அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. எந்த சமுதாயத்தின் மீது அல்லாஹ் கல் மழை பொழிந்தான்? லூத் நபி சமுதாயத்தின் மீது. (அல்குர்ஆன் 27:52) 2. பூமியில் பணிவுடன் நடப்பவர்கள் யார் என அல்லாஹ் கூறுகிறான்? அர்ரஹ்மானின் அடியார்கள்தான். (அல்குர்ஆன் 25:63) 3. நூஹ் நபியின் மகனைப் பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்? நிச்சயமாக அவன் உனது குடும்பத்தை சேர்ந்தவனில்லை. (அல்குர்ஆன் 11:4) 4. உம்மி என்று யாரை அல்லாஹ் கூறுகிறான்? எழுத்தறிவற்றவர்களை. (அல்குர்ஆன் 2:78) 5. […]
புரோகிதத்திற்குக் கூலி நரகமே! அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : எமது பிரசாரத்தின் ஆரம்பத்திலிருந்தே மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கிக் கொண்ட ஹஜ்ரத்(?)களை, மவ்லவிகளை, லெப்பைகளை மிகக் கடுமையாகச் சாடி வருவதாக எம்மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஏதோ சொந்தக் காரணங் கொண்டு அல்லது பொறாமையினால் அவர்களை நாம் வெறுப்பதாகப் பரவலாகப் பேசிக் கொள்கின்றனர். செய்திகள் பரப்பி வருகின்றனர். அல்லாஹ் பாதுகாப்பானாக. அவர்கள் மீது எமக்குச் சொந்த வெறுப்போ, பொறாமையோ அணுவத்தனையும் இல்லை. ஒரு காலத்தில் நாமும் மற்றவர்களைப் […]
நான் அவன் இல்லை… A.N. மேற்கண்ட தலைப்பு எங்கேயோ கேட்டதாகவோ, படித்ததாகவோ நினைவு இருக்கலாம். ஆம்! உண்மைதான். நம் கட்டுரையில் வரும் கதாநாயகன் படித்து, பட்டமும் வாங்கிவிட்டு மக்களை ஏமாற்றுவார். அந்த படத்தின் கதாநாயகன் பல பெண்களை காதலித்து ஏமாற்றியது உண்மையே. ஆயினும் நமது இந்திய சட்டத்தின் உள்ள ஓட்டைகளின் (குறைகளின்) காரணமாக சாதுரியமாக நீதிமன்றத்தின் (ணூPளீ) தண்டனை யிலிருந்து தப்பித்து விடுவார். ஆயினும், “நான் அவன் இல்லை‘ என்பார். அதுபோல் நம் கதாநாயகன் தப்பித்து விடுவாரா? […]
திடுகூறாக வரவிருக்கும் மறுமை நாளின் அடையாளங்கள்… அபூ இஸ்ஸத், இலங்கை ஆகஸ்ட் தொடர்ச்சி…. ரோமானியர்கள் : கிழக்கு ரோமானியர்கள் பாரசீகர்களால்முதலில் தோற்கடிக்கப்பட்டார்கள். ஆனால் மீண்டும் வெற்றி பெற்றார்கள் என்பதாகும். (கிழக்கு) ரோமாபுரி வெற்றி கொள்ளப்பட்டது. அண்மையிலுள்ள பிரதேசத்தில் (வெற்றி கொள்ளப்பட்டது இருப்பினும்) அவர்கள் தாம் தோல்வி கண்ட பின்னர் விரைவில் வெற்றி பெறவுள்ளனர். (அதுவும்) சில ஆண்டுகளுக்குள்ளாகவே (அவர்கள் வெற்றி பெறவுள்ளனர் இதற்கு) முன்னரும் (இதன்) பின்னரும் (ஆட்சி) அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. (அவர்கள் வெல்லும்) அந்நாளில் […]
தனிமையும், தவறும்… அபூ அஹமத் எனது சமூகத்தில் சில மனிதர்களை நான் மறுமையில் அறிந்து கொள்வேன். அவர்கள் திஹாமா மலையைப் போன்று நன்மைகளை செய்தவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களுடைய நன்மைகளை ஒன்றும் இல்லாத புழுதிகளாக அல்லாஹ் ஆக்கிவிடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபி தோழர்கள் கேட்டார்கள்; அவர்கள் யார் என்பதைப் பற்றி எங்களுக்கு சொல்லுங்கள் என்பதாக. ஏனெனில் அவர்களைப் போன்று நாங்கள் ஆகிவிடக் கூடாது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : அவர்கள் உங்களுடைய […]
