முல்குரா என்றால் என்ன?
    நகரங்களின் தாயாகிய மக்காவே உம்முல் குரா ஆகும். (42:7)
  5. யாருக்கு பாதுகாவலர்களோ, உதவி புரிபவர்களோ இல்லை என அல்லாஹ் கூறுகிறான்?
    அநியாயக்காரர்களுக்கு. (42:8)
  6. வானங்களுடையவும், பூமியுடையவும் சாவிகள் யாரிடம் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
    தன்னிடமே இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். (42:12)
  7. அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுவதாக கூறுகிறான்?
    தன்னை நாடியவர்களுக்கும், தன்னை முன்னோக்குபவனுக்கும் நேர்வழி காட்டு கிறான். (42:13)
  8. அல்லாஹ் விரும்பினால் என்ன செய்வ தாக கூறுகிறான்?
    காற்றை (வீசாமல்) நிறுத்திவிடுகிறான். (42:33)
  9. பெண்களை விவாகரத்து செய்வதாக இருந்தால் எந்த காலத்தில் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்?
    மாதவிடாய் இல்லாத காலத்தில் (இத் தாவை கணக்கிட ஏற்றவாறு) (65:1)
  10. கர்ப்பிணிகளுக்கு இத்தா காலம் எது வரை?
    குழந்தையை பிரசவிக்கும் வரை. (65:4)
  11. வானங்களை எவ்வாறு படைத்துள்ளான்?
    ஏழு வானங்களை அடுக்கடுக்காக படைத்துள்ளான். (71:15)
  12. சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சிம்மாசனத்தை கொண்டு வருவதாக சொன்ன ஜின்னின் பெயர் என்ன?
    இப்ரீத் என்ற ஜின். (27:39)
  13. ஹுத்ஹுத் பறவை எந்த நாட்டில் பெண் ஆட்சி செய்வதாக சுலைமானிடம் (அலை) கூறியது?
    ஸபஃ (27:22)
  14. பயபக்தியாளர்கள் கோபம் வந்தால் என்ன செய்வார்கள்?
    கோபத்தை குறைத்து அவர்களை மன்னிப்பார்கள். (3:134)
  15. நபி(ஸல்) அவர்களை நோவினை செய்பவர்களை அல்லாஹ் எவ்வாறு எச்சரிக்கிறான்?
    அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு என அல்லாஹ் கூறுகிறான். (9:61)
  16. நபி(ஸல்) அவர்களைப் பற்றி வசனம் 9:128ல் அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
    நம்பிக்கையாளர்களின் மீது கருணையும், இரக்கமும் உடையவர் என கூறுகிறான்.
  17. நபி(ஸல்) அவர்களை எந்த நிலையில் அனுப்பியதாக அல்லாஹ் கூறுகிறான்?
    அகிலத்தாருக்கும் அருட்கொடையாக அனுப்பியதாக கூறுகிறான். (21:107)
  18. நயவஞ்சகர்கள் எவ்வகை உதாரணத்தை உடையவர்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
    ஷைத்தானின் உதாரணத்தைப் போன்றவர்கள் என அல்லாஹ் கூறுகிறான். (59:16)
  19. பொறுமையாளர்களுக்கு கூலி எவ்வாறு வழங்கப்படும் என அல்லாஹ் கூறுகிறான்?
    இரு தடவை வழங்கப்படும் என அல்லாஹ் கூறுகிறான். (28:54)
  20. நபி(ஸல்) அவர்களின் பொறுப்பு பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
    எடுத்துரைப்பதே இத்தூதர் மீதுள்ள பொறுப்பாகும். (5:99)

Previous post:

Next post: