ஐயமும்! தெளிவும்!! ஐயம் : ஒருவர் தமது மனைவியை “தலாக்’ என்றோ, “முத்தலாக்’ என்றோ கூறிய பின்னர் மீண்டும் அவள் அவருடைய வீட்டிற்கு வந்தால் சேர்த்துக் கொள்வது கூடுமா? ஹைதர் அலீ தெளிவு : ஒரே நேரத்தில் எத்தனை “தலாக்’ சொன்னாலும் அவற்றை ஒரு தலாக் என்பதாகவே கணிக்கப்படும், இவ்வாறு தலாக் கூறப்பட்ட பெண் அவருடைய 3 துஹ்ரு (மாதவிடாய் நீங்கி சுத்தமாயிருக்கும் காலம்) முடியும் வரை எவ்வித நிபந்தனையுமின்றி மீட்டிக் கொள்வது ஆகும். மேற்கூறப்பட்டுள்ள தவணை கழிந்துவிட்டால் திருமண உறவை-நிக்காஹ்வைப் […]
தலையங்கம்! நாம் ஏன் அதில் இல்லை? உலகெங்கும் பாராட்டு! குறிப்பாக இந்தியாவில் ஓர் இளைஞர் போற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார். நம் பாரதப் பிரதமரும் அந்த இளைஞரை வெகுவாகப் பாராட்டுகிறார். அந்த இளைஞரின் சாதனை என்ன? டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்து விட்டார்! ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அதற்கான சாதனை புரிந்துவிட்டார். யார் அந்த இளைஞர்? அவரின் பெயர் நீரஜ் சோப்ரா. இவர் தங்கம் வென்ற நாளான ஆகஸ்ட் ஏழாம் […]
37வது வருடத்தில் பயணிக்கும் அந்நஜாத் ஹிஜ்ரி 1406ம் வருடம் ஸஃபான் மாதம் (ஏப்ரல் 1986) ஏகத்துவ சிந்தனை கொண்ட சகோதரர்களால் துவக்கப்பட்ட “அந்நஜாத்” மாத இதழ் சத்தியப் பாதையில் அது மேற்கொண்டுள்ள இலட்சிய பயணத்தில் அல்லாஹ்வின் நாட்டத்தினால் 36 வருடம் முடிந்து 37வது வருடத்தில் பயணிக்கின்றது. வல்ல ஏகன் அல்லாஹ்வின் பேருதவியாலும் பெருங்கிருபையினாலும், இடைவிடாது வந்து கொண்டிருக்கிறது. அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். அல்ஹம்துலில்லாஹ். “அந்நஜாத்” மேற்கொண்டுவிட்ட இலட்சிய பயணத்தில் அல்லாஹ்வுக்காக சத்தியத்தை நிலைநிறுத்தும். உண்மைக்கு சாட்சி சொல்லும். […]
ஹிஜ்ரி 1442 முடிவுற்று 1443 பிறந்திருக்கிறது. ஒவ்வொரு புத்தாண்டிலும் முஸ்லிம்கள் புத்துணர்ச்சி பெற்று மேலும், மேலும் முன்னேறிச் செல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அதற்குள்ள ஒரேயயாரு வழி; வேறு வழியே இல்லை; அது அல்லாஹ்வின் இறுதி நெறிநூலான அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து, அவ னது இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அடிச்சுவற்றில் அடி பிசகாது நடப்பதே யாகும். ஆனால் ஷைத்தானும், அந்த ஷைத்தா னுக்கு உறுதுணையாகச் செயல்படும் புரோகிதர்களும் முஸ்லிம்களை எப்படியும் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த நேர்வழியிலிருந்து பிறழச் […]
ஏகன் இறைவனின் வல்லமை பாரீர்! அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : மனிதன் முன்னேறி விட்டான்; சந்திரனில் கால் பதித்து விட்டதாக சொல்கின்றான்; பல கோள்களுக்கு செயற்கைக் கோள்களை அனுப்ப பெரும் பெரும் ஆராய்ச்சிகள் செய்து வருவதாக சொல்கின்றான். ஒரு சில அணுகுண்டுகள் மூலம் உலகையே அழித்துவிடும் ஆற்றல் பெற்றுள்ளதாக சொல்கின்றான். கணினி யுகத்தில் சாதிக்க முடியாத சாதனைகளே இல்லை என் றெல்லாம் மனிதன் பெருமைப்பட்டுக் கொள்கிறான். தனது ஆற்றலில் அகம்பாவம் கொள்கிறான். தன்னை மிஞ்சிய ஒரு […]
“தக்லீது” – ஓர் ஆய்வு! அபூ ஃபாத்திமா மறு பதிப்பு : ன்றைய சூழ்நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களிடம் “தக்லீது” செய்யாதீர்கள். “தக்லீது” குர்ஆனுக்கும், ஹதீதுகளுக்கும் முழுக்க, முழுக்க முரணானதாகும், என்று சொன்னவுடன், “தக்லீது” செய்யக்கூடாது என்றால், மனிதர்களால் ஏட்டில் கோர்வை செய்யப்பட்டுள்ள குர்ஆனைப் பார்க்கக் கூடாது; மனிதர்களால் தொகுத்து தரப்பட் டுள்ள நூல்களைப் பார்க்கக் கூடாது, மனிதர்களின் பேச்சுக்களைக் கேட்கக் கூடாது. அந்நஜாத்தைப் பார்ப்பதும் கூடாது. காரணம் இவை எல்லாம் “தக்லீது” ஆகும் என்று உடனே சொல்லி […]
தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! அப்துல் ஹமீத் தொடர் : 73 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் […]
குர்ஆனின் நற்போதனைகள்… மனிதன்! ஓர் உன்னத படைப்பு! Dr. A. முஹம்மது அலி, Ph.D., நிச்சயமாக நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம். நாம் படைத்துள்ள பலவற்றைவிட அவர்களை மேன்மைப்படுத்தினோம். (அல்குர்ஆன்17:70) நிச்சயமாக நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (அல்குர்ஆன் 95:4) (அல்லாஹ்) அவனே, தான் படைத் துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; மேலும், அவன் மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான். (அல்குர்ஆன் 32:7 மனிதனே! சங்கைமிகு கொடையாளனான உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டிவிட்டது […]
நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர். ஆகஸ்ட் மாத தொடர்ச்சி….. “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போலாவான்” யார் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கி றாரோ அவர் வானத்திலிருந்து கீழே விழுந்தவரைப் போன்றவர் ஆவார். பின்னர் அவரைப் பறவைகள் கொத்தித் தூக்கிச் சென்று விடுகின்றன, அல்லது காற்று அவரைத் தூரமான இடத்திற்கு அடித்துக் கொண்டு போய் வீசிவிடுகின்ற ஒருவனைப் போல் ஆவான். (22:31) அதாவது, உயிரைக் கைப்பற்றும் வானவர் (ஏக இறையை) […]
இறைவன் தந்த தங்கம் கையில் இருக்கும்போது வட்டியில் விழுவது நிர்பந்தம் ஆகுமா? S.H. அப்துர் ரஹ்மான் அன்பு சகோதரர்களே உங்கள் மீதும் உங் கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதான மும் உண்டாகட்டும். படைத்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும். பாவங்கள் என்றால் என்ன? பாவங்கள் என்றால் என்ன என்பதை தெரியாமல் நம்மில் பலர் அதைச் செய்து குற்றவாளியாக ஆகிவிடுகின்றனர். எனவே பாவம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். பெரும் பாவம் என்றால் என்ன? […]
மார்க்கம் மிக மிக எளிதானது நூருல் அமீன் மறு பதிப்பு : இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்க ளுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. (அல்குர்ஆன் 22:78) அல்லாஹ் இவ்வசனத்தில் இஸ்லாத்தில் எந்தவித சிரமத்தினையும் ஏற்படுத்தவில்லை என்று கூறுகின்றான். மனித சமுதாயம் மிகவும் சுலபமாக பின்பற்றக்கூடிய ஒரு அழகிய வாழ்க்கை நெறியினை தான் அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இஸ்லாத்தில் மிக முக்கியமான கட்டாய கடமையான தொழுகை, நோன்பு, ஹஜ்ஜு, ஜகாத் போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்; அவற்றில் எந்தவித கஷ்டத்தையும் […]
பகிரங்க எதிரி யார்…? இப்னு சித்தீக் மனித சமுதாயத்தை இவ்வுலகில் படைக்க நாடிய அல்லாஹ் தன்னுடைய உண்மை அடியார்களாகிய மலக்குகளிடம் தன்னுடைய நாட்டத்தை தெரிவிக்கிறான். இந்த பூகோளத்தில் என்னுடைய கலீஃபா (பிரதிநிதியை) படைக்கப்போகிறேன் என்று, ஒருவரையயாருவர் அழித்து பூமியில் இரத் தத்தை ஓட்டக்கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய்? மலக்குகள் பதிலு ரைக்கிறார்கள். மேலும் இந்த மனித இனத்தை விட நாங்கள் உனக்கு மிகவும் வழி படக்கூடியவர்கள், கட்டுப்படுபவர்கள் என்று மறுமொழியுரைக்கிறார்கள். ஆனால் அகிலங்களையும் படைத்து இரட்சித்துப் […]
இரவுத் தொழுகையும்… அதன் வழிமுறைகளும்… முஹம்மத் ரஃபி மறு பதிப்பு : அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்க ளுக்கு ஐந்து நேர ஃபர்ழான தொழுகை கடமையாவதற்கு முன்பே இரவுத் தொழுகையை தொழும்படி ஆரம்பகால வஹீ அறி விப்பில் அல்லாஹு ரப்புல் ஆலமீன் 73வது அத்தியாயத்தில் கூறுகிறான். “போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக;” அல்குர்ஆன் 73:1,2 மேலும் இரவுத் தொழுகையில் நாம் கேட்கும் துஆவானது அல்லாஹு ரப்புல் ஆலமீனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது […]
தலையங்கம்! 2021ன் ஹஜ் பயணம்…? கொரோனாவை கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சகம், வெளியுறவுத்துறை, விமானப் போக்குவரத்து அமைச்சகம், ஹஜ் கமிட்டி, சவூதியில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றுடன் மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் விரிவான ஆலோசனை செய்து, 2021ம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பங்கள் பெற்றதாகவும், சவூதி அரசு விதித்த நடைமுறையின்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள தாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்திருந்தார். ஹஜ் பயணிகள், பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக […]
ஒரே சமுதாயம்! Dr. A. முஹம்மது ஃபாரூக், இலங்கை ரசூல்(ஸல்) அவர்கள் இந்த உம்மத்தை எந்த ஒரு ஜமாஅத்தில், எந்த ஒரு இயக்கத்தில் விட்டு விட்டுப் போனார்கள் என்பதற்கு குர்ஆன் ஹதீஃதை தவிர, வேறு ஏதேனும் நடைமுறைச் சான்றுகள் (Practical Evidence) இன்று ஏதேனும் காணப்படுகிறதா? என்று பார்ப்போமேயானால் ஏராள மான சான்றுகளைப் பார்க்கலாம். நாம் அவைகளைப் பார்ப்பதுமில்லை, அவைகளை பார்த்தும் உணர்வு பெறுவதுமில்லை. நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்தித் தந்த ஒரு ஜமாஅத்திற்கு இன்றுள்ள எஞ்சியிருக்கும் அடையாளங்கள் […]
இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? தொடர்-12 அபூ அப்தில்லாஹ் அகில உலக அனைத்து மக்களின் ஒரே இறைவனான ஏகன் அல்லாஹ்வின் இறுதி வழிகாட்டி நூலான அல்குர்ஆன் இரவையும், பகலைப் போல் வெள்ளை வெளேர் என்று அனைத்து மக்களுக்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. இந்தப் புரோகித மவ்லவிகள் அல்குர்ஆன் உங்களுக்கு விளங்காது; ஆய கலை 64ம் கரைத்துக் குடித்தவர்களுக்கே விளங்கும் என புருடா விடுகிறார்கள். அல்குர்ஆனின் நேரடிக் கருத்துக்களைத் திரித்து, வளைத்து, மறைத்து நேர்வழியை கோணல் வழியாக ஆக்கி […]
படைப்பின் பரிணாம வளர்ச்சி! Dr. A. முஹம்மது அலி, Ph.D., இந்திரிய துளியின் பரிணாம வளர்ச்சி : விதி எண் 5 : மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்; குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான். முதுகுத் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. (அல்குர்ஆன் 88:5-7) உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கின்றான். (அல்குர்ஆன் 39:6) அவன் மனிதனை அலக்(நிலையி)லிருந்து படைத்தான். (அல்குர்ஆன் 96:2) (கர்ப்பக் […]
அமல்களின் சிறப்புகள்…. தொடர் : 72 அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையி லிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு […]
இறைவனைப் பற்றிய மன உறுதிதான் மார்க்கம்! கமால், திருச்சி தன்னைத் தவிர வேறு எவருக்கும் இல்லை என்கிறான். ஆனால் இறைவனுக்குரிய நிலைப்பாடு பற்றி மனிதன் தன் அளவில் சிந்திக்கிறான். இறைவன் இவ்வுலகம் மட்டுமல்லாது ஏனைய உலகங்களையும் படைத்து இவ்வுலகில் அனைத்து ஜீவராசிகளையும் உண்டாக்கி பரிபாலித்து வருகிறான் என்பதை ஏற்றுக் கொண்டாலும் அவனுக்கு சில இணை-துணைகளைத் தன் கற்பனை மூலம் உண்டாக்கி அவற்றின் சரித்திரங்களை காவியங்களாக்கி அதன் மூலம் வாழ்வில் வெற்றி பெற முயல்கிறான். இன்னும் சற்று கொஞ்சம் […]
நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. (இறைத் தூதராகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள்; அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள்; ஆகவே கேள்வி கணக்கு கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன். (33:39) ஆயினும் நம் வேதனையைக் கண்டபோது, அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. (இதுவே) அல்லாஹ்வுடைய வழியாகும்; அவனுடைய அடியார்களுக்கு (முன்னரும் இவ்வாறு) நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆதலால் அந்நேரத்தில் காஃபிர்கள் நஷ்டத் தையே அடைந்தார்கள். (40:85) நல்லது, பொருத்தமானது, […]