சபித்தலும்! சாப்பாடும்! மஹபூப் பாஷா, வில்லிவாக்கம் மறுபதிப்பு : 01. மனிதர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளை களை எடுத்துரைக்க அல்லாஹ்வால் நியமிக்கப் பட்ட நபிமார்கள், என்னை இந்த வகையில் சோதனையாக்கு. இந்த அளவுக்கு எனக்கு கஷ்டத்தை கொடு எனக் கேட்டதில்லை. ஆனால் அல்லாஹ்வாகவே மக்களுக்கு எடுத்துக் காட்டாக இருந்திடவும், சோதனையை பொறுத்துக் கொள்பவராகவும் காட்டவே அனைத்து நபிமார்களுக்கும் பெரும் கஷ்டங்களை ஏற்படுத்தினான். 2. ஆதம்(அலை), ஹவ்வா(அலை) ஆகிய இருவரையும் பிரித்து பல ஆண்டுகள் கழித்துத் தான் அல்லாஹ் ஒன்று […]
இஸ்லாமிய சட்டங்கள் (கடமைகள்) சக்திக்கேற்றவையா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் நம்மோடு நட்பாக, வியாபார ரீதியாக, அக்கம் பக்கம் வீட்டினராக, சேர்ந்து தொழில் சாலையில், மற்றும் கடையில் பணி புரிபவராக இருக்கக்கூடிய மாற்றுமத சகோதர, சகோதரிகள் இஸ்லாமிய சட்டங்கள் (கடமைகள்) மனித சக்திக்கேற்றவையில் இல்லை. அது அனைவராலும் பின்பற்ற இயலாது மற்றும் எல்லா காலத்திற்கும் பொருந்தாது என்பதாக நினைக்கின்றார்கள், சொல்கின்றார்கள், இன்னும் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவும் தயங்குகிறார்கள். இந்த எண்ணங்கள் சரியானவையா? இஸ்லாமிய சட்டங்கள் (கடமைகள்) மனித சக்திக்கேற்றவை […]
வணக்க வழிபாடுகளால் மட்டுமே சூழப்பட்டதா இஸ்லாம்? M. சையத் முபாரக், நாகை. சுன்னத்தின் அவசியம் : தமிழ்நாட்டில் தவ்ஹீத்தின் எழுச்சிக்குப்பின் மக்கள் அல்குர்ஆன், ஹதீத் வழிநடக்க விரும்பினர். நபி(ஸல்) அவர்களின் சுன்னத்களை சரிவர பின்பற்றவேண்டும் என்ற ஆர்வத்தில் ஆலிம்கள் ஒவ்வொரு அமலுக்கான ஹதீத்களையயல்லாம் இணைத்து ஆராய்ந்தனர். அதன் அடிப்படையில் தீர்வுகளை கூறினர். (உ.ம்) பெண்களை ஆண்கள் (மனைவியை கணவன்) தொட்டால் உளூ முறியுமா? தனது பிறப்புறுப்பை தொட்டாலும் உளூ முறியுமா? இது சம்பந்தமான ஹதீத்களையும் ஆராய்ந்து, இணக்கம் […]
பிறப்பும், இறப்பும் ஒரு முறையா? இரு முறையா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் “எதைவிட்டு நீங்கள் வெருண்டோடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்தித்தே தீரும். பிறகு, மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கறிபவனிடம் நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை அப்போது உங்களுக்கு இறைவன் அறிவிப்பான் என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 62:8) பொதுவாக மரணத்தை பெரும்பாலோர் விரும்புவதில்லை, அதுமட்டுமல்ல இந்த கட்டுரையில் மரணத்தைப் பற்றி கூறியிருப்பதால் இதைப் படிக்க விரும்பாமல் கடந்து போக நினைப்பவர்களும் கூட இருக்கலாம். அதற்கு காரணம்; “மரணம் […]
தலையங்கம் : திரைப்படங்கள் படமா? பாடமா? உலக அளவில் இஸ்லாமியர்களை தீவிர வாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரிப்பதில் ஊடகங்கள் (MEDIA) எல்லா நாடுகளி லும், எல்லா காலங்களிலும் முன்னிலை வகுக்கின்றன. அதுபோல் திரைப்படங்களும், அவ் வப்பொழுது செய்து வருவதை அனைவரும் அறிவோம். சினிமா என்பது சக்தி வாய்ந்த ஊடகமாக (POWERFUL MEDIA) இருக்கின்றது. சுமார் 100 மேடை பேச்சாளர்களால் செய்ய முடியாததையும், சில புத்தகங்கள் செய்ய முடியாததை யும் கூட ஒரு சில சினிமா செய்துவிடும். அதில் நஞ்சை […]
ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களை நிராகரிப்பது குர்ஆனையே நிராகரிப்பதாகும்! அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : மனித சமுதாயம் ஆரம்பத்திலிருந்தே செய்து வரும் மாபெரும் குற்றச்செயல், அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இணை, துணை, மனைவி, மக்கள், தேவை எதுவுமே இல்லாத தன்னந்தனியனான ஏகன் இறைவனுக்குப் படைப்பினங்களை இணையாக்கும். (´ர்க்) கொடிய செயலாகும். இப்பெரும் பாவத்தை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டேன் என்று அல்குர்ஆன் 4:48,116 ஆகிய இரு இடங்களில் திட்டமாகக் கூறிக் கடுமையாக எச்சரிக்கிறான். இணை வைப்பது (´ர்க்) என்றால் அல்லாஹ்வுடன் […]
அநீதி இழைப்பவர்களுக்கும், நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கும் இறையருள் தூரமே! S.H. அப்துர் ரஹ்மான் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அந்த இறைவன் பெயரால்… நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். கொடுத்து தூய்மை செய்வதை நிறை வேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது […]
இஸ்லாமியர்களும்! இறை நம்பிக்கையும்! அய்யம்பேட்டை A. நஜ்முதீன் “மனிதர்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் (இறைவன்) படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான்” (அல்குர்ஆன் 39:6) மேற்கண்ட வசனத்தில் மனித வர்க்கத்தைப் படைத்தது பற்றியும், மேலும் அத்தியாயம் 4ல் வசனம் 1ல் மனித வர்க்கம் எவ்வாறு பெருகியது பற்றியும் இறைவன் கூறுகிறான். அவ்வாறு படைக்கப்பட்ட மனிதர்களில், 1. இறைத் தூதர்கள் உள்ளனர். 2. இறைவனுக்காக உயிரையே கொடுக்கக் கூடிய தியாகிகளும் உள்ளனர். 3. இறைவன் ஒருவன்தான் […]
அல்குர்ஆன் வழியில் அறிவியல் ….. கால்நடைகள் வழங்கும் கதகதப்பு கம்பளி (WOOL) ஆடை ஹலரத் அலி மறு பதிப்பு: அல்லாஹ் மனிதர்களைப் படைத்து, அவர்களுக்கு வேண்டிய எல்லா வாழ்வாதாரங்களையும் ஏற்படுத்தியது மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்குப் பயன் தருபவைகளாக அமைத்துள்ளான். இந்த வகையில் கால்நடைகளைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான். (மனிதர்களே!) ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளையும் அவனே உங்களுக்காக படைத்திருக்கின்றான். அவற்றில் உங்களுக்காக (குளிரைத் தடுத்துக் கொள்ளக்கூடிய) கதகதப்புண்டு; இன்னும் (அநேக) பயன்களுமுண்டு; மேலும் […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. அறியாமை காலத்தில் சாயிபா என்ற ஒட்டகத்தை நேர்ச்சை செய்துவிட்டவர் யார்? அம்ர்பின்ஆமிர்அல்குஸாஈ. முஸ்லிம் :5486 2. இறை நம்பிக்கையாளரின் உயிரை எத்தனை வானவர்கள் எடுத்துச் செல்கின்றனர்? இருவர். முஸ்லிம் : 5510 3. அபூ ஜஹலின் உடலை எங்கு போட நபி (ஸல்) அவர்கள் உத்திரவிட்டார்கள்? பத்ரில் இருந்த பாழுங் கிணற்றில். முஸ்லிம் : 5512 4. ஹர்ஜ் என்றால் என்ன? கொலை. முஸ்லிம் : 5537 […]
அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2024 நவம்பர் மாத தொடர்ச்சி… ஒன்பது சான்றுகளையும் நிதர்சனமாகக் கண்ணால் கண்டும் மறுத்தார்கள்: கீழே போட்டவுடன் பாம்பாக மாறிய! (7:107,117, 20:20, 26:32,45, 27:10, 28:31) கீழே போட்டபோது பெரியதொரு பாம்பாக மாறி சூனியக்காரர்கள் போட்ட பாம்புகள் அனைத்தையும் விழுங்கிய! (7:117, 26:45) பாறையில் அடித்தால் பனிரெண்டு நீரூற்றுக்கள் பீறிட்டு வரக் காரணமான! […]
இமாம் மஹ்தீ தலைமையில் புனித பூமி அல்குத்ஸ் மீளும்! இஸ்ரவேலர்கள் விரட்டியடிக்கப்படுவர்! கோட்டூர் கலீல் மாவீரர் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்). (கி.பி. 1137-1193) கி.பி. 636ஆம் ஆண்டு இரண்டாம் கலிபா உமர்(ரழி) அவர்களின் ஆட்சியில் தளபதி காலித் இப்னு வலிது(ரழி) அவர்கள் தலைமையில் ரோமப் பேரரசின் பிடியில் சிக்கிச் சீரழிந்த ஜெருசலம் உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதி இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. அங்கு வசித்த கிறிஸ்துவர்களும், யூதர்களும் பகைமையை விட்டு விட்டு சுதந்திர காற்றை சுவாசித்தனர். […]
உறவுமுறைகளைப் பேணுவதன் அவசியமும் – அதனைப் பேணுவதால் ஏற்படும் சிறப்புகளும் – அதனை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்…. எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2024 நவம்பர் தொடர்ச்சி… எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவனது பாவத்தின் நிலை: “அபூஷிரைஹ்(ரழி) அறிவித்தார்: அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன்!, அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன்!!, அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன்!!!, என்று (மூன்று முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் […]
உலகப் புகழ் பெற்ற பேருரைகள்! THE WORLD’S GREATEST SPEECHES அய்யம்பேட்டை A. நஜ்முதீன் “அனைத்து ஞானத்தையும் (இல்மு/ அறிவு) இறைவன் ஆதமுக்கு(முதல் மனிதருக்கு) கற்று கொடுத்தான். (அல்குர்ஆன் 2:31) அதாவது மனித வர்க்கத்திற்கு அறிவை கற்றுக்கொடுத்துள்ளான். இறைவன் தன் செயல் திட்டப்படி அனைத்துப் படைப்புகளின் தன்மைகள் மற் றும் அவற்றைப் பயன்படுத்தும் அறிவையும், அதை முறையாக செயல்படுத்தும் ஆற்றலை யும் மனித இனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய ஆற்றலைப் பற்றி வானவர் களிடம் எடுத்து கூறுமாறும் “”இத்தகைய […]
ஈடேற்றம் பெற எண்ணத் தூய்மையும்! நம்பிக்கை உறுதியும்!! M. சையத் முபாரக், நாகை. தூய்மையான எண்ணம் : “…தூய்மையை பெரிதெனக் கருதுவோரையே அல்லாஹ்வும் விரும்புகிறான்.” (அ.கு. 9:108) “…தூய்மை இறை நம்பிக்கையில் பாதியாகும்.” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் : 381) அல்லாஹ் நம்மிடம் தூய்மையையே எதிர்பார்க்கிறான். ஆகவே, நாம் தூய்மையானவர்களாக இருக்கவேண்டும். தூய்மையில் அக(மன)த் தூய்மை, புற(உடல் மற்றும் இட)த் தூய்மை என இருவகை இருக்கின்றன. நாம் இங்கு மனத்தூய்மை பற்றிப் பார்ப்போம். […]
