தலையங்கம் : ஒன்றுபட்ட சமுதாயத்தின் இன்றைய நிலை! ஒன்றுபட்டிருந்த மனித சமுதாயம் ஷைத்தானின் மேலாதிக்கத்தால் பகைமை மேலோங்கி, மூடச் சடங்குகளில் மூழ்கி, நரக நெருப்புக்குழியின் விழிம்பை நெருங் கிய போதெல்லாம், வல்ல அல்லாஹ் தனது அளப்பெரும் கருணையால் நபிமார்களை அனுப்பினான். நேர்வழி காட்டுதலை அந்நபிமார்கள் மூலம் சிதருண்ட மக்களுக்கு அவ்வப்போது வேதங்களாக அருளி சகோதரர்களாக்கினான். இவ்வாறு அருளப்பட்ட அனைத்து முந்திய வேதங்களையும் உள்ளடக்கியதே அல்குர்ஆன். இறுதி மறையாம் இக்குர்ஆனில் முந்திய காலங்களில் நடந்த அனைத்து நல்லது கெட்டதுகளையும், […]
பொறுமையாளர்களின் சிறப்புக்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. ஜூன் மாத தொடர்ச்சி…. இறுதியில்அல்லாஹ்வைமட்டும்வணங்கிக்கொண்டுநன்மைகளும்புரிந்துகொண்டிருந்தநல்லோர், அல்லது அல் லாஹ்வையும் வணங்கிக் கொண்டு சில பாவங்களும் புரிந்து வந்த தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் மக்கள் அனை வரும் தத்தம் தெய்வங்களுக்குப் பின்னால் சென்றார்களே! நீங்கள் மட்டும் ஏன் இங் கேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள் உல கத்தில் நாங்கள் வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக இந்த மக்களிடம் அதிக அளவில் தேவை யுள்ளவர்களாக இருந்தும் அவர்களுடன் […]
முஸ்லிம்களாக மரணமடைய செய் அல்லாஹ்! அப்துல் நாஸர் அல்லாஹ்வின் ஏவல், விலக்கல்கள் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின் பற்ற வேண்டும் என்று முதலில் எனக்கும் பின்பு உங்களுக்கும் உபதேசம் செய்கின் றேன். முஸ்லிம்களாகவே மரணமடைய நம் முடைய முயற்சி இருக்கிறது. அல்லாஹ் முஸ்லிம்களாகவே நம்மை மரணம் அடையச் செய்வானாக. ஒவ்வொரு நாட்களும், ஒவ்வொரு மணித்துளிகளும் செல்லச் செல்ல காலங் களும் நாட்களும் மட்டுமல்ல நம்முடைய ஆயுள் நாட்களும் எண்ணப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நாட்கள் தான் எத்தனை வேகமாக […]
இஸ்லாத்தின் இலட்சியம்! ஒன்றுபட்ட சமுதாயம்! நபிகால இஸ்லாமிய ஒற்றுமை! இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டுதல் – ஓர் தெளிவாக்கம். முஹிப்புல் இஸ்லாம் அசல் இஸ்லாம் மக்களை விட்டும் அந்நிய மானதேன்? “இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலை நாட்டுதல்‘ என்பதை நாம் பரவலாய், வார்த் தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுந்து கொள்கையாய் முழங்கிக் கொண்டிருக் கிறோம். வரவேற்கத் தக்கதே! ஆனால் அது வெறும் வெற்று கோமாய் மாறிவிடாமல் நம்மால் நடைமுறை வாழ்வில் பிரதிபலிக் கப்படுகிறதா? இல்லையே! […]
யூதர்கள் சனிக்கிழமையும், கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையும் வார வழிபாடு நடத்துவது ஏன்? அபூ ஹனிபா, புளியங்குடி யூத, கிறிஸ்தவ வழிபாட்டு நாட்கள் : இன்றைக்கு யூதர்கள் சனிக்கிழமையும், கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையும் வார வழிபாடு நடத்துகிறார்கள். யூதர்கள் சனிக் கிழமை வார வழிபாடு நடத்துகிறார்கள் என்றால் மூஸா(அலை) அவர்களும் சனிக் கிழமை வார வழிபாடு நடத்தியிருக்க வேண்டும் அல்லவா? அதுபோல கிறிஸ்தவர் கள் ஞாயிற்றுக்கிழமை வார வழிபாடு நடத்துகிறார்கள் என்றால் ஈஸா(அலை) அவர்களும் ஞாயிற்றுக்கிழமை வார வழி பாடு நடத்திருக்க […]
திடுகூறாக வரவிருக்கும் மறுமை நாளின் அடையாளங்கள்! அபூ இஸ்ஸத், இலங்கை. இவர்கள் மறுமை நாளைத்தான் அது திடீரெனத் தங்களிடம் வருவதைத்தான் எதிர்பார்க்கிறார்களா? (அப்போதுதான் கண்ணால் பார்த்துவிட்டு நம்புவார்களா) இதோ!) அதன் அடையாளங்கள் திண்ண மாக வந்துவிட்டனவே; உண்மையில் அந்நாள் அவர்களிடம் வந்துவிட்டதெனில் அப்போது (அவர்கள்) நல்லுணர்வு பெறு வது எங்கே அவர்களுக்குப் பயன் அளிக்கப் போகிறது? (43:66, 47:18, 6:31, 22:55) மற்றுமொரு வசனத்தில்; அவ்வாறல்ல! அது அவர்களிடம் “திடீரென‘ வந்து அவர்களைத் தட்டழியச் செய்துவிடும். அதைத் […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. அல்குர்ஆனில் எத்தனை வசனங்கள் உள்ளன? 6236 2. இறைவனிடம் நாம் எவ்வாறு பிரார்த்தனை செய்யவேண்டும்? அந்தரங்கமாகவும், பணிவாகவும். (அல்குர்ஆன் 7:55) 3. அல்குர்ஆனில் பெயர் கூறப்பட்ட பெண்கள் எத்தனை பேர்? ஐவர் 4. பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசல் எந்த நபியால் கட்டப்பட்டது? ஸுலைமான்(அலை) (அல்குர்ஆன் 34:14) 5. நபி(ஸல்) அவர்களின் மருமகன் யார்? அலி(ரழி) 6. அல்குர்ஆனில் பிஸ்மில்லாஹ் சொல்லி துவங்காத சூரா எது? அத்தவ்பா. (அத். 9) […]
எது அழகு? ரபீக் அஹமத் அழகிற்கு யூசுஃப்(அலை) அவர்களை உவமையாக, உதாரணமாகக் காட்டுவார் கள். யூசுப்(அலை) அவர்கள் உடலால் மட்டும் அழகராக இருந்ததில்லை. அவர் உள்ளத்தாலும் பேரழகராக இருந்தவர். உள்ளம் மட்டுமா? அவருடைய செயல், சொல் அத்தனையும், அழகாக இருந்தன. அவருடைய தூய வரலாற்றை திருகுர்ஆன் சொல்லும் விதமே ஒரு தனி அழகு வயோதி கர்களுக்கு மட்டுமல்ல, வாலிபர்களுக்கும் கட்டிளம் காளையர்களுக்கும் அவருடைய வாழ்க்கை ஒரு அழகிய முன்மாதிரி. அனாதையாய், அடிமையாய் விற்கப்பட்ட யூசுப்(அலை) அவர்களை வாங்கி […]
பொதுத் தேர்தலும்! முஸ்லிம்களும்! K.M.H. அபூ அப்தில்லாஹ் பொதுவாக ஐந்து வருடங்களுக்கொரு முறை இந்திய மக்கள் சந்திக்கும் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. ஏமாற்றிப் பிழைப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள். அரசியல் புரோகிதர்கள் மக்களை ஏமாற்றுவது எப்படி? அவர்களின் வாக்குச் சீட்டுக்களை கவர்வது எப்படி? என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார் கள். இந்த அரசியல் புரோகிதர்களில் இவன் ஓசத்தி, அவன் மட்டம் என்று சொல்லுவ தற்கு யாரும் இல்லை. எல்லோரும் இன் றைய சாக்கடை அரசியலில் ஊறிய […]
இறைத்தூதர் லூத்தும்! ஓரின சேர்க்கை குற்றமும்!! S.H. அப்துர் ரஹ்மான் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட் டும். (படைத்த) அந்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள்புரியட்டும். அந்த ஒரே இறைவன் பெயரால்… ஓரினச் சேர்க்கையால் அழிக்கப்பட்ட லூத் சமுதாயம் பற்றி இறைவன் : லூத்தை (அவர் சமூகத்தாரிடையே தூதராக அனுப்பினோம்) அவர் தம் சமூகத் தாரிடம் கூறினார். உலகத்தில் எவருமே உங் களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா […]