மார்க்க அறிஞர்களால் பூதாகரமாக்கப்படும் “பிறை‘ எம். சையத் முபாரக், நாகை ஆகஸ்ட் மாத தொடர்ச்சி….. முதலில் மக்கள் சிறுசிறு குழுக்களாக, குடும்பங்களாக வெவ்வேறு பகுதிகளில் வசித்தனர். அப்போது ஒரு செய்தி உடனுக் குடன் எல்லோரையும் சென்றடையும் வாய்ப்பு இல்லை. அதனால் அங்கங்கு பிறை பார்த்து நோன்பு பிடித்தனர். இரு பெரு நாள்களையும் கொண்டாடினர். இதற்கு உதாரணமாக, டெலிபோன் (தொலைபேசி) கூட இல்லாத காலத்தில் வெளிநாடு சென்ற ஒருவர் குடும்பத்துடன் தொடர்பு கொண்டு ஒரு செய்தியைக் கேட்டு அறிய […]
இஸ்லாத்தின் இலட்சியம்! ஒன்றுபட்ட சமுதாயம்! நபிகால இஸ்லாமிய ஒற்றுமை! இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டுதல் – ஓர் தெளிவாக்கம்! S.N. குத்புதீன் மறு பதிப்பு : அசல் இஸ்லாம் மக்களை விட்டும் அந்நிய மானதேன்? “இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலை நாட்டுதல்‘ என்பதை நாம் பரவலாய், வார்த் தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து கொள்கையாய் முழங்கிக் கொண்டிருக் கிறோம். வரவேற்கத்தக்கதே! ஆனால் அது வெறும் வெற்று கோமாய் மாறிவிடாமல் நம்மால் நடைமுறை வாழ்வில் பிரதிபலிக் […]
தலையங்கம் : அந்த கால ஃபிர்அவ்னும் இந்த கால ஃபிர்அவ்னும் இறைவனுடைய ஒரு பெரும் சோதனையே! இஸ்ராயீலின் சந்ததிகளே! (முற்காலத்தில்) நான் உங்களுக்களித்திருந்த என்னுடைய அருட்கொடையையும் உலகத்தார் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தி வைத்திருந்ததையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருநாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள். (அந்நாளில்) எந்த ஆத்மா வும் எந்த ஆத்மாவுக்கும் யாதொன்றையும் (கொடுத்து அதன் கஷ்டத்தைத்) தீர்க்காது. அதற்காக (எவருடைய) பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அதற்காக யாதொரு பரிகாரத்தையும் (ஈடாகப்) பெற்றுக் கொள்ளப்படமாட்டாது. அன்றி, […]
அல்லாஹ்வின் உதவி கிடைக்குமா? அய்யம்பேட்டை நஜ்முதீன் இன்றைய நவீன உலகத்தில் மீடியாக்களால் முழங்கப்படும் ஒரே மந்திரம் “பரபரப்பு‘ என்பதே. இந்த மந்திரத்தை தங்களது மீடியாக்களின் வளர்ச்சிக்காக “உயிர் மூச்சாக‘ சுவாசிக்கப்படு கின்றது. மீடியாக்களால் சொல்லப்படும் “பரபரப்பு‘ என்பது உண்மையா என்றால் இல்லை. ஆனால் அதை நம்பக்கூடியவர்கள் பல்வேறு துன்பத்திற்கு உள்ளாகிறார்கள். அதுபோல் நவீன மருத்துவர்களை எடுத்துக்கொண்டால் அவர்களின் பெரும்பாலோரின் மூலமந்திரம் முன்பு காச நோயாக (வீய) இருந்தது. தற்போது அவர் களின் மூலமந்திரம் இரத்த அழுத்தம், […]
மார்க்க அறிஞர்களால் பூதகரமாக்கப்படும் “பிறை‘ எம். சையத் முபாரக், நாகை முஸ்லிம் சமுதாயத்தினர் சிறுசிறு குழுக்களாக, குடும்பங்களாக பல்வேறு பகுதியில் முன்பு வசித்து வந்தனர். அதன் காரணமாக ஆங்காங்கே தென்படும் பிறையை பார்த்து ரமலான் மாத நோன்பையும், பெருநாளையும் தீர்மாணித்தனர். அதனை மார்க்க அறிஞர்களும் சரியயன கூறினர். பின்பு மக்கள் தொகை பெருகி பல்வேறு ஊர்களும் பெருகி மற்றும் விஞ்ஞான வளர்ச்சியும் அடைந்துள்ளது. அதன் காரணமாக எந்தவொரு செய்தியையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகின்றது. இத்தகைய வளர்ச்சியின் […]