பல்சமயச் சிந்தனை! ஆசிரியர் குழு 2024 நவம்பர் தொடர்ச்சி… அவன் என்றே இறைவனைச் சொல்லுகின்றேன் ஏன்? இறைவனை நான் “அவன்‘ என்றே சொல்லி வருவது, உங்களுக்கு ஆச்சரியத்தையும், ஆத்திரத்தையும் தரலாம். எஜமானனாகிய இறைவன் தன் அடிமையாகிய மனிதன், தன்னை அவன் என்று சொல்வதைச் சகித்துக் கொள்கிறான். ஆனால் அவதாரமென்றோ, மகன் என்றோ அவனுக்கு இணை சேர்ப்பதையே அவன் சகித்துக் கொள்வது இல்லை. மானமுள்ள ஒரு ஆண் தன் மனைவி தன்னுடைய இடத்தைத் தான் அல்லாத ஒரு ஆணுக்குக் […]
தலையங்கம் : மழை! வரமா? சாபமா? தற்பொழுது மீடியாக்கள் மூலம் முக்கிய செய்தியாக இருப்பது “மழை‘யைப் பற்றியதாகவே உள்ளது. அதில் மிகைப்படுத்தப்பட்ட செய்தியும் உண்டு, மறைக்கப்பட்ட செய்திகளும் உண்டு. எனவே மழையைப் பற்றி மனித அறிவும், இஸ்லாம் மார்க்கமும் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம். பொதுவாக உலக நாடுகள் முழுவதும் மழைக்காலம், குளிர்காலம், கோடைகாலம் ஒரேமாதிரியாக இருக்கின்றதா என்றால் இல்லை. சில நாடுகளில் குறிப்பிட்ட காலங்கள் மட்டும் முறையாக மழை பெய்யும், சில நாடுகளில் வருடத்திற்கு ஒரு […]
வாழ்க்கைப் பரீட்சையில்…தேறுபவர்கள் யார்? அபூ அப்தில்லாஹ் மறுபதிப்பு : உங்களில் அழகிய செயல்கள் செய்பவர்கள் யார் என்பதை பரீட்சித்து அறிவதற்காக மரணத்தையும், வாழ்வையும் (அல்லாஹ்) படைத்தான் (ஆட்சி: 67:2) (மேலும் பார்க்க : 5:48, 6:165, 11:7, 16:92, 5:94, 27:40, 8:57) இந்த இறைவாக்குகள் அனைத்தையும் நேரடியாகச் சுய சிந்தனையுடன் படித்து அறிகிறவர்கள், மனிதப் பிறப்பிலிருந்து இறப்பு வரை அல்லாஹ் கொடுத்துள்ள இவ்வுலக வாழ்க்கை, பரீட்சை வாழ்க்கை என்பதைத் திட்டமாக அறிந்து கொள்ள முடியும். பரீட்சை […]
மனிதனுக்கு இறுதி விசாரணை உண்டா? S.H. அப்துர் ரஹ்மான் இதற்கு பதில் ஆமாம் என்பதுதான். இறுதி இறைநூல்படி மனிதனுக்கு உலக இறுதி நாளில் விசாரணை இருக்கிறது. இறுதி இறைநூல் பல இடங்களில் இந்த விசாரணையை குறிப்பிடு கிறது. அதை “இறுதி நாள்‘ அல்லது “நியாயத் தீர்ப்பு நாள்‘ எனவும் குறிப்பிடுகிறது. அன்று ஒவ்வொருவரின் செய்கைகள், அதாவது நன்மைகள் மற்றும் தீமைகள், விவரமாக கணக்கெடுக்கப்படும். அவர்களின் செயல்களின் அடிப்படையில், அந்த இறைவன் அவர் களுக்கு வெகுமதி அல்லது தண்டனை […]
அல்லாஹ்வின் அருட்கொடையில் எது உயர்வானது? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் உங்களுக்காக (நமக்காக) அல்லாஹ் பயன்படச் செய்ததையும் (வசப் படுத்தி தந்துள்ளதையும்) தனது அருட் கொடைகளை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் வாரி வழங்கியிருப்பதை யும் நீங்கள் காணவில்லையா? அறிவோ நேர்வழியோ இறைநூலின் ஞானமோ இவை எதுவும் இன்றி அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்வோர் மனிதர்களில் (சிலர்) உள்ளனர். (அ.கு. 31:20) மேற்கண்ட வசனப்படி இறைவன் நமக்கு எண்ணற்ற எண்ணிக்கையில் அடங்காத பலவற்றை அருட்கொடையாக […]