சோதனைகளின் நோக்கங்கள்! அபூ இஸ்ஸத், இலங்கை ஜூன் மாத தொடர்ச்சி…. இதயங்களை அல்லாஹ் பயபக்தியாகச் சோதனை செய்கின்றான் : நிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு, தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அத்தகையவர் களின் இதயங்களை அல்லாஹ் பயபக்திக் காகச் சோதனை செய்கிறான். அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு. (49:03) இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும்: உங்கள் இருதயங்கள் திருப்தியடைவ தற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் இந்த வெற்றியை அல்லாஹ் ஆக்கினான். அல்லாஹ் விடமிருந்தே தவிர உதவி இல்லை, நிச்சயமாக […]
கடைசி பக்க சிந்தனை! தியாகம் எங்கே? K.M.H. நபி இப்ராஹீம்(அலை) அல்லாஹ்வின் பொருத்தம் வேண்டி தள்ளாத முதுமைப் பரு வத்தில் ஆசையுடன் பெற்றெடுத்த அருமை மகனையே குர்பானி கொடுக்கத் தயாரா னார்கள். சோதனையில் வெற்றி பெற்றார்கள். அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றார் கள். மகனுக்குப் பதிலாக ஒரு ஆட்டை குர்பானி கொடுக்க அல்லாஹ் கட்டளையிட் டான். அவர்களின் தியாக வாழ்க்கையை முன் மாதிரியாகக் கொண்டு முஸ்லிம்கள் துல்ஹஜ் மாதம் 10ம் நாள் ஈத் (பெருநாள்) தொழுகைக்குப் பிறகு குர்பானி […]
தடுக்கப்பட்டது மீடியா வருமானமா? புரோகித வருமானமா? அன்புள்ள சகோதரர்களே! உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டா கட்டும்! இன்று முஸ்லிம் சகோதரர்களிடையே மீடியா வருமானம் ஹராமாக பார்க்கப்படு கிறது. ஆனால் அதைவிட கொடிய குற்றமான புரோகிதம் குற்றமாகவே பார்க்கப் படுவது இல்லை. காரணம் முஸ்லிம்கள் குர்ஆனை சுயமாக படித்து புரிந்துகொள்ள முயலாமல் மவ்லவிகள் பயான்கள் மூலம் குர்ஆனை விளங்கி கொள்ள முயல்வது தான். ஹராமும், ஹலாலும் 1444 வருடத்திற்கு முன்னரே நபி(ஸல்) அவர்களால் […]
K.M.H. அபூ அப்தில்லாஹ் அன்புள்ள சகோதரர்களே! யார் சாதனையாளர் என்ற கேள்விக்குப் பலரும் பலவிதமான பதிலைத் தருவார்கள். ஒரு அரசியல்வாதியிடம் கேட்டால் அரசியலில் ஈடுபட்டு மந்திரி, முதன்மந்திரி, பிரதம மந்திரி ஆகிறவர்கள் சாதனையாளர்கள் என்பார். பல கோடிகளைத் திரட்டி வைத்திருக்கும் பெரும் செல்வந்தர் ஒருவரிடம் இதைக் கேட்டால் பணம் பண்ணுவதே சாதனை என்பார்; பெரும் படிப்புப் படித்துப் பெரும் மேதையாகத் திகழ்பவரிடம் கேட்டால் கல்வியின் மூலம் மேதையாகத் திகழ்பவரே சாத னையாளர் என்பார்; புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து […]
முஸா(அலை), ஈஸா(அலை) ஆகியோருக்கு கடமையாக்கப்பட்ட வார வழிபாட்டு நாள் எது? அபூ ஹனிபா, புளியங்குடி. இன்றைக்கு நாம் வெள்ளிக்கிழமை ஜூம்மாவுடைய நாளை வார வழிபாட்டு நாளாக கொண்டிருக்கிறோம். அதுபோல யூதர்கள் சனிக்கிழமையும், கிறிஸ்துவர்கள் ஞாயிற்றுக்கிழமையம் வார வழிபாட்டு நாளாக கொண்டிருக்கிறார்கள். மூஸா(அலை) அவர்களுக்கு சனிக்கிழமையும். ஈஸா(அலை) அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் வார வழிபாட்டு நாட்களாக அல்லாஹ் தான் நிர்ணயித் தான். மூஸா(அலை) அவர்கள் சனிக்கிழமை தான் வார வழிபாட்டை நடத்தினார்கள். ஈஸா(அலை) அவர்கள் ஞாயிற்றுக்கிழமை தான் வார வழிபாட்டை […]
அறியாதவற்றை கற்றுக் கொடுத்த படைத்த இறைவனும்! பொய்யாக்கி வரம்பு மீறும் மனிதனும்!! S.H. அப்துர் ரஹ்மான் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அந்த இறைவனின் திருப்பெயரால் துவங்குகிறேன். யாவற்றையும் படைத்த உம்முடைய இரட்சகனின் பெயரைக் கொண்டு வாசிப் பீராக! அட்டை போல் ஒட்டிக்கொள்ளும் நிலையிலிருந்து மனிதனை படைத்தான். வாசிப்பீராக! உம் இரட்சகன் மாபெரும் கொடையாளி. அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையயல்லாம் கற்றுக் கொடுத்தான். எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான். அவன் […]
சோதனைகளின் நோக்கங்கள்! அபூ இஸ்ஸத், இலங்கை மே மாத தொடர்ச்சி…. இறை நம்பிக்கையோடு நன்றி செலுத்திக் கொண்டு இருக்கவேண்டும் என்பதற்காக: நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக் கொண்டும், அவன் மீது ஈமான் கொண்டும் இருந்தால், உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (4:147) அட்டூழியம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள் என்பதற்காகவே : அல்லாஹ் தனது அடியார்களுக்கு உணவு (மற்றும் சொகுசான வசதிகளை) விரிவாக்கிவிட்டால், அவர்கள் பூமியில் […]
முஸ்லிம்களே! ஒரே அமீரின் கீழ் ஒன்றுகூடுங்கள்! அன்சர் யரீப் பின் R.A.மாலிக் நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வை யன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறிய வில்லையா? (அல்குர்ஆன் 2:107) (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகின்றாய்; நீ நாடியோரை கண்ணியப் படுத்துகின்றாய்; நீ நாடியோரை இழிவு படுத்தவும் செய்கின்றாய்; […]
மனிதர்கள்! S. அப்துல் நாசர், மங்களூர் அல்லாஹ்வின் ஏவல்களையும், விலக்கல்களையும், வாழ்க்கையின் எல்லா நிலை களிலும் பின்பற்ற வேண்டும் என்று முதலில் எனக்கும், பின்பு உங்களுக்கும் உபதேசம் செய்கின்றேன். மனிதன் தன் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் சுயநலம் மிக்கவன். தொழி லானாலும் சரி, அவன் வாழ்க்கை நிலைகள் ஆனாலும் சரி அனைத்திலும் மனிதன் சுய நலம் மிக்கவன். பிற மனிதர்களின் துன்ப நிலைகளைக் கண்டு சிரிப்பவன்; அல்லது ஏளனம் செய்பவன்தான் மனிதன், சாலைகளில் விபத்துக்குள்ளாகிக் கிடக்கும் மனிதர்களுக்கு […]
ஹிஜாப், பர்தா, புர்கா, அபாயா! மீரான் ஹிஜாப், பர்தா, புர்கா மற்றும் அபாயா இந்த நான்கு பெயர்களும் முஸ்லிம் பெண்களுடன் தொடர்புப்படுத்தி அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் வார்த் தைகள். இது தொடர்பாக முஸ்லிம்களிடையும் தெளிவு இல்லாத சூழ்நிலையில் சர்ச்சை தொடரத்தான் செய்கிறது. ஆகவே இது தொடர்பான புரிதல் பெறும் நோக்கில் மட்டுமே இந்த பதிவு. முஸ்லிம் பெண்கள் வீட்டிலிருந்து வெளியில் வரும்போது அணியும் ஆடை யைத்தான் இந்த நான்கு பெயர்களிலும் அழைக்கிறார்கள். இவற்றுள், ஹிஜாப் என்பது ஆடையே […]