முஸ்லிம்களே ஒன்றுபடுவோம்…. அன்சர் யரீப் பின் R.A. மாலிக் இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர் கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத் துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள். உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங் களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி […]
பொறுமையாளர்களின் சிறப்புக்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. ஜூலை மாத தொடர்ச்சி…. சுவனபதிக்கு உரியவர்கள் : பொறுத்துக் கொண்டவர்களாக நன்மை புரிந்தோருக்கு உரிய கூலியும், நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும். அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து இருக்காது. அவர்கள்தாம் சுவனபதிக்கு உரியவர்கள். அதிலேயே அவர்கள் என்றென்றும் தங்கி யிருப்பார்கள். (10:26) ஸைனுல் ஆபிதீன் அலீபின அல்ஹுஸைன்(ரஹ்) அவர்கள் கூறியதாவது: மறுமையில் அல்லாஹ் முன்னோர்களையும், பின்னோர்களையும் ஒன்று திரட்டும்போது ஓர் அறிவிப்பாளர் “”பொறுமையாளர்கள் எங்கே?” அவர்கள் கேள்வி […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் ஜூலை மாத தொடர்ச்சி…. 1. அல்லாஹ்வே பெயரிட்ட நபிமார் கள் எத்தனை பேர்? இரண்டு. யஹ்யா(அலை), ஈஸா (அலை). அல்குர்ஆன் 19:7, 3:45 2. வயது முதிர்ந்த காலத்தில் குழந்தை பெற்ற நபிமார்கள் எத்தனை பேர்? இரண்டு. இப்றாஹிம்(அலை), ஸக்கரியா (அலை). அல்குர்ஆன் 11:72, 19:8,9 3. நபி நூஹ்(அலை) அவர்கள் காலத்தில் இருந்த சிலைகளில் எத்தனை சிலை களின் பெயர்களை அல்லாஹ் கூறுகிறான்? ஐந்து. வத்து, ஸுவாஉ, யகூதி, யஊக், […]
இறுதி சமுதாயமான நமக்கு பஜ்ர் தொழுகை ஏன் முக்கியம் என்று பலருக்கு தெரியாது… ஜூலை மாத தொடர்ச்சி…. மறுமையின் அடையாளங்களின் ஒன்று : சூரியன் மேற்கே உதிப்பது. மேற்கே உதித்து விட்டால் தவ்பாவின் வாசல் அடைக்கப்பட்டு விடும். சூரிய உதயத்திற்கு முன்பு உள்ள தொழுகை பஜ்ர் ஆகும். அந்த தொழுகையில் பாவமன்னிப்பு கேட்டு இருந்தால் அல்லாஹ் மன்னிக்க கூடும். மேலும் இந்த அதிகாலை தொழுகையான பஜ்ரை பற்றி… அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம் உலகில் பல மாற்றங்களை […]
இஸ்லாமிய மார்க்கத்தை விளங்க நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல் மட்டும் போதுமா? மார்க்கத்த முழுமையாக விளங்க எங்களுக்கு முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மட்டும் போதாது! குலாம் அஹ்மது காதியானி என்பவரால் தான் நாங்கள் மார்க்கத்தை முழுமை யாக விளங்க முடியும் என்று கூறி காதியானிகள் அல்குர்ஆன் 5:3, 16:44,64 போன்ற வசனங்களை நிராகரித்து இதன்மூலம் நபி(ஸல்) அவர்களையும் நிராகரிக்கின்றனர். அதேபோல் ஹனஃபியாக்கள் நபி (ஸல்) அவர்கள் மட்டும் போதாது! இமாம் அபூஹனீஃபாவும் வேண்டும் என அன் னாரை முன்னிலைப்படுத்தி […]
