நபிகால இஸ்லாமிய ஒற்றுமை; பிரிவுகளால் விளையும் விபரீதங்கள்

in 2009 டிசம்பர்,ஒன்றுபட்ட ஒரே சமுதாயம்


 ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்
 
 நபிகால இஸ்லாமிய ஒற்றுமை; பிரிவுகளால் விளையும் விபரீதங்கள்
 
 முஹிப்புல் இஸ்லாம்
 
 (இறைத்தூதர் நுஹுக்கு எதை அவன் அறிவு றுத்தினானோ-அதையே (அந்த இஸ்லாத்தை யே) உங்களுக்கும் (அந்த அல்லாஹ்) மார்க் கமாக்கியிருக்கின்றான்.
 
 (நபியே!) நாம் உமக்கு வஹியாக அறிவித்த தும் (இறைத்தூதர்கள்) இமாஹீம், மூஸா ஈஸா ஆகியோருக்கும் (இறைக் கட்டளை யாக) அறிவுறுத்தியதும்,
 
 (இஸ்லாம்) மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதிலிருந்து நீங்கள் பிரிந்துவிடாதீர்கள் என் பதுதான்.
 
 இணை வைப்போரை எதன்(இஸ்லாhத்தின்) பக்கம் அழைக்கிறீர்களோ-அது அவர்களுக் குப் பெரும் சுமையாக இருக்கிறது.
 
 தனக்கு விருப்பம் உள்ளவர்களை அல்லாஹ் நேர்வழிக்குரியவர்களாய் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.
 
 அவனை முன்னோக்கி வருவோர்க்கு தன்னி டம் வரும் நேர்வழியை அவன் காண்பிக்கின் றான். அல்குர்ஆன்: 42:13.
 
 பிரிவுகளின் விபரீதங்கள்:
 
 கடந்த 1000 ஆண்டுகளாய் முஸ்லிம்கள் பிரிவிலும், பிளவிலும் சிக்கித் தவிக்கிறார் கள்.
 
 பிரிவுகள் பெயரால் மார்க்க மோசடிகள், பிரிவுகள் பெயரால் மார்க்க மீறல்கள்ளூ பிரிவு கள் பெயரால் மாபாதகங்கள்ளூ பிரிவுகள் பெய ரால் வழிகேடுகள்….
 
 பிரிவுளால் முஸ்லிம்களுக்குள் மோதல் கள், பொருள் இழப்புக்கள், உயிர் சேதங்கள், பிரிவுகளால் உலக அளவில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துன்பங்களையும், துயரங் களையும் அளவிட இயலாதுளூ சொல்லியும் மாளாதுளூ எழுத்திலும் வடிக்க முடியாது.
 
 எனினும் பிரிவுகள் துவங்கியதிலிருந்து இன்றளவும் பிரிவின் பிடியிலிருந்து எந்த மனிதனும், குறிப்பாய் எந்த முஸ்லிமும் விடுபட்டதாய் தெரியவில்லை.
 
 ஒற்றுமை வீழ்த்தப்பட்டுவிட்டது. பிரிவுகள் கொழுத்துவருகின்றன. ஒற்றுமை ஏற்பட வழி யே இல்லையா? மானுட ஒற்றுமை சாத்தி யமே இல்லாததா?- மனிதநேய விரும்பிகளின் ஏக்கம் விரிந்து செல்கிறது. இதுகாலம் ஒற்றுமை ஏற்பட யாரும் எந்த முயற்சியும் செய்யவில்லை. வேதனைக்குரிய கசப்பான உண்மை.
 
 பிரிவுகள் பெயரால் நேர்வழி வழிகேடாக வும், வழிகேடு நேர்வழியாகவும் சித்தரிக்கப் படுகின்றன. விட்டில்களாய் பிரிவுகளில் விழு ந்து விடுகிறார்கள். முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
 
 பிரிவுகளின் நிரந்தர முற்றுப்புள்ளி இஸ் லாம். இஸ்லாத்தின் உன்னத இலட்சியம் மானுட ஒற்றுமை. முஸ்லிம்கள் மட்டுமின்றி மானுடத்தை ஒன்றிணைக்கும் இறையருளி;ய வாழ்க்கை நெறி, வாழும் நெறியே இஸ்லாம். இதை இன்றளவும் முஸ்லிம்கள் சரியாக உணரவும் இல்லை. முஸ்லிம்களுக்கு உணர் த்தப் படவும் இல்லை.
 பிரிவுகளின் விபரீத விளைவுகளையும், கேடுகளையும் மற்ற மனிதர்களுக்கு உண ர்த்த வேண்டிய பொறுப்பும் கடமையும் மிக் கோரே முஸ்லிம்கள் – என்ன செய்கிறார்கள்?
 
 ஏதேனும் ஒரு பிரிவைச் சார்ந்து இருப்பதே சாலச் சிறந்தது என்ற தவறான முடிவில் இருக்கிறார்கள். இன்றைய முஸ்லிம்கள் பிரிவுகளால் விளையும் விபரீதங்களைக் கண்ணாரக் கண்டும், சுயமே அனுபவித்தும் பிரிவுகளின் உடும்புப் பிடியிலிருந்து யாரும் விடுபடவில்லை. விடுபட முயல்வோரும் ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவுக்குத் தாவி விடுகிறார்கள். பிரிவுகளின் கொடூரப் பிடியி லிருந்து யாராலும் முற்றாக விடுபட முடிய வில்லை.
 
 பிரிவுத் தாவல்:
 
 அரசியல்வாதிகள் அடிக்கடி கட்சி மாறிக் கொண்டிருப்பது போல் ஒரு பிரிவில் அதிரு ப்தி ஏற்படும்போது அடுத்த பிரிவுக்கு மாறிவி டுகிறார்கள். இவர்கள் அரசியல்வாதிகளை யும் தோற்;கடித்து வருகிறார்கள். ஆம்! அந்த அரசியல்வாதிகளைக் காட்டிலும் துரிதமாய் அதிவேகமாய்.
 
  ஒரு பிரிவிலிருந்து வேறொரு பிரிவுக்கு
 
  ஒரு அணியிலிருந்து இன்னொரு அணிக்கு
 
  ஒரு அமைப்பிலிருந்து மற்றொரு அமைப் புக்கு
 
  ஒரு இயக்கம் விட்டு அடுத்த இயக்கத் துக்கு
 
  ஒரு ஜமாஅத்தை விடுத்து அடுத்த ஜமா அத்திற்கு என
 
  பிரிதல், பிரித்தல்
 
 பிளவுபடல், பிளவு படுத்துதல்
 
 வெகு விமரிசையாக அரங்கேறி வருகிறது.
 
 பிரிவுகளால் உலக அளவில் முஸ்லிம் கள் அனுபவித்து வரும் துன்பங்களையும், துயரங்களையும் சொல்லியும் மாளாதுளூ எழுதி னும் ஓயாது.
 
 இதனால் முஸ்லிம்கள் மாற்றார்களின் இழி சொல்லிலிருந்தும், பழி சொல்லிலிருந் தும் தப்பமுடியவில்லை. தவறிழைக்கும் முஸ்லிம்களுக்கு இது தேவைதான். இருந் தும் முஸ்லிம்களுக்கு இன்னும் ரோஷம் பிற க்கவில்லை. இழித்தலும் பழித்தலும் முஸ் லிம்களோடு நிற்கவில்லை. முஸ்லிம்கள் மீது பாய்ந்து வரும் கண்டனங்களும், விமர்சனங் களும் அதைவிட வேகமாய் இஸ்லாத்தின் மீது பாய்ந்து வருகிறதே! முஸ்லிம்கள் செய் யும் தவறுக்கு இஸ்லாம் பலியாக்கப்படு கிறதே!
 
 ஓ என்னரும் முஸ்லிம் பொதுமக்களே! இஸ்லாத்தின் மீது இத்தகைய பழி சுமத்தப் பட்டுள்ளது? கவனித்தீர்களா? இதுபோன்ற பழிகளுக்கும், இஸ்லாத்துக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? நிச்சயம் இல்லை.
 
 எனதருமை முஸ்லிம் பொதுமக்களே! சிந்திக்க வேண்டாமா? இஸ்லாத்திற்கு நற் பெயரைத் தேடித்தர வேண்டிய முஸ்லிம்கள் பிரிவினைவாதிகளாய் மாறியதால், அவப் பெ யரை அள்ளி, அள்ளி குவித்துக் கொண்டிருக் கிறீர்கள். பிரிவினைவாதிகளால் வரிந்து திணி க்கப்பட்ட பிரிவினை இஸ்லாத்துக்கு இழுக் கைத் தேடித்தருகிறது என்றால்…..
 