திடுகூறாக வரவிருக்கும் மறுமை நாளின்அடையாளங்கள்… அபூ இஸ்ஸத், இலங்கை ஜூலை மாத தொடர்ச்சி…. வேதனைக்கு அவசரப்பட்ட வேடிக்கையான மனிதர்கள் : அவர்கள் உம்மிடம் வேதனையை அவ சரமாகக் கோருகின்றனர். நிச்சயமாக நரக மானது இறைமறுப்பாளர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும் (29:54) அவர்கள் (விளைவு குறித்து யோசிக்காமல்) அல்லாஹ் வழங்கும் வேதனையும், அவனது தண்ட னையும், தங்கள் மீது (இப்போதே) இறங் கட்டும் என்று அவசரம் காட்டினர். எவ்வாறெனில், (இன்னும் நிராகரிப்போர்) அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வந்த உண்மையானால், […]
மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம்! அஹமது இப்ராஹிம் எல்லாம் வல்ல அல்லாஹ்வுடன் சேர்ந்து நாகூர், ஏர்வாடி, பொட்டல் புதூர் போன்று லாத் உஸ்ஸா இவை போன்ற கற்பனை மண்ணறைகளையும், கற்பனை தெய்வங்களையும் இணைத்து இணை வைத்து வணங்கியதால்தான் இப்ராஹீம்(அலை) அவர்களின் நேரடி வாரிசுகளும், முஸ்லிம்கள் என தங்க ளைத் தாங்களே நினைத்துக் கொண்டி ருந்த குறை´கள், காஃபிர்கள் எனும் நிராகரிப்பாளர்கள் ஆனார்கள். நிரந்தர நரகவாதியானார்கள். அதேபோன்று இஸ்லாமிய மார்க்கத் திற்கு அணுவின் முனையளவு கூட சம் பந்தமே […]
என்று தெளியுமோ… மார்க்க அறிஞர்களின் மதிமயக்கம்? K.M.H. இஸ்லாமிய மார்க்கம் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் மார்க்கம் அல்லாஹ்வுக்கே சொந்தமான மார்க்கம். அல்லாஹ்வின் அதி காரத்திலுள்ள மார்க்கம். அதில் மனித தலை யீட்டிற்கு அணுவின் முனை அளவும் அனுமதி இல்லை. 39:3, 5:3, 3:19, 3:85, 42:21, 49:16, 9:31, 7:3, 33:66-68, 30:32, 6:159, 22:78, 41:33, 18:102-106. இன்னும் இவை போன்ற எண்ணற்ற திருகுர்ஆன் வசனங்கள் இதை உண்மைப் படுத்தும், ஆயிரம் விளக்கங்கள் கூறினாலும் அதை […]
தூதர் வழியும்! முன்னோர்களின் வழியும்! அஹமது இப்ராஹிம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்க ளின் வழி ஒன்றே இம்மை மறுமை வெற்றிக்கு ஆதாரமாகும். முன்னோர்களின் வழி அது மறுமையில் நிச்சயம் நரகமே! “அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்) தின் பாலும், இத்தூதரின் பாலும் வாருங் கள்‘ என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்களுடைய தந்தையர் (மூதாதையர்) களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண் டோமோ அதுவே எங்களுக்குப் போது மானது‘ என்று அவர்கள் கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதா […]
உறவே உனக்கு அர்த்தமென்ன? எம்.பி. ரஃபீக் அஹ்மத் மனித உறவு முறைகளுக்கு இஸ்லாம் வரைமுறைகளை வகுத்துள்ளது. சொத் துரிமை, வாரிசுரிமை, யார் யாருக்கு போய் சேரும் என்பதையும் சட்டங்களைத் தொகுத்து தந்துள்ளது. எந்தெந்த உறவு முறை யில் திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கும் விளக்கங்களைத் தந்துள்ளது. இரத்த பந்தங்களுக்கும், சொந்தங்களுக் கும், உறவினர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளையும் அவர்களுடைய உரிமை களையும் இஸ்லாம் அழகுபட எடுத்துரைத் துள்ளது. சாதி, இனம், குலம், கோத்திரம், குடும்பம், சமுதாயம் […]