 பிரிவினைவாதிகளே! இஸ்லாத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள களங்கம் சாதரணமானதா? இதுபோன்ற பழிக்கும் இஸ்லாத்துக்கும் ஏதே னும் தொடர்புண்டா?
 
 பிரிவுகளின் எதிர்வினை:
 
 பிரிவுக்கும் பிளவுக்கும் முற்றுப்புள்ளியான இஸ்லாம் பிரிவினைவாதிகளின் தவறுக்கு எவ்வாறு பொறுப்பேற்கும்? பிரிவினைவாதிகள் உங்களால் ஏற்பட்ட பழியை நீங்கள் தான் துடைத்தெறிய வேண்டும். நீங்கள் ஏற்றிரு க்கும் இறையருளிய வாழ்க்கை நெறி இஸ் லாத்துக்கு நீங்கள் நற்பெயரைத் தேடித் தரா விட்டாலும் பரவாயில்லை. அவப்பெயரைத் தேடித்தராமல் இருக்க வேண்டும். அப்போது தான் பிரிவினை வாதிகளான போலி முஸ்லிம் கள் உண்மை முஸ்லிம்களாய் உயர்வடைய முடியும்.
 
 அறிஞர்கள், தத்துவ ஞானிகள் உதிர்த்த தத்துவங்கள், சித்தார்த்தங்கள் எதுவும் மானு டத்தை ஒன்றுபடுத்தவில்லைளூ ஒன்றுபடுத் தவும் முடியாது. மாறாக மனிதர்களைப் பிரிவு களாக்கின. பிரிவுகளாக்கியும் வருகின்றனளூ குழுக்களாகவும், அணிகளாகவும் பிரித்தனளூ பிரித்தும் வருகின்றன.
 
 பிரிவுகளாலும், பிளவுகளாலும் விளையும் அத்துணை விபரீதங்களையும், மாபாதகங்க ளையும் மனிதர்கள் சந்தித்தார்கள்ளூ சந்தித் தும் வருகிறார்கள். (பிரிவுகளில் சிக்கி பிரிந்து கிடக்கும் இன்றைய முஸ்லிம்களும் இதிலி ருந்து விடுபடவில்லைளூ விடுபடவும் முடிய வில்லை)
 
 மானுட அமைதி, மானுட ஒருமைப்பாடு, மானுட சமத்துவம் பிரிவுகளாலும் அணிகளா லும் அடித்துச் செல்லப்படுகின்றன. பிரிவினை த்துயர் மனிதர்களை வாட்டியெடுத்து வருகி றதுளூ பிரிவுகளின் உடும்பு பிடியிலிருந்து விடு படும் வழியறியாது மனிதர்கள் தவித்தார்கள்ளூ தவிக்கிறார்கள். நபித்துவத்துக்கு முன் அரப கத்தின் நிலை மட்டுமல்ல உலக மக்கள் அனைவரும் அணிகளாகவும், குழுக்களாக் களாகவும் பிளவு பட்டிருந்தார்கள். மனிதர் கள்-மதம், நாடு, மொழி, இனம், நிறம், குலம்… இத்யாதி-இத்யாதி-என பிரிவிலும், பிளவிலும் அணிகளாகவும், குழுக்களாகவும் பிளக்கப் பட்டிருந்தார்கள்
 
 இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அனைத்தின் படைப்பாளன்-வல்லவன் அல் லாஹ் இஸ்லாத்தை நிறைவு செய்ய நாடி னான். நபி(ஸல்) அவர்களை இறுதி இறைத் தூதராக தெரிவு செய்தான். நபி(ஸல்) அவர்க ளுக்கு அல்குர்ஆன் இறுதி நெறிநூலாய்; அரு ளப்பட்டது.
 
 நிரந்தர முற்றுப்புள்ளி:
 
 அல்லாஹ்வின் மேற்பார்வையில் நபி(ஸல்) அவர்கள் அல்குர்ஆனுக்கு வாழ்வி யல் வடிவமானார்கள்.
 
 நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஒருமைப் பாட்டின் சின்னமானார்கள். நபி; தோழர்கள் இஸ்லாமிய ஒருமைப்பாட்டின் அங்கங்களா னார்கள்.
 
 எ ஒரே இறைவன் அல்லாஹ்…!
 
 எ அல்லாஹ் தெரிவு செய்த நபி(ஸல்) அவர் களும் ஒரே இறைத்தூதர்! இறுதி இறைத் தூதரும்கூட!
 
 எ நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அரு ளிய அறநூல் அல்குர்ஆனும் ஒன்றே!
 
 எ இஸ்லாமிய கோட்பாட்டில் (வுhநழசல)- அல் குர்ஆனுக்கு, வாழ்வியல் (Pசயஉவiஉயட டுகைந)-வடி வான நபி(ஸல்) அவர்கள் நிறுவியதும் உம் மத்தன் வாஹிதாவாகிய-ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே!
 
 – அணி, குழு, பிரிவு, பிளவு, பிரிதல், பிரித்தல், பிளத்தல், பிளவுபடுத்துதல், அனைத்துக்கும் இஸ்லாம் நிரந்தர முற்றுப்புள்ளியானது.
 
 எங்கெல்லாம் எங்கனமெல்லாம், எவை யெல்லாம், எப்படியெல்லாம் மனிதர்களைப் பிரிக்கிறதோ, பிளக்கிறதோ அவை அனை த்தின் வாயில்களுக்கும் இஸ்லாம் நிரந்தர மூடு விழா நடத்தியது.
 
 இஸ்லாம் முஸ்லிம்களை மட்டுமின்றி மானுடத்தை ஒருங்கிணைக்கும் இணைப்புப் பாலம் ஆனது.
 
 இணைப்புப் பாலம்:
 
 அனைத்து இறைத்தூதர்களுக்கும் அல் லாஹ் இஸ்லாத்தை மார்க்கமாக்கினான். இறைதூதர்கள் அனைவரும் இஸ்லாத்தோடு எப்படி ஐக்கியமானார்கள்? என்பதை அல் லாஹ் அல்குர்ஆனில் பதிவு செய்துள்ளான். இஸ்லாத்தை நிலைநிறுத்துவதே ஒற்றுமை. இஸ்லாத்தை நிலைநாட்டாமல் இருப்பதும் பிரிவுதான். இஸ்லாத்தை நிலைநாட்டுவதி லிருந்து பிரிந்துவிடக் கூடாதென்று அல்லாஹ் எல்லா இறைத்தூதர்களுக்கும் கட்டளை யிட்டான். (இறைத்தூதர்) நூஹுக்கு எதை அவன் அறிவுறுத்தினானோ அதையே அந்த இஸ்லாத்தையே உங்களுக்கும் மார்க்கமாக்கியிருக்கிறான்.
 
 (நபியே!) நாம் உமக்கு வஹியாக அறிவி த்ததும், (இறைத்தூதர்கள்) இப்றாஹீம், மூஸா, ஈஸா (ஆகியோர்க்கும் இறைக்கட் டளையாக) அறிவுறுத்தியதும்,
 
 இஸ்லாம் மார்க்கத்தை நிலை நிறுத்துங் கள். அதிலிருந்து நீங்கள் பிரிந்து விடாதீர்கள் என்பதுதான்….. (அல்குர்ஆன் 42:13)
 
 இஸ்லாத்தோடு ஐக்கியமாவதும், இஸ் லாத்தை நிலைநாட்டுவதும் யாருக்கு பளு வாக இருக்கும்? அல்லாஹ்வே அதையும் தெளிவுபடுத்துகிறான்.
 
 இணை வைப்போரை (இஸ்லாத்தின்) பக்கம் அழைக்கிறீர்களோ அது அவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது.(அல்குர்ஆன் 42:;13)
 
 இஸ்லாத்தோடு ஐக்கியமாகி, இஸ்லா த்தை நிலைநாட்ட தனக்கு விருப்பமுள்ளவர் களை அல்லாஹ் அவன் நேர்வழிக்குரியவர் களாய் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.
 
 அவனை முன்னோக்கி வருவோர்க்கு தன்னிடம் வரும் நேர்வழியை அவன் காண்பிக் கின்றான். (அல்குர்ஆன் 42:13)
 
 இஸ்லாத்தோடு ஐக்கியமாகாமல் இஸ்லா த்தை நிலைநாட்ட எவ்வித முயற்சியும் செய் யாத பெயர்தாங்கி முஸ்லிம்கள் 42:13-ல் இடம்பெற்றுள்ள மேற்கண்ட இறையுரையி லிருந்து அவசியம் படிப்பினைப் பெறக் கடமைப்பட்டுள்ளார்கள்.
 
 இஸ்லாத்தோடு ஐக்கியமாகுதல் என்பதன் நடைமுறை வரைவு என்ன? அடுத்த ஆய்வில் காண்போம். இன்ஷா அல்லாஹ். 
 
 

Previous post:

Next post: